Kanavu Manithargal
By Indhumathi
()
About this ebook
நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான மனிதர்களைக் காண்கிறோம். நாம் சந்திக்கும் அத்தனை பேர்களும் உருவ அமைப்பில் ஒரே விதமாகத் தோன்றினாலும் குண வேறுபாட்டில் எத்தனையோ வித்தியாசமானவர்கள்.
இயற்கையின் அமைப்பிலே மனித சிருஷ்டி என்பது போற்றத்தக்க புனிதமான பிறவியாகும். மேகத்திலிருந்து பொழியும் மழை நீர் தூய்மையானதாக இருந்தாலும் அது விழும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை, நிறம் மாறி மாசுபடுவது போல், பிறக்கும்போது தூய்மையாகப் பிறக்கும் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தடம் மாறி, குணம் மாறி, சராசரி மனிதனை விடக் கீழாக- பிறர் பார்த்து அதிசயிக்கத்தக்க வித்தியாசமானவனாகக் காட்சியளிக்கிறான்.”
அத்தகைய வித்தியாசமான- விசித்திரமான சில மனிதர்களைக் ‘கனவு மனிதர்கள்’ என்ற இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திருமதி இந்துமதி அவர்கள்.
Read more from Indhumathi
Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Tharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Oru Poo Uthirum Rating: 5 out of 5 stars5/5Viralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaana Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVeenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Poongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsVeenaiyil Urangum Raagangal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malar Rating: 5 out of 5 stars5/5Malargalile Aval Malligai Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Varam Tharum Yogini Siddharkal Rating: 0 out of 5 stars0 ratingsSai Saritha Leelamrutham Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsVisham Rating: 0 out of 5 stars0 ratingsIndru Naan... Naalai Nee... Rating: 0 out of 5 stars0 ratingsEnge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsAgni Natchathirangal Rating: 0 out of 5 stars0 ratingsEndru Puthithai Pirappome... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Illaiyaa Nithya? Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye... Rating: 0 out of 5 stars0 ratingsAshokavanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavu Manithargal
Related ebooks
Kanavugalukku Kaathiruthal Rating: 0 out of 5 stars0 ratingsKaathaladi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chellamey! Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsNeerottam Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum... Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsAmmai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Bhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsVerena Nee Irunthai! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Poo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Ussh Sollathey Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathoru Poonai Rating: 0 out of 5 stars0 ratingsVanathil Oru Maan Rating: 4 out of 5 stars4/5Un Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Niraintha Vettridam Rating: 0 out of 5 stars0 ratingsசிறுகதைகள் - I Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5Yaarum Sollatha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kanavu Manithargal
0 ratings0 reviews
Book preview
Kanavu Manithargal - Indhumathi
http://www.pustaka.co.in
கனவு மனிதர்கள்
Kanavu Manithargal
Author:
இந்துமதி
Indhumathi
For more books
http://www.pustaka.co.in/home/author/indhumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கனவு மனிதர்கள்
நானும் ஒரு பெண்...?!
சஷி
ரமேஷ், நான் உங்களை...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்!
தமயந்தி
கண்ணன் என்னும் மன்னன் பேரை....
தன்னைத் தானே நம்பாதது...
ஹேமா ஒரு புதிர்!
புதிய உமா உருவானாள்
போதுமே இந்த சுகம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
கண்ணைக் கெடுத்த இமைகள்!
இருட்டில் வாழும் இதயங்கள்!
எனக்கென்று ஓர் இதயம்
ஹனிமூன்!
விலகிப் போகும் உணர்வுகள்
குடித்துக் கொண்டே இருப்பேன்...
மெல்லத் திறந்த மனக் கதவு!
கேளாத காதுகள்
தட்டப்பட்ட கதவுகள்
விசித்திர உறவு
நான் குளித்துக் கொண்டே இருப்பேன்
முன்னுரை
நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான மனிதர்களைக் காண்கிறோம். நாம் சந்திக்கும் அத்தனை பேர்களும் உருவ அமைப்பில் ஒரே விதமாகத் தோன்றினாலும் குண வேறுபாட்டில் எத்தனையோ வித்தியாசமானவர்கள்.
இயற்கையின் அமைப்பிலே மனித சிருஷ்டி என்பது போற்றத்தக்க புனிதமான பிறவியாகும். மேகத்திலிருந்து பொழியும் மழை நீர் தூய்மையானதாக இருந்தாலும் அது விழும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை, நிறம் மாறி மாசுபடுவது போல், பிறக்கும்போது தூய்மையாகப் பிறக்கும் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தடம் மாறி, குணம் மாறி, சராசரி மனிதனை விடக் கீழாக- பிறர் பார்த்து அதிசயிக்கத்தக்க வித்தியாசமானவனாகக் காட்சியளிக்கிறான்."
அத்தகைய வித்தியாசமான- விசித்திரமான சில மனிதர்களைக் ‘கனவு மனிதர்கள்’ என்ற இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திருமதி இந்துமதி அவர்கள்.
ஆசிரியை அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுவது போல் இதில் வரும் அத்தனை பேரும் கற்பனையில் உருவானவர்கள் அல்ல.
இவர்கள் நிஜமானவர்கள். ஓர் விசித்திரப் பிறவியாக வாழ்ந்து மருத்துவத் துறையின் கண்டுபிடிப்பான ஹிப்னடைஸ் மூலம் புது வாழ்வு பெற்றவர்கள்.
இவர்களைப் போல் எண்ணற்ற வித்தியாசமானவர்கள், இந்தச் சமுதாயத்தில் வாழ்ந்துதான் வருகிறார்கள். அத்தனை பேரும் டாக்டர்களை அணுகி முறையான பயிற்சிகள் மூலம் குணமாக்கப்படுகிறார்களாவென்றால் அதுதான் இல்லை. இத்தகைய விசித்திர குண மாறுதல்கள் ‘பேய் பிடித்தல்’- ‘பில்லி சூன்யம்’ என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு மந்திரவாதிகளையும், வேப்பிலை யடிப்பவர்களையும் சரணடையும் பாமரத்தனம் கிராமத்தில் மட்டுமல்ல, நகரத்தில் படித்தவர்க்கத்தினரிடமும் கூட மலிந்து கிடப்பதைக் காண்கிறோம்.
இத்தகைய ஓர் சூழ்நிலையில் ‘கனவு மனிதர்கள்’ படைப்பின் மூலம் திருமதி இந்துமதி அவர்கள் ஓர் சமுதாய விழிப்பை உண்டாக்கியிருக்கிறார் எனின் மிகையாகாது. இதுவும் மனித குலத்திற்குச் செய்யும் ஓர் அரும் தொண்டே.
- எம்.நடராஜன்
***
கனவு மனிதர்கள்
கனவு மனிதர்கள்- இது என்ன தலைப்பு...? மனிதர்கள் என்றால் கனவு காண மாட்டார்களா என்று நீங்கள் கேட்கலாம். அப்படி ஒரு சந்தேகம் ஏற்படுவதும் நியாயம்தான். மனிதர்கள் கனவு காண்பவர்கள்தான். அதிலும் நிறையப் பேர் பகற்கனவு காண்பவர்களே... ஆனால் சாதாரண மனிதர்களின் கனவுகளுக்கும் என்னுடைய இந்தக் கனவு மனிதர்களின் கனவுகளுக்கும் வித்தியாசம் உண்டு.
சாதாரண மனிதர்கள் தங்கள் கனவுகளிலிருந்து விழித்துக் கொள்வார்கள். கண்டது கனவுதான் என்பதை உணர்ந்து கொள்வார்கள். தாங்கள் கண்ட கனவு நிஜ வாழ்க்கையிலிருந்து வித்தியாசப்பட்டது என்பதைப் புரிந்து கொள்கிற பகுத்தறிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் என்னுடைய இந்தக் கனவு மனிதர்கள் இதைப் புரிந்து கொள்கிற சக்தியைத் தற்காலிகமாக இழந்தவர்கள். தாங்கள் காண்பது கனவுதான் என்பதை உணர முடியாதவர்கள். அதிலிருந்து விலகி மீண்டு வருகிற சக்தியற்றவர்களாக மாறினவர்கள்.
இவர்களின் பேச்சு, செயல், சிந்தனை எல்லாம் இவர்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமில்லாமல், மருத்துவ உலகத்தினருக்கும் ஒரு புதிராகத் தோன்றி விடுகிறது.
பெயரிடப்பட முடியாத- மருந்துகளுக்கு அடங்காத - அவர்களின் மனோ வியாதி மருத்துவ நிபுணர்களின் திறமைக்குச் சவாலாகவும் ஆகிறது. தங்களின் மாத்திரைகளும், ஊசிகளும், வலிமையற்றுப் போகிறபோது அவர்கள் இந்த மாதிரி நோயாளிகளை வெறும் மருந்துகளினால் மட்டும் குணப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டு மருந்தோ மாத்திரைகளோ இன்றி மனோதத்துவ முறையிலான சிகிச்சைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மனோ தத்துவ டாக்டர்கள் இந்த அபூர்வ நோயாளிகளை வெறும் மனோதத்துவம் மட்டுமின்றி மனோவசியம் - அதாவது ஹிப்னாடிஸம் என்ற முறையில் மிகச் சுலபமாகக் குணப்படுத்தி விடுகிறார்கள்.
ஹிப்னாடிஸம் என்ற வார்த்தையைக் கேட்ட உடனே உங்களுக்கு மாஜிக் நிபுணர்களின் ஞாபகம் வரலாம். மேடைகளில் அவர்கள் நடத்திக் காட்டின வசியக் காட்சிகள் கண்முன் தோன்றலாம். அதுவும், இதுவும் ஒன்றுதானா என்று கேட்டால் - கிட்டத்தட்ட ஒன்றுதான்.
ஆனால் மருத்துவ நிபுணர்களால் இந்த ஹிப்னாடிஸம் இன்னமும் தீவிரமாக, ஆழமாக, ஆப்ரேஷன் தியேட்டர்களில் நோயாளிகளின் உயிரோடு போராடுகிற அதே உணர்வுடன் கையாளப்படுகிறது. கடவுளைத் தீவிரமான பக்தன் ஒருவன் வழிபடுவது போல் அணுகப்படுகிறது. மாஜிக் நிபுணர்களால் இதுவே பொழுதுபோக்கு அம்சமாக்கப்படுகிறது. இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை.
இன்னும் ஒரு வார்த்தை: இந்தக் ‘கனவு மனிதர்களை’ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறபோது, ஆசிரியர் சங்கிலித் தொடர் கதைகள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் இவை வெறும் கதைகள் இல்லை. என் வீட்டு முன் அறையின் மேஜையடியில் உட்கார்ந்து கற்பனையாக எழுதப்பட்டவை இல்லை. எனக்குத் தெரிந்த மனோதத்துவ டாக்டர்களையெல்லாம் அணுகி அவர்களின் கேஸ் ஃபைல்களைப் புரட்டிப் பார்த்து வித்தியாசமான சில அபூர்வ நோயாளிகளை நேரில் சந்தித்து எழுதப்பட்டவை. இவர்கள் நிஜமானவர்கள். ரத்தமும், சதையுமானவர்கள். இந்த மண்ணில் நம்மோடு உலவுபவர்கள். நாம் சுவாசிக்கிற அதே காற்றைச் சுவாசிப்பவர்கள்.
ஆனால், சில சொந்தக் காரணங்களுக்காகத் தங்கள் பெயர், ஊர் முதலானவைகளை மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டதால் -
நான் இங்கே அவர்களின் பெயரை மாற்றி, ஊரை மாற்றிக் கற்பனையாக வேறு பெயர்கள் இட்டிருக்கிறேன்.
பெயர்களில் மட்டும்தான் கற்பனையே தவிர, வேறில்லை.
அன்புடன்,
இந்துமதி
***
நானும் ஒரு பெண்...?!
பெங்களூர் கண்ட்டோன்மெண்ட் கோடியில் உள்ளடங்கித் தனியாக இருந்தது அந்த பிரம்மாண்டமான பங்களா.
வழக்கமாக எல்லாக் கோடீஸ்வர பங்களாவிற்கும் இருக்கிற களை அதற்கும் இருந்தது. வாசல் கூர்க்கா, பெரிதான லான், நடுவில் விரிக்கப்பட்ட கலர் குடை, கீழே கூடை நாற்காலிகள், எதிரில் ஒரு சின்ன டீபாய். அதன் மீது வெளிநாட்டு விஸ்கி பாட்டில், கண்ணாடி டம்ளர்கள். ஐஸ் பெயில்.
வெள்ளை உடையணிந்த பேரர் மிக நேர்த்தியாக விஸ்கி கலந்து பணிவாய் எஜமானனிடம் நீட்ட, நாற்காலியில் உட்கார்ந்து பைப்பில் புகையாய் ஊதிக் கொண்டிருந்த ரெட்டி டம்ளரை எடுத்துக் கொண்டு பேரருக்கு நீ போகலாம் என்று சைகை காட்டினார். அவன் பங்களாவிற்குள் சென்று மறைகிறவரை காத்திருந்து பின் மனைவி மகாலஷ்மியின் பக்கம் திரும்பினார்.
ம்... இப்போ சொல்லு. என்ன கேட்டே...?
என்றார்.
ஒண்ணு மில்லீங்க. நம்ம ஷாலினி பற்றி அவங்க ஸ்கூலில் இருந்து கிளாஸ் டீச்சர் வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டுப் போறாங்க...
என்ன... ஷாலினி அவ வயசை ஒத்த எந்தப் பொண்ணு கூடவும் பழகமாட்டேங்குதாம். எப்பவும் வகுப்பில் கூடப் படிக்கிற பையன்கள் கிட்டேதான் சினேகமா இருக்குதாம். அவங்க கூடத்தான் விளையாடுதாம். அதுவும் என்ன விளையாட்டுன்னு நினைக்கிறீங்க...? பம்பரம் விடுதாம், கிரிக்கெட் ஆடுதாம்...
அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் ரெட்டி. கண்ணில் நீர்கட்டி ஓய அரை நிமிடமாயிற்று. பின் மனைவியை மென்மையாகப் பார்த்துச் சொன்னார்.
இவ்வளவுதானே..? நான் என்னவோன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். இதைப் போய் ஒரு பெரிய விஷயமா அவங்க வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காங்க. நீயும் முகத்தை வருத்தமா வச்சுக்கிட்டு என்கிட்டே வந்து சொல்லிக்கிட்டிருக்கே..!
அந்த அம்மாள் சிறிது தயங்கிப் பின் ஒரு தாய்க்கு உண்டான பொறுப்புடன் பேசினாள்.
"நிஜமாகவே ஒரு கவலையும், வருத்தமும் ஏற்படுதுங்க. மற்ற ஆறு பொண்ணுங்களுக்கும் நான் இப்படி எந்தக் கவலையும் படலை. இந்தக் கடைசிப் பொண்ணு ஷாலினியை நினைச்சால்தான் ஒரு பயம் வருது...
என்ன பயம்...?
ஏதோ இத்தனை நாள் பாண்ட்டும், ஷர்ட்டும் போட்டுக்கிட்டு, தலை முடியை க்ராப் வெட்டிக்கிட்டு, ஆம்பிளை மாதிரி சுற்றிக்கிட்டு இருந்தது சரிங்க. ஆனால் இனிமேல் அப்படி இருக்க முடியுங்களா...? வயசு பதினைந்தாகப் போறது… எந்த நிமிஷமும் வயசுக்கு வரலாம். அதுக்கப்புறமும் இப்படி பாண்ட்டும், ஷர்ட்டும் போட்டுக் கிட்டு ஆம்பிளை மாதிரி வளைய வந்துக் கிட்டிருக்க முடியுமா...?
ஏன் முடியாது...?
என்று சுள்ளென்று கோபப்பட்டார் அவர்.
இதப் பாரு. முதல் ஆறும் பொண்ணாகப் பிறந்து கடைசியில் இதுவாவது ஆம்பிளைப் பிள்ளையாகப் பிறக்காதான்னு நான் ஏங்கினேன். ஆனால் ஆண்டவன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னை ஏமாத்திட்டான். அதுக்காக நான் இடிஞ்சிபோயிடலை. நீ பொண்ணாகக் கொடுத்தாலும் நான் அதை ஆணாக வளர்த்துக் காட்டறேன்னு சவால் விட்டுத்தான் ஷாலினியைச் சின்ன வயசிலேருந்து ஆண்பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு வரேன். அதனால் நீ அதைப்பற்றிப் பெரிசா கவலைப்பட வேணாம். வயசுக்கு வந்தாக் கூட அவள் ஆம்பிளை மாதிரித்தான் இருப்பா... அப்படித்தான் நடப்பா... இதைப் போய் ஒரு பிரச்சினையாக நினைச்சு என்கிட்டேயும் சொல்ல வந்துட்டே....
அவர் மிகச் சுலபமாகச் சொல்லி முடித்து பேரரைக் கூப்பிட்டு இன்னொரு பெக் விஸ்கி கலந்து குடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த அம்மாளின் கவலை மறையவில்லை.
ஒரு வேளை ஷாலினி விஷயத்தில் தாங்கள் ஆரம்பத்திலிருந்தே தவறு பண்ணி விட்டோமோ என்ற உணர்வு மெலிசாகப் படர ஆரம்பித்தது. தங்களின் ஆண்பிள்ளை பிறக்காத குறையை அவள் மூலமாகத் தீர்த்துக் கொள்ள முயன்றது பெரிய குற்றமாகத் தோன்றியது.
ஷாலினி பிறந்து பத்தாம் நாள் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு வந்த உடனே ரெட்டி பெங்களூரின் ஒரு பெரிய ரெடிமேட் ஷாப்பிலிருந்து காரின் பின் ஸீட் நிறைய ஆண் குழந்தைக்கு அணிவிக்கிற ஷர்ட்டும், அரை நிக்கருமாக வாங்கி வந்து குவித்தார். அதைப் பார்த்த மகாலஷ்மியம்மாள் முதலில் அவர் தவறிப்போய் வாங்கி வந்து விட்டதாக நினைத்து.
என்னங்க இது, மொத்த டிரஸ்ஸும் ஆம்பிளைக் குழந்தைக்குப் போடறதா இருக்கு...? யாரோ வாங்கினதைத் தவறிப்போய் நம்ம கார்லே கொண்டாந்து வச்சிட்டாங்களா....?
என்று கேட்டாள்.
தவறலே லஷ்மி. நானாகத்தான் ஆம்பிளை டிரஸ்ஸாக வாங்கிட்டு வந்திருக்கேன். இதை நான் பொம்பளைக் குழந்தையா வளர்க்கப் போறதில்லை. ஆண் பையன் மாதிரியே வளர்க்கப் போறேன்.
'மாதிரித்தானே...? அப்படி வளர்க்கிறதால் மட்டும் ஆண்பிள்ளைன்னு ஆயிடுமா..?' என்று கேட்க நினைத்து அந்த அம்மாள் பேசாமல் இருந்தாள். பாவம். அவருடைய ஆசை, ஏக்கம் எதையும் தன்னால்தான் நிறைவேற்ற முடியவில்லை. இப்படியாவது அவர் நிறைவேற்றி அதன் மூலம் கொஞ்சம் மனசு நிம்மதிப் படட்டுமே என்று பேசாமல் இருந்தாள்.
ஆனால் அவள் நினைத்த மாதிரி சின்ன வயதோடு அந்த ஆசை நின்று விடவில்லை. பத்து வயதான பின்பும் அவளை அவர் ஆண் பிள்ளையாகவே தோற்றமளிக்கச் செய்தார். தான் முடி வெட்டிக் கொள்கிற இடத்தில் தன்னோடு கூட்டிப் போய் அவளுக்கும் முடி வெட்டினார். தான் துணி எடுக்கிற இடத்தில் அவளுக்கும் அதே மாதிரி பாண்ட், ஷர்ட்டுகளும், டீ ஷர்ட்டுகளும் வாங்கினார். மற்ற எல்லாப் பெண் குழந்தைகளையும் சேர்த்த மாதிரி அவளைப் பெண்கள் கான்வெண்டில் சேர்க்காமல் ஆண்களும் சேர்ந்து படிக்கும் கோ- எஜுகேஷன் கான்வெண்டில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
உருவம் மட்டுமின்றி நடை, பாவனை, குணம் எல்லாவற்றிலும் அவள் ஒரு ஆணாகவே இருக்க வேண்டுமென்றும் விரும்பினார்.
அவள் எப்போதாவது தவறிப் போய்த் தன் மூத்த சகோதரிகளுடன் பாண்டி, தாயம் என்று விளையாட நேர்ந்து. அதை அவர் பார்க்கவும் நேர்ந்துவிட்டால் அவர் முகம் கடுகடுப்பாக மாறிப் போகும். குரல் இறுகும்.
'ஷாலின். இங்கே வாடா..." என்று ஒரு அதட்டல் பிறக்கும்.
அந்த அதட்டலுக்குப் பயந்து ஷாலினி தன் கையில் இருக்கும் பாண்டிச் சில்லையோ, தாயக்கட்டையையோ தூக்கிப் போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக அப்பாவிடம் ஓடி வருவாள்.
பயப்படுகிற குரலில், கூப்பிட்டிங்களாப்பா...?
என்று கேட்பாள்.
ஆமாம், அங்கே என்னடா பண்ணிக்கிட்டிருந்தே...?
விளையாடிக்கிட்டிருந்தேன்.
யார் கூட..?
மீனா, சுதா, ஜெயா இவங்க கூடப்பா...
என்ன விளையாட்டு....?
அவள் உடனே பதில் சொல்லாமல், சற்றுத் தயங்கி, 'பாண்டிப்பா..." என்று இழுப்பதற்குள், அவர் -
சீ...! இதென்ன பொம்பளைங்க விளையாட்டு....? இதையெல்லாம் நீ விளையாடலாமாடா ஷாலின்? அதுவும் அவங்க கூடவா...? நோ, நோ, ஐ காண்ட் அலவ் திஸ் மை பாய். அதெல்லாம் அவங்க விளையாடட்டும். நீ விளையாட வேண்டாம். நீ கிரிக்கெட், டென்னிஸ், ஃபுட்பால், இப்படி விளையாடணும். இன்னும் கேட்கப்போனால் கில்லி, பம்பரம் விளையாடறதைக் கூட என்னால் அனுமதிக்க முடியும். பட், நாட் தீஸ் விமனிஷ் கேம்ஸ். நீ ஒரு ஆம்பிளைடா ஷாலின். யு ஆர் நாட் எ கேர்ள். அதனால் ஆம்பிளை மாதிரி இப்போதிலிருந்தே ஃபீல் பண்ண ஆரம்பிக்கணும்... என்ன...? நான் சொல்றது புரியுதா...? இனிமேல் இந்த விளையாட்டெல்லாம் விளையாட மாட்டியே...?
- அவர் பேச்சைக் கேட்ட பின்பு அவள் தான் ஏதோ செய்யத். தகாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்ட உணர்வுடன் தலையைக் குனிந்து கொண்டு,
ஐயம் ஸாரி டாட். இனிமேல், இப்படி விளையாடமாட்டேன்...
என்று பதில் சொல்வாள்.
அந்தப் பதிலில் ஏற்பட்ட பெருமையுடன் அவர் எழுந்து அவள் முதுகில் மிகச் செல்லமாகத் தட்டி -
அது மட்டுமில்லேடா... இனிமேல் உன்னுடைய அக்காமார் படைகள் கூடக் கூடச் சேராதே. அதுங்க உன்னையும் தன் நிறமாக மாற்றிடும். அதனால் நீ அவங்க கூடப் பழகாமல் சற்றுத் தள்ளியே இரு.... என்ன...?
சரி டாட்...
உனக்கு கம்பெனி இல்லையேன்னு கவலைப்படாதே.. இப்பவே கிளம்பு. எப்படிப்பட்ட கிளப்ல உன்னைச் சேர்த்து விடறேன் பாரு...
அதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது.
ஓ.கே. அப்பா, நான் இப்பவே ரெடி....
என்றாள்.
இரண்டு பேரும் மகாலஷ்மி அம்மாளிடம் கூடச் சொல்லாமல் அவரின் வெள்ளை டொயட்டோவில் ஏறிக் கிளம்பினார்கள்.
அது ஆண், பெண் இரண்டு பேருக்கும் பொதுவான கிளப். ஆனாலும் அங்கே பெரும்பாலும் ஆண் அங்கத்தினர்களே மிகுந்திருந்தனர். பெண்கள் என்று பெயருக்கு ஒருவர்கூட இல்லாதிருந்ததற்குக் காரணம் கிளப்பின் கோடியில் ஒரு பெரிய பார்.
கிளப்பில் டென்னிஸ், கிரிக்கெட், சீட்டு என்று விளையாடவும், உடற் பயிற்சி செய்யவும் வருபவர்கள் எல்லாம் முடிந்து கடைசியில் பாரில் உட்கார்ந்து அரட்டை அடித்து, 'ஏ' ஜோக்ஸ் சொல்லி மூன்று நான்கு பெக் விஸ்கி குடிக்காமற் போவதில்லை. அப்படிக் குடித்து விட்டு யாரோ ஒருவன் அங்கே டென்னிஸ் விளையாட வந்த ஒரு பெண் அங்கத்தினரின் கையைப் பிடித்து இழுத்து ஏதோ செய்துவிட்டதாகப் பரவலாகப் பரவின ஒரு செய்தியும் அந்தக் கிளப் பக்கம் எந்தப் பெண்ணும் காலடி எடுத்து வைக்காததற்கு இன்னொரு காரணம்.
அப்படிப்பட்ட கிளப்பில்தான் ரெட்டி தன் மகளை அங்கத்தினராக்கினார். அவளை அவர் பெண் என்று வலுக்கட்டாயமாகவும், விடாப்பிடியாகவும் நினைக்க மறுத்தது மட்டுமின்றி, அவளை அவளே ஒரு பெண் என்று நினைத்து விடக் கூடாது; அந்த உணர்வே அவளுக்குள் எழக்கூடாது என்றும் ரகசியமாக அவர் மனத்தினுள் ஒரு எண்ணம் இருந்தது.
அதேபோல் ஷாலினியும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பெண் என்ற எண்ணத்தை மறந்து கொண்டே வந்தாள். ஒரு பெண்ணுக்கு உரித்தான சில மென்மைக் குணங்கள் அவளை விட்டு விலக