Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moongil Kaattu Nila
Moongil Kaattu Nila
Moongil Kaattu Nila
Ebook93 pages39 minutes

Moongil Kaattu Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தலைப்பில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்றுதான் முதலில் எனக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் இந்தத் தலைப்பு ஓர் ஓவியத்துக்கு ரொம்பப் பொருத்தம் என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் அடிக்கடி நிலாக் காலங்களில் இந்தச் சொற்றொடர் ‘நிலா காட்டு நிலா - மூங்கில் காட்டு நிலா’ என்று மலரும்.

நிலச் சொத்துடைமைச் சமூகத்தில் - அதுவும் இக்கால நவீன ஒடுக்குமுறைகளும் சேர்ந்து வர்க்கப்பேதம் பாராமல் மானுட உணர்வுகளை நசித்துப் போடுகிறது என்று காட்ட எவ்வளவோ கதைகளைப் புனைந்து எழுதலாம். அந்த அளவு யதார்த்த வாழ்வில் ஒருவன் சாவில் இன்னொருவன் லாபம் அடைகிற நடைமுறைக் கொடுமை பற்றி நாம் யோசித்தல் வேண்டும். அந்த வரலாற்று நினைவும் அதற்கு இணையாக அண்மையில், இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயப் பெண்களைப் பற்றிய வீரமிகு செய்திகளும் இதை எழுதத் தூண்டின. இவையெல்லாம் புறக் காரணங்களே ஆயினும், இவற்றில் ஆழ்ந்துள்ள மானிட உணர்ச்சிகளின் மேன்மைகளே இதை இலக்கியமாக்குகின்றன.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580103906905
Moongil Kaattu Nila

Read more from Jayakanthan

Related to Moongil Kaattu Nila

Related ebooks

Reviews for Moongil Kaattu Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moongil Kaattu Nila - Jayakanthan

    https://www.pustaka.co.in

    மூங்கில் காட்டு நிலா

    Moongil Kaattu Nila

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    கல்பனா இதழில் நான் எழுதிய சில கதைகளில் ‘மூங்கில் காட்டு நிலா’ ஒன்று. இந்தத் தலைப்பில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்றுதான் முதலில் எனக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் இந்தத் தலைப்பு ஓர் ஓவியத்துக்கு ரொம்பப் பொருத்தம் என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் அடிக்கடி நிலாக் காலங்களில் இந்தச் சொற்றொடர் ‘நிலா காட்டு நிலா - மூங்கில் காட்டு நிலா’ என்று மலரும்.

    நிலச் சொத்துடைமைச் சமூகத்தில் - அதுவும் இக்கால நவீன ஒடுக்குமுறைகளும் சேர்ந்து வர்க்கப்பேதம் பாராமல் மானுட உணர்வுகளை நசித்துப் போடுகிறது என்று காட்ட எவ்வளவோ கதைகளைப் புனைந்து எழுதலாம். அந்த அளவு யதார்த்த வாழ்வில் ஒருவன் சாவில் இன்னொருவன் லாபம் அடைகிற நடைமுறைக் கொடுமை பற்றி நாம் யோசித்தல் வேண்டும்.

    இந்தக் கருத்தில் தான் நான் ஊஞ்சலாட்டம் போடுகிற ஒரு நபும்ஸக சமூகத்தின் பிரதிநிதியாக வேஷம் தரித்துக் கொண்டு கதையின் சூத்திரதாரியாகத் துணிந்தேன்.

    1946-ல் செங்கொடி காத்த சிகப்பி என்ற பெயரில் போராடிய விவசாயப் பெண்ணைப் பற்றி நான் பலவிதக் கற்பனை செய்திருக்கிறேன். அந்த வரலாற்று நினைவும் அதற்கு இணையாக அண்மையில், இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயப் பெண்களைப் பற்றிய வீரமிகு செய்திகளும் இதை எழுதத் தூண்டின. இவையெல்லாம் புறக் காரணங்களே ஆயினும், இவற்றில் ஆழ்ந்துள்ள மானிட உணர்ச்சிகளின் மேன்மைகளே இதை இலக்கியமாக்குகின்றன.

    1

    மூங்கில் காடு என்று எங்கள் ஊருக்குப் பேர். இங்கிருந்து ரயிலையோ பஸ்ஸையோ பார்க்கவேண்டும் என்றால் எங்கள் ஊரைச் சுற்றி வியூகம் அமைந்ததுபோல் முற்றுகை இட்டிருக்கும் மூங்கிற் காடுகளின் நடுவே நிரந்தரமாய் நிழல் படர்ந்த மண் பாதையில் மூன்று மைல் தூரம் போயாக வேண்டும். கோப்பைப்புலம்.

    இருபது வருஷத்துக்கு முன்னால் நடந்து போன அனுபவம். பாதைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தூரம் அதே தானே? பாதையில் என்ன மாற்றம்? மூங்கிற் காட்டின் பெரும் பகுதியை அழித்துவிட்டார்கள். ஒருமுறை அதுவே தீப்பற்றிக் கொண்டு அழிந்தது. குடியானவர்களுக்கும் கொத்தடிமைகளுக்கும் நடந்த சண்டையில் ஒருதடவை தீ வைக்கப்பட்டு எரிந்தது. ஆனாலும் எங்கள் ஊர் மூங்கில் இன்னும் உலகப் பிரசித்தமாய்த் தான் இருக்கிறது. எங்கள் ஊர் மூங்கில் காடு என்று பெயர் பெற்றதனால் சொல்லவில்லை. எனக்கு ஊர் பக்தி; தேச பக்தி; காடு பக்தி எல்லாம் கிடையாது.

    அதையே பார்த்துக் கொண்டிருப்பதனால் தோன்றுகிறதோ என்னவோ! மூங்கில் மரத்தைவிட அழகான மரம் உலகத்தில் வேறொன்றுமில்லை. பெண்களின் தோளுக்கு அதனால்தான் உவமை சொன்னார்களோ? மூங்கில் இலைகள், அதன் முள்; கணு; பீலி மாதிரி அசைந்தாடும் அதன் உச்சி; அதற்குப் பின்னால் இருந்து எழும் நிலா; மூங்கிற் புதர்களின் ஊடே தோன்றும் வைரப்பட்டையின் ஒளி ஈட்டிகள்; பார்த்துப் பார்த்துச் சலிப்பே வராமல் வாழ்க்கை முழுவதும் பார்க்க வைக்கும் அழகு. ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் சோம்பேறிக்குத்தான் இந்த மாதிரி அழகுகளெல்லாம் கவிதைப் பொருளாகி விடுகின்றன.

    இந்த மூங்கிற்காடும், இந்த ஊரின் பெரும்பகுதியும் - நிலமும், வயலும், தோப்பும், துரவும், நீரும், வானமும் எங்களுக்கே சொந்தம். ஏதோ ‘மன்னும் இமயமலை எங்கள் மலை’ என்பதுபோல் அல்ல: நிஜமாகவே ரிஜிஸ்தர் செய்யப் பட்ட சொந்தம். நாங்கள் என்பது எனது அண்ணன்மார்கள் நால்வரும் அப்புறம் எங்களைச் சேர்ந்த குடி, படை, சனங்கள், சாதி, சொந்தம் என்றெல்லாம் உறவு கொண்டாடி எங்களைச் சார்ந்து வாழ்கிறவர்களாக நிறையப் பேர் இருக்கிறோம். எங்கள் சொத்தின் மதிப்பு, கணக்கு வழக்கு சிக்கல் ஒன்றும் எனக்குத் தெரியாது.

    அண்ணன்மார்கள் நால்வரில் இரண்டு பேர் செத்துப் போனார்கள். சகோதரர்கள் செத்துப்போவதில் உள்ள சந்தோஷத்தை அனுபவிக்க ஒருவனுக்குச் சொத்து வேண்டும். அதுவும் ஏராளமாக இருந்தால் சகோதரனைக் கொல்வது கூட இந்தச் சொத்துள்ள சமூகத்தின் தர்மமாகிவிடுகிறது. ரகசியமாகச் சொல்லி வைக்கிறேன், எனது இரண்டு அண்ணன்மார்கள் செத்துப் போனதற்கு உண்மையான காரணம் - இந்த ஊரே ‘பெரியவர்’ என்று எழுந்து நின்று துதிபாடுகிறதே அந்த அண்ணாதான்.

    அவர் கொலை செய்தார் என்று சொல்ல முடியாது. டாக்டர்கள் வைத்தியம் பார்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு டாக்டர் உருப்படியாகப் பார்க்க விடுவாரா அண்ணா! ஆரம்பத்தில் நான் அவரை சந்தேகப்படவில்லை. அந்த இரண்டு பேரும் செத்ததற்குப் பிறகு மூத்த அண்ணனும் சின்ன அண்ணனும் சேர்ந்து கொண்டு அடித்த கூத்துகள் அந்த முடிவுக்கு என்னை

    Enjoying the preview?
    Page 1 of 1