Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Visham
Visham
Visham
Ebook80 pages22 minutes

Visham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

செந்தில் ஜெயிலில் இருந்து அன்றுதான் விடுதலை ஆகி இருந்தான். ஆனால் அவனுக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அவனுக்கு சொந்தங்கள் இருந்தாலும் அவர்களிடம் செல்ல விருப்பம் இல்லை ஏன்? சிறுவயதிலிருந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த ஊருக்கு செல்ல தயங்கும் அளவுக்கு அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது? வாங்க வாசிக்கலாம்...
Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580123903145
Visham

Read more from Indhumathi

Related to Visham

Related ebooks

Reviews for Visham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Visham - Indhumathi

    http://www.pustaka.co.in

    விஷம்

    Visham

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    காலை ஆறு மணிக்கெல்லாம் தன்னை வெளியில் அனுப்பி விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தான் செந்தில். நேற்றிரவே வார்டன் வந்து மறுநாள் அவனுக்கு விடுதலை என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போதே அவனுக்குள் ஒரு வருத்தமும், சோகமும் ஏற்பட்டுவிட்டது. வெளியில் போக விருப்பமில்லை என்பதை வார்டனிடம் சொன்னான். அவர் சூப்ரெண்ட்டிடம் சொல்லச் சொன்னார். சூப்ரெண்ட்டின் வருகைக்காகக் காத்திருந்து அவரிடம் சொன்னான்.

    வேணாம் சார்... நான் வெளியில் போகலை சார்! இங்கேயே இருந்துடறேன் சார்... என்று கெஞ்சினான்.

    இந்த நிலைமையில் வெளியில் போனால் ரொம்பக் கஷ்டப்படுவேன் சார்...

    அவன் சொன்னதையும், சொல்வதில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அவர் இயலாமையில் புன்னகைப் புரிந்தார்.

    தண்டனை காலத்துக்கு மேல உன்னை, உன்னை மட்டுமின்றி யாரையுமே வச்சுக்கிற அதிகாரம் எங்களுக்கில்லைப்பா.. நாங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். இங்கே வருகிறவர்களும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள். அதனால் உன்னை வைத்துக் கொள்ள முடியாது. அவனவன் வெளியில் போகத் தவித்துக் கொண்டிருக்கிறபோ, நீ மட்டும் ஏன் இப்படி, வருத்தமும் வேதனையும் படுகிறாய்?

    ‘மற்றவர்களுக்கு வெளியில் போவதற்குக் காரணமிருக்கும். பெண்டாட்டி, பிள்ளை குட்டிங்க இருப்பாங்க. கூடப்பிறந்தவங்க இருப்பாங்க. சினேகிதக்காரங்க இருப்பாங்க... எனக்கு யாரு இருக்காங்க? வீடு, வாசல் என்ன இருக்கு? உடம்பாவது நல்லா இருக்கா...? அதுவுமில்ல. இந்த லட்சணத்துல் வெளியில் போய் நான் என்ன செய்யப் போறேன் சார்?’

    இவ்வளவையும் மனத்தில் நினைத்துக் கொண்டானே தவிர, வெளியில் சொல்லவில்லை. அதுவும் அவரிடம் சொல்லப் பிரியப்படவில்லை. சொன்னாலும் ஏதும் பலன் இருக்கும் என்று தோன்றாததால் அவன் பேசாமலே இருந்தான். முன்பானால் அவன் இப்படி இருந்திருக்க மாட்டான். ஒரு கேள்விக்குப் படபடவென்று பத்து பதிலாக வரும். சுள்ளென்று கோபம் வரும். முரட்டுத்தனம் இருக்கும். இப்போது எல்லாம் அடங்கிப் போய் விட்டது, சிறைத்தண்டனை அவனை வெகுவாக மாற்றியிருந்தது...!

    ஆறு வருடங்களாக அடைபட்ட தனிமையோ, அல்லது இரண்டு வருடங்களுக்கு முன் மெல்லத் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இப்போது கை விரல்களையும், கால் விரல்களையும் வளைத்து குறைவுபடுத்தி, மூக்கை மூளியாக்கி இருக்கும் வியாதியோ ஏதோ ஒன்று அவனை முற்றிலுமாக மாற்றி விட்டிருந்தது. பழைய கோபக்கார இளைஞன் இல்லை அவன் ஒடுங்கிப்போய், வெளி உலகைப் பார்க்கவே கூசுகிற மனிதன். ‘ஆனால் இதைச் சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்...? சரி, சொல்வதற்குத்தான் யார் இருக்கிறார்கள்? யாருமற்ற அந்த வெளிஉலகத்திற்கு ஏன் போகவேண்டும்? எதற்காக ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அதைவிட இங்கேயே இருந்து, இப்படியே செத்துப்போய் விடலாமே...’

    என்ன யோசிக்கிறாய்? இன்றுதான் இந்த சிறைச் சாலைக்குள் இருக்கிற கடைசி ராத்திரி என்பதை தீர்க்கமாக நினைத்துக் கொள்... இனி ஒருபோதும் இதனுள் நுழையக் கூடாது என்கிற திடம் உனக்குள் ஏற்பட வேண்டும், நல்லதோர் பிரஜையாக வாழ நினைக்க வேண்டும். என்ன...?

    சரி சார்...

    கர்த்தர் உன்னை ரட்சிக்கட்டும்!

    அவர் போன பின்பும். நீண்டநேரம் தூக்கமற்று உட்கார்ந்திருந்தான். இரவுக் காவலுக்கு வந்தவர்கள் டார்ச் விளக்கை அடித்துப் பார்த்து இவன் விழித்திருப்பதைக் கவனித்து விட்டுக் கேட்டார்கள்,

    என்னடா...? விடுதலையாகிற குஷியில் தூக்கம் வரலையா?

    இவன் பதில் சொல்லாதிருக்க, மீண்டும் சற்றே குரல் உயரக் கோபத்தோடு கேட்டார்கள்:

    ஆமாம்! போற மாதிரி போயி பத்தே நாளில் திரும்பப் போறே... இதுக்கு சந்தோஷம் ஒரு கேடா உனக்கு?

    அதற்கும் மௌனமாக இருக்கவே, அவர்கள் முணு முணுத்துக் கொண்டு அகல, இவன் அவர்களின்

    Enjoying the preview?
    Page 1 of 1