Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bayangara Nagaram
Bayangara Nagaram
Bayangara Nagaram
Ebook144 pages56 minutes

Bayangara Nagaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் தலைப்பு வித்தியாசமாக உள்ளது அல்லவா?
நிழல் மனிதன் ஒரு திருடன். நிழலை யாராவது பிடிக்க முடியுமா. முடியாது அதுபோல நிழல் மனிதனையும் யாராலையும் பிடிக்க முடியாது.
அவன் யார்? அவனுக்கு இந்த பெயர் ஏற்பட காரணம் என்ன? அவன் எதற்காக திருடுகிறான்?
நிழல்மனிதனை பிடித்து தருமாறு போலீஸ் சங்கர்லாலிடம் கேட்டுக்கொள்கிறது.
சங்கர்லால் அந்த நிழல்மனிதனை எவ்வாறு பிடிக்க போகிறார். வாருங்கள் அவர் எவ்வாறு பிடிக்க போகிறார் என்பதை கதைக்குள் சென்று காண்போம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136605882
Bayangara Nagaram

Read more from Tamilvanan

Related to Bayangara Nagaram

Related ebooks

Reviews for Bayangara Nagaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bayangara Nagaram - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பயங்கர நகரம்

    Bayangara Nagaram

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    பயங்கர நகரம்

    சங்கர்லால், ஒரு துப்பறியும் சிங்கம். அவருடைய மூளை, பல இலட்ச ரூபாய்களுக்கு இன்ஷூர் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய மூளை நுட்பமானது. அதிசயமானது. ஒருவன் மனத்தில் உள்ள எண்ணங்களை எவராலும் சொல்ல முடியாது. ஆனால், சங்கர்லால் கேட்கும் பத்துக் கேள்விகளுக்கு அந்த மனிதன் பதில் சொன்னால் போதும்; சங்கர்லால் அந்தப் பதில்களை மட்டும் வைத்து, அந்த மனிதனின் மனத்தில் உள்ள எண்ணங்களை அப்படியே சொல்லிவிடுவார்! அது மட்டுமல்ல, அவன் செய்திருக்கும் குற்றங்களையும் சொல்லிவிடுவார். அவர் கேள்விகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கொக்கிகள். அந்தக் கொக்கிகளை அவர் போட்டால், அத்தனை விஷயங்களும் அதிலே மாட்டிக்கொண்டு வந்துவிடும்! அவ்வளவு அபார மூளை படைத்தவர்!

    அரசாங்கத்தார், அவரைப் பெரிய சொத்தாக மதித்து, கோகினூர் வைரத்தைப் போலக் காத்து வருகிறார்கள். அவருக்கென்று, அவர் இஷ்டப்படி, அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி, பெரிய பங்களா ஒன்று கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மாதம் ஒன்றுக்கு 25,000 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அவருடைய மலையாளச் சமையல்காரன், அவர் அந்தரங்க வேலையாள் மாது, அவர் மெய்க்காவலன் சிங், மற்றும் சில வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தாரே வேண்டிய வசதிகளுடன் சம்பளம் கொடுக்கிறார்கள். சங்கர்லாலுக்கு சர்க்காரால் ஹட்ஸன் கார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

    அவர் பங்களா வாசலில், இரண்டு கான்ஸ்டபிள்கள் நீட்டிய துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருப்பார்கள். இதைத் தவிர, அவருக்கு வேறு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. சங்கர்லாலைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள், அவருக்கு இந்தப் பாதுகாப்புப் போதுமா என்று ஆச்சரியப்படுவார்கள். அரசாங்கத்தாரும் இந்தப் பாதுகாப்பு, அவருக்கு எந்த மூலைக்கு என்றுதான் நினைத்தார்கள். ஆனால், சங்கர்லால் தான், போதும், போதும். இதுவே அதிகம். சங்கர்லாலைக் கொன்றுவிடுவதென்பது அவ்வளவு இலேசான காரியமா? எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாவிட்டால் கூட, எவராலும் சங்கர்லாலைக் கொல்ல முடியாது. இறைவனாகப் பார்த்து என்னை அழைத்துக் கொண்டால்தான். பிறரால் எனக்கு என்றைக்குமே மரணம் இல்லை என்று சொல்லிவிட்டார்!

    இருந்தாலும், எந்த நிமிஷத்திலும், தாங்கள் வேண்டும் போது, சகல பாதுகாப்புகளையும், வசதிகளையும் நாங்கள் செய்துதரத் தயாராய் இருக்கிறோம் என்று அக்கறையுடன் சொல்லி வைத்தார்கள் அரசாங்கத்தார்.

    சங்கர்லால் எப்படி இருப்பார் என்று தெரிய வேண்டாமா? பாதங்களிலே, எந்த இடத்திலும், எப்பொழுதும் சப்தம் செய்யாத, கிரேப் வைத்துப் பெட்ரோலினால் ஒட்டப்பட்ட ஷூ; உடம்பிலே, நீண்ட கால்சட்டை அதற்குள்ளே விடப்பட்ட சட்டை; கழுத்திலே டை; கலைந்து கிடக்கும் தலை; வளர்ந்த சிவந்த மேனி; சிரித்த முகம்; எப்போதும், எதற்கும் கவலைப்படாமல் குஷியாக இருக்கும் குழந்தைத் தன்மை. இவர்தான் சங்கர்லால்!

    இதுவரை சங்கர்லால் தலையிட்ட அத்தனைக் கொலை கேஸுகளும் அக்கு வேறு, ஆணி வேறாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. கொலை என்றால் இன்னான் இத்தனை மணிக்கு, இன்ன காரணத்திற்காக, இந்த ஆயுதத்தினால் கொலை செய்திருக்கிறான் என்று சொல்லிவிடுவார். கொள்ளை என்றால் இத்தனை மணிக்கு இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. இதில் இன்னின்னார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கச்சிதமாகப் பிசிறு இல்லாமல் சொல்லிவிடுவார்! இவ்வளவு தெளிவாக, அந்தக் கொலையையோ, கொள்ளையையோ நேரில் பார்த்தவர்கள்கூட, இந்த மாதிரிக் குழப்பம் இல்லாமல் தெளிவாகச் சொல்ல முடியாது!

    சங்கர்லால், இங்கே இருக்கும் கொலை, கொள்ளைகளைத்தாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். உலகத்திலுள்ள பல நாடுகளிடமிருந்தும் அவரை அனுப்பி வைக்கும்படி அரசாங்கத்திற்குக் கடிதம் வரும். பர்மா, மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், இத்தாலி - இப்படி முக்கிய நாடுகளிடமிருந்தெல்லாம் அவரை அன்புகூர்ந்து அனுப்பி வைக்கும்படி அரசாங்கத்திற்குக் கடிதம் வருகிறது!

    சங்கர்லால், வெளிநாடுகளுக்குச் செல்வதை அதிகமாக விரும்புவதில்லை. மிகவும் பெரிய கேஸாக இருந்தால் மட்டும் தீராத வற்புறுத்தலுக்கு இணங்கி மறுக்க முடியாமல் போவார்.

    சங்கர்லாலைப் பற்றித் தெரிந்து கொண்டு விட்டீர்களல்லவா? இனிமேல் கதையைப் படிக்கலாம்.

    நிழல் மனிதன்

    1

    நிழல் மனிதன் பெரிய திருடன். நிழலை எவராலாவது பிடிக்க முடியுமா? அது மாதிரி, இந்தப் பெரிய திருடனையும் எவராலும் பிடிக்க முடியாது. நிழலைப் பார்க்கலாம்; ஆனால் பிடிக்கத்தான் முடியாது. பெரிய திருடனாகிய இந்த நிழல் மனிதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்; ஆனால் பிடிக்கத்தான் முடியாது! இந்த மகாப்பெரிய திருடனுக்கு நிழல் மனிதன் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமானது!

    நிழல் மனிதன் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. இருப்பதும் தெரியாது. அவன் எப்பொழுது வந்தான்? எதற்காக வந்தான்? எந்த ரூபத்தில் வந்தான்? எப்படி வந்தான்? இப்பொழுது அவன் எங்கே? இருக்கிறானா, போய்விட்டானா? ஒன்றுமே எவருக்கும் தெரியாது! ஆனால், அவன் நுழைந்த கட்டிடத்திற்குள் உள்ள விலை உயர்ந்த சாமான்கள் மட்டும் காணாமற் போய்விடும்! எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், எத்தனை கான்ஸ்டபிள்கள் இருந்தாலும், எத்தனை பூட்டுகள் போட்டுப் பூட்டியிருந்தாலும் சரி, விலை உயர்ந்த சாமான்களோ, கரன்ஸிகளோ கண்டிப்பாய்க் காணாமல் போய்விடும். அதை மட்டும் எவராலும் தடுக்க முடியாது!

    நிழல் மனிதன் வீடு எங்கே இருக்கிறது? அல்லது, அவன் அடிக்கடி தங்கும் இடம்தான் எது? அவனுடைய ரகசிய ஜாகை எங்கே இருக்கிறது? அவன் எங்கிருந்து வருகிறான்? எப்படி வருகிறான்? எதில் வருகிறான்? கொள்ளைகள் அத்தனையையும் அவன் மட்டுந்தான் செய்கிறானா? அல்லது, அவனுக்குக் கூட்டாளிகள் உண்டா? கூட்டாளிகள் உண்டு என்றால் அவர்கள் யார்? அவர்கள் ஜாகையெல்லாம் எங்கே இருக்கிறது? அவன் கூட்டாளிகள் அவனோடு சேர்ந்து எல்லோரும் ஒன்றாகத்தான் வசிக்கிறார்களா? இல்லை, தனித்தனியாகத்தான் கௌரவமான மனிதர்கள் போல் நகரத்திற்குள் வசித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்துக் கொள்கிறார்களா?

    நிழல் மனிதன் இதுவரை திருடியதையெல்லாம், கொள்ளையடித்ததையெல்லாம் எங்கே வைத்திருக்கிறான்? அந்த இடம் எங்கே இருக்கிறது? அவன் ஏன் இப்படிக் கொள்ளையடிக்க வேண்டும்? அப்படிக் கொள்ளையடிப்பதையெல்லாம் வைத்திருக்கிறானா? அல்லது கூட்டாளிகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானா?

    அவனுக்கு அப்பா, அம்மா உண்டா? கூடப் பிறந்தவர்கள் யாராவது உண்டா? அவனுக்கு வயது என்ன இருக்கும்? அவன் ஆள் எப்படி இருப்பான்? எவருக்குமே தெரியாது!

    நிழல்மனிதனை இதுவரை எவருமே பார்த்ததில்லை. எங்கேயாவது கொள்ளையடிக்கப்பட்டிருந்தால், அது நிழல் மனிதனால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்வார்களே தவிர, அவன் எப்பொழுது வந்தான், எப்படி வந்தான், எத்தனை பேர்களோடு வந்தான், எப்படிக் கொள்ளையடித்தான், கொள்ளையடித்ததை எப்படிக் கொண்டு போனான் என்பதெல்லாம் எவருக்குமே தெரியாது!

    இப்படி, எவருமே பார்த்தறியாத நிழல்மனிதனின் தொந்தரவு, கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது.

    போலீஸ் இலாகா நிழல் மனிதனைப் பிடிக்கத் தலைகீழாக நின்று பார்த்தது. முடியவில்லை. போலீஸ் கமிஷனரும், டெபுடி போலீஸ் கமிஷனரும், இரவு பகலாகத் தூங்காமல், என்னென்னவோ ஏற்பாடுகளெல்லாம் செய்து பார்த்தார்கள். முடியவில்லை!

    இப்படித் தேடித் தேடி, நிழல் மனிதனைப் பிடிக்க முடியாமல் எத்தனையோ மாதங்கள் கழிந்துவிட்டன!

    ஒருநாள் –

    அப்பொழுதுதான் இருட்டிக் கொண்டிருந்தது.

    குளிர்காற்றுச் சற்று அதிகமாக இருந்ததால் வெளியே உலவச் செல்லும் சங்கர்லால், அன்று வெளியே செல்ல விரும்பாமல், தன் அறையில் உட்கார்ந்து கால்கள் இரண்டையும் மேஜையின் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு ஒரு புத்தகத்தைச் சுவைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது -

    கீழே காவல் காத்து நிற்கும் கான்ஸ்டபிள்களில் ஒருவனான பொன்னன், சங்கர்லாலுக்கு எதிரே வந்து ஸல்யூட் ஒன்று போட்டு நின்றான்.

    என்ன பொன்னா? என்று கேட்டார் சங்கர்லால், தன் பார்வையைப் புத்தகத்திலிருந்து எடுத்து, பொன்னனை பார்த்துக்கொண்டே.

    உதவிப் போலீஸ் கமிஷனர் மிஸ்டர் வஹாப் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார். வரச்சொல்ல அனுமதி உண்டா? என்று கேட்டான்

    Enjoying the preview?
    Page 1 of 1