Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Chellamey!
Chinna Chellamey!
Chinna Chellamey!
Ebook108 pages1 hour

Chinna Chellamey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இத்தொகுப்பில் உள்ள சின்ன சின்ன கதைகள் சுவாரசியமானவை. ஆனால் வெறுமே பொழுதுபோக்குவதற்காக அல்ல. வாழ்க்கையை விதவிதமான கோணங்களில் நமக்கு காட்டுபவை. நம் வாழ்க்கையை கோணலாகி போகாதபடி நேர்வழியில் நடத்தக் கூடியவை. புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல் அற்ற அறை போன்றது, கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே. இப்புத்தகத்தில் கதை ஒவ்வொன்றும், உங்களுக்குள் பொது காற்றை அனுமதிக்கும் ஜன்னல். பொய் புரட்டு என்ற கபட புளுக்கங்களை விரட்டி, உங்கள் மனதை அமைதினாலும் அன்பினாலும் நிரப்பும். இனிய நாட்களுக்கான பிரார்த்தனைகளுடன் காஞ்சனா ஜெயதிலகர்.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580109908240
Chinna Chellamey!

Read more from Kanchana Jeyathilagar

Related to Chinna Chellamey!

Related ebooks

Reviews for Chinna Chellamey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Chellamey! - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சின்னச் செல்லமே!

    (சிறுகதைகள்)

    Chinna Chellamey!

    (Sirukathaigal)

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சஞ்சல சமயங்களில்…!

    2. பாவத்திற்கான பாதைகள்

    3. பயமில்லாத பயணம்

    4. அன்பிற்கு நன்றி!

    5. ஆவியோடும் உண்மையோடும்

    6. சார்பும் சாயலும்…!

    7. சமாளிக்கக் கூடிய சுமைகள்

    8. மன்னிப்பின் சுகம்

    9. திரு நாமம்

    10. கவலைமட்டத்திற்கு மேலே

    11. பயம் தரும் பயன்!

    12. முதல் தேடல்!

    13. செக்கின் சுழற்சி

    14. கருணாமூர்த்தி

    15. பட்டம் போல பறந்து…

    16. சூழ்நிலைகள்

    17. அன்றன்றைக்கான பெலன்!

    18. முயற்சியின் திருவினை

    19. சகல நாட்களிலும்…

    20. சின்ன செல்லமே…

    21. இருளில் சிறு தீபம்…

    22. சாலுவின் பங்கு…

    23. தப்பில் இருந்து தப்ப

    24. புதிய பாதையில் இனிய பயணம்!

    25. பயத்தை வெல்லும் பெலன்

    26. கருணையோடு சில கிரியைகள்

    1

    சஞ்சல சமயங்களில்…!

    ‘விஜி’

    அது மெல்லிய, முணங்கலான அழைப்புதான்… ஆனால் விஜீலாவின் காதில் அது பேரிரைச்சலான சுனாமி போலக் கேட்டது.

    அரைகுறை உறக்கத்தில் இருந்தவளை உலுக்கி எழுப்பியது!

    ‘இதோ…’ என்றபடி மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருந்த கணவனின் அருகே போனாள்.

    அவர் கண்கள் மூடியிருந்தன… சுவாசம் சீராயிருந்தது.

    தூக்கத்தில்தான் தன் பெயரைச் சொன்னார் போலும்…

    வலிய இருதய தாக்குதலில் மூன்று நாட்கள் I.C.U.வில் இருந்தவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று இங்கே மாற்றியிருந்தார்கள்.

    இது சிற்றூரிலுள்ள சாதாரண மருத்துவமனை.

    ஆக பெரிய வசதிகளோ 24 மணிநேரமும் சுற்றி வரும் சிப்பந்திகளோ கிடையாது.

    விஜீலா பெட் - பேன் வைக்க, அவருக்கு மருந்து தர, ஒரே நாளில் பழகிக் கொண்டாள்.

    ஏதும் அவசரமெனில் உடனே உதவி கிடைக்கும்… ஆனால் அதற்கு அவசியம் இராதது போல… மருந்தின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் சந்திரன்.

    ஆனால் அவர் உள்ளம் அமைதியாய் இருக்குமா? இடைவிடாத வேலைகளில் அமிழ்ந்தவருக்கு இந்த நான்கு நாள் கட்டாய ஓய்வு வெறுப்பாய்தான் இருக்கும்.

    அவர் சற்று தவிப்பில் இருந்தது போலிருந்தது அல்லது வலிக்கிறதா?

    அதென்ன ‘அன்ஜைனா?’ அந்த மருத்துவ பதம் இவளுக்குப் புரியவில்லை… பரிதவிப்புடன் தன்னவரின் நெற்றியை நீவி விட்டாள்.

    அது நான்கு கட்டில்களுள்ள சிறு அறை.

    இரண்டு நோயாளிகளோடு அவர்களுக்கு உதவியாய் வந்த இருவர் உடன் தங்கிக்கொள்ளக் கூடிய அமைப்பு.

    மறுநோயாளியின் மனைவி எழுந்து வந்து விஜீலாவின் தோளை ஆறுதலாய் தட்டினாள்.

    ‘ஒன்றும் பயமில்லைங்க. படுங்க. இப்படி விழித்திருந்தால், நாளை அசந்து போவீங்க. டாக்டர் ரவுன்ட்ஸ் வரும்போது, பேஷன்ட்டின் நிலைமை பற்றிகூட தெளிவாய் சொல்ல முடியாமல் போய்விடும்.’

    முன்பின் அறியாத பெண்ணின் அண்மை, அன்பு அந்நேரம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது.

    ‘சரிங்க… இவர் ரொம்ப பிஸியானவர். இப்படி படுத்துக் கிடந்தே பார்த்ததில்ல…’ சொன்னவளின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது.

    ‘ஆக இந்த ரெஸ்ட் அவருக்கு அவசிய தேவை! போதிய ஓய்வு, முறையான பயிற்சி இல்லாமல்தானே நாம் பல பிரச்சனைகளை வரவழைச்சுக்கறோம்?’

    ‘ல்ல…. மறுபடி அட்டாக் வந்துட்டால்?’

    ‘அப்படிப்பட்ட சஞ்சலமெல்லாம் வேண்டாங்க விஜி… உங்க கணவர் உங்களை அப்படித்தானே அழைத்தார்?’

    இருவரும் மிக மெள்ள சம்பாஷித்தத்திற்கு ஒப்ப, மிருதுவான முறுவலித்தார் அந்தப் பெண்.

    ‘உங்க பெயர்?’

    ‘பியூலா - நானும் இவருக்கு அல்சர் முற்றி, சிகிச்சைக்காய் வந்தபோது இப்படி கலங்கிட்டேன். அந்நேரம் நம்மை எடுத்து நிறுத்துவது நம் வேதந்தானே - எத்தனை ஆறுதலான வசனங்கள்…’

    ‘ம்ம்…’ அரை மனதாய் தலையாட்டினாள் விஜீலா.

    ‘சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது. உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்’

    (சங்கீதம் 119:28)

    இந்த சங்கீத வசனத்தை வாசித்த நான், கடவுளின் வார்த்தைகளை பற்றினேன்… இவருக்கும் தைரியம் சொல்ல முடிந்தது… சோர்ந்து தெரியறீங்களே? பசிக்குதா

    ப்யூலா கேட்கவும்தான் மற்றவள் தன் பசி உணர்ந்தாள்.

    வாங்க - தாழ்வாரத்தின் மறுபக்கம் சின்ன கிச்சன் உண்டு. அங்கே பால், ரொட்டி, காஃபி தூள், அடுப்பு எல்லாமுண்டு. சாப்பிட்டு படுத்தால் தூங்கிடுவீங்க.

    போய், சாப்பிட்டு, பேசி வந்த விஜீலாவிற்கு தெளிவு வந்திருந்தது - தூக்கம் கூட முரண்டு பண்ணாமல் அவளைச் சேர்ந்தது!

    மறுநாள் காலை மறுபடி தனக்காய் காபி கலந்தவள், ப்யூலாவிற்கும் ஒரு கோப்பை எடுத்து வந்தாள்.

    ரொம்ப தாங்க்ஸ் ப்யூலா - கடவுளை அண்டியதும் என் கலக்கம் போயிடுச்சு. இது நம்ப விசுவாசத்தை மெருகேற்றும் ஒரு அனுபவம்-னு கூட தோணுது.

    உண்மைதான் - அடடே இந்தப் பூவெல்லாம் எங்கே பறிச்சீங்க? வாசமாய் கூட இருக்குது?

    காட்டுப் பூக்கள்தான். இந்த கண்ணாடி டம்ளரில் நீரோடு வைத்தால், நம் எல்லாருக்கும் பார்க்க உற்சாகம் தருமேன்னு…

    சொன்னபடி அவற்றை குவளையில்

    Enjoying the preview?
    Page 1 of 1