Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Frankfurtil Tamilvanan
Frankfurtil Tamilvanan
Frankfurtil Tamilvanan
Ebook211 pages1 hour

Frankfurtil Tamilvanan

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

மெல்லினா என்பவர் வங்கியில் மேலாளராக பிராங்க்பர்ட்டில் பணிப்புரிகிறார். இவர் பொறுப்பில் உள்ள ஜாவாப்புலியை ஒருவர் ஏமாற்றி பறித்துச் சென்று வருகிறார். இதை கண்டுபிடித்து மீண்டும் உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காக மெல்லினா தமிழ்வாணனை வரவழைக்கிறார்.

தமிழ்வாணன் அதை கண்டுபிடித்து உரிய இடத்தில் சேர்க்கிறாரா? இல்லையா? என்பதை தமிழ்வாணனுக்கே உரிய சுவாரசியமான பாணியில் படித்து ரசியுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136605905
Frankfurtil Tamilvanan

Read more from Tamilvanan

Related to Frankfurtil Tamilvanan

Related ebooks

Reviews for Frankfurtil Tamilvanan

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Frankfurtil Tamilvanan - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பிராங்க்பாட்டில் தமிழ்வாணன்

    Frankfurtil Tamilvanan

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    பிராங்க்பர்ட் நகரத்தின் தலையாய சாலை ஒன்று. அதில் துப்பறியும் நிபுணர் தமிழ்வாணன், தம் கையில் பளுவாக இருந்த கைப்பெட்டியுடன் நடந்துகொண்டிருந்தார்....

    ஐரோப்பிய நாடுகளில் எங்கேயுமே பெட்டியையோ உடைமைகளையோ தூக்கிச் செல்லக் கூலிகள் கிடைப்பது இல்லை. விமானத்தில் பயணம் செய்தாலும் சரி, புகை வண்டியில் பயணம் செய்தாலும் சரி, நிலத்திற்குள் ஓடும் ட்யூப் டிரெயின் எனப்படும் மின்சார இரயிலில் பயணம் செய்தாலும் சரி, பிரயாணம் செய்பவர்களே தங்களுடைய உடைமைகளைத் தூக்கிச் செல்லுவதைக் காணலாம். பிரயாணம் செய்பவர்கள் முடிந்தவரையில் தாங்களே தூக்கிச் செல்லும் அளவுக்குப் பளுவுள்ள ஒரு பெட்டியை மட்டுமே எடுத்துச் செல்லுவார்கள். தமிழ்வாணன் அதற்கு விதிவிலக்கு அல்லர். தமிழ்வாணன், தாம் யார் என்பதை மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் தம் பெட்டியுடன் அவர் நடந்து கொண்டிருந்தார்.

    அவர், சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்தார். பிராங்க்பர்ட்டில் இரவு மணி எட்டானால் போதும், நகரம் முழுவதும் கொஞ்சங்கூட இருட்டு இல்லாமல் ஆற்றல் மிகுந்த விளக்குகளின் வெளிச்சத்தில் பட்டப்பகலைப் போல் இருக்கும், இருந்தது.

    பிராங்க்பர்ட்டில் பகலிலாவது போக்குவரத்தும் நடமாட்டமும் குறைவாக இருக்கும். பகலில் பெரும்பாலோர் தங்களது அலுவலகங்களிலோ தொழிற்சாலைகளிலோ இருப்பார்கள். வேலைக்குப் போகாத பெண்கள், வீட்டில் இருப்பார்கள். ஆனால் இரவில் எல்லாரும் வெளியே சென்று சுற்றுவார்கள், சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

    கார்களின் நெரிசல், நடந்து போகிறவர்களின் நெரிசல், ட்யூப் இரயில்களில் பயணம் செய்பவர்களின் நெரிசல், ஜோடி ஜோடியாகவும், தனித்தனியாகவும் ஆண்களும் பெண்களும் இன்பத்தைத் தேடி நைட் கிளப்புகளுக்கும், சிற்றுண்டிச் சாலைகளுக்கும், மதுக்கடைகளுக்கும், சினிமாத் தியேட்டர்களுக்கும், நடன அரங்குகளுக்கும் விரைந்து போய்க்கொண்டிருப்பவர்களின் நெரிசல்! ஒரே நெரிசல்.

    பிராங்க்பர்ட், ஜெர்மனியின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.

    ஐரோப்பிய மக்கள் எப்படிப் பலகோடி இன்பங்களை நாடிப் பாரிசுக்குச் செல்லுகிறார்களோ, அப்படியே ஜெர்மன் மக்கள் பலகோடி இன்பங்களை நாடிப் பிராங்க்பர்ட்டுக்கு வருகிறார்கள். ஜெர்மன் நாட்டுப் பணமான மார்க்கை (தற்போது யுரோ (Euro) எல்லாரும் பிராங்க்பர்ட்டில் வந்து கரைக்கிறார்கள்.

    தமிழ்வாணன், பெட்டியைத் தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தார். நேரம் ஆக ஆகப் பெட்டியின் பளு மிகவும் மிகுதி ஆயிற்று. ஆகையால் அவர் அதை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு அடிக்கடி மாற்றிய படி நடந்து கொண்டிருந்தார்.

    தலையிலே கவனத்திற்குரிய தொப்பி. கழுத்திலே நீலத் துணியில் வெள்ளைப் புள்ளிபோட்ட ஸ்கார்ஃப். பளபளக்கும் கறுப்புக் கண்ணாடி. டெர்லின் சட்டை. டெரிலின் கால்சட்டை. உருவம் தெரியும்படி கண்ணாடி போல் பாலிஷ் செய்யப்பட்ட ஷூ.

    அவரைப் பார்த்ததுமே, அவர்தான் தமிழ்வாணனாக இருக்க முடியும் என்று, சில ஆண்களும் பெண்களும் திரும்பித் திரும்பித் தமிழ்வாணனைப் பார்த்தபடி சென்றார்கள்.

    தம்மை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாதே என்று தமிழ்வாணன் அஞ்சினார். அதனால்தான் அவர் விமான நிலையத்திலிருந்து பெட்டியைத் தாமே தூக்கிக் கொண்டு பஸ்ஸில் புறப்பட்டு வந்து, தலையாய சாலை ஒன்றில் இறங்கி நடந்து கொண்டிருந்தார்.

    அவர் எந்த ஓட்டலிலும் தங்க விரும்பவில்லை. பத்திரிகைக்காரர்களிடமோ டெலிவிஷன்காரர்களிடமோ ரேடியோக்காரர்களிடமோ சிக்க விரும்பவில்லை. அமைதியுடன் அவர் தனிமையில் ஓர் எளிய மனிதரைப் போல் திரிய விரும்பினார். அவர் பிராங்க்பர்ட்டில் வந்து இறங்கியது எவருக்கும் தெரியக்கூடாது என்று அவர் எண்ணினார்.

    பிராங்க்பர்ட் நகரத்தின் குறுக்கே அதன் இதயம்போல் ரைன் நதி ஓடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம், பழைய பிராங்க்பர்ட். மற்றொரு பக்கம் புதிய பிராங்க்பர்ட். இரண்டு பெரிய நகரங்களும் ரைன் நதியின் பாலத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.

    பிராங்க்பர்ட் நகரில் ஆண்கள் பலர் தங்களுடைய காதலிகளைக் காண விரைந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் விரைந்து போகும் போது தமிழ்வாணனைப் பார்த்து விட்டு அவரிடம் பேசவேண்டும் என்று கொஞ்சம் தயங்கி நின்றார்கள். பிறகு தங்களுடைய காதலி காத்திருப்பாள், நேரமாகிறது என்பதைப் போல் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி விரைந்தார்கள்!

    எல்லாருக்கும், கையில் பெட்டியுடன் நடந்து போகிறவர் தமிழ்வாணன்தானா என்ற ஐயம் ஒருபக்கம். உறுதிப்படுத்திக் கொள்ள நேரமில்லையே என்ற ஏக்கம் மற்றொரு பக்கம். வேகம் மிகுந்த வாழ்க்கை! விரைவு நிறைந்த வாழ்க்கை!

    பிராங்க்பர்ட் பெண்கள் கொஞ்சம் பொறுமைசாலிகள். எதற்கும் அவ்வளவு விரைவு கொள்ளாதவர்கள். அழகானவர்கள். பேரழகிகள்.

    அந்தப் பேரழகிகள், தமிழ்வாணனை அடையாளம் தெரிந்து கொண்டு குடன் டாக் என்றார்கள்.

    ஜெர்மனியில் குடன் டாக் என்றால் குட் டே என்று பொருள். குட்மார்னிங் என்றோ, குட் ஈவினிங் என்றோ ஜெர்மன் மக்கள் சொல்லுவதில்லை. குட் டே அதாவது நல்ல நான் என்றுதான் சொல்லுவார்கள். குடன் டாக் - இது ஜெர்மன் சொல். ஜெர்மனியில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவு.

    குடன் டாக் என்றார் தமிழ்வாணனும்!

    நீங்கள் தமிழ்வாணன்தானே? உலகப் பெரும் துப்பறியும் நிபுணர் தானே?

    இல்லை.

    தமிழ்வாணனைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்! என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே நகர்ந்தார்கள் சில பெண்கள்.

    நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்? என்று பெரும் சிரிப்புச் சிரித்தார்கள் சில பெண்கள்.

    இந்த உலகத்தில் ஒருவரைப்போல் ஏழு பேர்கள் இருக்கிறார்களாம். இந்த உண்மை உங்களுக்குத் தெரியாதா? என்று சமாளித்தார் தமிழ்வாணன்.

    அவர்கள் சிரித்தபடி, டாங்கென்ஸீ என்று சொல்லிவிட்டு ஐயத்துடன் தமிழ்வாணனைப் பார்த்தபடியே விரைந்து சென்றார்கள்.

    'டாங்கென்ஸீ என்றால் தாங்க்யூ' 'நன்றி’ என்று பொருள்.

    தமிழ்வாணனுக்குக் கொஞ்சம் தொல்லை. எல்லாரையும் ஏமாற்ற முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதனால் அவர் உடனே வாடகைக்கார் ஒன்றைக் கைதட்டி அழைத்தார்.

    வாடகைக்கார் அவர் பக்கத்தில் வந்தது. நின்றது. புத்தம் புதிய வாடகைக்கார். அதை ஓட்டி வந்தவன் கொஞ்சம் வயதானவன்.

    தமிழ்வாணன், காரில் பெட்டியை வைத்துவிட்டுப் பின் இடத்தில் ஏறினார், உட்கார்ந்தார்.

    காரோட்டி ஜெர்மன் மொழியில் ஏதோ கேட்டான். பிராங்க்பர்ட்டில் இருக்கும் பெரும்பாலான காரோட்டிகளுக்கு ஆங்கிலம் தெரியாது. எல்லாரும் ஜெர்மன் மொழியிலேயே பேசுவார்கள்.

    தமிழ்வாணன் அவன் என்ன கேட்டான் என்று புரிந்து கொண்டு, பிராங்க்பர்ட் நகரத்திற்கு வடக்கே ஒரு பகுதிக்குப் போகவேண்டும். காரை ஓட்டு. நான் சொல்லுகிறேன் என்றார் ஆங்கிலத்தில்.

    அவன் ஜெர்மன் மொழியில் படபடவென்று ஏதோ பேசினான். அவன் என்ன பேசுகிறான் என்பது புரியவில்லை. ஆனால், காரை விரைவுடன் செலுத்தினான்.

    இசையை எந்த மொழியில் பாடினாலும் உலகம் முழுவதும் மக்கள் சுவைக்கிறார்கள் என்று ஜான் வில்னோஸ் என்ற அறிஞன் சொல்லியிருக்கிறான். இசைக்குப் பொருள் தெரிய வேண்டியதில்லை. ஆனால், நீ பேசும்போது பொருள் தெரியாவிட்டால் தொல்லையாக இருக்கிறது என்றார் தமிழ்வாணன்.

    அவர் பேசியதைக் கொஞ்சம் புரிந்துகொண்டவனைப் போல் காரோட்டி பற்களைக் காட்டிச் சிரித்தான்.

    கார் இப்போது பிராங்க்பர்ட் நகரத்தின் சுறுசுறுப்பான இடங்களை விட்டுவிலகி, அமைதியான பகுதிகளின் பக்கம் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளில் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. பெரும் பணக்காரர்களும் வளம் மிகுந்தவர்களும் வாழும் இடம்.

    தமிழ்வாணன், குளுக்கோஸ் மாத்திரை ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அவர் குளுக்கோஸ் மாத்திரையைப் போட்டுக்கொண்ட நேரத்திலெல்லாம் அவர் உடலும் உள்ளமும் மூளையும் சுறுசுறுப்புப் பெற்றன. அவர் விரைந்து சிந்தனை செய்யத் தொடங்கினார்.

    குளுக்கோஸ் மாத்திரையைச் சுவைத்தபடி மந்திரச் சொற்களைச் சொல்லுவதைப்போல், காரோட்டியின் காதில் விழும்படி கொஞ்சம் உரக்க, மெல்லினோ என்றார்.

    அவன் காரை விரைவாகச் செலுத்தியபடியே, மெல்லினோ என்றான்.

    ஆமாம்.

    யார் அது?

    அவன் ஜெர்மன் மொழியில் பேசிய போதிலும் அவர் புரிந்துகொண்டார். அவனும் அவர் ஆங்கிலத்தில் பேசியதை உணர்ந்து கொண்டான். எந்த மொழியில் பேசினாலும் ஓசையினால் ஓரளவுக்குப் பொருளை உணரமுடியுமே!

    கேள்விப்பட்டதில்லையா? என்றார் தமிழ்வாணன்.

    ஒரு பெண்ணின் பெயர். எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.

    இந்த மெல்லினோவை நான் பார்க்கவேண்டும். அவள் இந்தப் பகுதியில்தான் எங்கேயோ இருக்கிறாள்.

    காரோட்டி காரை ஓர் ஓரமாக நிறுத்தினான்.

    இதோ வந்துவிடுகிறேன். இங்கே எவரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன், என்று சொல்லிவிட்டு, சாலை ஓரத்தில் இருந்த ஒரு பங்களாவை நோக்கி அவன் இறங்கி நடந்தான்.

    பங்களாவிலே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அழகிய திரைகள். காரோட்டி பங்களாவை நெருங்கியதும் உயர்ந்த சாதி நாய் ஒன்று குரைக்கும் ஓசை வந்தது. பங்களாவின் உள்ளேயிருந்து இனிய மேல் நாட்டு இசையின் ஓசை வந்து கொண்டிருந்தது.

    கொஞ்ச நேரத்தில் காரோட்டி வந்தான். திரும்பி வந்தான். அவன் விசில் அடித்தபடி மிகக் களிப்பாக வந்தான். மெல்லினோவைப் பற்றி அவன் கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டான் என்பது அவன் செயலிலேயே தெரிந்தது!

    அவன், காரில் வந்து உட்கார்ந்து, மெல்லினோ டச் பாங்கில் வேலை செய்கிறாள் என்றான்.

    ஆமாம்.

    யார்?

    அவள் பங்களா மிகவும் பக்கத்தில்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் பங்களாவை நாம் அடைந்துவிடலாம்.

    டாங்கோன்ஸி என்றார் தமிழ்வாணன். நன்றி என்று பொருள்.

    அவன் சிரித்தான். காரை விரைந்து செலுத்தினான். புதிய கார். எங்குப் பார்த்தாலும் புதிதாகப் போடப்பட்ட அருமையான சாலைகள். ஆகையால் காரில் எவ்வளவு விரைவாகப் போனாலும் அலுப்புத் தெரியவில்லை. விமானத்தில் போவதைப் போல் இருந்தது.

    மூன்றே நிமிடங்களில் கார் சாலையை விட்டு விலகியது. சமவெளியில் சென்றது. அந்தப் பகுதியில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில அழகிய பங்களாக்கள் இருந்தன. எல்லாம் புதிய பங்களாக்கள். நவீன முறையில் கட்டப்பட்டவை. ஆரவாரமான பங்களாக்கள்.

    காரோட்டி, ஒரு பங்களாவின் முன் காரை நிறுத்திவிட்டு, இதுதான் மெல்லினோவின் பங்களா, இறங்கிக் கொள்ளுங்கள் என்றான்.

    அவர் பெட்டியுடன் இறங்கினார். மீட்டரைப் பார்த்தார். பத்து மார்க் ஆகியிருந்தது. அவனிடம் பன்னிரண்டு மார்க் பணநோட்டுகளைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, பெட்டியுடன் பங்களாவை நோக்கி நடந்தார்.

    காரோட்டி, காரைத் திருப்பிக்கொண்டு விரைவுடன் திரும்பிப் போய்விட்டான்.

    தமிழ்வாணன் பங்களாவின் வெளிவாயில் கதவைத் திறந்து கொண்டு புகுந்தார். தோட்டத்திற்குள் சென்றார்.

    அழகிய தோட்டம். பங்களாவில் சில விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அவர் தோட்டத்தில் நுழைந்ததும் பங்களாவின் பின்புறத்திலிருந்து ஓர் உயர்ந்த சாதி நாய் குரைக்கும் ஓசை கேட்டது. அது கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பது அது குரைக்கும் ஓசையிலிருந்து தெரிந்தது.

    தமிழ்வாணன் மெல்ல நடந்து சென்றார். சென்று பங்களாவின் வாயிலை அடைந்தார். பளபளக்கும் அழகிய பெரிய கதவு. அது மூடியிருந்தது. மணியடிக்கும் விசையை அமுக்கினார். இனிய ஓசை

    Enjoying the preview?
    Page 1 of 1