Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endru Puthithai Pirappome...
Endru Puthithai Pirappome...
Endru Puthithai Pirappome...
Ebook105 pages39 minutes

Endru Puthithai Pirappome...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123903148
Endru Puthithai Pirappome...

Read more from Indhumathi

Related to Endru Puthithai Pirappome...

Related ebooks

Reviews for Endru Puthithai Pirappome...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endru Puthithai Pirappome... - Indhumathi

    http://www.pustaka.co.in

    என்று புதிதாய் பிறப்போம்...

    Endru Puthithai Pirappome…

    Author:

    இந்துமதி

    Indhumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    கண்களைத் திறந்து பார்த்தபோது, அறை சுத்தமான இருட்டில் கிடப்பதை உணர்ந்தான் சாயிராம். மின்சாரம் முழுதுமாகத் தடைப்பட்டுப் போயிருக்க வேண்டும். தலைக்கு மேல் சுழலும் விசிறியும் நின்றிருக்க வேண்டும், ஒரே புழுக்கமாக இருந்தது. கழுத்தடியும், முதுகும் தெப்பமாக நனைந்து போயிருந்தது. எழுந்து உட்கார்ந்து துடைத்துக் கொள்ளக்கூட சாயிராமிற்குப் பயமாக இருந்தது இருட்டு அவனைப் பொறுத்த வரை மருட்டுகிற விஷயம்! ஒரு வினாடி விளக்கு போனால்கூட, 'அம்மா...'என்று அலறுவான். மூச்சை யாரோ நிறுத்தி விட்டதாக உணருவான். குரல் வளையை இறுக்குவதாகப் பிரமைப்படுவான்.

    விளக்குகள் அணைந்து மின்சாரம் தடைப்பட்ட உடனே உமா எங்கிருந்தாலும் குரல் கொடுப்பாள்.

    'பயப்படாதே சாயிராம்! இதோ அம்மா வந்துட்டேன்.... லாந்தர் விளக்கை ஏற்றி எடுத்துண்டு வரேன்...'

    'சீக்கிரம் வாம்மா! ரொம்ப ரொம்ப பயமா இருக்கும்மா...'

    'வந்துண்டே இருக்கேன்...' என்னும் போதே லாந்தர் வெளிச்சம் அம்மாவின் உருவில் அசைந்து அருகில் வரும். அந்த முழு இருட்டில் சின்ன பிரகாசம் அதீத அழகாய்த் தெரியும் இருட்டில் அத்தனை நிமிடங்களும் கை கையாய் நீண்டு பயமுறுத்தின பிசாசு ரூபங்கள் மறைந்து, தேவதை தோன்றின மாதிரி அம்மா தோன்றுவதாய் இவன் நினைத்துக் கொள்வான். பயம் முற்றிலும் அகலாத நிலையில் அம்மாவின் கை லாந்தரைப் பிடுங்கிக் கீழே வைத்து விட்டு, அவளை இறுக அணைத்துக் கொள்வான். நெஞ்சு பட படக்கும்; மூச்சு பெரிதாய் வரும்; வார்த்தைகள் தடுமாறும். அம்மாவை இறுக்கின இறுக்கத்தில் எதிலிருந்தோ மெல்ல மெல்ல விடுபட்ட விடுதலை உணர்வில் - சாவின் விளிம்பிலிருந்து அம்மா தன்னைக் காப்பாற்றி விட்ட சந்தோஷத்தில் பேசுவான்.

    ஏம்மா. இந்த விளக்கு இப்படி அணைஞ்சு அணைஞ்சு போறது?- உமா அவனை இன்னமும் தன்னோடு சேர்த்து, தலையை வருடி கன்னங்களில் முத்தமிடுவாள்.

    அதுக்காகத்தானே நானே ஓடி வந்தேன். ஏன் ராம்... விளக்குன்னு இருந்தால் அணையாதா? இருட்டுக்கு இப்படிப் பயந்தியானால், நீ எப்படிப் பெரியவனாறது? அம்மா - அப்பாவைக் காப்பாத்தறது? ம்...

    அப்போ பயமாயிருக்காதும்மா... பெரியவனானதும் விளக்கு அணைஞ்சால் நானே போய் லாந்தரை ஏற்றிண்டு வருவேன். உன்னை மாதிரி வெளிச்சமா - பிரகாசமா இருப்பேன்...

    அவன் குரலில் தெரிகிற பெருமையும், அழுத்தமும் அவளைப் பரவசப்படுத்தும். உள்ளுக்குள் சிலிர்ப்பாக ஓடும். முதுகுத்தண்டில் சந்தோஷம் சொடுக்கும்.

    நான் என்ன பிரகாசமாகவா இருக்கேன்-?- வேண்டுமென்றே கேட்பாள் அவள்.

    பின்னே, உன்னை மாதிரி வெள்ளையா, உயரமா, பளபளன்னு யாரு இருக்காம்மா? எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் கூட இல்லை. வேணும்னால் பத்மா மிஸ்ஸைச் சொல்லலாம். அவங்ககூட உன்னை மாதிரி அழகில்லேம்மா... நீ ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்ட வருவே இல்லியம்மா... அப்பே என் பிரெண்ட்ஸ் எல்லாரும், 'ஏய் சாயிராம், யுவர் மதர் ஈஸ் வெரி ப்யூட்டிஃபுல்டா!'ன்னு சொல்லுவாங்க. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!

    அப்படியா?

    "ஆமாம்மா.... ஆனால், அப்பா வந்தால் அப்படிச் சொல்ல மாட்டாங்க. - 'யார்றா - சாயி அது?'ன்னு கேட்பாங்க.

    'எங்க அப்பாடா...'

    'இதுவா உங்க அப்பா? இவ்வளவு கறுப்பாவா உங்கப்பா இருப்பாங்க? பொய் சொல்றேடா...'

    'ம்ஹும்... இல்லேடா, நிஜமாகவே இவர் தான் எங்க அப்பா.'

    'ப்ராமிஸா?'

    'பிராமிஸாடா...'

    உங்கம்மா அவ்வளவு வெள்ளையா அழகா இருக்காங்க; அப்பா கன்னங்கரேல்னு அசிங்கமா இருக்காரேடா... இவரையா உங்கம்மா கல்யாணம் பண்ணிட்டிருக்காங்கன்னு?' கேட்பாங்கம்மா...

    நீ என்ன சொல்லுவே?

    ஆமாம்னு சொல்லுவேன். எங்கப்பா ரொம்ப நல்லவர்டான்னுவேன். கறுப்பானால் என்னடான்னு சண்டைக்குப் போவேன்...

    ஏம்ப்பா, வீணா அவங்ககூடல்லாம் சண்டைக்குப் போறே?

    நானா போக மாட்டேம்மா.... அவங்களா சண்டைக்கு வந்தாலும் விட மாட்டேன்!

    இனிமேல் அவங்க உன் கூட சண்டைக்கு வந்தால், அப்பாவைக் கறுப்புன்னு சொன்னால் - நீ ஒத்தெல்லோ கதை தெரியுமாடா உங்களுக்கு' ன்னு திருப்பிக் கேளு...

    சாயிராம் அத்துடன் தன் நண்பர்களையும், அவர்கள் போட்ட சண்டையையும் விட்டு விட்டு, உமா சொன்ன கதையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான்.

    அது என்ன 'ஒத்தெல்லோ ' கதைம்மா?

    ஒத்தெல்லோன்னு ஒருத்தன் இருந்தான்...

    நிஜமாகவே இருந்தானா?

    அது தெரியாதப்பா எனக்கு... ஷேக்ஸ்பியர் எழுதினதைத்தான் நான் படிச்சிருக்கேன். நிஜமா, பொய்யான்றதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணினதில்லை.

    சரி... நீ கதையைச் சொல்லும்மா!

    அந்த ஒத்தெல்லோன்றவன் ரொம்ப ரொம்ப கறுப்பா இருப்பான்...

    அப்பா மாதிரியம்மா?

    உஷ்.....! உன் பிரெண்ட்ஸ் அப்பாவைக் கறுப்புன்னு சொன்னால் உனக்குக் கோபம் வர்றதே.... இப்போ நீயே சொல்லலாமா?

    நம்ப அப்பா... நான் சொல்றேன்.

    ம்ஹூம். எனக்குக் கோபம் வரும்.

    "அப்போ சொல்லலைம்மா... சாரிம்மா! நீ கதையைச் சொல்லும்மா...'

    உமா அவனை மடியில் போட்டுக் கொண்டு - கல்லூரியில் மிஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1