Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkai Azhaikkirathu
Vazhkai Azhaikkirathu
Vazhkai Azhaikkirathu
Ebook265 pages3 hours

Vazhkai Azhaikkirathu

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others.

Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)

Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.

In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.



https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103903946
Vazhkai Azhaikkirathu

Read more from Jayakanthan

Related to Vazhkai Azhaikkirathu

Related ebooks

Reviews for Vazhkai Azhaikkirathu

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkai Azhaikkirathu - Jayakanthan

    http://www.pustaka.co.in

    வாழ்க்கை அழைக்கிறது

    Vazhkai Azhaikkirathu

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    முன்னுரை

    இது எனது முதல் நாவல். இந்த நாவலில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு; குறையும் உண்டு.

    ஏனென்றால், அவர்கள் மனிதர்கள்! - நம்மிடையே வாழ்ந்து, தினசரி நம்மோடு பழகும் மனிதர்களும் இதில் உண்டு, நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்டு, நாம் ஒதுங்கி வந்துவிட்ட மனிதர்களும் உண்டு.

    எனினும் வாழ்க்கை யாரையும் ஒதுக்கி வைத்து விடவில்லை; அவர்களும் வாழத்தான் வாழ்கிறார்கள்.

    சாரங்கன் - நாவலுக்காக உயிர்பெற்றவனல்ல; வாழ்க்கையில் நான் சந்தித்த மறக்க முடியாத மனிதன்தான் அவன்.

    இந்த நாவலில் நான் கண்ட உண்மைகளை எல்லாம் கூறிவிட்டேன் என்பதில்லை; கூறாமல் மறைத்துவிட்ட விஷயங்களும் உண்டு; எனது கைச்சரக்கும் உண்டு

    இதில் கூறப்படாத விஷயங்களைக் கூறுவதற்குக் குறுக்கே நின்று ஏதோ ஒன்று தடுத்து விட்டது.

    இதில் என்னென்ன இல்லை என்பதைப் பார்க்காமல், என்னென்ன இருக்கிறது, எப்படியெப்படி இருக்கிறது என்று கூறுவீர்களானால் அது எனது வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

    முதல் பதிப்பிலிருந்தபடியே பின்னர் வந்த மறுபதிப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் என் முதல் 'படைப்பு' என்று கருதி அப்படியே விட்டிருக்கிறேன்.

    - த. ஜெயகாந்தன்

    *****

    1

    கிருஷ்ணபட்சத்து நிலவின் மங்கிய ஒளி ஆற்றின் அக்கரையில் நின்றிருந்த மரங்களிடையே புகுந்து அந்த ஒற்றைத் தனிக் கட்டிடத்தின் மீது வீசிக்கொண்டிருந்தது.

    சரிந்து, இடிந்து சிதிலமாகிக் கிடந்த அந்த மாஜிக் கட்டிடம் காலதேவனின் கடைசி உதைக்குக் காத்திருக்கிறது. காலம் அதை உதைக்கத் தயாராக இல்லை. இற்றுப் போன சமூகத்தையும், செல்லரித்த அதன் சட்ட திட்டங்களையும், சொறி பிடித்த தத்துவ சாஸ்திரங்களையும், தேய்ந்துபோன மனித ராசியின் அசைக்க முடியாத பலஹீனத்தையும் எந்தக் காலம் உதைத்துத் தகர்க்குமோ அந்தக் காலம்தான் இந்தக் கட்டிடத்தையும் அழிக்க முடியும். அதுவரை கட்டிடமும், அதன் தன்மையும் சிரஞ்சீவித்வம் பெற்றவை.

    ஊருக்கு வெளியே, சுடலைக்கரையை அடுத்த பெரிய சாலையில் – கழனி வெளியாக்க முடியாத கட்டாந் தரையில் ஒரு கட்டிடத்தைக் கட்டிப்போட்டு, போகும் வழிக்குப் புண்ணியமும் ஏகநாயகனின் திருவடியில் நிரந்தர ஸ்தானமும் பெற்று விடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு முஸ்லீம் பெரியார் தர்மத்துடன் நடத்திய தரகு வியாபாரத்தின் விளைவு அந்தக் கட்டிடம்.

    கட்டிடத்தின் முகப்பிலே அதைக் கட்டிய புண்ணியவாளனின் பட்டயம் செதுக்கப்பட்டிருக்கிறது: 'பிஸ் மில்லாஹ்... எனது பாரியாளாகிய பாதிமா பீபி ஞாபகார்த்த தர்ம சத்திரம் - ஹக்கீம் ஆதம் மரைக்காயர், சித்த நல்லூர்.'

    ஆம்; அது ஒரு சத்திரம்தான்!

    அந்தச் சத்திரம் வாழ்க்கையைக் காணாதவர்களின் தங்கு மடம்; வாழ்க்கையினால் வெறுக்கப்படுவோரின் ஆஸ்ரமம். சமூகத்தினால் வெறுத்து, உதைத்து, உதறித் தள்ளப்பட்டவர்களின் இறுதிப் புகலிடம் அந்தச் சத்திரம்.

    பெரிய சாலையில் லாந்தர் கம்பத்தின் விளக்குகள் குடிகாரனின் கண்களைப்போல சிவந்திருந்தன. அவை சேவை வைராக்கியத்துடன் தம்முடைய மங்கிய ஒளியைச் சிதறடித்துக் கொண்டிருந்தன. சத்திரத்துக்கு அருகே இருந்த விளக்கு சேவை செய்து தேய்ந்துவிட்டது. சிவந்து துடிக்கும் அந்த விளக்கு இன்னும் சிறிது நேரத்தில் தனது உயிரையும் தியாகம் செய்து விடலாம்.

    ஒளியிழந்த விளக்கு! வாழ்விழந்த மனிதர்கள்! அதுவும் எரிகிறது; அவர்களும் வாழ்கிறார்கள்! ரத்தம் கக்கிச் சிவந்து துடிதுடித்து அது தன் சீவனை இழந்து விட்டது. எங்கும் ஒரே இருள்...! மனிதர்கள் செத்துப் போகிறார்கள் அல்லவா? அப்படித்தான் அந்த விளக்கும்! இருந்தும் இருள் தான்; அணைந்தும் இருள்தான்!

    இந்த மனிதர்கள்...? ஆமாம், ஆமாம் அப்படித்தான்

    அதோ ஒரு மனிதன்!

    பெரிய சாலையில் நடந்து வருகிறான். நைந்து கிழிந்து அழுக்கேறிய வேஷ்டி வாடைக்காற்றில் படபடக்கிறது. சாலையோர லாந்தர் கம்பத்தைப் பற்றிக்கொண்டு நிற்கிறான். அந்த விளக்கு இன்னும் அணையவில்லை. நெற்றியில் சரிந்து கிடந்த முன் மயிரைத் தள்ளிக்கொண்டு வியர்வையால் நனைந்த முகத்தைத் துடைத்துக் கொள்கிறான். அவன் முகத்தில் அரும்பியிருந்த மெல்லிய ரோமம் விளக்கொளியில் மினுமினுக்கிறது... கண்களில் கிறக்கம்.

    அப்பாடா... ஆழ்ந்த நீண்ட அவலப் பெருமூச்சு, மீண்டும் நகர்கிறான். அவன் நிழல் வீதியிலே நீண்டு கிடந்தது. அவனினும் பெரிது அவன் நிழல்; அவன் பலத்தைவிட அதிகம் அவன் தைரியம்.

    அவன் பெயர் ராஜா!

    ஒரு பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிடுவோமானால் அதைப்பற்றிக் கவலையில்லை. ஏனென்றால் இந்த ராஜா அரண்மனையில் வாழவில்லை. மண்குடிசையில் வாழ்ந்திருக்கிறான். சிரத்தில் முடி தரித்ததில்லை, தலையில் மூட்டை சுமந்திருக்கிறான். வாழ்க்கையைச் சுவைத்தறியாத வாலிபன்! இருபது வயது கூட நிரம்பாத அவன், பந்தமற்ற, நாதியற்ற, கடமைகளற்ற தனிமனிதன்; அனாதை! பருவகாலத்தில் ஆசாபாசங்களை அவன் கனவு கண்டதில்லை. பசி போக்க ஏதாவது வேலை கிடைக்குமா என்று ஊரூராகத் திரிபவன். வேலைகள் கிடைத்தன; நிலைக்கவில்லை. அவனுக்குப் படிப்பு இல்லை; பட்டம் இல்லை. ஆனால் அறிவு இருந்தது. படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும்தான் சம்பாதிக்க முடியும் என்ற விதியா...!

    'இல்லை! அவரவர்களின் திறமைக்கேற்ப யாரும் சம்பாதிக்கலாம்' என்று சிலர் சொன்னார்கள். அவனும் அதை நம்பினான். அவர்களின் உதவியினாலேயே மளிகைக் கடையில் சரக்கு நிறுப்பவனாகவும், ஜவுளிக் கடையில் துணி அளப்பவனாகவும், செருப்புக் கடையில் வாடிக்கைக்காரர்களின் காலைப் பிடிப்பவனாகவும் இன்னும் என்னென்னவோ சில்லரை வேலைகளில் கொஞ்ச நாட்கள் காலம் கழித்தான். அவன் வேலை செய்யும் இடங்களிலெல்லாம் இவன் 'ஒன்றை’ எதிர் பார்த்தான், அது கிட்டவில்லை. ஆத்திரமடைந்தான்; வேலை இழந்தான்!

    அவன் வேலை செய்த இடங்களில் அவனுக்குக் கூலி கிடைத்தது என்னவோ உண்மை. அது அவன் உழைப்புக்கல்ல; அவன் கெளரவத்திற்கு விலையாக அந்தக் கூலி கிடைத்தது. அவன் மனிதாபிமானத்தை, அவன் உரிமையை, அவன் இதயத்தை அவர்கள் விலை பேசினார்கள். அதற்கு அவன் சம்மதிக்க முடியுமா? - அவனால் முடியவில்லை.

    அவனுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக அவனை ஒரு பொய்யனாய், ஏமாற்றுக்காரனாய், திருடனாய் மாற்ற அவர்கள் தர்மம் விரும்பியது. அதற்கு அவன் சம்மதிக்கவில்லை.

    நன்றியில்லாதவன்! என்று அந்தச் சமூகப் பெரியார்கள் அவனைக் குற்றம் சாட்டினர். நன்றியிருந்தது அவனுக்கு. நல்லது எது, கெட்டது எது என்று எண்ணிப் பார்க்க இதயமும் இருந்ததே... அவன் அவர்களுக்கு - அவனுக்கு வேலை கொடுத்து, கூலி கொடுத்தவர்களுக்கு நன்றியுள்ள மனிதனாக இருக்க விரும்பினான். 'நன்றியுள்ள மிருகமாயிருக்க வேண்டும்' என்று கட்டளை விதித்தார்கள்.

    அவன் மறுத்து விட்டான்.

    தம்பி... நீ வாழ முடியாது! என்றார்கள்.

    இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக் கொள்ள முடியாது! என்று கூறிவிட்டான் அவன்.

    வியாபாரம் என்பதே தேவடியாள்தனம்! என்று ஒரு வியாபாரி நயமாகப் பச்சையாக உண்மையை விளக்கினார்.

    உங்கள் வியாபாரத்தின் தன்மைக்குக் கோடி நமஸ்காரம் என்று கூறிவிட்டு வெளியே நடந்தான் அந்த வாழத் தெரியாதவன். உருப்படாப்பயல்! என்ற கெளரவப் பட்டத்துடன் வேலையின்றித் தாய்க்குப் பாரமாய் திரிந்து கொண்டிருந்தான்.

    அவன் வேலையற்றவன்; வெறுங்கையன். இல்லானை ஈன்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாளாமே! அதனால் தான் அவன் தனியனானான். அவனுக்கு ஜீவிதமே வெறுத்தது. 'வஞ்சகமும், பொய்ம்மையும், எத்துவாளித்தனமும் நிறைந்து சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூக வளர்ச்சியா!' - அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    'மனிதர்கள் வாழவில்லையா? அவர்களுக்கு இதயமில்லையா? நீ மட்டும் என்ன தெய்வப் பிறவியா?' என்று ஆத்மா அடிக்கடி அவனுள் குரலெழுப்புகிறது.

    அப்பொழுதெல்லாம் அவன் பதில் இதுதான்:

    'மனிதர்களில் சிலர்தான் வாழ்கிறார்கள்! பலர் பிழைக்கிறார்கள் - வாழ்பவர்களுக்கு இதயமில்லை; பிழைப்பவர்களுக்கு அறிவில்லை, வாழும் சிலர் வாழவேண்டும் என்பதற்காக இதயத்தைக் கொன்றுவிடுகிறார்கள். பிழைக்கும் பலர் பிழைக்க வேண்டும் என்பதற்காக அறிவைப் புறக்கணித்து விடுகிறார்கள்.

    'வாழும் சிலர் வாழவேண்டும் என்பதற்காக, என்றைக்குமே, தங்கள் இதயத்தைக் கொன்று கொண்டு இருந்துவிட முடியும். பிழைக்கும் சிலர் என்றைக்குமே தங்கள் அறிவைப் புறக்கணிக்கும் அறியாமையைச் செய்து கொண்டிருப்பார்களா?'

    அது அவனுக்குப் புரியவில்லை.

    அப்பொழுது அவன் ஒரு செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான்.

    முதலாளி காகித அட்டை வாங்கி வரச் சொன்னார்; வாங்கிக் கொண்டு வந்தான்.

    'செருப்புக் கடையில் அட்டை எதற்கு?' என்று கேட்டது அவன் மனம். 'முதலாளி சொல்கிறான்; அவன் செய்ய வேண்டும்' - இது நியதி.

    தோலுக்குப் பதிலாக அட்டையில் செருப்புத் தைத்தான் தொழிலாளி. அவனுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டதோ, என்னவோ? முதலாளிக்கு அப்படிப்பட்ட எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை என்று சொல்லி விடலாம். அதனால்தான் அட்டையில் தைத்த செருப்பைக் 'கான்பூர் கம்ப்ரெஸ்டு லெதர்' என்று மனம் ஒப்பி அவரால் சொல்ல முடிந்தது. ஆனால் பிழைக்கத் தெரியாத ராஜாவுக்கு அப்படிச் சொல்ல முடியவில்லை. முதலாளி சொன்னதை அவனால் செய்ய முடிந்தது. ஆனால் முதலாளி சொல்வதை அவனால் சொல்ல முடியவில்லை. முதலாளி அவனை அடிக்க வந்தான். தன்னுடைய மான உணர்ச்சிக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக் கொண்டு கொதித்து எழுந்தது ராஜாவின் இளம் உள்ளம்... ரகளையும், கூச்சலும் அதிகமாகவே, கடைத் தெருக் கூட்டம் முழுவதும் அந்தக் கடைமுன் கூடி நின்றது.

    'அகம்பாவி, முரடன், போக்கிரி, பணிவில்லாதவன், மரியாதை கெட்டவன்' என்றெல்லாம் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டான் ராஜா; ஜனங்களால்தான்! ஏமாற்ற நினைத்த வியாபாரியும், ஏமாறப்போகும் வாடிக்கைக்காரர்களும் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள்.

    கணக்கைத் தீர்த்துச் சம்பளப் பாக்கி பதினைந்து ரூபாயைக் கையில் வாங்கிக்கொண்டு யாரையும் லட்சியம் பண்ணாமல் வீட்டை நோக்கி நடந்தான் ராஜா.

    'இதனால் உனக்கு என்ன லாபம்?' என்றது மனசு; 'எல்லா விஷயங்களிலும் லாப நஷ்டக் கணக்குப் பார்க்க என்னிடம் என்ன மூலதனம் இருக்கிறது?' என்று சிரித்துக் கொண்டான் அவன். 'என்ன சிரிக்கிறாய்? - உன் செயலால் நாளைக்கு உன் நிலை என்ன என்று எண்ணிப்பார். சிரிப்பு ஒரு கேடா?' என்று சினந்தது மனசு.

    'அதற்கு நான் என்ன செய்வது? பாழும் இதயம் கேட்க மாட்டேன் என்கிறதே!'

    'உன் தாய் வருத்தப்படுவாள்.'

    'ஏன்? தன் மகன் நேர்மை தவறாதவன் என்று பெருமை கொள்ளக்கூடாதா?'

    'உன் நேர்மை யாருக்கு வேண்டும்?'

    'சீ! வேடிக்கையான மனிதர்கள்...'

    'இனிமேல் இந்த ஊரில் யார் உனக்கு வேலை கொடுப்பார்கள்? - அவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். குடிசையும் வந்து விட்டது.

    டேய் ராஜா, நீ பொழைக்கத் தெரியாதவண்டா... என்று சப்தம் போட்டுச் சொல்லிக் கொண்டே குடிசைக்குள் நுழைந்தான்.

    இந்த லெச்சணத்தை நீ வேறே சொல்லிக்கிறையோ? என்று சிரித்துக்கொண்டே அடுப்பிலிருந்த சோற்றுப் பானையை இறக்கி வைத்தாள் அவன் தாய் லட்சுமி.

    அம்மா ஒரு விஷயம் என்று மெள்ள ஆரம்பித்தான்.

    என்னடா விஷயம்?

    நா, வேலையை விட்டுட்டேன்.

    என்ன?

    ஆமாம். நான் வேலையை விட்டுட்டேன்.

    எதுக்கு

    அவன் என்னை அடிக்க வந்தான்.

    எவன்...?

    முதலாளி

    அவனுக்கென்ன பைத்தியமா?

    ஆமாம்! பணப் பைத்தியம்!

    டேய், நீ பொழைக்க மாட்டே...

    எனக்கும் அப்படித்தான் தோணுது!

    நான் செய்த பாவம், பொறுப்பில்லாத பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறேன்.

    பொறுப்பிருக்கிறது, எனக்கு மானமும் இருக்கிறது அம்மா!

    மானம் இருப்பது சரி; வயிறும் இருக்கிறதடா மகனே! இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. நின்றது நின்றபடி இருந்தான். பார்வை எங்கோ நிலைத்தது. மனம் எதிலும் நிலைக்காமல் தடுமாறி என்னென்னவோ நினைத்தது.

    தாயின் துயரத்தையும், அவள் படும் சிரமத்தையும் எண்ணி உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்த அவனை அந்த வார்த்தை எரிசரம் போல் சுட்டுவிட்டது.

    'வயிறும் இருக்கிறது’ அவன் தனக்குள் முனகிக் கொண்டான். அவன் வயிற்றில் என்னவோ செய்தது. கண்கள் கலங்கின.

    'வயிறும் இருக்கிறது... வயிறும் இருக்கிறது' என்று அவன் மனம் வீணையின் அறுந்த தந்திபோல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    ஆமாம்! எனக்கு வயிறும் இருக்கிறது. அது அம்மாவுக்குத் தெரியும். எனக்கு வேலையும் இல்லாவிட்டால் இது இன்னும் பெரிசாத் தெரியும் - அவன் தனக்குள் பேசிக் கொண்டான்.

    அவன் தாயின் கௌரவம் இட்டிலி, அடுப்பினாலும், அப்பளக் குழவியினாலும் காப்பாற்றப்பட்டு வருகிறது, அவளுக்கு அதுவே சாஸ்வதம் அவனுக்கு?

    பத்து வருஷங்களுக்கு முன் - அவன் தந்தை இறந்ததிலிருந்து லட்சுமியம்மாளின் சாஸ்வத உழைப்பில்தான் அவன் வளர்ந்து வந்திருக்கிறான். ராஜாவின் தந்தை இருக்கும்போதே குடும்பம் ஓட்டைப் படகு. தத்துவங்களிலும் அருள் நெறி முறையான தவஞானங்களிலும் லயித்துப் போன சராசரி மத்தியதரத் தமிழ் குடும்ப மனிதரான அவருக்குப் பற்றெல்லாம் பரலோக நித்தியத் துவத்தின் மீது இருந்ததேயல்லாமல் 'இகலோக இச்சா மாயை’களின் மீது சற்றும் மோகமோ, பற்றோ இருந்ததில்லை. அவருக்கு அவர் லட்சியம் கைகூடி விட்டது. அதாவது பரம் காணவேண்டிய பாக்கியம் லயித்து விட்டது. அதன் பிறகு தனது ஒரே பற்றுக் கோடான, லட்சியமான ராஜாவை வளர்ப்பதற்குத்தான் லட்சுமியம்மாளுக்கு எத்தனை சிரமங்கள்!

    குடிசை வாயிலில் மெளனமாக உட்கார்ந்துவிட்ட ராஜாவின் மனம் தன் தாயைப் பற்றி உழன்றுகொண்டே இருந்தது. 'அம்மாவுக்கு என்னால் பலனில்லை; பாரமாவது இல்லாமலிருக்கலாம் அல்லவா? என்னால் அம்மாவுக்குச் சிரமம்! பாவம் அம்மா...' கன்னங்கள் இரண்டிலும் கைகளை ஊன்றிக்கொண்டு கண்களில் கண்ணீர் கலங்கி வழிய எங்கோ வானவெளியை நோக்கிக் கொண்டிருந்தான். மனம் நைந்து நைந்து புலம்பியது.

    கண்ணா - அவன் தாய் அவனைச் செல்லமாக அழைப்பது அப்படித்தான்.

    கண்ணா சாப்பிட வாடா அவன் மெளனமாக எழுந்து சென்றான். அவள் உணவு பரிமாறினாள்.

    நம்ம நிலையை நாம் உணரலேன்னா... அவள் என்னவோ புத்திமதி கூறினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1