Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Illathavargal
Illathavargal
Illathavargal
Ebook81 pages1 hour

Illathavargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒரு திருட்டுச் சமூகத்தில் ஏழைகளும் திருடுகிறார்கள்; செல்வந்தர்களும் திருடுகிறார்கள். ஒருவனை ஒருவன் ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் வாழவே முடியாது என்று ஒரு தத்துவத்தை வகுத்துவிட்டார்கள் இந்தச் சமூகத்தில்; இது கெடுக! மெய்ஞான வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் கலைகளின் வளர்ச்சியும் செழித்திருப்பதாய் மெய்யாகவே செம்மாந்து பிரகடனம் செய்யும் இந்தச் சென்னை நகரம், புத்தி வளர்ச்சியற்று, ஒழுக்க வளர்ச்சி குன்றி, உணர்ச்சி மழுங்கி, பகைமையும் வன்முறையும் பொருளற்று வளர்ந்து புழுங்கித் தவிப்பதை அன்றாட வாழ்கையில் தினந்தோறும் உணர்கிறேன் நான். சூதுக்கு இரையாகிச் சூறைக்குப் பாழாகும் அந்த ஏழைகளுக்குக் கொதிக்கிற கும்பி உண்டு; எப்பொழுதேனும் எரிந்து புகைகிற அடுப்பு உண்டு; கூனிக் குறுகி முடங்கிக்கிடக்க ஒரு குடிசை உண்டு; ஆனால் அதற்குக் கூரைதான் இல்லை. இந்தப் பின்னணியில் நான் எத்தனையோ கதை எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று இது.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580103906915
Illathavargal

Read more from Jayakanthan

Related to Illathavargal

Related ebooks

Reviews for Illathavargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Illathavargal - Jayakanthan

    https://www.pustaka.co.in

    இல்லாதவர்கள்

    Illathavargal

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    ஒரு திருட்டுச் சமூகத்தில் ஏழைகளும் திருடுகிறார்கள்; செல்வந்தர்களும் திருடுகிறார்கள். ஒருவனை ஒருவன் ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் வாழவே முடியாது என்று ஒரு தத்துவத்தை வகுத்துவிட்டார்கள் இந்தச் சமூகத்தில்; இது கெடுக!

    மெய்ஞான வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் கலைகளின் வளர்ச்சியும் செழித்திருப்பதாய் மெய்யாகவே செம்மாந்து பிரகடனம் செய்யும் இந்தச் சென்னை நகரம், புத்தி வளர்ச்சியற்று, ஒழுக்க வளர்ச்சி குன்றி, உணர்ச்சி மழுங்கி, பகைமையும் வன்முறையும் பொருளற்று வளர்ந்து புழுங்கித் தவிப்பதை அன்றாட வாழ்கையில் திணந்தோறும் உணர்கிறேன் நான்.

    இவற்றையெல்லாம் என்னுள் வாழ்கிற ஒரு நம்பிக்கை ரசிக்கிறதேயல்லாமல் - நானொன்றும் புலம்ப வில்லை.

    இவர்களும் மனிதர்கள்தானே! ஒரு திருடன் என்பவன் ஏதோ முகமூடி அணிந்து கொண்டு இருட்டில் வருகிறவன் மட்டும் அல்ல; அப்படி நினைத்துப் பயப்படுவது குழந்தைத்தனம். புலிக்கு மனித புத்தி இருந்தால் அது எலியைக் கண்டு கூட மிரண்டு போகும். ஸர்வ வல்லமை படைத்த மனிதனாகிய நமக்குக்கூட ஒரு பெருச்சாளி நம் மீது விழுந்து பிறாண்டுவதை தைரியத்தோடு ஏற்றுக்கொள்ள முடியாது. அதையே ஒரு பொறியில் அடைத்துவிட்டால் புலியைக் கண்டு கூட மனிதன் அஞ்சுவதில்லை. அவ்வாறு தான் புத்தியில்லாத நமது ஏழைப் புலிகள் பொறியில் சிக்கித் தவிக்கின்றன. புத்தியுள்ள கிழச் சமூகம் அந்த இல்லாதவர்களாலும் சூது வழிகளாலும் அவர்களைச் சூறையாடுகின்றனர்.

    இந்தச் சூறையாடுகிற ‘இருக்கும்’ கூட்டத்துக்கு கோட்டை உண்டு பரிவாரம் உண்டு, கொடிக் கம்பம் உண்டு, ஆனால் கொடிதான் இல்லை! அந்தக் கொடிகளின் கதை குஷ்டரோகியின் கோவணத் துணியை விடக் கறைபட்டுக் கிழிந்து கிடக்கிறது.

    இவர்களின் சூதுக்கு இரையாகிச் சூறைக்குப் பாழாகும் அந்த ஏழைகளுக்குக் கொதிக்கிற கும்பி உண்டு; எப்பொழுதேனும் எரிந்து புகைகிற அடுப்பு உண்டு; கூனிக் குறுகி முடங்கிக்கிடக்க ஒரு குடிசை உண்டு; ஆனால் அதற்குக் கூரைதான் இல்லை.

    இந்தப் பின்னணியில் நான் எத்தனையோ கதை எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று இது.

    சென்னை

    8-2-83

    த. ஜெயகாந்தன்

    1

    இல்லாதவர்கள் பொல்லாதவர்கள் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்படிப்பட்ட பொல்லாதவர்கள் நிறைந்த பகுதி பொன்னகரம். இது மாதிரி பொன்னகரங்கள் ஊருக்கு ஒன்றிரண்டு எங்கும் உண்டு. நகரங்களிலோ இந்தப் பொன்னகரங்கள்தான் மெய்யாகவே புறத்தே நகரத்தை வளைத்தும் அகத்தே ஊடுருவியும் முற்றுகையிட்டுத் தனது விஸ்தீரணத்தை விரிவுப்படுத்திக்கொண்டே தனது தன்மையைச் செரிவுபடுத்திக்கொண்டே வருகின்றன என்று சொல்லலாம்.

    இங்கே குறிப்பிட்ட பொன்னகரம் இருப்பது சென்னை நகரில். மின்சார ரயிலின் ஓட்டத்தால் அதிர்கிற கதவுகளும் நெடுங்காலப் புழுதியும் குப்பையும் படிந்து நிறம் மாறிப்போன கூரைகளும், ஒரு பக்கம் மேடான மேம்பாலமும், இன்னொரு பக்கம் தாழ்வான ஜலதாரையும் ஓடி அந்தப் பொன்னகரத்தை ஒரு பூ நகரமாக வேறு மணக்க வைத்துவிட்டன.

    இங்கே வாழ்கிறவர்கள் வயிற்றுக்காகவும் பிழைப்புக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இங்கேயுள்ள தெருக்களும் சிறுசிறு சந்துகளும் தொழிற்சாலைபோல் சதா இயங்கிக் கொண்டிருக்கும். பற்பல தொழில்கள்... கார் மெக்கானிசத்திலிருந்து கயிறு திரிப்பது வரை எப்போது பார்த்தாலும் அந்த மக்கள் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். சாராயக் கடை, தண்ணீர்க் குழாய், தெருவோர மீன், கருவாடு, காய்கறிக் கடைகள், தொடையைத் தூக்கி ஆணியில் மாட்டி, ரப்பர் ஸ்டாம்பு முத்திரை தெரிய தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டிறைச்சிக்கடை... இரும்புப் பட்டறைகள்... எங்கு பார்த்தாலும் ஜன நெரிசல். ஒரு வகையில் இங்குள்ள காயலாங் கடைகள், இந்த ஏழைகளின் சட்டிப் பானைகளை ஈடாகக்கொண்டு கடன் தரும் மார்வாடிக் கடைகள்... மக்கள் சகலகலா வல்லவர்கள் எனலாம். ஆயினும் பெரும் பகுதி கூலிக்காரர்கள்... அதனினும் பெரும் பகுதி அந்தக் கூலிக்காரர்களின் பரம்பரையாய்த் தோன்றி அந்தப் பொன்னகரத்தை ஆட்டிப் படைக்கின்ற பொறுக்கி வர்க்கப் புத்திரர்கள்.

    மேலும் இந்த நகர வாழ்க்கையில் எவன்தான் பொறுக்கியில்லை? பணக்காரப் பொறுக்கிகள், படித்துப் பட்டம் பெற்ற பொறுக்கிகள், வியாபாரப் பொறுக்கிகள், வேலை இல்லாத பொறுக்கிகள் என்று இந்நகரத்தின் எல்லாப் பகுதியிலும் ஊடுருவி உயர்ந்தோங்கி நமது சமூகத்தின் தலைமீது

    Enjoying the preview?
    Page 1 of 1