Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hongkongil Sankarlal
Hongkongil Sankarlal
Hongkongil Sankarlal
Ebook138 pages1 hour

Hongkongil Sankarlal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த முறை சங்கர்லாலுக்கு பயண அழைப்பு ஹாங்காங்க் அரசாங்கத்திடமிருந்தே நேரடியாக! அதற்காக டோக்கியோ-விலிருந்து தனது விமான பயணத்தை தொடங்கிருந்தார் அவர்.ஹாங்கோங்கில் தொடர்ந்து பணக்காரர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்...!? அனைவரும் அவ்வூரின் முக்கிய புள்ளிகள்... போலீசால் எதையும் கண்டறிய முடியவில்லை! காரணம் கொலையில் இருக்கும் மர்மம்!? கொலையை செய்தது ஆணா? பெண்ணா? என தீர்மானிக்க திணறுகிறது போலீஸ்! துப்பு துலக்க சங்கர்லால் வரவழைக்கபடுகிறார்... சங்கர்லாலை பொறுத்தவரை முதல் பார்வையிலேயே கிடைக்கும் 'பிடி' இதிலும் கிடைக்குமா?! என அறிந்து கொள்ள விறுவிறுப்பான இந்த நாவலை படித்து பாருங்கள்!
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605874
Hongkongil Sankarlal

Read more from Tamilvanan

Related to Hongkongil Sankarlal

Related ebooks

Reviews for Hongkongil Sankarlal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hongkongil Sankarlal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    ஹாங்காங்கில் சங்கர்லால்

    Hongkongil Sankarlal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    டோக்கியோவிலிருந்து ஹாங்காங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சங்கர்லால் உட்கார்ந்திருந்தார். ஹாங்காங் போய்ச் சேர இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

    சங்கர்லால், தன் கைக் கெடிகாரத்தைப் பார்த்தார். மாலை மணி ஐந்து. ஐந்தரை மணிக்கு விமானம் ஹாங்காங்கைத் தொடும்.

    டோக்கியோவில் அமைதியோடு தன் மனைவி இந்திராவுடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சங்கர்லாலுக்கு விரைவுச் செய்தி ஒன்று தொலைபேசியில் வந்தது. அந்தச் செய்தி நேரடியாக ஹாங்காங் அரசாங்கத்திடமிருந்தே வந்தது.

    ஹாங்காங், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், அங்கே வாழும் முப்பது இலட்சம் பேர்கள் சீனர்கள். சீனாவிலிருந்து தப்பி அகதிகளாக வந்தவர்கள். சீனாவிலிருந்து இப்போதும் கூடத் தினமும் சில அகதிகள் கடல் வழியாகத் தப்பி வந்து கொண்டிருக்கிறார்கள். சீனா எண்ணினால் தன் நீண்ட கரத்தைக் கொஞ்சம் நீட்டி ஒரே நாளில் ஹாங்காங்கைப் பிடித்துச் சீனாவுடன் சேர்த்துவிட முடியும். என்றாலும், சீனா இப்படிச் செய்யவில்லை!

    அதற்கு,

    காரணம் இருந்தது!

    சீனா, தான் விரும்பிய மேல் நாட்டுப் பொருள்களை மலிவாக ஹாங்காங் வழியாக விலைக்கு வாங்கி வந்தது. ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு மேல் நாட்டுப் பொருள்கள் கடத்தப்பட்டு மலிவான விலைக்குக் கிடைக்கின்றன. இன்னும் கிடைத்து வருகின்றன. இதற்குப் பதில், சீனாவில் விளையும் கஞ்சாப் பொருள், ஹாங்காங் வழியாகப் பல மேல் நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. விற்கப்படுகின்றன!!

    ஹாங்காங்கைச் சீனா பிடித்துவிட்டால் இப்படிப்பட்ட கடத்தல்கள் நடக்கா. மேல்நாட்டுப் பொருள்கள் கிடைக்கா. கஞ்சாவைப் பணம் பண்ண முடியாது. கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் சிலர் ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார்கள்!

    கடத்தல் வேலை செய்பவர்களும், கடற் கொள்ளைக்காரர்களும், பாங்குக் கொள்ளைக்காரர்களும், சீனாவிலிருந்து அழகிய பெண்களைக் கடத்தி வந்து விற்பவர்களும் அடிக்கடி கூடிப் பேசிச் செயல்படும் இடம் ஹாங்காங். வெளிநாட்டவர்கள் பலர் ஹாங்காங்கின் அழகைச் சுவைக்கவும், வெளிநாட்டுப் பொருள்களை மலிவாக வாங்கவும் அடிக்கடி ஹாங்காங் வருகிறார்கள். இதனால் ஹாங்காங் எப்போதும் கலகலப்பாக இருக்கிறது. கவர்ச்சியாக இருக்கிறது.

    இந்த ஹாங்காங்கில்,

    தனிமையான இடங்களுக்கும் பெரிய கடைத் தெருக்களுக்கும் சாலைகளுக்கும் பின்னால் இருக்கும் சிறு சந்து பொந்துகளிலே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மாபெரும் குற்றங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங் போலீசார் மிகவும் திறமைசாலிகள். எதற்கும் அஞ்சாதவர்கள். இருப்பினும் அவர்களால் கூடச் சில வழக்குகளைத் துப்பறிய முடியவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

    ஹாங்காங் போலீசாரை ஒரு வழக்கு திகைக்க வைத்தது. ஹாங்காங் அரசாங்கத்தை அதே வழக்கு, கலங்க வைத்தது!

    இதனால்தான்,

    ஹாங்காங் அரசின் தனிப்பெரும் அதிகாரி ஒருவர் நேரடியாகச் சங்கர்லாலுடன் தொடர்பு கொண்டு பேசி உடனே அவரைப் புறப்பட்டு வரும்படி சொன்னார்.

    அடுத்துத் தொடர்ந்து, தொலைபேசியில் ஒருவர் பேசியபோது, சங்கர்லால், உடனே நீங்கள் ஹாங்காங் புறப்பட்டு வாருங்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் டோக்கியோவிலிருந்து ஒரு விமானம் புறப்படப் போகிறது. அதில் உங்களுக்காக ஓர் இருக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆபத்தான ஒரு வழக்கு! என்றார்.

    பேசியவர்,

    ஹாங்காங் கவர்னர்!

    பொறுத்துக் கொள்ளுங்கள். நான் ஓய்வு பெற டோக்கியோ வந்திருக்கிறேன். உங்கள் வழக்கைத் துப்பறிய இலண்டனிலிருக்கும் ஸ்காட்லண்ட் யார்டிலிருந்து எவரையாவது ஒரு நிபுணரை வரவழையுங்கள் என்றார் சங்கர்லால்.

    உங்களுக்கு விவரம் தெரியவில்லை. பல மாதங்களாகவே ஸ்காட்லாந்து யார்ட் நிபுணர்கள் இந்த வழக்கைப் பற்றித் துப்பறிகிறார்கள். எல்லாம் மர்மமாக இருக்கின்றன, எதுவும் தெரியவில்லை. இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள்தாம் இரகசியமாக உங்கள் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறார்கள். உங்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவராலுமே இந்த வழக்கின் தொடர்பான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள்!

    நம்ப முடியவில்லையே!

    அது மட்டுமல்ல, உங்களை எப்படியும் ஹாங்காங்கிற்கு வரவழைப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்து எனக்குச் செய்தியனுப்பியிருக்கிறது. இந்தியா காமன் வெல்த் நாடுகளில் ஒன்று. காமன் வெல்த் நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொள்ள வேண்டும். இல்லையா? நீங்கள் ஒருவேளை வர மறுத்தால் என்ன செய்வது என்று கூடச் சிந்தித்துப் பார்த்தோம். நீங்கள் முடியாது என்றாலும் பிரிட்டிஷ் பிரதமர், இந்தியப் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேச முடிவு செய்திருக்கிறார். ஆகையால் நீங்கள் புறப்பட மறுத்தால் இந்தியப் பிரதமரிடமிருந்து உங்களுக்குச் செய்தி வரும்!

    தொலைபேசியில் பேசிய வெள்ளைக்கார அதிகாரி அழுத்தமாகத் தன் முடிவைச் சொன்னார்.

    சங்கர்லால் மெல்லச் சிரித்தார்.

    அடுத்த விமானத்தில் புறப்படுகிறேன். உங்களை நம்புகிறேன். இதற்காக இந்தியப் பிரதமருக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்! என்று சொல்லி விட்டுத் தொலைபேசியை வைத்தார்.

    இந்தியப் பிரதமரிடம் மட்டும் அவர் உண்மையைத் தொலைபேசியின் வழியாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உடனே புறப்பட்டார்.

    துணைக்கு எவரும் இல்லாமல் தனியாகவா போகப் போகிறீர்கள்? என்றாள் இந்திரா மிகத் துன்பத்துடன்.

    என்னைப் பற்றித் துன்பம் கொள்ளாதே. விரைவில் திரும்பி விடுவேன்.

    ஹாங்காங்கில் கொடியவர்கள் மிகுதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    கொடியவர்களைப் பிடிப்பதுதானே என் தொழில்!

    விழிப்புடன் இருங்கள், சீனர்கள் ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்றாள் இந்திரா!

    சீனர்கள் மட்டுமல்லர், கொடிய தொழிலில் இறங்கியிருப்பவர்கள் அனைவருமே ஈவு இரக்கம் இல்லாதவர்கள்தாம். நான் வருகிறேன். என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார்!

    அவர் புறப்பட்டது ஏர் இந்தியா விமானத்தில். விமானத்திலிருந்த இந்தியப் பணிப் பெண்களையும் இந்தியா செல்லும் சில இந்தியர்களையும் பார்த்ததும் அவருக்குத் தாய்நாட்டின் நினைவு வந்தது. அந்த விமானம், ஹாங்காங், சிங்கப்பூர் வழியாகச் சென்னையை அடையும். ஆனால் அவர் ஹாங்காங்கில் இறங்கி விடுவார்!

    விமானம், ஹாங்காங்கில் இறங்கப் போகிறது என்றும், பிரயாணிகள் பாதுகாப்புப் பட்டையைச் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் பணிப்பெண் ஒருத்தி ஒலி பெருக்கியில் அறிவித்தாள். எல்லாரும் தங்களது இடுப்பைச் சேர்த்துப் பாதுகாப்புப் பட்டையைக் கட்டிக்கொண்டார்கள்.

    சங்கர்லால் மட்டும் பாதுகாப்புப் பட்டையைக் கட்டிக்கொள்ளவில்லை. அவர் சன்னல் பக்கமாகப் பார்த்தார்.

    கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்த அழகிய ஹாங்காங் தீவு, பேரின்ப புரியைப் போல் காட்சி தந்தது. உயர்ந்து எழும்பி நின்ற மாடிக்கட்டடங்கள், கடற்கரை ஓரமாக நின்ற ஆயிரக்கணக்கான படகுகள், கப்பல்கள் அனைத்தும் கண்களைக் கவர்ந்தன!

    ஹாங்காங்கின் விமான நிலையத்தின் பெயர் காய்டாக் விமான நிலையம்.

    சங்கர்லால், விமானத்திலிருந்து இறங்கியதும் இந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1