Advaitha Gnana Deepam
By S. Raman
()
About this ebook
Read more from S. Raman
Annamalaiyar Alitha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsPirappum Sirappum Irappum Rating: 0 out of 5 stars0 ratingsRig Veda Karuthukkal Rating: 0 out of 5 stars0 ratingsAadhi Sankararin Aanma Bodham Rating: 0 out of 5 stars0 ratingsHinduthvathin Adipadaigal Rating: 0 out of 5 stars0 ratingsSmile Please Rating: 0 out of 5 stars0 ratingsThirukkural Saaram Rating: 0 out of 5 stars0 ratingsChithirai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kadithaigal Rating: 0 out of 5 stars0 ratingsAkhanda Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsRaman: Oru Maaberum Manitha Kula Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsRamanarin Sivanandalahari Saaram Rating: 0 out of 5 stars0 ratingsSwami Vivekanandar – 150: En Pangalippu Rating: 0 out of 5 stars0 ratingsMinnuvathellam Vairamalla! Rating: 0 out of 5 stars0 ratingsRamanarin Geethasaram Rating: 0 out of 5 stars0 ratingsSrimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani Rating: 0 out of 5 stars0 ratingsVisithira Paarvaigal Rating: 0 out of 5 stars0 ratingsAriyum Arive Arivu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Advaitha Gnana Deepam
Related ebooks
Manithanukkulley Athisaya Sakthikal Rating: 0 out of 5 stars0 ratingsAnma Kadandhu Sellum Padhai Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsAchyutham, Anantham, Govindham, Aanandham! Rating: 0 out of 5 stars0 ratingsManam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsQuiz Wenba Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsPraise Be To God Rating: 0 out of 5 stars0 ratingsDhyanam Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Ulla Manathai Adaiyungal Rating: 0 out of 5 stars0 ratingsOsho Vizhippunarvu Kathaigal Rating: 5 out of 5 stars5/5Swamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsManitha Nilaikku Appal Oru Payanam Rating: 5 out of 5 stars5/5Bhagavad Gita for Dummies in Tamil Rating: 3 out of 5 stars3/5Unakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Bhagavan (Yogi Ramsuratkumar) Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural Part - 5 Rating: 0 out of 5 stars0 ratingsPunitham Arulum Puttabarthi Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsAgathiyar Andhathi Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsஅறியாமை: Awareness Program, #1 Rating: 0 out of 5 stars0 ratingsAthvaitha Sara Vilakkamum Aadhi Sankarar Noolgalum! Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsSwami Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsKaana Mudiyathathil Unarapadubavare Kadavul! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Advaitha Gnana Deepam
0 ratings0 reviews
Book preview
Advaitha Gnana Deepam - S. Raman
https://www.pustaka.co.in
அத்வைத ஞான தீபம்
Advaitha Gnana Deepam
Author:
எஸ். ராமன்
S. Raman
For more books
https://www.pustaka.co.in/home/author/s-raman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அறிமுகம்
1. அத்யாரோபம்: ஒன்று வேறொன்றாகக் காணப்படுவது
2. அபவாதம்: வேறாகக் காணப்படும் காட்சியை நீக்குவது
3. சாதனை: அபவாதக் காட்சிகளை நீக்குவதற்கான வழிகள்
4. ச்ரவணம்: ஆன்மாவைப் பற்றிக் கேட்டறிவது
5. மனனம்: கற்றறிந்ததை மனத்தால் தொடர்ந்து எண்ணுவது
6. வாசனாக்க்ஷயம்: வாசனைகளை (கற்பிதங்களை) நீக்குவது
7. சாக்ஷாத்காரம்: ஆன்மாவை அனுபவித்து உணர்வது
பிற்சேர்க்கை - 1
பிற்சேர்க்கை – 2
அத்வைத ஞான தீபம்
கரபாத்ர ஸ்வாமிகள்
ஆங்கில மூலம்:
ஸ்ரீ அத்வைத போத தீபிகா
முனகால வேங்கடராமையா
(ஸ்ரீ ரமணானந்த ஸரஸ்வதி)
தமிழாக்கம்: எஸ். ராமன்
முன்னுரை
ஆதி சங்கரரும் மற்ற மாபெரும் ஞானிகளும் வேதாந்த சூத்திரங்களுக்கு விரிவான விளக்கவுரைகளை வெகு காலம் முன்பாகவே எழுதி, ஆன்ம விசாரம் செய்யும் வழிகளை நன்கு காட்டிச் சென்றிருக்கின்றனர். அவ்வாறான உரைகளில் காணப்பட்ட மிக முக்கியமான கருத்துக்களைத் தொகுத்து, அவைகளை சம்ஸ்க்ருத சுலோகங்களாக எழுதி, அதனை ஸ்ரீ அத்வைத போத தீபிகா
என்ற தலைப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்டதொரு நூலாக ஸ்ரீ கரபாத்ர சுவாமிகள் படைத்துள்ளார். (காசியில் வசித்த அவர் தனது கரத்தையே பாத்திரமாகக்கொண்டு உணவு உட்கொண்டு வாழ்ந்ததால் அவருக்கு இந்தக் காரணப் பெயர் அமைந்தது.)
அந்த சம்ஸ்க்ருதப் படைப்பைப் பின்னர் யாரோ ஒரு மகான், வெகு காலம் முன்பாக உரைநடைத் தமிழில் மொழி பெயர்த்து, பன்னிரண்டு அத்தியாயங்களாக அருளியிருக்கிறார். (அந்தப் பதிப்பு தற்போது கிடைக்கவில்லை.) அந்தப் பதிப்பில் இருந்தவைகளில் தற்போது நம்மிடம் எஞ்சியிருப்பது எட்டு அத்தியாயங்கள் மட்டுமே. அவையாவன:
அத்யாரோபம்: ஒன்று வேறொன்றாகக் காணப்படுவது
அபவாதம்: வேறாகக் காணப்படும் காட்சியை நீக்குவது
சாதனை வழிகள்: அவ்வாறு நீக்குவதற்கான வழிகள்
ச்ரவணம்: ஆன்மாவைப் பற்றிக் கேட்டு அறிவது
மனனம்: அவ்வாறு கற்று அறிந்ததை மனத்தால் தொடர்ந்து எண்ணுவது
வாசனாக்ஷயம்: ஏற்கனவே குடிகொண்டுள்ள வாசனைகளை (கற்பிதங்களை) நீக்குவது
சாக்ஷாத்காரம்: ஆன்மாவை நேரடியாக அனுபவித்து உணர்வது
மனோநாசம்: மனத்தை அழிப்பது
அத்வைத ஸ்வரூபமான ஆத்மாவின் உண்மையான தன்மையை எவ்வாறு அஞ்ஞானம் மறைக்கிறது என்று இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நாம் இங்கு சுருக்கமாகக் கூறப்போவதை இறுதியில் விளக்கமாக அறிய முடியும். அஞ்ஞானமானது ஆத்மாவை அதற்கு இருப்பில்லை
மற்றும் அது வெளிப்படுவதில்லை
என்னும் தனது இரண்டு மறைக்கும் தன்மைகளால் மூடுகிறது. மேலும் தனது மற்றொரு தன்மையினால், மனமெனும் உருவில் ஜீவன்கள், ஈஸ்வரன், மற்றும் உலகத்தைத் தோற்றுவித்து, அவற்றை உண்மைபோலக் காட்டி ஒரு பிரமையை உண்டு பண்ணுகிறது.
பூரணத் தகுதி பெற்றவரே இந்த ஞானத்தைப் பெறவல்லவர் என்பதால் வெறும் சாஸ்திர அறிவு மட்டுமே பெற்றவர்கள் அதை உணர இயலாது. ஆன்ம விசாரமே ஞானத்திற்கு முதன்மையான சாதனம். விசாரம் என்பது என்றும் நிலைத்து இருக்கும் தனது இருப்பைப் பற்றி முதலில் கேட்டறிந்து, அதனைத் தீவிரமாக எண்ணிப் பார்த்து, அதனால் உள்ளபடி இருக்கும் உண்மையையும், அதை உணர்வதால் வரும் சமாதி நிலையையும் உள்வாங்கி அசைபோட்டு அறிவது என்பதாகும். சாதாரணமாக நாம் பெறும் கேள்வி ஞானத்தை, அது சரி இல்லை
என்று பின்னர் பலர் சொல்லக் கேட்டு அறிவதால் நாம் அதை நீக்குவோம். அதேபோல, ஆத்ம ஞானம் பற்றி நாம் கேட்டதைப் பலமுறை நாம் எண்ணிப் பார்த்து, அதன் பலனாக நான் யார்?
என்று நம்முள் கேட்டு நாம் செய்யும் ஞான விசாரத்தால் நாம் அடையும் அனுபவ ஞானமே அது வெளிப்படுவதில்லை
என்ற தவறான கருத்தை நீக்குகிறது.
நீ அதுவாக இருக்கிறாய்
என்ற வேத மஹா வாக்கியத்தில் உள்ள அந்த நீ
என்பதும் என்றும், எங்கும், எப்போதும் உள்ள அது
என்பதும் ஒன்றே. அந்த அறிவைப் பெறுவதற்கான ஆன்மிகப் பாதையில் முன்னேற விடாது தடைகளாக நிற்கும் நமது முந்தைய அனுபவங்கள் மூலம், நம்முள் ஊறியிருக்கும் வாசனைகள் எனும் கற்பிதங்கள் அனைத்துமே ஆன்ம விசாரமாகிய தியானத்தால் அகலுகின்றன. அதன் விளைவால் நம்மை ஒரு ஜீவனாகக் குறுக்கிக் கட்டிப்போடப்பட்டிருந்த மனம் என்று இடையில் முளைத்த உபாதியும் அத்துடன் மறைவதால், எங்கும் எப்போதும் உள்ள ஆன்மா எனும் பிரம்மத்தை அறிபவராக நாம் விசாரத்தின் முடிவில் விளங்குகிறோம்.
அந்த நிலையை அடைபவனுக்கு, அவனது முக்குண வினையால் அவன் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன்களாக, அவனுக்கு வரவிருக்கும் பிறவிகளும் இல்லாது போகின்றன. அவ்வாறான கர்ம பலன்களும் அவனது உண்மை சொரூபமாக உள்ள பிரம்மத்திற்கு அல்ல. அவை அனைத்துமே தனியாக இடையில் தோன்றும் ஜீவனுக்கே என்பதால், உண்மையில் எவ்வித பந்தமும் இல்லை; பந்தம் இல்லை என்பதால் விடுதலையும் இல்லை என்பதையும் உணர்வோம். ஆகவே இடையில் தோன்றும் மனத்தை அழிக்கும் வழிகளை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறான அனைத்துக் கருத்துக்களையும் ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.
இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்துமே, உண்மையை நாடி அறிய விரும்பும் சீடர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடரும், முன்னர் முனகால வேங்கடராமையா என்றும் பின்னர் ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதி என்றும் அறியப்பட்ட வருமான ஆசிரியர், பகவானின் அருட் துணையால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் ஆங்கில வடிவை உருவாக்கினார். சவிகல்ப சமாதி, நிர்விகல்ப சமாதி, ஜீவன் முக்தி, மற்றும் விதேக முக்தி என்று முன்பு இருந்த கடைசி நான்கு அத்தியாயங்களும் தமிழிலோ, தெலுங்கிலோ, சம்ஸ்க்ருதத்திலோ கிடைக்கப் பெறாததால் அவைகளை ஆங்கிலப் பதிப்பில் சேர்க்க முடியவில்லை. அவை பற்றிய தகவல் எவருக்கேனும் கிடைத்தால் அவர்களுக்கு நன்றி கூறிப் பெற்றுக்கொள்வர்.
தங்களது சமஸ்தான நூலகங்களில் இருந்த இந்நூலின் சம்ஸ்க்ருத மூல ஆவணங்களை மகரிஷியின் பார்வைக்காக அனுப்பி உதவி செய்த மேன்மைதகு மாண்புமிகு பரோடா மகாராணி திருமதி சாந்தா தேவி அவர்களுக்கும், மேன்மைதகு மாண்புமிகு திருவிதாங்கூர் மகாராஜா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு பகவான் முன்னிலையில் பலமுறை படித்துப் பார்க்கப்பட்டு, நன்கு திருத்தி அமைக்கப்பட்டது. பகவான் மதித்துப் போற்றிய வெகுசில நூல்களில் இதுவும் ஒன்றாக அடங்கும். அதனால் அடியவர்கள் அனைவரும் நிச்சயமாகப் பயன் பெறுவார்கள் என்ற முழுநம்பிக்கையுடன் இந்தச் சிறிய நூலை அவர்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
அறிமுகம்
1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துலகிற்கும் அடைக்கலம் அருளுபவரும், ஜனன மரணச் சுழலாகிய சம்சாரத்தை அழிக்கவல்ல ஒரே வழியானவரும், என்றும் எங்கும் நிறைந்து இருப்பவருமாயும் உள்ள ஆனைமுக விநாயகரான உன்னத இறைவனின் தாள் பணிகின்றேன்.
2. எப்போது தோன்றியது என்று தெரியாத அனாதியாக உள்ள அறியாமையால் விளைந்த ஓர் அடர்ந்த இருளினால் காணும் திறனை இழந்த மூடனான நான், யோகிகளுள் சிறந்த யோகியாகவும், எப்போதும் ஆனந்தமயமாயும் இருப்பதோடு இரண்டற்ற ஒன்றான இருப்பு மயமாய்த் திகழ்ந்து, அறிவு ஒன்றே வடிவாக விளங்கும் சிதம்பர பிரம்மமான தெய்வீகக் குருவின் கடைக்கண் பார்வையால் கிடைத்தற்குரிய ஞானம் பற்றி அறியப்பெற்றதால், அவரை மனதில் இருத்தித் தியானிக்கிறேன்.
3. அவரது காலடித் தூசி தங்கள் மேல் பட்டதால் கரை காணமுடியாத சம்சாரக் கடலை, ஏதோவொரு ஓடையைத் தாண்டுவது போலக் கடந்த அடியார்கள் வணங்கும் அந்தத் தெய்வீக குருவைத் தியானிக்கிறேன்.
4-5. பல முற்பிறவிகளில் புரிந்த தவங்களால் தாங்கள் முன்பு செய்திருந்த பாவச் செயல்களின் பலன்கள் அழிக்கப்பட்டதன் மூலம் தூய மனத்தினராய் ஆகி தகுதி பெற்றவர்கள், அதனால் மெய்யைப் பொய்யில் இருந்து பிரித்துத் தெளியும் அறிவைப் பெற்றவர்கள், அதனால் வளர்ந்த விவேகத்தால் இம்மையிலும் மறுமையிலும் வாய்க்கும் சுக துக்கங்களைப் பொருட்படுத்தாதவர்கள், தங்கள் மனமும், புலன்களும் ஒடுங்கியவர்களாகவும், ஆசாபாசங்கள் அடங்கியவர்களாகவும், ஆற்றவேண்டிய கடமைகளின்றி வேறெந்தச் செயல்களையும் தேவையற்றன என்று ஒதுக்கியவர்களாகவும், உறுதியான நம்பிக்கை மற்றும் அமைதியான மனம் படைத்தவர்களாகவும், பந்தங்களில் இருந்து விடுதலை பெறுவதில் மிக்க நாட்டம் உள்ளவர்களாகவும் விளங்கும் அடியவர்களுக்காக, பன்னிரண்டு சிறிய அத்தியாயங்களைக் கொண்ட ஸ்ரீ அத்வைத போத தீபிகா
என்ற இந்த நூல் சமர்ப்பிக்கப்படுகிறது.
6. அத்வைதம் பற்றிய பல கிரந்த நூல்கள் ஆதி சங்கரர் மற்றும் வித்யாரண்யர் போன்ற பண்டைய குருமார்கள் பலராலும் அருளப்பட்டிருந்தாலும், தம் குழந்தையின் மழலைச் சொற்களைக் கேட்க விரும்பும் பெற்றோர்கள் போல, கற்றோர் அனைவரும் இந்த நூலையும் ஏற்றுக்கொண்டு, இதில் கருத்துப் பிழைகள் இருந்தாலும் அவைகளைப் பொறுத்துக்கொண்டு, பெரிய உள்ளம் கொண்டவர்களாய் வரவேற்பார்களாக.
1. அத்யாரோபம்: ஒன்று வேறொன்றாகக் காணப்படுவது
7. தாப-த்ரயம்
எனும் மூன்று விதத் துயர்களால் மிகவும் பீடிக்கப்பட்டு, இந்தத் துன்பமய வாழ்வில் இருந்து விடுபடுவதற்காக, பந்தத்தில் இருந்து முக்தி காணும் ஆர்வம் கொண்டு ஸாதனா சதுஷ்டயம்
எனப்படும் நான்கு வழிச் சாதனைகளைப் பல காலம் செய்து சிறந்த சீடன் ஒருவன் தகுதி வாய்ந்த குரு ஒருவரைத் தேடிக் கண்டபின், அவரிடம் இப்படி வேண்டுகிறான்:
8-12. பிரபுவே! கருணைக் கடலே! நான் தங்களைச் சரணடைந்தேன். காத்தருளவும்.
குரு: எதிலிருந்து அப்பனே உன்னைக் காக்க வேண்டும்?
சீடன்: இடைவிடாது தொடரும் பிறப்பு - இறப்புச் சுழல் கொண்ட சம்சார பயத்தில் இருந்து.
குரு: சம்சாரத்தை விடு; பயமின்றி இரு.
சீடன்: சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது தவிக்கும் நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் பிறப்பு - இறப்புகளை எண்ணி அஞ்சுகிறேன். அதனால் தங்களிடம் சரண் புகுந்துள்ளேன். தாங்களே என்னைக் காத்தருளும் வல்லமை கொண்டவர்.
குரு: சரி, நான் என்ன செய்ய வேண்டும்?
சீடன்: என்னைக் காப்பாற்றுங்கள். உங்களைவிட்டால் எனக்குப் புகலிடம் வேறு இல்லை. எவ்வாறு ஒருவனின் தலை மயிரில் தீ பிடித்துவிட்டால் அதைத் தணிக்க தண்ணீர் ஒன்றே பயன் தருமோ, அதுபோல நீங்கள் ஒருவர்தான் என்னைப் போன்று மூவிதத் துன்பங்களாகிய தீயின் நடுவில் தவிக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே புகலிடம். சம்சாரம் என்னும் மாயையில் இருந்து நீங்கள் விடுபட்டவர்; சாந்த சித்தர், அந்தமில்லாத ஒப்பற்ற பிரம்மானந்தத்தில் ஆழ்ந்து இருப்பவர். உங்களால் நிச்சயமாக என்னைக் காத்தருள முடியும். தயை கூர்ந்து அருள்வீர்.
குரு: உனக்குத் துன்பம் என்றால் எனக்கு அதனால் என்ன வந்தது?
சீடன்: சேயின் துயரத்தை எவ்வாறு அதன் தந்தை பொறுக்க மாட்டாரோ, அதுபோல உங்களைப் போன்ற ஞானிகள் பிறர் துன்பம் பொறுக்க மாட்டார்கள். எந்த சீவராசிகளிடமும் நீங்கள் காட்டும் பாசத்திற்கு எவ்வித நோக்கமும் இருக்காது. தாங்கள் அனைவருக்கும் பொதுவான குரு. எங்களைச் சம்சாரக் கடலைக் கடக்க இட்டுச் செல்லும் ஒரே தோணி நீங்களே.
குரு: சரி, இப்போதுள்ள உன் துயரத்திற்குக் காரணம்தான் என்ன?
சீடன்: சம்சாரம் எனும் கொடும் பாம்பால் கடிபட்டுள்ள நான் நிலைகுலைந்து தவிக்கின்றேன். அவ்வாறு என்னைப் பொசுக்கும் நரகத்தில் இருந்து காத்து, அதிலிருந்து நான் மீளும் வழியை தயவு கூர்ந்து காட்டுங்கள்.
13-17. குரு: சரியாகச் சொன்னாய், மகனே! உனக்குப் புத்தியும் கூர்மையாக இருக்கிறது, நல்ல ஒழுக்கமும் இருக்கிறது. ஒரு சீடன் ஆவதற்கான தகுதியை நீ இதற்கு மேலும் நிரூபிக்க வேண்டியதில்லை. இப்போது நீ சொன்ன வார்த்தைகளே உனது தகுதியைத் தெளிவாகக் காட்டுகின்றன. இப்போது நன்கு கவனி, குழந்தாய்!
சத்–சித்-ஆனந்தமாக எப்போதும் இருக்கும் பரப்பிரம்மத்தின் மீது வேறெந்த உருவம்தான் படர முடியும்? அங்கு சம்சாரம் எப்படித்தான் வாய்க்க முடியும்? எந்தக் காரணத்தால் அது அங்கு வர முடியும்? எப்படி, எதிலிருந்து தானாகவே அது தோன்றி இருக்க முடியும்? (அத்வைத) சத்யமான உன்னால் எப்படி மயங்கமுடியும்? ஆழ்நிலைத் தூக்கத்தில் வேறொருவனாக இல்லாது, அப்போதும் தான் தானாகவே இருந்தும், அமைதியுடனும், நிம்மதியாகவும் தூங்கிய மூடன் ஒருவனே, தான் விழித்து எழும்போது ஐயோ, நான் தூக்கத்தில் தொலைந்து போனேனே!
என்று சொல்வான். என்றும் மாறாத, உருவற்ற, ஆனந்தமயமான பரப்பிரம்மாக விளங்கும் நீ எப்படி நான் மாறிவிட்டேன், அல்லது நான் அவதிப்படுகிறேன்
என்ற எதையும் சொல்லமுடியும்? உண்மையில் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை; எவரும் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. அப்படி எதுவுமே இல்லை என்பதே உண்மை.
சீடன்: அப்படியானால் இருப்பது எது?
குரு: ஆதியந்தமற்றதாய், அத்துவிதமாய், என்றும் பந்தமற்று சுதந்திரமாய், தூய்மையாய், அறிவுமயமாய், தனியாய், பரமாய், ஆனந்தமாய், ஞான சொரூபமாக விளங்கும் பரப்பிரம்மம் மட்டுமே எப்போதும் உள்ளது.
18. சீடன்: அது உண்மையானால், மழைக் காலத்தில் திரளும் கார்மேகங்களைப் போல, இல்லாததொரு சம்சாரம் எவ்வாறு பெரியதாகவும் வலிமையுடையதாகவும் தோன்றி என்னை மயக்கி பேரிருளில் ஆழ்த்துகிறது?
19-20. குரு: இருப்பதை மறைக்கும் மாயையின் வலிமையைப் பற்றி என்னதான் சொல்லமுடியும்? வெளிச்சம் குறைந்த இடத்தில் உள்ள ஒரு தூணைப் பார்ப்பவன் அதை ஒரு மனிதன் என்று தவறாக நினைப்பது போல, அத்வைதமான தூய பரம்பொருளைத் தனித்துவம் கொண்ட ஜீவன் என்று தவறாக ஒருவன் நினைக்கிறான். அவ்வாறு ஒரு தவறான நினைப்பு உனக்கு வரும்போது நீ துயரடைகிறாய். இந்த மதி மயக்கம் எவ்வாறு வந்தது? ஒருவனது உறக்கத்தில் வரும் கனவைப் போல, அறியாமை என்பது உண்மையில் இல்லாதபோதும் அதனால் வரும் மயக்கத்தில் ஒருவனுக்குச் சம்சாரம் என்ற ஒன்று தெரிகிறது. அது உன் தவறால் விளைந்ததே.
21-24. சீடன்: அறியாமை என்பது என்ன?
குரு: நன்றாகக் கேள். மனிதன் ஒருவனின் உடலைப் பற்றிக்கொண்டு ஒரு பொய்யான நான்
என்ற அகந்தை