Sabai Naduve
By Jayakanthan
()
About this ebook
Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)
Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.
In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.
https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Read more from Jayakanthan
Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Yaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Illathavargal Rating: 5 out of 5 stars5/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Oru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Ayudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Hara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Sundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Yuga Santhi Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5
Related to Sabai Naduve
Related ebooks
Oru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsKai Vilangu Rating: 4 out of 5 stars4/5Oorukku Nooru Per Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsVaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Jaya Jaya Sankara Rating: 5 out of 5 stars5/5Appa Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsPugai Naduvinile... Rating: 0 out of 5 stars0 ratingsAyudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsSumai Thaangi Rating: 0 out of 5 stars0 ratingsIrandha Kaalangal Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Alai Osai - Part 2 (Puyal) Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Vizhuthugal Rating: 5 out of 5 stars5/5Oru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsOru Nadikai Naadakam Parkiral Rating: 2 out of 5 stars2/5Alai Osai - Part 3 (Erimalai) Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sabai Naduve
0 ratings0 reviews
Book preview
Sabai Naduve - Jayakanthan
http://www.pustaka.co.in
சபை நடுவே
Sabai Naduve
Author:
ஜெயகாந்தன்
Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நானும் புதிதாக எழுத வருபவர்களும்
2. நமது தேர்தல்கள் நியாயமானவைதானா?
3. குறிஞ்சி-இலக்கியத் திருநாள்
4. தேர்தல் குறித்த யோசனைகள்
5. தமிழுக்கு விரோதிகளா?
6. பயங்கரவாதத்துக்கு எதிராக...
7. போராடக் கற்றுத் தந்தவர் யார்?
8. தேசியமும் திராவிடமும்
9. ஆத்திகம் - நாத்திகம் - அக்னாஸ்டிஸம்!
10. ஆட்டம் முடியவில்லை
11. பிரதமர் ஒரு பிரச்சினை இல்லை
12. விஷமிகள், ஜாக்கிரதை!
13. அற்புதமான 'காய் நகர்த்தல்!’
14. கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கலாமா?
15. சாதியால் வந்த சிறுநெறி தவிர்ப்பீர்!
16. கேள்வி நேரம்
17. த.மா.கா. தலைவர்கள் முகாம்
18. மரம் ஒன்று; கிளைகள் பல! மலர் ஒன்று; இதழ்கள் பல!
19. ஐக்கிய (கம்யூனிஸ்டு) முன்னணி
20. சுற்றி நில்லாதே போ, பகையே...
21. தலைவர்கள் பெயரை நீக்கத் தயக்கம் ஏன்?
22. காந்திஜி வழிவந்த கம்யூனிஸ்டுகள்
23. அதிருப்தி - எதிர்ப்பு அல்ல; எதிர்பார்ப்பே!
24. ஓர் அர்த்தமுள்ள கேள்வி!
25. வன்முறையின் கடைசிப் புகலிடம்
26. தஞ்சமென்று அடைந்த பின்...
27. பாதுகாவல்தான்; சிறையல்ல
28. எதிர்த்தவர் ஆதரித்தால் என்ன?
முன்னுரையும் - முதற்கட்டுரையும்
'சபை நடுவே என்ற தலைப்பில் வாரந்தோறும் தினமணி கதிரில் எழுதுவதற்கு ஆதாரமாய் இருந்த 'ஆம்; இந்தியா உலகுக்கு அளிக்கும்' என்ற தலைப்பில் தினமணி கதிர் தீபாவளி மலரில் எழுதிய கட்டுரையை முதல் கட்டுரையாக முன்னுரையோடு சேர்த்திருக்கிறேன்.’
இந்தக் கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதிய போது, நமது சபை ஏதோ தினசரி என் முன்னால் கூடுவது மட்டும் அல்ல; அது தமிழகம் முழுவதும், தமிழறிந்த நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வியாபித்துள்ள பெரும் சபை என்பதை கண்டு கொண்டேன்.
அந்த நண்பர்கள் அனைவருக்கும் திடீரென்று இத்தொடரை நிறுத்திக் கொண்டதில் சற்று ஏமாற்றம் என்பதை நான் அறிவேன்.
நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதைத்தான் மேற்கோள் காட்டுகிறேன்: நாம் செய்கிற ஒரு காரியம் சிறப்பானதுதானா என்று சோதித்து அறிந்து கொள்ள வேண்டுமானால், செய்கிற காரியத்தைச் சற்று நிறுத்திப் பார்க்க வேண்டும். ஒரு ஓவியன் தான் வரையும் சித்திரத்தை நிறுத்தி நடுவில் சற்றுத் தள்ளி வந்து நின்று பார்த்துக் கொள்வதைப் போல், அவ்விதம் நான் பார்க்கிறபோது இக்கட்டுரைகள் பயன்மிக்க திசைகாட்டியாகப் பயன்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். பலருடைய எண்ணங்களை - ஒத்த மனமும் சிந்தனையும் உடைய நமது பரந்துபட்ட நண்பர்களின் கருத்துக்களை அவை எதிரொலித்திருக்கின்றன; செழுமைப்படுத்தியிருக்கின்றன என்று அறிய வருகிறபோது நான் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
த. ஜெயகாந்தன்
இனி, 'சபைநடுவே' தொடருக்கு ஆதாரமாயிருந்த முதற் கட்டுரை:
*****
சபை கூடியிருந்தது. இன்றைக்கு நண்பர்களின் கூட்டம் அதிகமில்லை. நாலைந்து பேர் தான் இருந்தார்கள். சபையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் இருக்க வேண்டும்; என்னைச் சுற்றி இரண்டு பேர் இருந்தாலும், இருபது பேர் இருந்தாலும் சபை கூடிவிடும். எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சபை கூடிவிடும். ஆன்மிகம், அரசியல், இலக்கியம், சொந்த விஷயங்கள், சொந்தமற்ற விஷயங்கள் - அப்படியெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை - எல்லாம் சபையில் விவாதிக்கப்படும். சபையினர் - பல தரப்பட்ட அவர்கள், ஒருவர்க்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் கூட வருவார்கள். இங்கிருக்கும் ஒரே ஒரு நியதி வருகிற புதியவர்கள் ஏற்கெனவே அறிமுகமான ஒருவர் மூலம் அழைத்து வரப்படுகிறவராக இருப்பார். மற்றபடி ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்வது காலப்போக்கில் அவரவர் மனப்போக்கு ஏற்ப நிகழ்வதே
இந்தச் சபையைச் சேர்ந்தோர் தமிழகம் முழுவதும் வியாபித்துள்ளவர்கள். அவர்களில் பலர் ஆசிரியர்கள்: பேராசிரியர்கள்: எழுத்தாளர்கள்: தொழிலாளர்கள்! விவசாயிகள்: அறிவு ஜீவிகள்: தொழில் செய்வோர்... சிரம ஜீவிகள் என்று பலதரப்பட்டோர்.
பொதுவாக உள்ளூர்க்காரர்களே தினசரி கூடும்போது இருப்பதை விடவும் வெளியூர் நண்பர்கள் வருகிறபோது சபை சற்றுக் களைகட்டிவிடும்.
இன்றைக்கு வெளியூர் நண்பர் சிவனாண்டித் தேவர் வந்திருக்கிறார். இவரைப் பற்றிச் சுருக்கமாகவேனும் சொல்லியாக வேண்டும்.
சிவனாண்டி ஐம்பதைக் கடந்தவர். ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர். இந்த ஆசிரியப் பணியை ஒரு ஜீவனோபாயமாக மட்டும் கொள்ளாமல் தமது ஜீவித லட்சியமாக ஏற்றுக்கொண்டு அதில் ஆத்ம நிறைவும் ஆத்ம அபிவிருத்தியும் காண்பவர். ஓரிரு நாட்கள் வெளியூர் வந்திருக்கும்போது, ஐயோ என் குழந்தைகள் எனக்காகக் காத்து எதிர்பார்த்திருப்பார்களே!
என்று ஒரு தாய் போல் பதைத்து ஊருக்கு ஓடிப் போய்விடுவார். தன்னிடம் எழுத்து அறிந்து கொண்ட சிறுவர் சிறுமியர், அன்னையர், தந்தையராகி, அவர் தம் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதைப் பெருமிதம் கலந்த மகிழ்ச்சியோடு கூறிப் பூரிப்படைவார். ஆம்; கல்வியைக் காணாத ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்குக் கல்வி கற்பித்து, வளர்த்துச் சான்றோர்களாக்கிய 'கர்வம்' அவரைத் தலை நிமிர்ந்து அந்தக் கிராமத்து மக்களிடையே நடக்க வைத்திருக்கிறது. அவரிடம் படித்த அந்த ஆரம்பப் பள்ளிச் சிறுவர்கள் டாக்டர்களாகவும், கம்ப்யூட்டர் படித்த தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் உயர்ந்திருப்பதைக் கூறி, 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்து, இதய நிறைவு காண்கிற பாரதியின் சீடர். நான் அவருக்கு நல்லாசிரியர் விருது தருவேன். சிவனாண்டித் தேவாரப் புகழ்ந்து பூச்சூட்டியது போதும்’ என்று நினைக்கிறேன்.
இம்முறை சபைக்கு வருகை தரும் போதே ஏதோ சரியான 'தாக்குத’லுக்குத் தயாராகத்தான் மனிதர் வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.
தாக்குதல் என்றால் கேள்விக்கணைகள் தொடுப்பது தான். ஏதோ இவர்களின் சந்தேகங்கள், ஐயங்கள், கவலைகள், பிரச்னைகள் - அதுவும் நாடு சம்பந்தப்பட்ட உலகம் சம்பந்தப்பட்ட, ஏன் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் நான்தான் தீர்வு கூறத் தகுந்தவன் என்ற பாவனையுடன் இவர்கள் என்னைத் தாக்கும்போது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் மிரட்சியாகவும் இருக்கிறது!
நான் மிரட்சி அடைகிறேன் என்று சொல்லுவதை சிவனாண்டி நம்பமாட்டார், அதில் ‘பொடி’ வைத்து நான் ஏதோ உணர்த்துவதாகப் புரிந்துகொண்டு முகம் சிவந்து மூக்கு விகசிக்கும் புன்னகையை அடக்கிக் கொண்டு என்னைப் பார்க்கிறார்.
ஓய் சிவனாண்டி உமக்குத் தெரியுமா? ஒரு முறை பெர்னாட்ஷா தமது எண்பதாவது வயதில் சொன்னார்:
ஒவ்வொரு முறையும் நான் புதிதாக எழுதத் தொடங்கும் போது ஒரு ஆரம்ப எழுத்தாளனாகவே என்னை உணர்கிறேன் என்று. அது ஒரு மிரட்சி தானே?
அது மிரட்சி இல்லை. அது ஒரு உணர்ச்சி ஆரம்ப காலத்தில் எழுதத் துவங்கும் போது உங்களுக்குக் கூட அப்படியொரு உணர்ச்சி இருந்திருக்குமே!
என்று சிவனாண்டி சிந்தையைக் கிளறிப் பார்க்கிறார்.
அதைத்தானே சொல்ல வருகிறேன். ஆரம்ப காலம் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொரு முறையும் புதிதாக எழுதத் தொடங்குகிற காலம் ஒரு ஆரம்ப காலம் தான் என்று சொல்ல வருகிறேன். I feel still like a beginner.
நீங்கள் எழுதத் தொடங்கியபோது இலக்கியத்தை விடவும் அதிகமாக அரசியல் தொடர்பு உடையவராகத் தானே இருந்தீர்கள்?
இலக்கியம், ஆன்மிகம், கலைகள் மனித உறவுகள் பற்றியெல்லாம் அறிய எனக்கு அஸ்திவாரமாக இருந்தது அக்கால அரசியல் வெளிச்சமே! அதில் என்ன சந்தேகம்?
அதைக் கம்யூனிஸ்ட் ‘வெளிச்சம்' என்று சொல்லலாமா?
அப்படிச் சொல்வது முழு உண்மை ஆகாது. அக்கால அரசியல் என்பது காந்திய வெளிச்சமே. கம்யூனிஸ்டுகளை நான் அந்த வெளிச்சத்தில்தான் கண்டு கொண்டேன். 'காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து' என்று ஒரு சிறிய நூல் தான். கம்யூனிஸ்டுகளை எனக்கு சிபாரிசு செய்தது என்று நம்புகிறேன். அது 1946-ல் வெளிவந்தது. பனிரெண்டு வயதிலேயே அதைப் படித்துப் பயன்பெறும் அளவு நான் பக்குவப்பட்டிருந்தது இக்காலத்தில் எண்ணிப் பார்க்க வியப்புத் தருகிறது.
என்ன நீங்கள் எழுதுகிற மாதிரி சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்? நான் குறிப்பு எடுத்துக் கொள்ளலாமா?
என்று தோளிலிருந்த ஜோல்னாப் பையில் நோட்டுப் புத்தகத்தைத் தேடுகிறார் சிவனாண்டி.
சிரமப்படாதீர், மனத்தில் குறித்து வைத்துக் கொண்டால் போதாதா?
இல்லை. உங்களிடம் கேட்பதற்கென்றே சில கேள்விகளைக் குறித்துக் கொண்டு வந்தேன். அதைத்தான் தேடுகிறேன்.
பேட்டியா...?
பேட்டி என்று வைத்துக் கொண்டாலும் சரியே. என் முதல் கேள்வி - அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் எதிர்காலம் எப்படியிருக்கும். குறிப்பாகத் தமிழ்நாட்டில்? நான் உங்களிடம் ஜோசியம் கேட்பதாகச் சொல்லித் தட்டிக் கழிக்க வேண்டாம், காங்கிரஸ் மகாசபையின் கடந்த காலப் பெருமைகளையும் நிகழ்காலச் சரிவையும் நீங்கள் அதன் ஆதரவாளராக இருந்து அறிந்தவர் என்பதால் அக்கறையுடன் உங்களைக் கேட்கிறேன்.
"இந்தியா சுதந்திரம் பெற்றதுடன் காங்கிரசைக் கலைத்து விடுமாறு காந்திஜி கூறினார் என்பதை எல்லாரும் பரவலாக அறிந்திருப்பீர்கள். அவர் ‘கலைத்து விடுங்கள்' என்று மட்டும் சொல்லவில்லை. அதை மக்களுக்குச் சேவைபுரியும் ஒரு பேரியக்கமாகக் கட்டி வளர்க்கவே சொன்னார். அந்த இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாழ்வின் நெறியாகப் பல தனி மனிதக் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளச் சொன்னார். அதாவது ஓட்டுப் பெற்று ஆட்சிக்கு வரும் கட்சியாக மட்டுமில்லாமல், ஆட்சிக்குப் போகிற கட்சிகளின் மீது ஆளுமை செலுத்தும் ஒரு சமூக சக்தியாகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினார். காந்தி சுதந்திரத்துக்காகப் போரிட்டது காங்கிரஸ்காரர்களை அதிகாரமோகிகளாக ஆக்குவதற்காக அல்ல. ஆளத் தகுதி பெற்ற சரியான மனிதர்களை ஆட்சியில் அமர்த்தி சமுதாய ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் இயக்கமாகக் காங்கிரஸ் பணியிருந்தால் புதிய இளைஞர்கள் காந்திய வெளிச்சத்தில் உருவாகி இருப்பார்கள். காங்கிரஸ் சுதந்திரம் அடைகிற வரை காந்திஜியைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மறைவுக்குப் பின் முற்றாக அவரது சமுதாய - ஆன்மிக - தனி மனித ஒழுக்க நெறிகளைக் கைகழுவி, அதிகாரம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட கட்சியாயிற்று.
"அதிகாரம் என்றால் 'மத்தியத்து வல்லாண்மை' மட்டுமே போதும் இந்தியாவை ஆளுவதற்கு என்று தீர்மானித்து செயல்பட்டது. மாநிலங்களில் எத்தகைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் மத்தியத்துவ வல்லாண்மைக்கு ஆதரவு தருகிற கட்சியாக இருந்தால் போதும் என்ற அரசியல் பேரத்தில் அந்தந்தப் பிரதேச காங்கிரஸ்காரர்களின் நலன் பலிகொடுத்து மாநில மக்களின்