Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pugai Naduvinile...
Pugai Naduvinile...
Pugai Naduvinile...
Ebook151 pages2 hours

Pugai Naduvinile...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others.

Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)

Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.

In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.



https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103903947
Pugai Naduvinile...

Read more from Jayakanthan

Related to Pugai Naduvinile...

Related ebooks

Reviews for Pugai Naduvinile...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pugai Naduvinile... - Jayakanthan

    http://www.pustaka.co.in

    புகை நடுவினிலே...

    Pugai Naduvinile…

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    புகை நடுவினிலே...

    பாவம், அந்தப் பசு

    பால் வடியும் முகம்

    ரிஷி பத்தினி

    ரிஷிகுமாரன்

    இன்னும் ஒரு வரம்

    இப்படித்தான் நடக்கிறது...

    முன்னுரை

    இதில் உள்ள ஏழு கதைகளும் 1990-ல் எழுதப்பட்டவை. சோவியத் நாடு, இந்தியா டுடே, மங்களம், குமுதம் ஆகிய பத்திரிகைகளில் முதல் ஆறு கதைகளும், இந்த நூலுக்கென்றே தனியாக இதில் உள்ள கடைசிக் கதையும் எழுதப்பட்டவை.

    இதில் உள்ள முதல் கதையைப் பற்றியும் இதன் தொடர்ச்சியே போன்ற இதன் கடைசிக் கதையைப் பற்றியும் வாசகர்களோடு நான் நிறையவே பேச வேண்டியிருக்கும். என்னதான் பேசினாலும் எழுதி விளக்குகிற மாதிரி பேசி விளக்க முடியாது. எழுத்துதான் நிரந்தரமான பேச்சு.

    எது எது நிந்திக்கப் படுகிறதோ அதன் சார்பாய் நின்று வாதிப்பது என் இயல்பாய்ப் போயிற்று. இது குறித்து எனக்குப் பெருமிதமே உண்டு. சமூகத்தால் கழிசடைகள் என்று ஒதுக்கப் பட்ட திருடர்களும், விபசாரிகளும், பிச்சைக்காரர்களும், தெருப் பொறுக்கிகளும் எனது எழுதுகோலிலிருந்து தெறித்து விழுந்த மையினால் சாபவிமோசனம் பெற்றிருக்கிறார்கள். எனது இலக்கியப் பணி என்பது சமூகப் பணியினின்று வேறுபட்டது அன்று. எனது கருத்துக்களுக்காக எந்த நீதிமன்றத்திலும் பொறுப்பேற்று நியாயம் பேச நான் தயார். எனது கருத்துக்களை மறுப்பவர்கள் குரோதத்தையும், பொய்யையும், அவதூறையும் ஆதாரமாகக் கொள்ளாதிருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு: அல்லாத பட்சத்தில் அவர்களை விலக்கி ஒதுக்குவது சான்றோர் பண்பு.

    சரி! விஷயத்துக்கு வருகிறேன். இங்கு குறிப்பிட்ட அந்த இரண்டு கதைகளிலும் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்படுது 'கஞ்சா என்பது ஒரு நச்சுப் பொருள் அல்ல; அது ஒரு மருத்துவ மூலிகை’, அதைக் கண்டு அஞ்சுவதும் காணாமலேயே கற்பனையான அவதூறுகளைப் பரப்புவதும் சமூக வாழ்வில் எத்தகு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதேயாம்.

    போதைப் பொருட்கள் பட்டியலில் - அதாவது பெத்திடின், எல்.எஸ்.டி. ஹெராயின், பிரெளன் சுகர் என்றெல்லாம் அண்மைக் காலத்தில் பிரச்சாரத்தின் மூலமே விளம்பரமாகிப் பீதி பரப்பப்பட்ட ரசாயனப் பொருட்களோடு-இந்தத் தாவரத்தைச் சேர்க்கலாகாது என்பது எனது வாதம்.

    மேலும் இது நமது தேசத்தின் அரிய விளைபொருளும் விலை மதிப்புள்ள பொருளும் ஆகும். இது பயிரிடப்படுவதுமுண்டு, சுயம்புவாக வளர்ந்து மலைகளில் காடுபோல் மண்டிவிடுவது முண்டு. இந்த மருத்துவ மூலிகைகளில் படிந்து தவழ்ந்து வரும் காற்று ஆரோக்கியத்திற்கு உகந்தது. அண்மையில் மத்தியப் பிரதேச முதல்வர் இதை விளைபொருளாகப் பயிர் செய்வதற்கு மாநிலங்களுக்கு உரிமை தரப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கால் பதித்து நிற்க கையளவு நிலமற்ற பெரும்பாலான பாரதப் பிரஜைகளிடம் ஆளுக்கொரு மரம் நடுங்கள் என்று பிரசாரம் செய்கிற அரசு, இன்னொரு பக்கம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வளர்ந்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சாப் பயிர்களை அழித்தோம் என்று வீராப்புப் பேசிக் கொள்கிற விபரீதம் எனக்குப் புரியவில்லை. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே ஒழிய, இந்தப் பொதுச் சொத்தை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இதை உள்நாட்டில் உபயோகிப்போருக்குத் தடையில்லாமல் வழங்கலாம். இதனுடைய மருத்துவக் குணங்களை விளக்கி உபயோகிக்கும் முறைகளைக் கூறி, வெளி நாட்டவர்க்கம், ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னியச் செலாவயைக் குவிக்கலாம்.

    கஞ்சா நஞ்சு அல்ல. அது பல நோய்களுக்கு அருமருந்து. அளவறியாதவர்களுக்குக் கூட எது நஞ்சாயினும் இது நஞ்சாவது இல்லை.

    நான் யாரையும் இதை உபயோகிக்குமாறு ஆலோசனை கூறவில்லை. அபவாதங்களுக்கு உட்பட்ட மனிதர்கள் சார்பில் சிந்திப்பது போல் எனது அபிமானத்துக்கு உட்பட்ட இந்த மூலிகையைப் பற்றிச் சிந்தித்ததின் விளைவு இவ்விரு கதைகளும்.

    சென்னை - 78.

    1-12-1990

    அன்பு,

    த. ஜெயகாந்தன்

    புகை நடுவினிலே...

    இந்தப் பெருநகரின் மேட்டுக்குடியினர் வாழ்கிற மதிப்பு வாய்ந்த அந்தப் பிரதேசத்தின் நடுநாயகமாகத் திகழும்... மரங்கள் அடர்ந்த, வசந்த காலத்தில் வீதியெங்கும் மஞ்சள் பூக்கள் சொரிகிற - அகலமான சாலையில் பிரதானமாகத் தோற்றம் காட்டி நிற்கிறது அந்தப் பங்களா, ஓர் அரண்மனையின் வாயில் போல் தோற்றமளிக்கிற முகப்பில் சலவைக் கல்லில் ‘கெளதம்' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    இந்தப் பெயருக்கும் இம் மாளிகைக்கும் உரியவனான கெளதம் இந்த வீட்டு மேல் மாடியில் அமைந்த ஓவியக் கூடத்தில் வைகறைப் போதில் உதய காலத்தின் வானத்து வண்ணக் கோலங்களை ஒரு திரைச்சீலையில் தீட்டிக் கொண்டிருக்கிறான். சற்றுமுன் வேலைக்காரன் கொண்டு வந்து வைத்த காலைக் காபியும் தினசரியும் - வைகறைக் காட்சிக்குப் பிறகு பொழுது விடிந்து வாழ்க்கை இயங்கத் தொடங்கிவிடும் என்ற நியதியை அவனுக்கு நினைவூட்டின. இதற்காக நள்ளிரவுக்குப் பிறகு விடிவெள்ளி முளைக்கும் வரை அவன் விழித்துக் கொண்டு காத்திருந்தான்.

    அந்த வீட்டில் இருப்பவர்கள் கெளதம், அவன் தகப்பனார் சிவா, தாயார் உமா; இந்த மூவருக்கும் பணி விடை செய்ய ஒரு தோட்டக்காரத் தம்பதிகள். டிரைவர், சமையற்காரர், வாட்ச்மேன்கள் என்று அரைடஜனுக்குக் குறையாது மாதச் சம்பளக் காரர்களும் அவர்கள் பரிபாலிப்பில் வாழ்கிற பசுமாடு, கன்று, ஒரு அல்சேஷியன் நாய், அம்மா கூண்டில் வைத்து வளர்க்கிற பறவைகள் என்று வேறு வகைப்பட்ட ஜீவன்களும் இந்தக் குடும்பத்துள் அடக்கம்.

    அந்த வீட்டின் ஆடம்பரமான வரவேற்பறையில் இவற்றுக்கெல்லாம் மூலகாரணர்களான பரமேசுவர ஐயர் தம்பதிகளின் படம் நினைவுச் சின்னம் போல் அலங்கரிக்கிறது.

    ஒரு காலத்தில் பெரிய நிலக்கிழாராகவும் பின்னர் நகர்ப்புற வணிகராகவும் மாறிய போதிலும் எப்போதும் மாறாத ஆசார சீலராக அவர் வாழ்ந்தார் என்பதற்கு அந்தப் படத்தில் தெரியும் அந்தத் தம்பதிகளின் தோற்றமே சாட்சி.

    ஆனால் கௌதமின் தந்தையும் பரமேசுவர ஐயரின் புத்திரருமான சிவானந்த ஐயர் என்று திருநாமம் சூட்டப் பெற்று வளர்ந்த மிஸ்டர் சிவா, கல்லூரிப் பருவத்திலேயே சுதந்திரமான நவீன மனிதராக மாறிவிட்டவர். நடை உடை உணவு விஷயங்களில் ஐரோப்பிய மரபுகளை அக்காலத்திலேயே கடைபிடிக்கத் தொடங்கியதனால் பெற்றோரின் சம்மதமின்றி வேற்று மொழியையும் மாநிலத்தையும் சேர்ந்த கௌதமின் - தாய் உமாவை மணந்துகொண்டு தனியாகத்தான் வாழ ஆரம்பித்தார்.

    கெளதம் பிறந்த பிறகு பரமேசுவர ஐயருக்கு அந்திமக் காலமும் நெருங்கி வந்த நேரத்தில் - அந்தப் பேரனுக்காகவே பரமேசுவர ஐயர் தம் மனத்தை மாற்றிக் கொண்டு சிவாவையும் அவரது மனைவியையும் தம் குடும்பத்தோடு சேர்த்துக் கொண்டார். என்ன பெரிய வேற்று மாநிலம், வேற்று மொழி...? பக்கத்திலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்த உமா, சிவாவோடு கல்லூரியில் படித்தவள். அவர் தாமே வரித்துக் கொண்டார் என்பதைத் தவிர அதில் வேறு தவறேதும் இல்லை என்று கடைசிக் காலத்தில் உணர்ந்து கொண்டார் கிழவர் பரமேசுவர ஐயர்.

    சிவாவுக்கு நண்பர் மத்தியில் 'காப்டன்' என்று பெயர். அவர் ஏதாவது படைப்பிரிவிலோ ராணுவத்திலோ பணியாற்றினாரா என்பது யாருக்கும் தெரியாத விஷயம். கொஞ்ச நாள் அங்கேயும் இங்கேயுமாகத் தமது ஐம்பத்தைந்து வயதுக் காலத்தில் சுதந்திரமாக என்னென்னமோ செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் பலன் காப்டன் பட்டம்தான்; காப்டனாக இருந்தாரோ இல்லையோ... பட்டத்துக்குப் பொருத்தமான தோற்றமும் உடல்வாகும் இருந்தது அவருக்கு. ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பந்தய அணியில் காப்டனாக இருந்ததனால் தம்மை அவர் ஒரு காப்டனாகவே மதித்து நடந்து கொண்டார். எப்போதும் 'டீக்'காக உடையணிந்து, கையில் வாக்கிங் ஸ்டிக்கும் முறுக்கிய மீசையுமாக குளிர்காலமானால் அவர் ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதால் கழுத்தைச் சுற்றி மப்ளரும் தலையில் குல்லாயும் அணிந்து கொண்டு கையில் அல்சேஷியன் நாயையும் பிடித்துக் கொண்டு அவர் காலையிலும் மாலையிலும் உலாப் போகும்போது பார்ப்பவர்கள், 'இவர் நிச்சயம் ஏதோ ஒரு படைப்பிரிவுக்குக் காப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான்' என்று சந்தேகமில்லாமல் முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் அந்த விஷயம் சந்தேகத்துக்குரியதுதான்!

    பரமேசுவர ஐயர் பழமைவாதியாக இருந்த போதிலும் கடவுள் தமக்குச் சமமாக அளித்துள்ள ஒரே மகனையும் ஒரே மகளையும் சமமாகப் பாவித்து நடத்தியதால், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்ற சட்டம் வராத அக்காலத்திலேயே தமது சொத்துக்களைச் சமமாகப் பிரித்து அளித்திருந்தார். அதாவது 'கெளதம்' என்ற பெயர் சூட்டியிருக்கிறதே இதற்கு இணையாக இன்னொரு மாளிகை இதே நகரில் இன்னொரு பிரதேசத்தில் கௌதமின் அத்தை மாயாவுக்குச் சொந்தமாக இருக்கிறது என்று பொருள். சில வருஷங்களுக்கு முன்னால் அவள் விதவையாகி விட்டாள். அவள் புருஷன் பேராசையோடு ஏதோ வியாபாரம் செய்ய முற்பட்டு அந்த வீட்டைத்

    Enjoying the preview?
    Page 1 of 1