Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pei
Pei
Pei
Ebook86 pages41 minutes

Pei

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மலையடித் தளத்தில் இரண்டு பங்களாக்கள் உள்ளன. ஒன்று பெரிய பண்ணையாருக்கு சொந்தமானது. இன்னொன்று சிறிய பண்ணையாருக்கு சொந்தமானது. இவர்கள் இருவரும் பாழடைந்த மாளிகை இருக்கும் புதையலை எடுப்பதற்காக முயற்சியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறனர். இதற்கிடையில் பாழடைந்த மாளிகையில் ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்த தருணதில் திடீரென்று அங்கு இரண்டு பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த இரண்டு பேர் யார்? எதற்காக கொலைசெய்யப்பட்டனர்? புதையலை கண்டெடுத்தார்களா? இல்லையா? அந்த அமானுஷ்ய சக்தி என்ன? என்னும் பல சுவாரசியங்கள் நிறைந்த கதையை தமிழ்வாணனுக்கே உரிய நடையில் வாசித்துப் பாருங்கள்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136606300
Pei

Read more from Tamilvanan

Related to Pei

Related ebooks

Reviews for Pei

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pei - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பேய்

    Pei

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    நகரத்திற்கு மேற்கே ஐந்து மைல் தொலைவில் ஏரிக்கரைக்கு அப்பால், மலையடித் தளத்தில் இரண்டு பெரிய பங்களாக்கள் எழும்பி நின்றன. அந்த இரண்டு பங்களாவுக்குமிடையே, சுமார் ஒரு கல் தொலைவில் தோட்டங்களும் பூச்செடிகளும் சூழ்ந்து நின்றன.

    முதல் பங்களா, மஞ்சள் வண்ணத்தோடு பார்க்கக் கண்களைப் பறித்தது. அது பெரிய பண்ணையாருக்குடையது. பெரிய பண்ணையார் இப்போது உயிருடன் இல்லை. அவர் இறந்து, எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய ஒரே மகன் மறைமலைதான் இப்போது பெரிய பண்ணைக்கு உரிமையாளன். மறைமலையின் அன்னை மட்டும் தன் மகனுக்குத் திருமணம் நடத்திப் பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று விடாப்பிடியாக உயிரை வைத்துக்கொண்டு, அந்தப் பரந்த பங்களாவில் ஓர் அறையில் பதுங்கிக் கிடந்தாள். அவளுக்கு வயதாகிவிட்டது. ஆனாலும், மறைமலை ஒரேயடியாக இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

    அவன் கல்லூரியில் சரித்திரப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பட்டம் பெற்றுவிட்டு, தன் வழிச் சரித்திரத்தை ஆராயத் தொடங்கினான். அவன் மூத்தோர்கள், மன்னர் இனத்தைச் சேர்ந்தவர்கள். எப்பொழுதோ ஒரு காலத்தில் மன்னர் இனத்தவராக இருந்தவர்கள். நாளடைவில் பதவியிழந்து, பொருளிழந்து, பண்ணையாளர்களாகி விட்டார்கள். ஏடுகளும், எழுத்துகளும் மறைமலையின் மூத்தோரின் சரித்திரத்தைப் புகழ்ந்து பேசின.

    அவ்வளவு இல்லாவிட்டாலும் இப்போதும் அவன் நிலை சிறப்பாகவே இருந்தது. ஏராளமான சொத்துகளும் ஐம்பது இலட்ச ரூபாய் ரொக்கமும் பெரிய பங்களாக்களும் பண்ணைகளும் அவன் ஆட்சியில் இருந்தன.

    மறைமலையின் பங்களாவுக்கு இடப்பக்கத்தில், சிறிய தொலையில் பாழடைந்த மாளிகை ஒன்று இருந்தது. அது மிகவும் பழைய மாளிகை. அந்த மாளிகையில், ஏதோ ஒரு மறைவான இடத்தில் பெரும் புதையல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பு பழைய சரித்திரத்தில் கிடைத்தது. அதை நம்பி மூளையைச் குழப்பிக் கொண்டிருந்தான் மறைமலை. உண்மையாகவே ஒரு புதையல் எங்கேயோ இருப்பதாக அவன் உள்ளுணர்வு கூறியது. அவன், அந்தப் புதையலை எப்படியும் கிளப்பிவிட வேண்டும் என்று விரைவாக முனைந்தான். நூல் நிலையங்களுக்குச் சென்று, நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்டுவந்து, பண்ணையார்வழிச் சரித்திரத்தைப் பற்றியும் பாழடைந்த மாளிகையைப்பற்றியும் படித்துப் பார்த்தான். ஓலைச் சுவடிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தான். சிற்பக் கற்களைப் பெயர்த்து எடுத்து பங்களாவுக்குக் கொண்டுவந்து குவித்து வைத்துக்கொண்டு இரவு பகலாக ஆராய்ந்தான்.

    மறைமலையின் பங்களாவுக்குச் சிறிது தொலைவில் இரண்டாவது பங்களா நின்றது. அது நீல வண்ணமாக இருந்தது. அந்தப் பங்களா சிறிய பண்ணையாருக்கு உரிமையுடையது. சொல்லப்போனால், சிறிய பண்ணையாரின் மனைவிக்கு உரிமையுடையது. சிறிய பண்ணையாரின் மனைவி, பெரிய பண்ணையாருக்கு உடன்பிறந்த தங்கை. பிரிவினை வந்தபோது, பெரிய பண்ணை, சிறிய பண்ணை என்று பிரிந்துவிட்டன.

    சிறிய பணணையாருக்கு இளவழகன் என்று ஒரு மகன் இருந்தான். பேரழகி என்ற பெயருடன் ஒரு மகள் இருந்தாள். சிறிய பண்ணையார், இருவரையும் தம் இரு கண்கள் போலப் பாதுகாத்து வந்தார். ஆனால், இப்போது சிறிய பண்ணையார் இல்லை. அவர் இறந்துபோனார். அவருக்குப் பிறகு சில திங்கள்களில் அவர் மனைவியும் இறந்துபோனார்.

    பேரழகி, வயதுவந்த பெண். பெண்மை என்பது அவளிடம் கொட்டிக் கிடந்தது. புன்சிரிப்பும் அளவில்லாத அழகும் ஒளி வீசின, மின்னிக் காட்டின.

    இளவழகன், பொல்லாதவனாக இருந்தான். சரியாகப் படிக்காமல், அரைகுறையாகத் தனது படிப்பை முடித்துக் கொண்டான். திட்டமின்றிச் செலவு செய்து வந்தான். அவன், தன் தங்கையைக் காப்பாற்ற மாட்டான் என்று தெரிந்துகொண்டு சிறிய பண்ணையார் இருவருக்கும் தம் உடைமைகளை இரு பங்காக்கி எழுதிவைத்துவிட்டார். பேரழகியின் சொத்து முழுமையும் தனியே அப்படியே இருந்தது. அதே மாதிரி, இளவழகனின் சொத்து முழுவதும் தனியாக இருந்தது. அவற்றைக் கவனித்துக்கொள்ளப் பண்ணையாரிடமிருந்த கணக்கர் குண்டுப்பிள்ளை எப்பொழுதும் அங்கேயே

    Enjoying the preview?
    Page 1 of 1