Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1
Ebook201 pages1 hour

Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழம் பெரும் பாரத இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கைகூடும் என்பதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார்.

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

நூலாசிரியர் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் முதல் பாகத்தில் தசரதன், கைகேயி, மந்தரை, ஶ்ரீ ராமர், லக்ஷ்மணன், கோசலை, பரதன், சுமந்திரர், குஹன் ஆகியோர் பற்றி சாதாரணமாக நாம் அறிந்திராத பல விஷயங்களைத் தன் அருமையான ஆய்வினால் தொகுத்துத் தந்துள்ளார்.

வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண நூல்களிலிருந்து குறிப்புகளை ஆங்காங்கே இந்த நூலில் தந்திருப்பது இதுவரை படித்திராத நுட்பமான விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது. இந்த நூல் குடும்பத்தினர் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது. நண்பர்களுக்கும் இளம் வயதினருக்கும் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூல் இது.

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580166709878
Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1

Read more from R. Seshadrinathan

Related to Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1

Related ebooks

Reviews for Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1 - R. Seshadrinathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராமாயணம் அயோத்யா காண்டம் - வால்மீகி - பாகம் 1

    Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 1

    Author:

    ஆர். சேஷாத்ரிநாதன்

    R. Seshadrinathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-seshadrinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணுதல்

    2. இராமன் கோசலை சந்திப்பு

    3. மந்தரையின் சூழ்ச்சி

    4. கைகேயியின் சூழ்ச்சி

    5. இராமன் அயோத்தி நீங்குதல் குஹனைச் சந்தித்தல்

    6. பரத்வாஜ முனிவருடன் சந்திப்பு

    பிற்சேர்க்கை

    1. அயோத்யா காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

    2. உதவிய இராமாயண நூல்களின் பட்டியல்

    முன்னுரை

    வணக்கம்.

    கொரோனா காலகட்டத்தில் எங்கள் குடியிருப்பில் நோய் பாதிப்பினாலும் ஊரடங்கினாலும் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை.

    அப்பொழுது, இருக்கும் நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்க முடிவெடுத்து வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் படைத்த இராமாயணத்தைத் தொகுத்து முகநூலில் வெளியிடத் தீர்மானித்தேன்.

    அது என்ன தொகுத்து வழங்குவது? அந்த மூவரும் ஏற்கனவே காவியத்தைப் படைத்துவிட்டனர். அதில் மேற்கொண்டு நமக்கு வேலையில்லை. ஆனால், வால்மீகியின் ஸ்லோகங்களிலும், கம்பனின் கவிதைகளிலும், துளசிதாஸரின் தோஹாக்களிலும் ஓராயிரம் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

    மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு அவைகள் புலப்படுவதில்லை. அதற்கு உபன்யாசகர்கள், உரையாசியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்களின் உதவி அவசியம் தேவை. அத்தகையோரின் உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள், காணொளிகள் ஆகியவைகளின் மூலம் நான் தெரிந்துகொண்ட சுவையான விஷயங்களைக் கதையுடன் சேர்த்துத் தருவதே தொகுப்பதாகும்.

    பாலகாண்டத்தை ஏற்கனவே தொகுத்து வழங்கிவிட்ட நிலையில் தற்போது வால்மீகியின் அயோத்யா காண்டத்தைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

    அதற்கு உதவியாக இருந்த அனைத்து உரையாசிரியர்கள், சான்றோர்கள் எல்லோருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தத் தொகுப்பை நூலாக வெளிவர தனது நேரத்தை ஒதுக்கிப் பேருதவி செய்து வரும் எனது சம்பந்தியும், எழுத்தாளரும், எனது குருநாதருமான திரு. ச. நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் இணையதளத்தில் வெளி வந்த நாட்களில் உடனுக்குடன் அதைப் பாராட்டி என்னை ஊக்குவித்த வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டுவர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலில் உள்ள பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    அனைவருக்கும் ஶ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, அன்னை சீதாதேவியாரின் அருள் பரிபூரணமாக சித்திக்க ஶ்ரீ ராமரையும் அன்னை சீதாதேவியையும் வேண்டுகிறேன்.

    நன்றி.

    சென்னை

    13-5-23

    ஆர். சேஷாத்ரிநாதன்.

    அணிந்துரை

    இராமாயணம் பாலகாண்டம் ஒரு பார்வை என்ற நூலை அடுத்து திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதிய அயோத்யா காண்டத்தின் முதல் பாகம் வெளியிடப்படுகிறது.

    பழம் பெரும் பாரத இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கைகூடும் என்பதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார்.

    நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

    வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்

    நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

    சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

    அழிவில்லாத அரக்கர் சேனை சாம்பலாய் நசித்துப் போக வெற்றி மாலை அணிந்த இராமபிரானது புய வலிமையை கூறுவோர்க்கு அவர்கள் நாடிய சகல பொருள்களும் கைவசமாகும். மனத் தெளிவும் புகழும் உண்டாகும். அவர்களுக்கு மோட்சத்தை அடைவதற்கு ஏற்ற வழியை உண்டாக்குகின்ற நறுமணமுள்ள அழகிய தாமரையில் வாழும் லக்ஷ்மியும் அருள் பார்வை புரிவாள்.

    மனித வாழ்க்கையில் ஒருவருக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

    ராம நாமம் மிருதசஞ்சீவினி மந்திரமாக ஆன்றோரால் சொல்லப்படுகிறது. மரிக்கப் போன சீதா பிராட்டியாருக்கு தஞ்சமாகவும், கடலைத் தாண்டும் ஆஞ்சநேயருக்கு பாஹு பலமாகவும், விபீஷணன் போன்ற சரணாகதர்களுக்கு ஆத்ம பலமாகவும் சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்து புதிய ஜீவனைத் தந்த சஞ்சீவினியாகவும் விளங்கியது ஷடாக்ஷரியான மஹா மந்திரம் ஶ்ரீ ராம மந்திரம்.

    சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது.

    ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

    கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

    ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

    கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும் அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன் என்ற இந்த ஸ்லோகத்தின் ஆழ்ந்த பொருள் ஆதி கவியை வணங்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

    24,000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்றுப் பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

    ஆனால் இந்த வேக யுகத்தில் இராமாயணத்தில் வால்மீகி மஹரிஷி பொதிந்து வைத்துள்ள இரகசியங்களை அறிய அதில் ஈடுபாடு கொண்டு ஆராய்ந்து நல் முத்துக்களைத் தரவல்ல ஒருவரின் துணை தேவையாக இருக்கிறது.

    இந்தச் சமயத்தில்தான் திரு. ஆர். சேஷாத்ரிநாதன் அவர்களின் கட்டுரைகள் நமக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்து நம்மை மகிழ வைக்கிறது.

    அயோத்யா காண்டத்தில் தசரதன், கைகேயி, மந்தரை, ஶ்ரீ ராமர், லக்ஷ்மணன், கோசலை, பரதன், சுமந்திரர், குஹன் ஆகியோர் பற்றி சாதாரணமாக நாம் அறிந்திராத பல விஷயங்களைத் தன் அருமையான ஆய்வினால் அவர் தொகுத்துத் தந்திருக்கும் விதம் பயனுள்ளது, பாராட்டுக்கும் உரியது.

    வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள அவர் இராமாயணம் பற்றி அவற்றிலிருந்து குறிப்புகளைத் தருவதோடு சிறந்த வேத விற்பன்னர்களின் கருத்துக்களையும், ராமாயணத்தை ஆழ்ந்து படித்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே தந்துள்ளார்.

    இதுவரை படித்திராத நுட்பமான விஷயங்களைப் படிக்கும் போது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    அடுத்து இரண்டாம் பாகத்தைப் படிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

    ஒரு சமர்ப்பண மனோ பாவத்துடனும் ராம பக்தியுடனும் சமுதாயத்திற்கு அவர் தந்திருக்கும் இராமாயணக் கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். தம் தம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு. சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

    அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன். மேலும் பல நூல்களையும் படைத்து பாரத தேசத்தின் மஹிமையையும் மாண்பையும் உலகிற்குப் பறை சாற்ற எல்லாம் வல்ல இராமபிரானை வணங்கித் தொழுகிறேன்.

    பங்களூர்

    11-5.23

    அன்பன் ச. நாகராஜன்

    1. இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணுதல்

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். இந்தக் காண்டத்தில் இராமன் தன் தந்தையின் வார்த்தையைக் கேட்டு பட்டத்தைத் துறந்து காட்டிற்குச் செல்கிறான். தாய் தந்தையருக்கு நாம் செலுத்த வேண்டிய மரியாதையை தனது செயல் மூலம் எடுத்துக் காட்டுகிறான் இராமன்.

    கணவன் இருக்குமிடமே மனைவிக்கு அயோத்தி என்பதைச் சொல்லுகிறாள் சீதை. தமையன் வழியே தன் வழி என்று எடுத்துக் காட்டுகிறான் இலக்ஷ்மணன். தாயோ தந்தையோ பெரிதில்லை. சத்யம், முன்னோர்கள் காட்டிய வழியே தனது வழி என்று சொல்கிறான் பரதன். இதுதான் அயோத்யா காண்டம்.

    இனி உள்ளே செல்வோம்.

    இராமன் சீதையை மணமுடித்து அயோத்தி திரும்பி பன்னிரண்டு ஆண்டுகள் மகிழ்வுடனே இல்லறத்தில் ஈடுபட்டான். பரதனும் சத்ருக்னனும் கைகேய நாட்டிற்குத் தங்களது தந்தையின் அனுமதி பெற்று, மாமனின் அழைப்பை ஏற்றுச் சென்று விட்டனர்.

    गच्छता मातुलकुलं भरतेन तदाऽनघः |

    शत्रुघ्नो नित्यशत्रुघ्नो नीतः प्रीतिपुरस्कृतः || २-१-१

    இங்குதான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லப்படுகிறது. அதாவது பரதனுக்கு அவனது தாத்தாவிடமிருந்து அழைப்பு இருந்தது. பரதன் கேகயம் செல்வதற்கான நாளை வசிஷ்டர் குறித்துக் கொடுத்தார். அவர் குறித்துக் கொடுத்த தினத்தன்று பரதன் செல்வதற்காகத் தேரில் ஏறி அமர அவனுடன் சத்ருக்னனும் ஏறி அமர, வசிஷ்டரோ சத்ருக்னனிடம் பரதன் அவனது தாத்தாவின் அழைப்பின் பேரில் கேகயம் செல்கிறான். நீ யாருடைய அழைப்பின் பேரில் அவனுடன் செல்கிறாய்? மேலும் பரதன் செல்வதற்கு நான் நல்ல நாள் குறித்துக் கொடுத்தேன். நீ செல்வதற்கு உன் நட்சத்திரப்படி இன்று உகந்த நாள் அல்ல என்று சொன்னதும் சத்ருக்னன் வசிஷ்டரிடம் நீங்கள் பரதன் செல்ல நாள் குறித்தீர்கள். எனக்கு ஏன் நாள் பார்த்தீர்கள் என்று கேட்க வசிஷ்டரோ தொலைதூரம் பயணம் செல்லப் போகிறீர்கள். அவ்வாறு செல்லும்போது நல்ல நாள் பார்ப்பதே முறை என்று சொல்ல, சத்ருக்னனோ குருவே! பரதனுக்கு நாள் குறித்தது சரி. அவனை ஏற்றிச் செல்லும் தேருக்கும் மற்றும் அவனது உடைமைகளுக்கும் நாள் குறித்தீர்களா? என்று கேட்க, வசிஷ்டரோ அவைகள் எல்லாம் ப்ராபர்ட்டி (உடைமைகள்). அவைகளுக்கு நாள் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்ல, சத்ருக்னனோ குருவே! நானும் இராம பக்தனான பரதனின் உடைமை. அண்ணனுடன் செல்ல யாரும் எனக்கு அழைப்பு விடவேண்டிய அவசியம் இல்லை. அவனுடன் செல்லும்போது எனக்கென்று தனியாக நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. (நாம் எல்லோருமே பாகவதர்களுக்கு உடைமையாக இருக்க வேண்டியவர்கள்) என்றான்.

    இதுதான் ஜீவாத்மாவின் ஸ்வரூபம்.

    பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,

    பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,

    பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,

    பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.

    பகவானக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது மிகவும் ஏற்றம். அவனடியார்களுக்கு அடிமை செய்துகொண்டு அடியவராக இருப்பது அதைவிட ஏற்றம். பாகவத சேஷத்வம் என்கிற பரமபுருஷார்த்தத்தை ஆழ்வார் திருவாய் மொழியில் அருளிச் செய்கிறார்.

    அடியார்க்கு அடியாரை வணங்குவதல் சிறப்பு. பகவானும் அதையே விரும்புவார். ஆக பரதனின் சொத்தான எனக்கென்று தனியாக நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி பரதனுடன் புறப்பட்டான் தடையை வென்ற சத்ருக்னன். அது என்ன ‘தடையை

    Enjoying the preview?
    Page 1 of 1