Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thamizhthenee Short Story Collection - Part 2
Thamizhthenee Short Story Collection - Part 2
Thamizhthenee Short Story Collection - Part 2
Ebook86 pages33 minutes

Thamizhthenee Short Story Collection - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமி புனைப் பெயர் : தமிழ்த்தேனீ (Thamizhthenee) பிறந்த வருடம் 01/07/ 1947, இவர் தமிழ்த்தேனீ என்ற பெயரில் இவரது படைப்புகளை உருவாக்கி வருகிறார். இவர் ஒரு நாடக நடிகர், திரைப்பட நடிகர், தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர். இணையதள எழுத்தாளர், இவருடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறவர். மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம் என்பதையும் வலியுறுத்துகிறவர்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580122202483
Thamizhthenee Short Story Collection - Part 2

Read more from Thamizhthenee

Related to Thamizhthenee Short Story Collection - Part 2

Related ebooks

Reviews for Thamizhthenee Short Story Collection - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thamizhthenee Short Story Collection - Part 2 - Thamizhthenee

    http://www.pustaka.co.in

    தமிழ்த்தேனீ சிறுகதை தொகுப்பு – பாகம் 2

    Thamizhthenee Short Story Collection - Part 2

    Author:

    தமிழ்த்தேனீ

    Thamizhthenee

    For more books

    http://www.pustaka.co.in/home/author/thamizhthenee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    18. மயக்கம்

    19. ரிஷி மூலம்

    20. பேரின்பம்

    21. தகுதி

    22. நசுங்கல்

    23. நரி வேட்டை

    24. 'ஆபரேஷன் சக்ஸஸ்'

    25. மனோதத்துவம்

    26. பணம்

    27. B+ பீ பாசிட்டிவ்

    28. அடகு

    29. அதிர்ச்சி

    30. முகமூடிகள்

    31. நெற்றிக்கண்

    32. சக்கரம் சிறுகதை

    33. பூடகம்

    34. மனிதம்

    18. மயக்கம்

    உனக்கு எவ்ளோ தைரியமும் ரௌவுடித்தனமும் இருந்தா, வயசுக்கு வந்த என் பொண்ணு ரம்யாவை ஒரு ஹோட்டல் அறையிலே ராப்பூராத் தங்க வெச்சிருப்பே. உன்னை மாதிரி அயோக்கியனை நான் பாத்ததே இல்லே. உன்னை நம்பி என் வீட்டுலே குடித்தனம் வெச்சது என் தப்பு. இந்த விஷயம் வெளிலே தெரிஞ்சா எவ்வளவு அவமானம். இனிமே இவளை வேற யாரு கட்டிக்குவான்? என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே. ஏதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வெளியூர்லே இருக்காங்கன்னு சொன்னதாலே நல்ல குடும்பத்துப் பையன்னு நெனைச்சு உனக்கு வீட்டை வாடகைக்கு விட்டேன் பாரு, என் புத்திய செறுப்பாலே அடிக்கணும்" என்று கத்தினார் விஸ்வநாதன்.

    அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ. என்னடா முறைக்கிறே? என்றபடி ஆங்காரமாய் ஒரு அறை அறைந்தார் விஸ்வநாதன். இதற்காகவே காத்திருந்தாற் போல அந்த வீட்டிலிருந்த எல்லோருமே மனோவுக்குத் தர்ம அடி கொடுத்தனர். மனோ அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு, ரம்யாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

    இன்னும் என்னடா, அவளை முறைக்கறே? அதான் குடி கெடுத்துட்டியே அழுதாள் ரம்யாவின் அம்மா காமாக்‌ஷி.

    ஆளாளுக்கு அவனைச் சொல்லத் தகாத வார்த்தைகளால் குதறி எடுத்தனர். ரம்யா அழுதாள். நான் உன்னை நம்பி மோசம் போய்ட்டேனே, படுபாவி. என் வாழ்க்கையைச் சீரழிச்சிட்டியே என்றாள்.

    மனோ முதன் முறையாக வாய்திறந்து, ரம்யா இப்போ சொன்ன அதே வார்த்தையை இன்னொரு தடவை சொல்லு என்றான்.

    எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன் என்றாள் ரம்யா, ஆங்காரத்துடன்.

    "சொல்லுவே சொல்லுவே. இப்போ என்ன வேணும்னாலும் சொல்லுவே. முதல் தடவை நீயா வந்து என்னைக் காதலிக்கறதா சொன்னியே, அப்போ நான் என்ன சொன்னேன் நினைவிருக்கா?

    "வேணாம் ரம்யா, நீ ஏதோ இன்பேச்சுவேஷன்லே அவசர முடிவு எடுக்கறே. உங்க அப்பாவும் அம்மாவும் உன்னைத் திட்றாங்கன்னா அது உன்னோட நல்லதுக்குதான். அவங்களுக்கு இல்லாத அக்கறை வேற வெளி மனுஷனுக்கு இருக்கவே முடியாது. அதுனாலே இனிமே காதல் கத்திரிக்காய் அது இதுன்னு உளறாமே காலேஜ் படிப்பை முடிக்கற வழியைப் பாருன்னு சொன்னேனே கேட்டியா?

    சரி அதுக்கு அப்புறமும் நீ இத்தனை நாளா உன்னைப் பெத்து வளத்த உங்க அப்பா, அம்மா மேலே கூட நம்பிக்கை இல்லாமே, என்னோட சுயரூபம் என்னா? நான் யாரு? எங்க குடும்பப் பின்னணி என்னான்னு கூடத் தெரியாம, நான் நல்லவனா, கெட்டவனான்னு கூடத் தெரியாம, முன்னே பின்னே யோசிக்காம என்னை நம்பி ஹோட்டலுக்கு வந்து தங்கினியே. அன்னிக்கு தெரியலையா என்னை மாதிரி ஆளுங்களை நம்பக் கூடாதுன்னு?

    நீ குடுத்த தைரியத்திலே தானே உன்னை ஹோட்டலுக்கு நான் அழைச்சிட்டுப் போனேன். நானா உன்னை வலுக்கட்டாயமா ஹோட்டலுக்குக் கூட்டிண்டு போனேன். உன் மனசுலேயும் சபலம் இருக்கவேதானே நீயும் வந்தே? ஏதோ நான் உன்னைக் கெடுத்துட்டா மாதிரி பேசறையே, இப்போ நான் சொல்றேன். நீதான், உன்னை மாதிரிப் பொண்ணுங்கதான், என்னை மாதிரிப் பசங்களுக்குத் தைரியம் கொடுத்து, எங்களையும் கெடுத்து, நீங்களும் கெட்டுப் போறீங்க. அப்புறம் எல்லாப் பழியையும் எங்க மேலே போட்ற வேண்டியது. பெரியவங்க சொல்வாங்க 'ஊசி இடம் கொடுக்காமே நூல் நுழையமுடியாதுன்னு'. இப்போ என்னை மட்டும் குத்தம் சொல்றே? என்றான்.

    "காமாக்‌ஷி அம்மா, உங்க புருஷன் வெளியூருக்கு ஏதோ ஒரு வேலையாப் போனாரு சரி. அன்னிக்கு உங்க பொண்ணு காலேஜ்லே ஒரு டூர் போகப் போறோம். அதுனாலே இன்னிக்குப் போய்ட்டு நாளைக்கு வந்திருவோம்னு சொன்னாளே. உங்க புருஷன்கிட்ட சொன்னீங்களா? சரி காலேஜ்லேயாவது விசாரிச்சீங்களா? அது சரி, இந்தக் காலத்துப் பசங்க, அவங்களை நிறையப் பணத்தைக்

    Enjoying the preview?
    Page 1 of 1