Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nanavodai Ninaivugal
Nanavodai Ninaivugal
Nanavodai Ninaivugal
Ebook75 pages31 minutes

Nanavodai Ninaivugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இறைவன் எனக்கு அளித்த கொடை, ரசனையும் நினைவாற்றலும். சிறு வயது முதலே நல்லன பலவற்றையும் ரசித்திருக்கிறேன். அப்படி ரசித்துச் சுவைத்த காரணத்தாலேயே அவை என் நினைவில் பதிந்திருக்கின்றன. நான் எதையும் திட்டமிட்டதில்லை. ஆனாலும் எதுவும் கெட்டுப் போனதில்லை. பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதும் இல்லை. என்றாலும் எனக்கு வாய்த்திருக்கிறது. பல பெரிய மனிதர்களுடன் பழகும் அரிய வாய்ப்புகளை இறைவன் எனக்கு அருளியிருக்கிறான். அவனை நான் வழிபடாது இருந்த காலத்திலும் என்னை நன்றாகவே வழி நடத்தியிருக்கிறான்.

சிறுவயது முதலே எனது பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். துன்பங்கள் தொடர்ந்த போது கூட, அதுவும் ஒரு அனுபவம்தான் என்று எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால், சுமைகூட சுகமானதாகவே இருந்திருக்கிறது. படித்தது, பார்த்தது, பலர் சொல்லக் கேட்டது, என்று பலவித அனுபவங்கள் என்னுள் இன்னமும் நீங்காது புதைந்து கிடக்கின்றன. அந்த அனுபவங்களை அசை போடுவதுதான் இந்த நூல்.

நினைவுகள் சுகமானவை. அதுவும் சுகமான, சுவையான நினைவுகள் மிகவும் சுகமானவை. இந்த நூல் முழுவதும் அந்த சுகமான நினைவலைகளில் ஆனந்தமாக நீந்திக் கரை சேர்ந்திருக்கிறேன். ஆனால் பாதையைத் தேர்ந்தெடுத்து நான் நீந்தவில்லை. அலைகள் என்னைக் கொண்டு போன போக்கில் போயிருக்கிறேன். கதை சொல்லும் உத்திகளில் ஒன்று நனவோடை முறை (stream of consciousness). கதை தன் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அதைப் போலத்தான், எனது நினைவுகளை அதன் போக்கிலேயே இந்த நூல் முழுவதும் அசை போட்டிருக்கிறேன். அதனால் தான் நூலுக்கு நனவோடை நினைவுகள் என்று பெயர் சூட்டினேன். நூல் தலைப்பும் அதன் போக்கிலேயே வந்ததுதான். இந்த நூலில் பலரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் அண்ணாந்து பார்த்தவர்கள், அன்போடு பழகியவர்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள், இருப்பவர்கள், கல்லுாரித் தோழர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பலரும் இந்த நூலில் வருகிறார்கள். அதில் யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். என்னையும் மீறி யாருக்காவது சிறு சிராய்ப்பு ஏற்படுமானால் கூட, அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நனவோடையில் நீங்களும் இறங்கி மூழ்கலாம். முத்துகள் கிடைத்தால், அந்தப் பெருமை, இதில் யாரைப் பற்றி சொல்கிறேனோ அவரைச் சேரும். சிப்பி மட்டுமே கிடைத்தால் இந்தச் சிறியவனே பொறுப்பு. எது கிடைத்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் எழுத வையுங்கள்.

அன்புடன்
இரா. குமார்
தொடர்புக்கு: erakumar25@gmail.com

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580131405423
Nanavodai Ninaivugal

Read more from Era. Kumar

Related to Nanavodai Ninaivugal

Related ebooks

Reviews for Nanavodai Ninaivugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nanavodai Ninaivugal - Era. Kumar

    http://www.pustaka.co.in

    நனவோடை நினைவுகள்

    Nanavodai Ninaivugal

    Author:

    இரா. குமார்

    Era. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/era-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சுமை கூட சுகமே

    நனவோடை நினைவுகள்

    *****

    சுமை கூட சுகமே

    இறைவன் எனக்கு அளித்த கொடை, ரசனையும் நினைவாற்றலும். சிறு வயது முதலே நல்லன பலவற்றையும் ரசித்திருக்கிறேன். அப்படி ரசித்துச் சுவைத்த காரணத்தாலேயே அவை என் நினைவில் பதிந்திருக்கின்றன. நான் எதையும் திட்டமிட்டதில்லை. ஆனாலும் எதுவும் கெட்டுப் போனதில்லை. பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதும் இல்லை. என்றாலும் எனக்கு வாய்த்திருக்கிறது. பல பெரிய மனிதர்களுடன் பழகும் அரிய வாய்ப்புகளை இறைவன் எனக்கு அருளியிருக்கிறான். அவனை நான் வழிபடாது இருந்த காலத்திலும் என்னை நன்றாகவே வழி நடத்தியிருக்கிறான்.

    சிறுவயது முதலே எனது பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். துன்பங்கள் தொடர்ந்த போது கூட, அதுவும் ஒரு அனுபவம்தான் என்று எண்ணி ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால், சுமைகூட சுகமானதாகவே இருந்திருக்கிறது. படித்தது, பார்த்தது, பலர் சொல்லக் கேட்டது, என்று பலவித அனுபவங்கள் என்னுள் இன்னமும் நீங்காது புதைந்து கிடக்கின்றன. அந்த அனுபவங்களை அசை போடுவதுதான் இந்த நூல்.

    நினைவுகள் சுகமானவை. அதுவும் சுகமான, சுவையான நினைவுகள் மிகவும் சுகமானவை. இந்த நூல் முழுவதும் அந்த சுகமான நினைவலைகளில் ஆனந்தமாக நீந்திக் கரை சேர்ந்திருக்கிறேன். ஆனால் பாதையைத் தேர்ந்தெடுத்து நான் நீந்தவில்லை. அலைகள் என்னைக் கொண்டு போன போக்கில் போயிருக்கிறேன்.

    கதை சொல்லும் உத்திகளில் ஒன்று நனவோடை முறை (stream of consciousness). கதை தன் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அதைப் போலத்தான், எனது நினைவுகளை அதன் போக்கிலேயே இந்த நூல் முழுவதும் அசை போட்டிருக்கிறேன். அதனால் தான் நூலுக்கு நனவோடை நினைவுகள் என்று பெயர் சூட்டினேன். நூல் தலைப்பும் அதன் போக்கிலேயே வந்ததுதான்.

    இந்த நூலில் பலரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். நான் அண்ணாந்து பார்த்தவர்கள், அன்போடு பழகியவர்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள், இருப்பவர்கள், கல்லுாரித் தோழர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று பலரும் இந்த நூலில் வருகிறார்கள். அதில் யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். என்னையும் மீறி யாருக்காவது சிறு சிராய்ப்பு ஏற்படுமானால் கூட, அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த நனவோடையில் நீங்களும் இறங்கி மூழ்கலாம். முத்துகள் கிடைத்தால், அந்தப் பெருமை, இதில் யாரைப் பற்றி சொல்கிறேனோ அவரைச் சேரும். சிப்பி மட்டுமே கிடைத்தால் இந்தச் சிறியவனே பொறுப்பு. எது கிடைத்தாலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் எழுத வையுங்கள்.

    அன்புடன்

    தொடர்புக்கு: erakumar25@gmail.com

    *****

    நனவோடை நினைவுகள்

    நெஞ்சில் உரத்தையும் நேர்மைத் திறத்தையும் எனக்கு அளித்தவர் என் அப்பா தெய்வத்திரு இராமசாமி பிள்ளை அவர்கள். எங்கள் கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுப்பட்டு கிராமங்களிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். எதுவும் பிரச்னை என்றால் என் அப்பாவிடம்தான் பஞ்சாயத்துக்கு வருவார்கள். எங்கள் வயலில் அறுவடை நடந்து களத்தில் நெல் குவித்து வைத்திருந்தார்கள். அதில் சிறிதளவை ஒருவர் திருடிவிட்டார். அவரை கண்டுபிடித்து அழைத்துவரச் செய்தார் என் அப்பா. திருடியவருடன் அவருடைய அண்ணன், அப்பா அகியோரையும் வரச் சொன்னார். காலையில் வந்த அந்த மூன்று பேரும் என் அப்பா முன்பு நின்றனர். என் அப்பா ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். திருடியவரைத் தவிர மற்றவர்களும் பேசிக் கொண்டிருந்தனர். மதியம் ஆனது. அவர்களுக்கு எங்கள் வீட்டிலேயே சாப்பாடு போடப்பட்டது. மாலை வரை மீண்டும் பேச்சு தொடர்ந்தது. என் அப்பா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர்கள் மூன்று பேரும் காலையில் இருந்து நின்ற படியேதான் பேசிக் கொண்டிருந்தனர். மாலை ஆனதும் போய்விட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பினார் அப்பா. மறுநாள் காலை வந்தார்கள். முதல் நாள் போலவே அடுத்த நாளும் கழிந்தது. மாலை ஆனதும், திருடியவரின் அப்பா, 100 ரூபாய்

    Enjoying the preview?
    Page 1 of 1