Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Suvai
Tamil Suvai
Tamil Suvai
Ebook55 pages18 minutes

Tamil Suvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.

தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.

இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள ‘நடைமுறை இதழியல்’ நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், ‘இறைத்தமிழ் வேந்தர்‘ பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் ‘ஆன்மீகச் சுடர்‘ பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580131405298
Tamil Suvai

Read more from Era. Kumar

Related to Tamil Suvai

Related ebooks

Reviews for Tamil Suvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Suvai - Era. Kumar

    http://www.pustaka.co.in

    தமிழ்ச் சுவை

    Tamil Suvai

    Author:

    இரா. குமார்

    Era. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//era-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கள்வன் மகன் ஆனான் காதலன்

    2. திருக்குறளில் நாடகம்

    3. வள்ளுவர் காட்டும் பார்வைக் களம்

    4. நடையை மாற்றும் கம்பன்

    5. பூவோடு உயிரையும்ம் செருகினாள்

    6. தும்மலால் வந்த தொல்லை

    7. ஆஹா.. கமபனைச் சுவையுங்கள்

    8. காலடித் தாமரை நாலடி நடந்தால்

    10. இளங்கோவடிகள் டைரக்‌ஷன்

    11. லண்டன் ரயிலில் சங்கப் பாடல்

    12. முத்தொள்ளாயிரம் காட்டும் குமிழ் தாப்பாள்

    13. இளமை மாறாத இனிய தமிழ்

    14. இலக்கணமும் சுவையானதுதான்

    15. கம்பனின் சொல் தேர்வு

    16. கம்பன் காட்டும் பிரம்மாண்டம்

    17. கம்பன் சொல்லை வெல்லும் சொல் உண்டோ

    18. கண்களை வர்ணிகும் கற்பனை

    1. கள்வன் மகன் ஆனான் காதலன்

    அன்பிற்குரியவர்களை நாம் செல்லமாகத் திட்டுவது உண்டு அல்லவா? அப்படி, சங்க இலக்கியத்தில் காதலனை, திருட்டுப் பயல் மகனே என்று செல்லமாகச் சொல்கிறாள் காதலி. இதை நாடகக் காட்சி போல காட்டுகிறார் கபிலர். கலித்தொகையில் வரும் அந்தப் பாடல் பற்றிப் பார்ப்போமா?

    குடிக்க தண்ணீர் கேட்பது போல தலைவன் தன் வீட்டுக்கு வந்து சென்றதை தோழியிடம் சொல்வதாக அமைந்த பாடல் இது.

    நானும் என் தாயும் வீட்டுக்குள் இருந்தோம். வாசலில் ஒருவன் வந்து நின்று, குடிக்கத் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டான். உடனே என் தாய், யாரோ குடிநீர் கேட்கிறார்கள் கொண்டுபோய் கொடு என்றாள். வந்திருப்பது யாரென்று தெரியாமல் நானும் தண்ணீர் கொண்டு சென்றேன். வாசலில் தலைவன் நின்றுகொண்டிருந்தான்.

    தண்ணீர் சொம்பை வாங்கியவன், என் முன் கையைப் பிடித்துவிட்டான். அதிர்ச்சியடைந்த நான், அம்மா இவன் செய்ததைப் பார் என்று கத்திவிட்டேன். அன்னை அலறியடித்து ஓடி வந்தாள்.

    என்ன செய்தான்? என்று கேட்டாள்.

    தண்ணீர் குடிக்கும்போது விக்கினான் என்று சொல்லி சமாளித்தேன். அவன் முதுகை நீவிவிட்டாள்

    Enjoying the preview?
    Page 1 of 1