Achyutham, Anantham, Govindham, Aanandham!
By Sairenu
()
About this ebook
சாய்ரேணு
தமிழ்பிறந்த பொதிகையின் மடியில் தவழும் தென்காசி இவர் ஊர். இவர் குடும்பமோ தமிழும் வடமொழியும் இருகண்களாய், ஆன்மீகமே உயிராய்க் கொண்டது. இளைய வயதிலேயே தமிழில் ஈடுபாடு வந்தது. மாதவன் கருணையால் மன்னுபுகழ் மஹாபாரதம் ஏழுவயதிலிருந்து தோன்றாத் துணையானது. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார். அவை பல பத்திரிகைகளில் வந்துள்ளன.
பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உபநிடதம், புராணம், இதிகாசங்கள், திருமுறை, திவ்வியப் பிரபந்தம், திருத்தலப் பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகம்.
க்ரைம் நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். இவரின் ஆதரிச எழுத்தாளர்கள் – திரு ரா கணபதி, திரு கல்கி, திரு ராஜேஷ்குமார். ஹாரி பாட்டரின் ரசிகையான இவர் குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதைகளும் எழுதுகிறார். எந்தத் துறையில் எழுதினாலும் தர்மம், இறைநம்பிக்கை ஆகிய இரண்டும் குறையாது இருக்கவேண்டும் என்பது இவர் கொள்கை.
தற்போது தன் தாய், கணவர், மகளுடன் திருநெல்வேலியில் வசிக்கிறார்.
Read more from Sairenu
Thiruppavai Rating: 0 out of 5 stars0 ratingsVaaranam Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsAnjuthal Anjamai Rating: 0 out of 5 stars0 ratingsVanavilil Illatha Niram Rating: 0 out of 5 stars0 ratingsAjaatha Shathru Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsSadhi Valaiyam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Achyutham, Anantham, Govindham, Aanandham!
Related ebooks
Meendu Vaaraa Vazhi... Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsAdvaitha Gnana Deepam Rating: 0 out of 5 stars0 ratingsGeethodhayam Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Vivekanandar 100 Rating: 0 out of 5 stars0 ratingsVetri Chakram Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsAthvaitha Sara Vilakkamum Aadhi Sankarar Noolgalum! Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Thirumuraigal Rating: 0 out of 5 stars0 ratingsAnma Kadandhu Sellum Padhai Rating: 0 out of 5 stars0 ratingsSri Ramana Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsRamanarin Geethasaram Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan (Yogi Ramsuratkumar) Rating: 0 out of 5 stars0 ratingsBagavath Geethai - Eliya Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Saritham Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsAadhi Sankararin Aanma Bodham Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Leelai Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsAgathiyar Andhathi Rating: 0 out of 5 stars0 ratingsVadathirumullaivayil Kodiyidai Nayagi Alayam Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural – Vol 3 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Achyutham, Anantham, Govindham, Aanandham!
0 ratings0 reviews
Book preview
Achyutham, Anantham, Govindham, Aanandham! - Sairenu
http://www.pustaka.co.in
அச்யுதம், அனந்தம், கோவிந்தம், ஆனந்தம்!
Achyutham Anantham Govindham Aanandham
Author:
சாய்ரேணு
Sairenu
For more books
http://www.pustaka.co.in/home/author/sairenu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
குருவந்தனம்
1.அறிமுகம்
2.ஆனந்தம்!
3.நாம ஜபம்
4.நாராயணனே, நமக்கே!
5.முகுந்த நாமா - முத்துக்கள் மூன்று!
6.பலவழி, ஒரு ஹரி!
7.அச்யுத:
8.அனந்த:
9.கோவிந்த:
10.சிந்தையின் கேள்விகள்; சிந்தனையின் பதில்கள்
11.அனைவரும் செய்வோம் ஆசமனம்!
12.நஞ்சும் அமுதாதல் கண்டீரே!
13.நாமத்ரய மகத்துவம்; நாகசாயி அற்புதம்!
14.விதியை மாற்றிய விமலன்!
15.நாமத்ரய சக்தி; நவின்றவள் சக்தி!
16.பூரணம்!
குருவந்தனம்
ஸதாசிவ ஸமாரம்பாம், சங்கராச்சார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம், வந்தே குரு பரம்பராம் ||
சத்யப் பேரொளியாம் ஸதாசிவனில் துவங்கி, நடுவில் மணியாய்ப் பிரகாசிக்கும் ஸ்ரீ ஆதி சங்கரரைக் கொண்டு, கருணாமூர்த்தியாம் எங்கள் ஆச்சார்யன் வரை ஞான ரச்மி பாய்ச்சும் குருபரம்பரையை வந்தனம் செய்கிறேன்.
ஞான பாஸ்கரனாகவும் கருணைக் கங்கையாகவும் ஒருங்கே விளங்கும் சிருங்கேரி ஜகத்குரு மஹாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிகளைத் தண்டனிடுகிறேன்.
அந்தச் சூரிய ஒளியே நிலவின் குளுமையாய்த் திகழும் சிருங்கேரி ஜகத்குரு சன்னிதானம் ஸ்ரீ விது சேகர பாரதி ஸ்வாமிகளின் பாதரவிந்தங்களுக்கு வந்தனைகள் பல.
நான் கண்ணால் கண்டிராத என் மானசீகக் குருக்கள் மூவர்.
வானையொத்த ஞானத்தாலும், பூமியை ஒத்த பொறுமையாலும், கடலினை ஒத்த அன்பினாலும், கடவுளிடம் கொண்ட நட்பினாலும், தன் தர்மம் தவறா வாழ்வினாலும் என்னைக் கவர்ந்தவன் மாபாரதத்தின் யுதிஷ்டிர மகராஜன். தர்மமே வாழ்வு, தர்மமே ஆனந்தம், தர்மமே ஸ்ரீ கிருஷ்ணன் எனச் சாதித்தத் தர்மராஜனைத் தலையால் வணங்குகிறேன்.
தன் உபன்னியாசத்தால் எங்கள் பக்தியிலும் தர்ம நெறியிலும் வாழ்விலும் கூட மாற்றத்தையும் ஏற்றத்தையும் அருளிய அம்ருதவாக்வர்ஷி, உபன்னியாசச் சக்கரவர்த்தி, பாரத சிம்ஹம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களுக்கு நன்றியால் நிறைந்த நெஞ்சோடும் பனித்த கண்களோடும் நமஸ்காரம் செய்கிறேன்.
எட்டும் இரண்டும் அறியாத என்னுள் இறைசிந்தனையை விதைத்தவர் தெய்வீக எழுத்தாளர் திரு ரா கணபதி அவர்கள். என் எண்ணத்தைச் செதுக்கிய அந்தச் செம்மைசால் சொற்சித்தருக்கு என் வந்தனங்கள்.
மருள் நீக்கி அருள் சேர்க்கும் குருமகான்கள் சரணத்திற்குக் கோடி கோடி நமஸ்காரம்.
நமோ தர்மாய மஹதே
நம: கிருஷ்ணாய வேதஸே |
ப்ராஹ்மணேப்யோ நமஸ்க்ருத்ய
தர்மான் வக்ஷ்யாமி சாச்வதான் ||
1.அறிமுகம்
ஞானமெனும் கடல்மூழ்கி நாமமெனும் முத்தெடுத்து நாமெல்லாம் உய்வடைய நல்கினார் நல்முனியோர்.
அதில் மும்மைவினை தீர மூன்று மணிகளே போதும், அதனை எப்போதும் கண்டத்தில் அணிந்து, கண்டங்களிலிருந்து தப்பலாம், இன்பங்கள் அடையலாம், பெருஞானம் பெறலாம், முக்தியென்பதாம் முழுமையும் உறலாம் எனப் புகலுகின்றன புராணங்கள்.
நாமமோ சிறிது, அதன் உள்ளுறையும் பொருள் பெரிது. இதனை விளக்கும் ஞானம் நமக்கேது என்ற பயத்துடனே எழுத ஆரம்பிக்கிறேன்.
முன்னிற்கும் மூத்த தெய்வம் அவன். என்னவரைக் காக்கும் குலமுதல்வன் அவன். பன்னித் தர்மத்திற்காய் பாரதம் பயில வந்தால், அதைப் பாருக்கு அருளிய பரம தயாளு அவன்.
ஆனைமுகனைத் துதிக்கிறேன். ஆனைபலம் வருகிறது.
அறிந்தது ஆன்றோர் அருள்.
புரிந்தது புண்ணியத்தின் அளவு.
எண்ணங்கள் கண்ணனின் செயல்.
எழுதுவது தர்மத்தின் தூண்டல்.
பழுதுநீக்கிக் குணம்கொளல்
படிக்கும் உங்கள் கருணை.
வாழ்த்துவது ஆனைமுகம்
வாக்குத் தருவது வீணைமுகம்
ஞானமளிக்கும் பரிமுகம்
காத்து நிற்பது அரிமுகம். - தர்ம
வளம் வேத நூன்முகம்
வாசல் மட்டும் என்முகம்!
எழுத முயல்வது நெறிமுகம்
இதற்குமேல் என்ன அறிமுகம்?
அண்டமாகும் ஆத்மனாகும் பரம்பொருளுக்கு வந்தனைகள். இதோ உங்கள் பார்வைக்கு என் சிந்தனைகள்!
2.ஆனந்தம்!
ஒரு நிமிடம் நில்லுங்கள்!
எதைத் துரத்திக் கொண்டு ஓடுகிறோம் நாம்? ஓட ஓட ஓரடி முன்னால் ஓடும் நிழலைப் போல எந்த வஸ்து பாய்ச்சல் காட்டுகிறது?
ஆனந்தம்
என்பது தான் அத்தனை பேரின் பதிலும். அது சுலபத்தில் கிடைத்துவிடுகிறதா என்ன? செல்வம் தரும் சிறப்பு இது என்று நினைக்கிறோம். செல்வம் கிடைத்துவிடுகிற்து, ஆனந்தம் கிடைப்பதில்லை. கிடைத்துவிட்டதாக நம்மை ஏமாற்றிக் கொள்வதோடு சரி!