Thanga Thamarai - Part 1
()
About this ebook
Read more from Thamizhthenee
Thanga Thamarai Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVadathirumullaivayil Kodiyidai Nayagi Alayam Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsVetri Chakram Rating: 0 out of 5 stars0 ratingsThamizhthenee Short Story Collection - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thanga Thamarai - Part 1
Related ebooks
Vetri Chakram Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsநாம் எதை நோக்கி ஓடுகிறோம்? Rating: 0 out of 5 stars0 ratingsEthanai Ethanai Manangal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Achyutham, Anantham, Govindham, Aanandham! Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Rasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Siragai Viri, Para! Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsKolai Thodarbukku Appal… Rating: 4 out of 5 stars4/5Thamizhthenee Short Story Collection - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyin Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsUn Kangalil En Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsErvadi S. Radhakrishnanin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsInippin Vetri Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Senganthal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thanga Thamarai - Part 1
0 ratings0 reviews
Book preview
Thanga Thamarai - Part 1 - Thamizhthenee
http://www.pustaka.co.in
தங்கத் தாமரை - பாகம் 1
Thanga Thamarai - Part 1
Author:
தமிழ்த்தேனீ
Thamizhthenee
For more books
http://www.pustaka.co.in/home/author/thamizhthenee
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
கூவமும் கங்கைதான்
காதலுக்கு ஜே
கனவு மெய்ப்பட வேண்டும்
அப்போ நான் வர்ர்ட்டா
ஈரத்துணி
ஒரு வினாடி உயிர்
கருவறை
கனவுச் சாவி
ஈரத்துணி
பெரிய மனுஷி-
கருவறை
ஆழ்மீகம்
கரிசனம்
நீதிதேவதை
ரசிகன்
விலங்கு
அம்பாரி
ஆட்ரா ராசா
கங்கா ஸ்னானம்
தங்க விமானம்
ரிஷி கர்பம்
பலா மரம்
ஆத்ம விசாரம்
முன்னுரை
அன்புள்ள வாசகர்களே "வெற்றி பெறுவது என்பது பிறரைத் தோற்கடித்தல்" என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நம்மைச் சுற்றி வாழுகின்ற மனிதர்களின் மனதை நம் நல்ல நடத்தைகளால் வசப்படுத்தினாலே அது வெற்றி. நம்மைச் சுற்றி வாழும் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பும் கருணையும் கொண்டு அனைத்தையும் அன்பால் நம் வசப்படுத்தினால் அதுதான் உண்மையான வெற்றி.
மற்றவர்களை வெற்றி கொள்ளுதல் இருக்கட்டும். முதலில் நம்மை நாமே வெற்றி கொள்ளப் பழக வேண்டும். நம் மனதை அடக்கி நம் வசத்துக்கு கொண்டுவந்து கட்டுப்படுத்தி வெற்றி கண்டால் அது மிகப் பெரிய வெற்றி. இப்படி அவரவர் மனதை வெற்றி கண்டவரை ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், என்றெல்லாம் நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆகவே நம்மை நாமே வெற்றி கொள்ள அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து பாடம் கற்று அந்தப் பாடங்களின் மூலமாக வரும் அனுபவ அறிவை உபயோகித்து நம் வாழ்க்கையை செம்மையாக ஆக்கிக்கொண்டால் அது வெற்றி. நாமும் முன்னேறி நம் மக்களையும் முன்னேற வைத்து நம் நாட்டையும் முன்னேற்றினால் அது மாபெரும் வெற்றி.
பொருளாதாரக் கொள்கையை மனதில் கொண்டு இன்று உலகம் இருக்கும் இருப்பைப் பார்த்தால் எங்கே தங்கம் அதிகமாக சேமித்து வைக்கப் படுகிறதோ அந்த நாட்டை வல்லரசு நாடு என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொள்கின்றன. உலகம் முழுவதிலும் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் உலோகம் தங்கம் ஆகும்.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை உயர்கிறது. அந்த விலை உயர்வை வைத்துத்தான் வியாபாரச் சந்தையின் மதிப்பே உயர்கிறது, அல்லது தாழ்கிறது. பங்கு வர்த்தகத்தில் மிக முக்கியமான இடத்தை தங்கத்தின் விலை உயர்வு அல்லது வீழ்ச்சிதான் நிர்ணயிக்கிறது. இந்தத் தங்கம் எனும் உலோகம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாமா! பூமிக்கு அடியிலே பலகாலமாக அழுந்திக் கிடந்து இயற்கையான ரசாயன மாற்றங்களால் தனக்குத்தானே உருவாகி துகள்களாகப் பரிமளித்து பின் ஒன்றாக இணைந்து தங்கப் படிமங்களாக இறுகி உள்ளது அப்படி இறுகியிருக்கும் தங்கப் பாறைகள் இருக்கும் இடத்தை ஆராய்ந்து கண்டு பிடித்து. தோண்டி எடுத்து பலவிதமான செயற்கை ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தி முடிவில் தங்கமாக ஆக்கப் படுகிறது.
அது போலத்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும் அனுபவங்கள், அனுபவத்தின் விளைவுகள் மனதின் அடியாழத்திலே சேர்ந்து மனித உணர்வுகளின் ரசாயன மாற்றத்தால் கருவாகி உருவாகி தங்கம் போன்று திரண்டு அனுபவப் பாடத்தின் விளைவுப் படிமங்களாகப் படிந்து இருக்கிறது. இப்படி ஆழ்மனதிலே இருக்கும் அனுபவப் படிமங்களை, அனுபவத் தங்கத்தைக் கண்டுபிடிக்க, தம்மை உணரும் ஆழ்மன சக்தியில் ஆழ்ந்து ஆராய்ந்து உள்ளுக்குள்ளே உட்ப்ரயாணம் செய்து அதை தோண்டி எடுத்து உணர்வெனும் பலவிதமான மனரசாயனத்துக்கு உட்படுத்தி அதன் விளைவாகக் கிடைத்த தங்கக் கனியை பெரியவர்கள் நமக்கு அனுபவப் பாடமாக அளிக்கின்றனர்.
நல்லதையே சிந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் அபூர்வமான நல்ல யோசனைகளை, நல்ல உபாயத்தை அமுதத்தின் சிறு துளிபோல் அளிக்கிறான் இறைவன். சிறு துளி பெருவெள்ளம்
என்று பெரியோர்கள் சொன்னவிதமாக அந்தச் சிறு துளியை முறையாகப் பயன்படுத்தி வாழ்விலே ஒரு பெரிய வெற்றியையையும், மிக உயர்வான உன்னதமான இடத்தையும், உயர்வான மரியாதையையும், நன் மதிப்பையும் பெற்று, மக்கள் மனதிலிருந்து நீங்காத இடத்தைப் பெற்று மக்கள் மனதிலே சிரஞ்சீவியாய் வாழ்கிறார்கள்.
அப்படி ஒரு மாயத்தை செய்யவல்ல அந்தச் சிறு துளி அளிக்கும் யுக்திகள் அன்றாடம் நம் வாழ்விலே நாம் அடையும் அனுபவப் பாடங்களின் வாயிலாகக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிக் கிடைக்கும் அனுபவத்தின் சாரமே வெற்றி என்னும் தாரக மந்திரம். யாரோ ஒரு தேவனோ, அல்லது தேவதையோ வந்து நம்மை முன்னுக்குக் கொண்டு வருவார்கள் என்று நினைத்து காலத்தை வெட்டியாக கழிக்காமல் அந்த அனுபவமென்னும் வெற்றி மந்திரத்தை மதித்து அதன் வழியே நம்மை நாமே வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டியது நமக்கு உள்ள கடமை. நம்மையே நம்பி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து முறையான பாதையை வகுத்துக்கொண்டு அயராமல் அதற்காக தினமும் உழைத்து வெற்றிக் கனியை நாமேதான் பறிக்க வேண்டும். முழுமனதுடன் நாமே பாடுபட்டு அதனால் கிடைக்கும் வெற்றிக் கனி இருக்கிறதே அது மற்ற எல்லாக் கனிகளையும் விட மிக இனிமையான மன நிறைவைத் தரும் கனியாக அமையும்.
சிற்பக் கலை பற்றி அறிந்தோர் ஒரு கல்லிலே வேண்டாத பாகங்களைக் களைந்துவிட்டாலே சிற்பம் உருவாகிவிடும் என்று கூறுவர். ஆனால். நமக்கு வேண்டிய சிற்பம் எது என்பதை தெளிவாக, தீர்மானமாக உருவாக்கிக் கொண்டு திட்டமிட வேண்டும். அதன் பின்னர்தான் வேண்டாத பாகங்களைக் களையவேண்டும். அது போல நம்மிடம் உள்ள வேண்டாத குணங்களைக் களைந்து முழு மனிதனாக நம்மை நாமே ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் உணர்ந்தாலும் உணராமல் போனாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளுமே நமக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தை அளித்துவிட்டே நகர்கிறது. நாம் நம் வாழ்க்கையை செப்பனிட எப்போதாவது யோசிக்கிறோமா? அப்படி யோசித்தால் நமக்கு முன்னே வாழ்ந்து வாழ்வில் உயர்ந்தவர்களின் அனுபவத்தை அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனுபவப்பட்ட பெரியோர்களின் அறிவுரைகள் உலகிலேயே உயர்ந்த தங்கம் போன்றதே.
தங்கம் உருவானால் போதுமா! அந்தத் தங்கத்தை வடிவமைக்க பக்குவமான மாற்றங்கள் செய்ய நெருப்பிலே காய்ச்சி உருக்கி அதிலிருக்கும் அழுக்குகளைக் களைந்த பிறகுதானே அதைப் புடம் போட்ட பொன்னாக மாற்றி அதிலே சிறிது தாமிரத்தை கலந்துதானே நகையோ அல்லது தங்கத் தாமரை யோ செய்ய முடியும், அதுபோலத்தான் இறைவனும் நம்மைப் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி, அனுபவ அறிவென்னும் தாமிரத்தைக் கலந்து புடம்போட்ட பொன்னாக மாற்றி நம்மையும் தங்கத் தாமரை யாக மாற்றுகிறான்.
அவ்விதமாகவே எனக்கேற்பட்ட பல சோதனைகளைத் தாங்கி அதன் மூலமாக அனுபவங்களை அடைந்து அதன் பின்னர்தான் இந்தத் தங்கத் தாமரை யை உருவாக்கினேன். இந்தத் தங்கத் தாமரை யை உருவாக்க நான் எத்தனை விதமான அனுபவங்களைப் பெற்றேன். அதன் மூலமாக பல நல்ல பாடங்களைக் கற்றேன். அப்படி எனக்குக் கிடைத்த பாடங்களின் சாரத்தை முப்பத்தி ஐந்து இதழ்கள் கொன்ட ஒரு தங்கத் தாமரையாக உருவாக்கினேன். ஒவ்வொரு இதழிலும் ஒரு கதை என்று முப்பத்தி ஐந்து கதைகளை முப்பத்தி ஐந்து இதழ்களாக இந்தத் தங்கத் தாமரை நூலில் வெளியிடுகிறேன்.
இந்தத் தங்கத் தாமரை
நூலைத் தாங்கிப் பிடிக்கும் தடாகமாக உங்கள் ஆதரவுக் கரம் விளங்கும் என்னும் நம்பிக்கையோடு என் அனுபவத்தின் வெளிப்பாடான இந்தத் தங்கத் தாமரை
நூலை என் அன்பு வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகவே உங்கள் கைகளில் தவழவிடுகிறேன். தாங்கிப் பிடியுங்கள் உங்கள் கைகளிலே. தங்கத் தாமரை மலர்ந்து நல் மணம் பரப்பட்டும்.
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்கிற தமிழ்த்தேனீ
***
கூவமும் கங்கைதான்
சாணக்கியரின் வாக்கு:
நேர்மையான, அறிவாளியான மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும், மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை, ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகளை ஏற்படாவண்ணம் தடுத்து வருவாயைப் பெருக்க வேண்டும்
-சாணக்கியர்
ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி 'ஒரு வார்த்தையின் கனம்.'
ஒரு அன்பின் அருமை 'ஒரு பாசத்தின் பெருமை' ஒரு தியாகத்தின் விலை
ஒரு மண்ணின் பெருமை 'ஒரு தேசத்தின் உயர்வு' ஒரு குடும்பத்தின்
பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல்
கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன்–
ஐயா நான் உள்ளே வரலாங்களா என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த கிருஷ்ணன் வாப்பா தாராளமா வரலாம் என்றார்
தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு கொண்டு என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார் என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை
சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், நல்லா இருப்பா என்று அவனை வாழ்த்திவிட்டு, எழுந்திருப்பா என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.
சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.
நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம்.அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது கிருஷ்ணனுக்கு.
வாப்பா இங்கே உக்காரு என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன், இல்லே சார் பரவாயில்லை நான் நிக்கறேன் என்றான் அவன், அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு என்றார் கிருஷ்ணன், தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.
அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க