Thamizhthenee Short Story Collection - Part 3
()
About this ebook
Read more from Thamizhthenee
Thanga Thamarai Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVadathirumullaivayil Kodiyidai Nayagi Alayam Rating: 0 out of 5 stars0 ratingsVetri Chakram Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thamizhthenee Short Story Collection - Part 3
Related ebooks
Endru Puthithai Pirappome... Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Oru Nerunji Mul Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKadhambam Rating: 0 out of 5 stars0 ratingsUyirena Nee Vanthai! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsMargazhi Maatha Nila! Rating: 4 out of 5 stars4/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Devi Sridevi Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Arul Anandham Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsKathir Kathai Kadhambam Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 5 out of 5 stars5/5Kalaikka Mudiyatha Veshangal Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pournami Rating: 0 out of 5 stars0 ratingsUyirottam Rating: 0 out of 5 stars0 ratingsAdai Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Iru Kannilum Un Gnabhagam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thamizhthenee Short Story Collection - Part 3
0 ratings0 reviews
Book preview
Thamizhthenee Short Story Collection - Part 3 - Thamizhthenee
http://www.pustaka.co.in
தமிழ்த்தேனீ சிறுகதை தொகுப்பு – பாகம் 3
Thamizhthenee Short Story Collection - Part 3
Author:
தமிழ்த்தேனீ
Thamizhthenee
For more books
http://www.pustaka.co.in/home/author/thamizhthenee
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
35. மாயா
36. தப்புத் தாளங்கள்
37. மானச யாத்திரை
38. ரத்த அழுத்தம்
39. புதிய கீதை
40. பால பாடம்
41. கா(ஞ்)சித்துண்டு
42. ஊமைக் கனவு
43. கோயில்
44. சொந்தரத்தம்
45. காதலர்கள் தப்பி ஓட்டம்
46. சம்பந்தி
47. அஸ்தி (ர) வாரம்
48. ஆசை மச்சான்
49. காதல் என்றால்?
50. சொர்கம்
51. ரகசியம்
52. கேள்வி ஞானம்
35. மாயா
ஆயிற்று அறுபது வருட காலமாக வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வாழ்ந்தாயிற்று. சொர்க்கம், நரகம் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று. இனி என்ன? இந்த ஒரு கேள்வி அவர் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டியது வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் முடிவு என்ன? எதற்காக வாழ்கிறோம். இந்த உலகின் மாயங்களிலிருந்து, வழக்கமான நடைமுறைகளிலிருந்து எப்போது எப்படி விடுபடுவது? மூச்சு முட்டியது.
முடிவே தெரியாமல் வாழ்வது கொடுமை! சலிப்பு தட்டிவிட்டது வாழ்க்கை! நினைத்தவுடன் ஏறிப் போக ஏணியா இருக்கிறது இல்லையே! ஏணி கிடைத்தாலும் எங்கே போவது என்னும் இலக்கு தெரியாத வாழ்க்கை. தினமும் காலையில் எழுந்து இயற்கை உபாதைகளைக் கழித்து, குளித்து இறை வணக்கம் செய்து, உணவு உண்டு, மற்ற பொழுதுகளை வாழ்க்கையின் அன்றாடப் பொய்களிலும் உண்மைகளிலும் பெருமைகளிலும்பாராட்டுகளிலும் பொறாமைகளிலும் பயத்திலும் கவலைகளிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும் கழித்து, இரவு படுத்து உறங்கி மீண்டும் காலையில் எழுந்து……………!
ஹூம்! இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து எப்போது விடுபடுவது? அப்படி விடுபட்டால் அப்போது கிடைக்கும் சக்கரம் எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கும்? அந்தச் சக்கரமும் இதே போன்று சுழல்தானா? விடுபட முடியுமா? முடியாதா? இதென்ன பள்ளிப் பாடம் போன்றதா என்ன? அந்தந்த வகுப்புப் பாடத்தை முறையாகப் படித்து அடுத்த வகுப்புக்குச் செல்வது போல்? எப்போது விடுதலை? விடுதலை நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? கேள்விகள், கேள்விகள்………… முடிவில்லாத கேள்விகள். விடையறியாத கேள்விகள்?
வெளியே தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்ளேயே எப்போது சுயத்தை அடைவோம், சுயம் என்பது என்ன? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு, எதற்காக ஏங்குகிறோம் என்பதே தெரியாமல், எதை அடையக் காத்திருக்கிறோம் என்றே தெரியாமல் செயற்கையாக வாழ்ந்துகொண்டு பயந்து கொண்டிருக்கிறோம்.
அவர் பார்வை அவரையறியாமல் குழந்தையிடம் சென்றது. குழந்தை பொம்மையால் தானே தன் தலையில் இடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. அவருக்குத் தோன்றியது நாமும் இதே நிலையில்தான் இருக்கிறோம். வாழ்க்கை என்னும் விளையாட்டில் எதன் மேலாவது அவ்வப்போது இடித்து மோதிவிட்டு அது இடித்துவிட்டது என்று அதன்மேல் பழியைப் போட்டு, அழுதுகொண்டு, யாராவது வந்து சமாதானம் சொல்வார்களென்னும் எதிர்பார்ப்பில் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
குழந்தை அழும் குரல் கேட்டு நினைவிலிருந்து மீண்டார் ராமசேஷன். குழந்தையைத் தூக்கி, வேண்டாண்டா கண்ணு. அழாதே. பொம்மை இடிச்சுடுத்தா? இப்போ தாத்தா அந்த பொம்மையை அடிக்கிறேன் பாரு
என்று சொல்லி, அந்தப் பொம்மையை அடிப்பது போல் பாவனை காட்டினார். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு சற்றே சமாதானமாகி கண்களில் நீருடன் சிரித்தது. அச்சு
என்று சொல்லி அதுவும் அந்தப் பொம்மையைத் தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்துவிட்டு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சிரித்தது..
மீண்டும் அதே பொம்மையை எடுத்து விளையாட ஆரம்பித்தது குழந்தை. வேண்டாம் மறுபடியும் இடிச்சுக்குவே. அதை வெச்சிரு
என்று அதனிடமிருந்து வாங்கி வைத்தார். அந்தப் பொம்மைதான் வேண்டும் என்று அழ ஆரம்பித்தது குழந்தை. அதன் பிடிவாதம் தாங்காமல் மீண்டும் அந்தப் பொம்மையை அதனிடமே கொடுத்தார். மீண்டும் அந்தப் பொம்மையுடன் விளையாட ஆரம்பித்தது குழந்தை. மீண்டும் கணினியிடம் வந்து உட்கார்ந்தார் ராமசேஷன்.
தொலைபேசி அழைத்தது. மறுமுனையில் அவருடைய தர்மபத்தினி, ஏங்க குழந்தை அழாமே இருக்கானா? அப்பிடி அழுதா போன் பண்ணுங்க. உடனே வந்துடறோம். குழந்தைக்குச் சரியா பத்து மணிக்குப் பசிக்கும். மேஜை மேலே பால் வெச்சிருக்கேன், அழுதா குடுத்திருங்க
என்றாள்.
சரிம்மா, நான் பாத்துக்கறேன்
என்று சொல்லிவிட்டுத் தொடர்பை அறுத்தார்.
பால் பாட்டிலை எடுத்து, குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பித்தார். ஜிர் ஜிர்ரென்று உறிஞ்சிவிட்டு, பாதி பால் இருக்கும் போதே உறங்க ஆரம்பித்தது குழந்தை. சற்றே பாட்டிலை அசைத்ததும் மீண்டும் அரைத் தூக்கத்திலேயே உறிஞ்சியது. மொத்தப் பாலையும் குடித்ததும் குழந்தையைக் கீழே விட்டார். தலையணையைப் பக்கவாட்டில் அணைத்து வைத்துவிட்டு, சத்தம் போடாமல் தள்ளி வந்து நாற்காலியில் உட்கார்ந்து குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தார்.