Irandha Kaalangal
By Jayakanthan
()
About this ebook
Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)
Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.
In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.
https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Read more from Jayakanthan
Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 Rating: 4 out of 5 stars4/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Oru Pennin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manithargal Rating: 4 out of 5 stars4/5Yaarukkaga Azhuthan? Rating: 4 out of 5 stars4/5Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Rating: 2 out of 5 stars2/5Cinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsUnnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsKathaiyin Karu Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Ayudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsIllathavargal Rating: 5 out of 5 stars5/5Oru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Hara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Oru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 4 out of 5 stars4/5Karu Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsAndha Akkavai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKokila Enna Seithu Vittal? Rating: 4 out of 5 stars4/5Yuga Santhi Rating: 0 out of 5 stars0 ratingsSundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irandha Kaalangal
Related ebooks
Kai Vilangu Rating: 4 out of 5 stars4/5Pralayam Rating: 5 out of 5 stars5/5Marupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsBrahmopadesam Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nerathil Ival Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Unnaippol Oruvan Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Karunaiyinal Alla Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Sudum Rating: 0 out of 5 stars0 ratingsCinemavukku Pona Sithalu Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsParisukkup Po! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsSi(ri)thralaya Rating: 0 out of 5 stars0 ratingsIthaya Ranigalum Ispedu Rajakkalum Rating: 3 out of 5 stars3/5Irumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsGangai Engey Pogiraal? Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai: Kalamega Pulavanin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Azhaikkirathu Rating: 2 out of 5 stars2/5Engengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsSumai Thaangi Rating: 0 out of 5 stars0 ratingsAyudha Poojai! Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Irandha Kaalangal
0 ratings0 reviews
Book preview
Irandha Kaalangal - Jayakanthan
http://www.pustaka.co.in
இறந்த காலங்கள்
Irandha Kaalangal
Author:
ஜெயகாந்தன்
Jayakanthan
For more books
http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
இறந்த காலங்கள்
பாவம், பக்தர்தானே!
அக்ரஹாரத்துப் பூனை
கோடுகளைத் தாண்டாத கோலங்கள்
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
கண்ணாமூச்சி
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
முன்னுரை
இதில் உள்ள எட்டுக் கதைகளும் நான் சமீப காலத்தில் - 1967, 68, 69 ஆண்டுகளில் - எழுதியவை, எனவேதான் வழக்கமாகக் குறிப்பிடுவதைப் போலக் கதை எழுதின ஆண்டுகளை இதில் குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை ஆண்டுகளாக இரா; மாதங்களாகவே இருக்கும்.
‘கோடுகளைத் தாண்டாத கோலங்கள்', 'கண்ணாமூச்சி’ இவை இரண்டும் முறையே கலைமகள் தீபாவளி மலர், தினமணி கதிர் தீபாவளி மலர் ஆகியவற்றிலும் மற்றக் கதைகள் ஆனந்த விகடனிலும், பாவம் பக்தர்தானே, அக்ரஹாரத்துப் பூனை இவை இரண்டும் ஆனந்தவிகடன் தீபாவளி மலரிலும் வெளியானவை.
தமிழ் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் இவற்றைப் படித்துப் பாராட்டி அல்லது படித்து முகம் சுளித்திருக்கிறார்கள் என்ற இரண்டுமே என் மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள்தான்.
சில வருஷங்களுக்கு முன்பு ஆரம்பித்த தமிழர்களின் இந்தப் பழக்கம் - அதாவது ஜெயகாந்தனைப் படித்துப் பாராட்டுவது அல்லது படித்து முகம் சுளிப்பது என்ற இலக்கிய சம்பந்தமான நடைமுறை - மேலும் மேலும் வளர்ந்து வருவது ஆரோக்கியமானதுதான். இதில் ரொம்ப ரொம்ப ரசமான விஷயம் என்னவென்றால் எவ்வளவுக்கெவ்வளவு என்னைப் படித்து முகம் சுளிப்பவர்கள் பெருகுகிறார்களோ அதே மாதிரியே பாராட்டுகிறவர்களும் பெருகுவதுதான். எனவே இந்த மோதலிலிருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன். அப்படி ஒதுங்கிக் கொள்வது நன்றாகவுமிருக்கிறது; நாகரிகமாகவும் இருக்கிறது. அந்த இயக்கிய பூர்வமான மோதல் எனது அபிமான வாசகர் இருக்கிடையே நடக்கட்டும். அவர்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு அந்த இரு சாராருக்குமே நான் எழுதியவை குறித்து ஏதாவது சொல்லியாக வேண்டுமென்று என்னை நிர்ப்பந்திக்கிறார்கள் அது மாதிரி சமயங்களில் நான் பேசுவதெல்லாம் இவர்களுடைய மோதுதலின் தரத்தைப் பொறுத்து அமைகிறதே தவிர என்னுடைய எழுத்தின் தரத்தைப் பொறுத்து அமைவதில்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே,
எனது முந்தைய தொகுதிகளைப் போல் இந்தத் தொகுதியில் எனது கதைகளுக்கு நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. எனது கதைகளுக்கான நியாயங்களை அந்தக் கதைகளை விடவும் சிறப்பாக என்னால் எடுத்துக் கூறி நிலைநாட்டிவிட முடியாது என்பதை நான் இப்போது உணர்கிறேன். படைப்பாளி பேச ஆரம்பிக்கும் பொழுது அந்தப் பீடத்திலிருந்து இறங்கி விடுகிறான். அதன் பின்னர் அவன் பேசுகின்ற பேச்சுக்கும் பிறர் பேசுகின்ற பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போகிறது.
எழுதியதற்குப் பின்னாலும் அந்த எழுதிய ஒன்றைப் பற்றி எனக்குப் பேசுவதற்கு நிறைய இருக்கிறதென்றால் எனது எழுத்து முழுமையுறவில்லை என்றுதானே பொருள்? எனவேதான் இந்தத் தொகுதியிலுள்ள எல்லாக் கதைகளையும் எடுத்துக் கொண்டு பேசுவதில் எனக்குச் சலிப்பே மேலிடுகிறது.
ஓர் விமர்சகன் என்ற முறையில் எனது கதையை நானே சிறப்பாக விமரிசனம் செய்ய முடியும், என்றாலும் அதனைப் படைத்த சிறப்புக்கு அது ஈடாகாது.
அப்படிப்பட்ட நிலைமையை மலட்டுத்தனமான விமர்சகர்களும், முரட்டுத்தனமான வாசகர்களும் உருவாக்கி விடுகின்ற போது வேறு வழியின்றி ஒரு படைப்பாளி தன் படைப்பினை விமர்சனம் செய்வதும், அதற்காக வக்காலத்து வாங்குவதும் நேர்ந்துவிடுகிறது. இது ஓர் அவல நிலை.
பத்திரிகைக்காரர்களும் சரி, பெரும்பான்மையான வாசகர்களும் சரி கொஞ்சமும் இலக்கியத்துக்குச் சம்பந்தமில்லாமலேயே என்னையும் எனது எழுத்தையும் அணுகும்போது நான் உதட்டளவில் சிரித்து அவர்களுக்குப் பதில் சொன்ன போதிலும் உள்ளூர மிகவும் நைந்து போகிறேன்.
நீங்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு ஜாதியினரையே வைத்துக் கதை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதும் நீங்கள் ஏன் இன்னும் தமிழிலேயே கதை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பதும் ஒன்றுதான் என்பது இன்னும் ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை
அண்மையில் அரசியல் வாரப் பத்திரிகை ஒன்றில் இந்த தொகுதியின் தலைப்புக் கதையான இறந்த காலங்களைக் குறித்து, இந்தக் கதையைப் படித்த சிலர் தங்களது அபிப்பிராயங்களை எழுதி இருந்தார்கள். தொடர்ந்து என்னுடைய பிற கதைகளைப் பற்றியும் அதில் எழுதப் போகிறார்கள் என்றும் அறிகிறேன். இது ரொம்பவும் நல்லது; வரவேற்கத்தக்கது என்பதால் அந்தப் பத்திரிகையாளர்களையும் அந்த வாசகர்களையும் நான் பாராட்டுவேன். ஆனால் இவற்றை விமர்சனமென்று அழைக்கலாகாது. ஒருவேளை இந்த முயற்சிகளிலிருந்து ‘இது விமர்சனமல்ல’ என்று இவர்களே புரிந்து கொள்ளும் காலத்தில் இதன் மூலம் விமர்சனம் என்று ஒன்று பிறக்க வழி ஏற்படலாமோ என்னவோ?
இங்கு இதனை நான் குறிப்பிடக் காரணம் ‘இந்தக் கதையை நான் படித்தேன்; இதைப் படித்ததினால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. ஆகவே இது ஒரு ‘விமர்சனம்’ என்று ஒருவர் கூறுவது சரியாகாது என்பதை வற்புறுத்தவே. அவற்றுக்கு வாசகர் விமர்சனம், அல்லது 'வாசகரின் அபிப்பிராயம்’ என்பதே பெயர். இந்த அபிப்பிராயங்களுக்கு ஒரு மரியாதை உண்டு, அதற்காக விமர்சனம் என்று ஒன்று இருக்கிறதே அதனை அவமதித்தல் ஆகாது.
இலக்கிய விமர்சனமென்பது எழுதினவனைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காது. அதற்கும் மேல் எழுதிய ஒன்று தன்னை எப்படிப் பாதிக்கிறது என்ற ஒரு தனி மனித உறுத்தலாகவும் அது அமையாது. எல்லாவற்றுக்கும் மேலாக இப்படியெல்லாம் எழுதலாமா? இதை இந்தப் பத்திரிகையில் வெளியிடலாமா? இதனை எப்படி என் தாயார் படித்துச் சகித்துக் கொள்வாள்? என் தங்கையிடம் இதைக் காட்டலாமா? என்றெல்லாம் அவஸ்தைப்படுகிறவர்கள் எந்தக் கதையும் படிக்காமலிருப்பதே நல்லது.
ஒரு படைப்பாளியை விடவும் ஒரு விமர்சகன் சகல துறைகளிலும் ஆழ்ந்த அறிவும் அதற்கும் மேல் தர்க்க அறிவும் உடையவனாயிருத்தல் வேண்டும். அவன் விமர்சனமென்று பெயரில் அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.
ஒரு, படைப்பை விமர்சிக்க வரும்போது அவன் அதற்குப் புறம்பான ஒரு சாஸ்திரத்தை, ஒரு சமுதாய சட்டத்தை, ஒரு அரசியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளுவதில்லை. அந்தப் படைப்பாளியின் மனோ தர்மத்தையே அதற்கு அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய மனோ தர்மத்தோடு இயைந்து செயல்பட முடியாமல், கலைத் தன்மையின் சிதைவுக்கு அந்தப் படைப்பாளி எங்கெங்கே ஆளானான் என்று அவளை அந்தப் படைப்பின் மூலம் மட்டுமே கவனிப்பான் விமர்சகன்.
ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் மனோதர்மத்தின் அடிப்படையே தனக்கு ஒத்துவரவில்லையென்றால் அவனைத் தொடவே மாட்டான் இந்த விமர்சகன். ஒரு விமர்சகன் என்ற முறையில் அது இவனுக்குச் சம்பந்தமில்லாததல்லவா? அப்படி தனக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை, ஒரு விமர்சக்னே செய்த போதிலும் அது விமர்சனமென்ற தரத்திலிருந்து தாழ்ந்து, விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்ட ஒரு தனி மனித அபிப்பிராயமாகவே சிறுமையுறும்.
இந்தத் தொகுதியிலுள்ள எல்லாக் கதைகளையும் ஒரு மித்து இப்போது படிக்கிறபோது, இவை பெரும்பாலும் சரியென்று மனசுக்குட்பட்டும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கும் நமது சமூக, குடும்ப, தாம்பத்ய, தனி மனிதக் கூச்சங்கள் (Social Marital-Individual-Inhibitions) உருவாகி இருக்கின்ற நிலையையும் அவை உடைந்து நொறுங்குகின்ற சரிவினையும் சுட்டுகின்ற, உணர்த்துகின்ற, 'தீம்'களாவே உள்ளன.
இந்தக் கதைகளைப் படிப்பதற்கு மன முதிர்ச்சி (வயது முதிர்ச்சி அல்ல) வேண்டும். இத்தகைய மன முதிர்ச்சி இக்கால இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கின்ற அளவு பெரும்பான்மையான வயது முதிர்ந்தவர்களுக்கு இல்லை என்பதனால் இதனை வயதானவர்கள் படிக்கக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன்.
இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் மட்டுமல்ல; பொதுவாக இலக்கியம் படிப்பவர்களுக்குப் பொருந்தி வருகின்ற ஓர் உண்மையை என் கதைகள் சம்பந்தமாக இப்போது சொல்ல நேர்ந்திருப்பதால் கூறுகிறேன். எனது எந்தக் கதையையும் படிப்பதற்கு ஒரு மன முதிர்ச்சி தேவை. அப்படிப்பட்ட முதிர்ச்சி இல்லாதவர்கள் கூட திறந்த மனத்தோடு அவற்றைப் படிப்பதன் மூலம் அந்த முதிர்ச்சியைப் பெற முடியும். ஆகவே என் கதைகளை குடும்பத்தில் உள்ளவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் எல்லாருமே படிக்கலாம், படிக்க வேண்டும், அதன் மூலம் ஒரு Maturity ஏற்படும். அந்த முதிர்ச்சியை அடையவே முடியாதவர்கள் தான் இவற்றைப் பற்றி அதிகக் கூச்சலிடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கே கவலைப்பட வேண்டாம், ஏனெனில் அது இலக்கியப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை!
13.02.1969
சென்னை – 31
த. ஜெயகாந்தன்
*****
இறந்த காலங்கள்
ஆனந்த சர்மா காரிலிருந்து கடற்கரைச் சாலையின் பேமெண்ட்டில் இறங்கினார். டான்சீட்டில் அமர்ந்திருந்த அவரது பேரக் குழந்தைகள் சினிமாவுக்குப் போகிற குதூகலத்தில் தாத்தாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகக் கையசைத்தனர். அவர் இறங்குவதற்கு முன்னால், அவருக்குக் கதவைத் திறந்து விடுவதற்காகக் காரின் இடப்புறம் வந்து நின்ற டிரைவர், சர்மாவிடம் பணிவுடன் கேட்டான்:
சினிமாவிலிருந்து கொழந்தைகளைக் கூட்டியாறப் போகும்போது வந்தாப் போதுங்களா?
வேகமாக வீசுகின்ற கடற்காற்றினால் அவன் கேட்டது சர்மாவுக்குக் காதில் விழவில்லை. அதுவுமில்லாமல் அவருக்குக் கொஞ்ச நாட்களாகக் காதும் சரியாகக் கேட்பதில்லை.
தாத்தா, மணி என்னமோ கேக்கறான்
என்று அவரது மகள் வயிற்றுப் பேரன் பாச்சா, வாயருகே கையமர்த்தி, காற்றின் வேகத்தையும் மீறிக் கொண்டு உரத்துக் கூவினான்.
சர்மாவின் செவிகளுக்கு அந்த அதிகபட்ச ஓசையையும் தாங்க முடியவில்லை. அதுக்கு ஏண்டா இப்படிக் கத்தறே?
என்று சிடுசிடுத்துவிட்டு, டிரைவரின் பக்கம் திரும்பி என்னப்பா வேண்டும்?
என்று மென்மையாகக் கேட்டார்.
ஒண்ணுமில்லீங்க - கொழந்தைகளைக் கூட்டியாற ஒன்பது மணிக்குத் தியேட்டருக்குப் போகும்போது வந்தாப் போதுமா, மின்னாடியே வரணுங்களான்னு கேட்டேன்
என்றான்.
வேணாம்... வேணாம்... தியேட்டரிலிருந்து கொழந்தைகளைக் கொண்டு போயி ஆத்திலே விட்டுட்டு வேண்ணாலும் வாயேன். தியேட்டருக்கும் கடைத்தெருவுக்கும் என்னாலே ஊரெல்லாம் சுத்திண்டு இருக்க முடியாது.
இவருக்காக ஒரு தடவை மாம்பலத்திலிருந்து இவ்வளவு தூரம் வரவேண்டி இருக்கே என்பதற்காகத்தான் - தன் சௌகரியத்தை உத்தேசித்து - மணி அப்படி ஒரு யோசனை கேட்டான். இவரோ அப்புறம் ஒரு தடவை வாடா என்கிறாரே என்று நினைத்து முகம் சுளித்தான் மணி சர்மாவுக்கு அது புரிந்தது.
அப்போ ஒண்ணு செய். கொழந்தைகளைத் தியேட்டரிலிருந்து ஆத்துக்கு அழைச்சிண்டு போகச்சே இப்படி வந்துடேன்.
மணி ஒன்பதரை ஆகுங்களே!
பரவாயில்லே. கூடிய வரைக்கும், சீக்கிரம் வா; இந்தச் கோடை காலத்திலே கொஞ்சம் அதிக நேரம் காத்திலே இருந்தா ஒண்ணும் ஆயிடாது
என்று கூறியபின், 'இந்தக் கிழத்துக்காகத் தனியே ஒரு தடவை ஸ்பெஷலாக வந்துட்டுப் போறது ஒரு வீண் வேலைன்னு நெனைக்கறான்போல் இருக்கு... ம்... நியாயந்தானே’ என்று மனசில் நினைத்துக் கொண்டார் சர்மா.
கார் புறப்பட்டுச் சென்ற பிறகு, மெதுவாகவும் நிதானமாகவும் தனது பளபளக்கும் கைத்தடியை ஊன்றி நடக்கலானார். அவரது பாதங்கள் ஒரு குழந்தையின் பாதம் மாதிரி மிருதுவாகவும் சிவந்து மிருப்பதால், அவர் நடக்கும் போது செருப்புக்கும் பாதத்துக்கும் இடையே சிக்கிய ஒரு சிறு கூழாங்கல்லை மிதித்ததும் துடித்துப் போனார்.
யூஸ்லெஸ் பெல்லோஸ், அந்தப் பக்கத்திலே போட்டிருக்கிற மாதிரி இங்கேயும் சிமெண்ட் ப்ளோரிங் போட்டால் என்ன? அப்படியே விட்டு வெச்சுட்டான்கள். நடக்க முடியல்லே...
- என்று கார்ப்பரேஷன் காரர்களை மனசில் கண்டித்துக் கொண்டார்.
அவர் அணிந்திருந்த மெல்லிய வேட்டி - ரொம்பப் பழசு; எட்டு முழவேட்டியிலிருந்து கிழித்த நான்கு முழ வேட்டி அது. நடக்கும்போது அவரது இரண்டு கால்களாக் கிடையிலும்