Cabaret Girl
By Tamilvanan
5/5
()
About this ebook
காப்ரே Girl தவறுகள் செய்யும் பெரும்புள்ளிகளுடன் தொடர்ப்பில் இருந்து வருகிறாள். திடீரென இரண்டு மனிதர்களால் காப்ரே Girl கொலை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்படுகிறாள். இது பிரபல துப்பறிவாளர் பாண்டிதுரையின் கவனத்திற்கு செல்கிறது. காப்ரே Girl-ஐ கொலைச் செய்ய காரணமாக இருந்தவரையும் எதனால் காப்ரே Girl கொலை செய்யப்பட்டார் என்பதையும் பாண்டிதுரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில் சென்று படிப்போம்.
Read more from Tamilvanan
Maraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Sankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsKarunaagam Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsKaalgal Therinthana Rating: 5 out of 5 stars5/5Marma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsManimozhi Nee Ennai Maranthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsKaidhi Number 811 Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsBayangara Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsInbavalli Ithuva Un Mudivu? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Cabaret Girl
Related ebooks
Kaalgal Therinthana Rating: 5 out of 5 stars5/5Irunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsKaathiru, Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsKagitha Puligal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Athiyaayam Rating: 0 out of 5 stars0 ratingsNambathey Nanbaney! Rating: 0 out of 5 stars0 ratingsThaa! Rating: 5 out of 5 stars5/5Kolai Kolaiyam Mundhirikka Rating: 0 out of 5 stars0 ratingsThinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Arai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Kadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsNimmi 2 Rating: 5 out of 5 stars5/5Enathu Raja Sabaiyiley.. Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsSei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Ithu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Kadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Pournami Rating: 0 out of 5 stars0 ratingsIni Min Mini Rating: 0 out of 5 stars0 ratingsVidiyatha Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsMaranathil Mannippom Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Puthir Rating: 0 out of 5 stars0 ratingsதப்பு + தப்பு = சரி Rating: 0 out of 5 stars0 ratingsKadhal XYZ Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Cabaret Girl
1 rating0 reviews
Book preview
Cabaret Girl - Tamilvanan
http://www.pustaka.co.in
காபரே GIRL
Cabaret Girl
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
1
குற்றமற்றவர்கள் இரவில் அமைதியுடன் தூங்கும்போதுதான் கொடியவர்கள் விழித்துக் கொண்டு தங்களது தலையாய பணிகளைச் செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய உண்மை!
முழு நிலா பால்போல் பொழியும் அந்த இரவில் கொரட்டூருக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஏரிக்கரையின் ஓரமாக இரண்டு பேர்கள் நின்றிருந்தார்கள். ஒருவன் குள்ளமாகப் பார்ப்பதற்குக் கட்டையாக இருந்தான்.
அவன் பெயர், அடைக்கலம்.
மற்றொருவன் உயரமாகப் பனை மரத்தைப்போல் இருந்தான்.
அவன் பெயர், ஆளவிரும்பி.
ஏரிக்கரையில் வரிசையாகப் பனை மரங்கள் நின்றன. அவற்றின் பக்கத்தில் ஆளவிரும்பி நின்றால் இரவில் அவனைக் கண்டுபிடிப்பது கடினம். பனைமரத்துடன் பனை மரமாக அவன் காணப்படுவான். அடைக்கலம் அவன் பக்கத்தில் நின்றால் வளராத ஒரு பனைமரத்தைப்போல் காணப்படுவான்.
இருவரும் இப்போது பனை மரங்களின் பக்கத்தில் நிற்கவில்லை. ஏரிக்கரையின் ஓரமாகத் தண்ணீர் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் நின்று தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தண்ணீரில் கரை ஓரமாக ஓர் அழகிய பெண் விழுந்து கிடந்தாள். அவள் உடம்பு தண்ணீருக்குள் கிடந்தது. ஆனால் ஆழம் இல்லாத காரணத்தால் நிலவின் ஒளியில் அவள் உடல் முழுவதும் நன்றாகத் தெரிந்தது. அவள் இறந்துகிடந்தாள். அவள் உயிர் போய் ஒரு சில வினாடிகள்தாம் இருக்கும்!
தண்ணீரில் கிடந்த அழகியின் பிணத்தைப் பார்க்கப் பார்க்கக் குள்ளமான மனிதன் அடைக்கலத்தின் உடல் மெல்ல நடுங்கியது. அவன் சிந்தனையுடன் பிணத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
என்ன சிந்தனை அடைக்கலம்? ஏன் அப்படிச் சிலையைப் போல் நின்று விட்டாய்?
என்று கொஞ்சம் அதட்டுவதைப் போல் கேட்டான் ஆளவிரும்பி. அவன் அடைக்கலத்திடம் பேசிய போது குனிந்து பார்த்துப் பேசவேண்டியதாய் இருந்தது.
அடைக்கலம், ஆளவிரும்பியின் முகத்தைப் பார்க்கவில்லை. இறந்து கிடந்த அழகியின் முகத்தைப் பார்த்தபடி, லில்லி எவ்வளவு அழகிய பெண்? இவளைப் போய்க் கொன்று விட்டாயே! மூச்சுத் திணற ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டாயே!
என்று கேட்டான்.
லில்லி அழகிதான். அத்துடன் அவள் மூளை உள்ளவள். போலீசாருக்கு அடிக்கடி நம்மைப் போன்ற மனிதர்களைப் பற்றிச் செய்தி கொடுப்பவள். இவளை விட்டுவைத்தால் நம்மைப்பற்றியும் செய்தி கொடுத்து விடுவாள்! மிகுந்த உண்மைகள் இவளுக்குத் தெரிந்து விட்டன! ஆகையால் இவளை விட்டு வைப்பது நல்லதல்ல என்று முடிவு கட்டிவிட்டேன். நீயும்தானே ஒப்புக்கொண்டாய்! இப்போது ஏன் அஞ்சுகிறாய்?
என்றான் ஆளவிரும்பி.
நான் ஒப்புக்கொண்டேனா? ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாய்! இவளைக் கொல்லுவதை முதலிலிருந்தே விரும்பவில்லை நான்?
இப்போது என்ன செய்யப்போகிறாய்? இவளுக்கு மீண்டும் உயிரைக் கொடுக்க முடியுமா?
என்று சீறினான் ஆளவிரும்பி.
எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து விடுவார்கள். நாம்தான் லில்லியைக் கொன்றோம் என்று தெரிந்துவிடும். பிறகு என்ன ஆகும்? நம் இருவருக்கும் தூக்குத் தண்டனை கிடைக்கும்! நம்மைத் தூக்கிலிடும்போது எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்!
என்றான் அடைக்கலம்.
இதோ பார் அடைக்கலம், நாளுக்கு நாள் நீ கோழையாகி வருகிறாய்! நமது தொழிலில் கோழைகளுக்கு இடமில்லை. இப்போது நடக்க வேண்டியதைச் சிந்தி. தூக்குத் தண்டனையைப் பற்றிச் சிந்திக்காதே! நான் சொல்லுவதைக் கேள்.....
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என்றான் அடைக்கலம்.
இந்தப் பிணத்தை இங்கேயே விட்டுச்சென்றால், லில்லி ஏரியில் மூழ்கி இறந்துவிட்டாள் என்று முதலில் எல்லாரும் எண்ணுவார்கள். ஆனால் போலீசார் அப்படி எண்ணமாட்டார்கள். ஏன் தெரியுமா? கொடியவர்களைப் பற்றி அடிக்கடி செய்தி கொடுத்துப் போலீசாரின் பாராட்டுதலைப் பெற்றவள் லில்லி. ஆகையால், முதலில் ஏரியின் பக்கத்தில் இருக்கும் வீடுகளையும் பங்களாக்களையும் ஐயத்துடன் பார்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பங்களாவிலும் யார் யார் இருக்கிறார்கள் என்று துப்பறிவார்கள். நாம் பக்கத்தில் தங்கி இருப்பது தெரிந்துவிடும்!
அப்படியானால் நாம் தூக்கு மேடைக்குப் போக வேண்டியதுதான்!
வாயை மூடு! குறுக்கே பேசாதே! நாம் பிடிபடாமல் இருக்க, போலீசார் கண்ணில் நாம் படாமல் இருக்க ஒரு வழி இருக்கிறது!
லில்லியின் உடலை எங்கேயாவது புதைத்துவிட வேண்டும்! இல்லையா?
புதைப்பதெல்லாம் ஆபத்து! அவளை எவரோ கொலை செய்து புதைத்து விட்டார்கள் என்று தெரிந்துவிடும். ஆகையால் இவள் உடலை இங்கிருந்து கொண்டுபோய்க் கடலில் போட்டு விடுவோம்!
ஆளவிரும்பி இப்படிச் சொன்னதும் அடைக்கலம் வியப்புடன் விசில் அடித்தான்.
புரிகிறது! புரிகிறது! கடலில் இவள் உடலைப் போட்டு விட்டால் சுறா மீன் இவள் உடலை இழுத்துக்கொண்டுபோய்த் தின்றுவிடும்! பிறகு இவள் உடலையே கண்டுபிடிக்க முடியாது! இல்லையா?
என்றான் அடைக்கலம்.
உனக்கு மூளையே இல்லை! சுறா மீன் இழுத்துப்போய் விட்டால் மேலும் நமக்குத்தான் ஆபத்து. லில்லி மறைந்து விட்டாள் என்று தெரிந்ததும் போலீசார் நம்மைத் தொடர்ந்து கவனித்தாலும் கவனிப்பார்கள். அவர்கள் ஐயத்துக்கு ஆளாகி விட்டால் அப்புறம் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. விரைவில் புறப்பட்டுப் போவோம்!
அப்படியானால் கடலில் ஏன் போடவேண்டும்?
கடலிலும் சுறா மீன்கள் வராத சில பகுதிகள் இருக்கின்றன. அந்த மாதிரிப் பகுதிகளில் ஒன்றில் பிணத்தைப் போட்டுவிட வேண்டும். விழுந்ததும் இவள் பிணம் மிதக்கும். களிப்புக்காகக் கடலில் குளிக்க வந்த லில்லி, சுழலில் அகப்பட்டு இறந்துவிட்டாள் என்று எண்ணுவார்கள் போலீசார். அத்துடன் வழக்கு முடிந்துவிடும். லில்லி அடிக்கடி கடலுக்குக் குளிக்கப் போவாள். அவளுக்கு அப்படி ஒரு பழக்கம்!
அடைக்கலம் பேசவில்லை.
ஏன் பேசாமல் நின்றுவிட்டாய்?
என்று கேட்டான் ஆளவிரும்பி.
பிணத்தைக் கடலில் கொண்டுபோய்ப் போடும்போது எவராவது பார்த்துவிட்டால்?
என்றான் அடைக்கலம்.
எவரும் பார்க்காதபோது, எவரும் இல்லாதபோது கடலில் கொண்டுபோய்ப் போடுவோம்!
என்றான் ஆளவிரும்பி. பிறகு தொடர்ந்து, நீ இங்கேயே இரு. நான் போய்க் காரைக் கொண்டு வருகிறேன். பிணத்தைக் காரில் ஏற்றிக்கொண்டு போவோம்
என்றான்.
நானும் வருகிறேன். இருவரும் போய்க் காரைக் கொண்டு வருவோம்
என்றான் அடைக்கலம்.
இருவரும் போய்விட்டால் பிணம் தண்ணீரில் ஆழமான பகுதிக்குப் போய்விட்டால், அப்புறம் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்!
கரையில் இழுத்துப் போட்டுவிட்டுப் போகலாம்!
ஓநாய் வந்து இழுத்துக்கொண்டு போய்விடும்!
அப்படியானால் நீ இங்கேயே இரு. நான் போய்க் காரைக் கொண்டுவருகிறேன். ஒநாய் என்றால் எனக்குப் பயம்!
என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அடைக்கலம்.
2
ஏரிக்கரைக்குப் பக்கத்தில் கொஞ்சத் தொலைவில் இருந்த தோட்டத்துக்குள் சென்றான் அடைக்கலம். தோட்டத்தின் நடுவில் இருந்த பங்களா இருளில் மூழ்கிக் கிடந்தது. பங்களாவின் பின்புறம் இருந்த காரேஜில் கார் இருந்தது.
வானத்தில் திடீரென்று மேகம் படர்ந்து நிலவை மறைந்துவிட்டது. ஆகையால், எங்கும் இருள் படர்ந்தது. 'கொஞ்ச நேரத்தில் மழை வரும் போல் இருக்கிறதே' என்று எண்ணிக் கொண்டது அடைக்கலம்.
அவன் காரேஜின் கதவுகளைத் திறந்து காரை வெளியில் எடுத்தான். காரைக் கொஞ்சம் தள்ளிப் பின்னால் எடுத்த