Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pallaviye Saranam!
Pallaviye Saranam!
Pallaviye Saranam!
Ebook121 pages1 hour

Pallaviye Saranam!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580109901442
Pallaviye Saranam!

Read more from Kanchana Jeyathilagar

Related to Pallaviye Saranam!

Related ebooks

Reviews for Pallaviye Saranam!

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pallaviye Saranam! - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    பல்லவியே சரணம்!

    Pallaviye Saranam!

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jayathilakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    பல்லவியே சரணம்!

    1

    செல்லமாய் உருண்டு விளையாடும் குழந்தைகளைப் போலவே அலைகளும் ஆர்ப்பாட்டம் செய்தன. எம்பி குதித்து, தழைந்து, புரண்டு... சீறி... பின் சிணுங்கலாய் கரையை நெருங்கின. அவை பாதம் தொட்ட போது மழலையின் முத்தம் பெற்ற சிலிர்ப்பை உணர்ந்தாள்.

    சுண்டல் சாப்பிட்டாயிற்று. கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர்ல் தாகம் தணித்தாயிற்று. ஆனால் மனக்குழப்பங்கள் தீரவில்லை.

    ஒரு மாற்றம் வேண்டியே இங்கு வந்தது.

    சதா புத்தியைக் குடையும் அவனது நினைவுகளை ஒதுக்கவே இக்கடற்கரை விஜயம்.

    ஆனால் இங்கு தனிமை மேலும் அழுத்தியது. அவனைப் பற்றிய சர்க்கரை நினைவுகள் மனதைக் கெட்டித்து இறுக்கின.

    உஷ். கையை எடுங்க. நாம புருஷன் பெண்டாட்டி. இங்க வந்துதான் இழையணுமா?

    என்னடா இது? கல்யாணத்துக்கு முன்னே கடற்கரை வந்தபோதும் 'கையக் காலைச் சுருட்டி உக்காருன்னு' மிரட்டினே. இப்ப தாலி ஏறின பிறகும் அதட்டறே?

    அததுக்குன்னு இடங்கள் இருக்குதுய்யா.

    கடற்கரையே காதல் புரியத்தான்.

    ஓஹோ?

    குளிக்கலாம்... என்ன கொஞ்சம் அரிப்பெடுக்கும். கொஞ்சம் தள்ளி நடந்தாத் தெரியும்- இதுவே கழிப்பிடமும்னு!

    நாலு பேர் உட்கார்ந்து பேசற கூடம்... நானுறு பேர் கூடற அரங்கம்... எல்லாமும்தான்.

    ஆங்... புரிஞ்சுதா? இப்போ கிட்ட வா.

    கன்னத்தில் அம்முரட்டு மீசையின் குறுகுறுப்பு... கழுத்தில் அழுந்திய புருஷனது வெப்ப உதடுகளை... இப்போதும் உணர முடிகின்றது. எழுந்து கொண்டாள்.

    மணலைத் தட்டிவிட்டபடி நடந்தாள். மணல் முற்று மாய் போகவில்லை. நெருடியது. அவனைப் போலவே... விலகிய பிறகும் விடாத நினைவு!

    அவளது வீடு தாம்பரம் போகும் வழியில். அவளது வீட்டின் முன் அறையிலேயே அவள் நடத்தும் அழகு நிலையம். ஆக அதிகம் வெளியே போய் வரும் வாய்ப் பில்லை.

    எதிர் வீட்டு சரவணன், மின் கட்டணம் கட்ட, வங்கிக்குப் போக என்று வெகு உபகாரம்.

    ஆனால் வீடு தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய. சதா இவள் யாருக்கேனும் முடி வெட்டிக் கொண்டோ, புருவம் திருத்தியோ, சருமத்தை வெளுப்பாக்கியபடியோ தான்... ஆனால் சதா மன ஓரத்தில் அவன்.

    சரி... வெளியே போனால் மாறுதல் என்றால், எங்கும் அவனே நிறைந்த பிரமை...

    இதோ இப்படி பஸ்ஸில் போகும் போதும்கூட...

    நெருங்கி, பேருந்தின் சிறு குலுங்கல்களுக்கும் பாவனையாய் தடுமாறி இருவரும் இடித்துக் கொண்டது... தள்ளி நிற்கையிலும் பார்வையால் மற்றவரை விழுங்கியது... வாய் ஓயாமல் பேசியது... மவுனமாய் மணிக்கணக்கில் பயணித்தது என்று எத்தனை ஞாபகங்கள்!

    அத்தனைப் பெண் தலைகளும் வலப்புறமாய் திரும்ப, இவளும் வெளியே பார்வை ஒட்டினாள்.

    விஸ்தீரணமான சேலைக் கடை!

    இதே 'தில்லையாடி வள்ளியம்மை'யில் தான் அவர் களது முதல் கல்யாண நாளிற்கான சேலையைத் தேர்ந்து எடுத்தார்கள். வெள்ளி கலந்த சாம்பல் வர்ணப் பட்டு. இருபுறமும் இரத்த வர்ண சிகப்பில் தங்க மாங்காய்கள்.

    பிடிச்சிருக்கா?

    ம்ம்... உங்களுக்கு?

    சாம்பலும் மாங்காயும் இனி தின்ன வேண்டியது தான்னு சொல்றாப்போல இல்லை? அதனால பிடிச்சிருக்கு.

    ஐயே...

    நல்ல வேளை வயிற்றில் தரிப்பதற்கு முன்பே அவனது சுயரூபம் அம்பலமானது. இல்லையென்றால் இவள மருகுவது போலவே இன்னுமொரு குட்டி ஜீவனும் ஏங்கிக் கிடந்திருக்கும்.

    பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனக்கும், அழகு நிலையத்திற்கும் தேவையானவற்றை வாங்கினாள். எப்போதாவது இப்படி வர நேர்வதோடு சரி.

    வீட்டின் ஓர் அறையிலேயே அழகு நிலையம் வைத் திருப்பதினால் அலுவலகத்திற்கு ஓடும் அவதி, பேருந்தின் நெரிசல் சங்கடம், கைகட்டி பிறரிடம் ஏவல் செய்யும் சிரமம் எதுவுமில்லை. ஆனால் நினைவுகளின் பிடியிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை.

    இத்தனை இடங்களுக்கும் அவனோடு வந்திருக்கிறாள். ரசித்திருக்கிறாள். இதோ இந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு வாரம் ஒரு முறையேனும் ஜோடியாய் அவர்கள் வருவது உண்டு. அவன் புதிது புதிதாய் ருசி பார்ப்பான். இவளுக்கு 'வெனிலா' தான் எப்போதும்.

    'முப்பத்திரண்டு தினுசு வைச்சிருக்கான் - உனக்கு வாரா வாரம் 'வெனிலா' சாப்பிடறது அலுக்கலை?"

    எனக்கு ஒண்ணு பிடிச்சு, பழகினா கடைசி வரை அதுதான்.

    நிம்மதி. போ கண் சிமிட்டுவான்.

    ஐஸ்கிரீமிலே மட்டுந்தான் சொன்னேன்- இவளும் அலட்டுவாள்!

    மதியச் சாப்பாடு சரவணபவனில். இரவுக்கு சாம்பார் சாதம் பார்சல் கட்டி எடுத்துக் கொண்டாள்- இன்று சமைப்பதாயில்லை.

    ஆனால் சாம்பார் சாதம் சாப்பிடும்போது ஒவ்வொரு கவளத்திலும் அவன் நினைப்பு வரும் - சாம்பார் சாதம் என்றால் ருசித்து உண்பான்.

    'நெய்யும் முந்திரியுமாய் என்னா ருசி...' என்று...

    தடுக்கக்கூடாத அலைகள் போல ஓயாமல் அவன் நினைப்பு...

    ஒட்டல் வாசலில் மூங்கில் கூடையில் தினுசு தினுசாய் மலர்கள். ஒற்றை ரோஜாக்கள், செண்பகம், மல்லிகை, பிச்சிச் சரங்கள். வாசமில்லாத கனகாம்பரம்.

    அவனுக்கு 'சரஸ்வதி பிச்சி' மிகப் பிரியம்.

    பவி, செவ்வரி ஓடிய உன் கண்களை ஒத்திருக்கின்றன அல்லவா இவை? என்று நாடக வசனத்துடன் கூந்தலில் சூடி விடுவான்.

    ஆனால் இப்போது அவள் பூச்சூடிக் கொள்வதில்லை. மலரின் மணம் தனிமைத் தகிப்பை மேலும் கிளறி விடுகின்றது.

    அவர்களது சில மாத காதல், ஒன்றரை வருடக் குடித்தனம் எல்லாம் சென்னையில்தான் என்பதால் பல நினைவுகள். ஆனால் இவ்விடத்தை விட்டு ஒடவும் முடியாது - பட்டிணம்தானே படியளக்கிறது?

    இவளது அழகு நிலையம் இப்போது பிரசித்தம். கணிசமாய் சேமிக்கும் அளவில் வருமானம்.

    சிறு வயதிலேயே பல்லவிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1