Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramanarin Sivanandalahari Saaram
Ramanarin Sivanandalahari Saaram
Ramanarin Sivanandalahari Saaram
Ebook33 pages13 minutes

Ramanarin Sivanandalahari Saaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளங்கலையில் இயற்பியல் (Physics) முதுகலையில் மின்னணு (Electronics) முனைவர் பட்டமோ பேச்சை அறியும் கணினி வழிகளில் (Speech Recognition) என்பவைதான் இந்நூலாசிரியர் S. ராமன் சென்ற கல்வி வழி. இவை நடுவில் தமிழ் எங்கே வந்தது என்று கேட்டால், தான் பிறந்தது 1944-ல் தமிழ் நாட்டில் சங்கம் வளர்த்த மதுரையில், தொடக்கத்தில் தமிழிலேயே பயின்றும், பின்பு ஆங்கிலத்தில் படிப்பு தொடர்ந்தாலும் இளங்கலைப் படிப்பு வரை தமிழ் பயின்றதும் காரணமாக இருக்கலாம் என்பார். மேலும் தமிழ் பயின்ற ஆசிரியர்களில் முதன்மையானவர் “கோனார் நோட்ஸ்” புகழ் திரு. ஐயம் பெருமாள் கோனார் என்றால் அது போதாதா என்றும் சொல்வார்.

பெங்களூர் (I.I.Sc.) இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திலும், பின்பு சென்னை (I.I.T.) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் ஆக நாற்பது வருடங்கள் பணி புரிந்து பேராசிரியராக 2006-ல் ஓய்வு பெற்றார். தற்சமயம் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வித் தர நிர்ணயக் குழுக்களின் அழைப்புக்கு இணங்கி அவ்வப்போது பணியாற்றி வருகிறார்.

இவர் தனது இளம் வயதிலிருந்தே திருவண்ணாமலை தவச்சீலர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் போதனைகளில் மனம் சென்றவர். அன்னாரின் உரைகளைப் பற்றியும், அது தொடர்பானவைகளைப் பற்றியும் இவர் தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www.tamilhindu.com) 2010-ம் வருடத்தில் இருந்து எழுதத் தொடங்கினார். அவை தவிர தினசரி செய்திப் பத்திரிகையில் வரும் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்ப்பதும் இவரது இன்றைய பணிகளில் ஒன்று.

இவர் எழுதிய வால்மீகி இராமாயணச் சுருக்கத்தின் மொழிபெயர்ப்பான “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு”, மற்றும் “இரமணரின் கீதா சாரம்” நூல்களை ‘இந்துத்துவா பதிப்பக’மும் , சுவாமி விவேகானந்தர் வழி நடந்து ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய, ஆஸ்திரேலியத் தமிழரான திரு. மஹாலிங்கம் சின்னத்தம்பி அவர்களின் வாழ்க்கை சரிதையான “இலக்கை எட்டும்வரை இடைவிடாது இயங்கு” என்ற மொழிபெயர்ப்பு நூலை “கண்ணதாசன் பதிப்பக”மும் வெளியிட்டிருக்கின்றன. இவரது இன்னுமொரு மொழிபெயர்ப்பு ஸ்ரீ ரமண மகரிஷி இணைய தளத்தில் “அத்வைத ஞான தீபம்” என்று ஒளி வீசுகிறது.

தமிழ்க் கட்டுரைகள் எழுதுவது தவிர, தனது வீட்டு மாடியின் திறந்த வெளியில் இயற்கை உரம் தயாரித்து, செடிகள் வளர்ப்பதும் இவரது இன்னுமொரு ஓய்வுகாலப் பொழுதுபோக்கு.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404820
Ramanarin Sivanandalahari Saaram

Read more from S. Raman

Related to Ramanarin Sivanandalahari Saaram

Related ebooks

Reviews for Ramanarin Sivanandalahari Saaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramanarin Sivanandalahari Saaram - S. Raman

    http://www.pustaka.co.in

    ரமணரின் சிவானந்தலஹரீ சாரம்

    Ramanarin Sivanandalahari Saaram

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ரமணரின் சிவானந்தலஹரீ சாரம்

    பின்னுரை

    ரமணரின் சிவானந்தலஹரீ சாரம்

    நான் தமிழ் ஹிந்து இணைய தளத்தில் ஆன்ம போதம் எழுதத் தொடங்கிய சமயம், எனது நண்பர்

    Dr.P.S. பர்வதனாதன், ரமணரின் கீதா சாரம் போலவே சிவானந்தலஹரீ சாரம் ஒன்று இருக்கிறது என்று கூறி, கீழ்க்கண்ட விவரங்களையும் சொன்னார். ரமணாஸ்ரமத்தில் உள்ள நண்பர்கள் மூலம் அது பற்றிய அவர்களது வெளியீடு இருக்கிறதா என்றும், அல்லது அவர்களது வெளியீடுகளில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்றும் நான் கேட்டேன். அந்த பத்து ஸ்லோகங்களும் அவ்வப்போது ஆஸ்ரமத்தின் சந்நிதிகளில் பாடப்படுவதாகவும், தனியாக வெளியீடு ஒன்று இல்லாது போதும், அந்தப் பத்து ஸ்லோகங்களும் ஸ்ரீ ரமணர் தன் கைப்பட எழுதிய புத்தகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது என்றும் அறிந்தேன்.

    1930களில் நடந்தது என்னவென்றால்…

    ஒருமுறை சென்னையில் காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார் சிவானந்தலஹரியை விளக்கி பல நாட்கள் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருநாள், பக்தர்களில் ஒருவர் மகா பெரியவாளை அணுகி, தனக்கு சிவானந்தலஹரியின் நூறு ஸ்லோகங்களையும் தினம் பாராயணம் செய்வது கடினமாக இருப்பதாக

    Enjoying the preview?
    Page 1 of 1