Kamba Ramayanam Part - 2
()
About this ebook
இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ் படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழைப் பெருமைபடுத்தினார். மேன்மைபடுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப பண்படுத்தினார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
>Read more from Dr. Jayanthi Nagarajan
Kamba Ramayanam Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVisithira Arasar Rating: 0 out of 5 stars0 ratingsKaliyuga Deivam shirdi Sai Rating: 0 out of 5 stars0 ratingsKalkiyin Ponniyin Selvan Kathai Surukkam Rating: 0 out of 5 stars0 ratingsKothaiyin Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsBharathi Isai Paadum Vanavil Panpaattu Maiyam Rating: 0 out of 5 stars0 ratingsMazhalaiyar Paadalgal - 50 Rating: 0 out of 5 stars0 ratingsKonja Neram Konja Neram Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi Naan Pathi Kanney Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Poove Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kamba Ramayanam Part - 2
Related ebooks
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVaariyaarai Kavarnthavargal Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Ramayanam Ayodhya Kandam - Valmiki – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathamum – Mayakannanum Rating: 0 out of 5 stars0 ratingsKaviya Nayagigal Rating: 0 out of 5 stars0 ratingsRamayana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatha Kathaighal Rating: 0 out of 5 stars0 ratingsVanadeviyin Maindhargal Rating: 0 out of 5 stars0 ratingsலாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsParanjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Mar 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsYasothara Kaaviyam Rating: 1 out of 5 stars1/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsMadurai Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsRamayanam Ayodhya Kandam - Valmiki – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsசுந்தரகாண்டம் Rating: 0 out of 5 stars0 ratingsSethu Banthanam Rating: 0 out of 5 stars0 ratingsUthayana Kumara Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsSundara Kaandam Rating: 0 out of 5 stars0 ratingsVainavam Thantha Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCorona Neekkiya Kandhar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nool Vaangalam - Part 3 & 4 Rating: 0 out of 5 stars0 ratingsPerumpanatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsRamayanam Ayodhya Kandam – Kambar – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKannan Varuvan Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangal Paadum Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kamba Ramayanam Part - 2
0 ratings0 reviews
Book preview
Kamba Ramayanam Part - 2 - Dr. Jayanthi Nagarajan
https://www.pustaka.co.in
கம்பராமாயணம் பாகம் – 2
Kamba Ramayanam Part – 2
Author:
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
Dr. Jayanthi Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
எங்களுரை
ஆரண்ய காண்டம்
24. விராடனை வீழ்த்துதல்
25. சரபங்கமுனிவர்க்கு அருளல்
26. குறுமுனியின் ஆசி
27. கழுகரசன்
28. வந்தாளே காமவல்லி எனும் வில்லி
29. மதி இழந்த இராவணன்
30. பொன் மானே
31. பெண் புத்தி பின் புத்தி
32. நாடகம் அரங்கேறியது
33. ஆபத்பாந்தவனான சடாயு
34. சோகத்தில் இராமர்
35. சாபம் நீங்கிய கவந்தன்
36. அன்னை சவரி
கம்பராமாயணம் பாகம் – 2
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
முனைவர் பூ. பூங்கோதை
எங்களுரை
இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ் படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழைப் பெருமைபடுத்தினார். மேன்மைபடுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப பண்படுத்தினார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வரும் ஒரு குறிப்பு குரங்குகள் அணிந்த நகைகளைப் பற்றிய செய்தியை எடுத்துரைக்கிறது.
குரங்குகள் அணிந்த நகைகள்:
மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையை விண் வழியே கவர்ந்து செல்லும்போது அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக் கொண்டே சென்றாள். அவற்றைக் கிட்கிந்தா பகுதியில் வசித்து வந்த குரங்குகள் கண்டெடுத்தனவாம். எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்ற அறிவு இல்லாததால் அவற்றை மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டன. இதைப்போல் இளஞ்சேட்சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை அவரது வறுமை மிக்க உறவினரும், சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதிபகங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இராமாயண நிகழ்ச்சி சங்கப்பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாதததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு எனவே இராமாயணக் கதை அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு"
மேலே குறிப்பிட்டுள்ளதைப்போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.
காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அவர் தூற்றுதல் என்று பெயர். ஒரு நாள் அத்தலைவன் அத்தலைவியையே மணம் செய்து கொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிபேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார்.
இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் தொன்முதுகோடி எனப்படும் தனுஷ்கோடியில் தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழலாகும். இராமன் இலங்கைப் படையெடுப்புத் தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக்காட்ட உடனே அப்பறவைகள் அமைதி கொண்டு அடங்கிவிட்டனவாம். இதைப்போன்றே தலைவன் தலைவியை மணமுடித்ததும் அதுவரை பேசப்பட்ட பழிப்பேச்சுகள் அடங்கிவிட்டன என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
அப்பாடல்
"வெல்வேல் கவிரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே"
வாழ்க்கைத் தத்துவங்கள், தனி மனிதன் பின்பற்ற வேண்டிய குணநலன்களான தாய் சொல் மதித்தல், சகோதர ஒற்றுமைப் பேணல், பிறன் மனை நோக்காமை, நட்பின் மேன்மை எனப் பலவற்றை இந்நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. விதி வலியதுதான் எனினும் அதனால் பாதிக்கப்படாத மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற வாழ்வியல் நுட்பங்களை இந்நூல் போதிக்கின்றது.
நடையில் நின்றுயர்ந்த இராமனைக் காண்கையில் உலகில் உள்ள ஆண்மக்கள் யாவருமே இராமனைப்போல் இருக்க வேண்டும் என்று மனம் விழைவதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது. மேலும் ஓர் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுடைய ஆட்சி முறை எவ்வாறு திகழ வேண்டும் என்பதைப் படிக்கையில் உள்மனம் ஏக்கத்தில் துடிக்கிறது.
வெறும் கதை சொல்லியாக இல்லாமல் நல்ல பல அறக்கருத்துக்களைக் கற்பனை வளத்துடன் நம் சிந்தைக்கு நல்லதொரு விருந்தினைக் கம்பர் படைத்துள்ளார் எனில் அஃது மிகையன்று.
கல்வியிற் பெரியவர் கம்பரைப் போற்றாத கவிகளும் உண்டோ?
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் இப்பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று வியந்து, நயந்து போற்றுகிறார் பாரதியார்.
பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லை எனப் பாடு என்பார் கண்ணதாசன்.
காவலனும் பாவலனின் புலமைக்குத் தலை வணங்கி நின்றான். நற்பண்புகள் எனும் கற்களை அஸ்திவாரமாகக் கொண்டு அழகிய மாளிகையைக் கட்டியவர் கம்பர்.
கையில் கம்பன் கவியிருந்தால் போதும் என்று கவிமணி உருகுகிறார். சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வச்ச கவிப்புலவன் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் வைரமுத்து.
இனிமை, புலமை, வளமை, செழுமை, உவமை எனப் பற்பல வண்ண மைகளைக் கொண்டுதம் காப்பியத்தைப் படைத்த காரணத்தால் கம்பன் காவியம் அன்றும், இன்றும், ஏன் என்றும் காலத்தை வென்று நிற்கும் பெருமை பெற்றதாய்த் திகழ்கிறது.
இராமகாதை ஆறு காண்டங்களை உள்ளடக்கியது. இதோ! ஆரண்ய காண்டம் உங்கள் கைகளில்.
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
சென்னை
முனைவர் பூ. பூங்கோதை
மதுரை
ஆரண்ய காண்டம்
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணரும் தொரும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலோர்தெரிகிலா
ஆதிதேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ
தம் இறைமைத் தன்மையிலிருந்து வேறுபடாமலும், வேறுபட்டு வளர்ந்து வருகின்ற பல்வேறு உருவங்களிலிருந்து விலகாமலும், ஓத ஓத புதுப் புது அறிவினைத் தரும் வேதங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், பிரமணர்கள் முதலியோரால் முழுமையாக அறிந்து கொள்ளப்படாமலும் விளங்கும் முழுமுதற் கடவுளாம் இராமபிரானே எம் அறிவுக்கு அறிவாய் விளங்குபவர்.
மூன்றாவது காண்டமாக அமைந்துள்ள இப்பகுதியில் விராதன் வதைப்படலம் தொடங்கி சவரி பிறப்பு நீங்கும் படலம் வரை மொத்தம் பதினோரு படலங்கள் அடங்கி உள்ளன.
விராதன் வதைப்படலம்
சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
அகத்தியப் படலம்
சடாயு காண் படலம்
சூர்ப்பனகைப் படலம்
கரன் வதைப் படலம்
மாரீசன் வதை படலம்
இராவணன் சூழ்ச்சிப் படலம்
சடாயு உயிர் நீத்த படலம்
அயோமுகிப் படலம்
கவந்தப் படலம்
சவரி பிறப்பு நீங்கு படலம்
ஆரண்யம் என்றால் காடு என்று பொருளைத் தரும். ஆரண்யம் எனும் வடசொல் அப்படியே இங்கு எடுத்தாளப்படுகிறது. இராமனின் அன்பு உள்ளம் வெளிப்படும் வண்ணம் விராதனும், சவரியும் பிறப்பு நீங்குகின்றனர்.
விராதன் வதைப் படலம்
விராதன் எனும் அரக்கன் இராமனால் வதைக்கப்பட்டதை விளக்கும் படலமாக அமைந்துள்ளது. இவன் தும்புரு எனும் கந்தர்வன் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் காட்டில் திரிந்தான். கண்ணில் பட்ட அனைவருக்கும் எண்ணற்ற இன்னல்களை ஏற்படுத்தியவன். சீதையைத் தூக்கிச் சென்றதைக் கண்ட இராம, இலக்குவன் இவனை எதிர்க்க முன்வந்தனர். அப்போது அவன் சீதையை விட்டுவிட்டு அவர்களைக் கவர்ந்து சென்றான். இருவரும் அவனுடைய தோள்களை வாளால் வெட்டி வீழ்த்தினர். பிறகு அவன் இராமனால் சாப விமோசனம் பெற்றுப் பழைய உருவை அடைகிறான்.
சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
சரபங்க முனிவர் இராமனின் திருவருளால் மானிடப் பிறவி நீங்கி வீடு பேற்றை அடைந்த நிகழ்வைக் கூறும் பகுதியாகும். சரபங்கன் என்ற பெயர் மன்மதனின் காம பாணங்களைத் தோல்வியுறச் செய்தவன் எனும் பொருள் கொண்டது. மேலும் வெகுளி, மயக்கம் ஆகியவற்றை ஒழித்தவன் என்பதையும் உணர்த்தக் கூடியதாம்.
விராதனின் சாபம் தீர்ந்தபின் இராமனும், மற்றவர்களும் சரபங்க முனிவரின் ஆசிரமம் நோக்கிச் சென்றனர். வழியில் பிரம்ம தேவனின் ஆணையால் முனிவரைச் சத்தியலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பொருட்டு இந்திரன் ஆசிரமத்திற்குள் இருப்பதை இராமர் அறிந்து கொள்கிறார். ஆனால் முனிவர் அவ்வழைப்பினை ஏற்க மறுக்கிறார், இராமனைக் கண்ட இந்திரன் அவரை வணங்கிச் செல்கிறான். பின்னர் மூவரும் ஆசிரமத்திற்குள் நுழைய முனிவர் அவர்களை மகிழ்வோடு அழைக்கிறார். பின் இராமனின் முன்னிலையில் அவரைப் பணிந்து தீ வளர்த்து வானுலகம் அடைவதை இப்பகுதி விளக்குகிறது.
அகத்தியப் படலம்
அகத்திய முனிவரின் இருப்பிடத்தை நாடி இராமனும், மற்றவர்களும் செல்லும் நிகழ்வினை இப்படலம் விளக்குகிறது. அகத்தியன் என்பதற்கு மலையை அடக்கியவன் என்று பொருள்கொள்வர். சரபங்க முனிவர் அருள்நெறி அடைந்த பிறகு அங்கிருந்து அவர்கள் அகத்தியரின் தவச் சாலையை நோக்கிச் சென்றனர். அங்கு அவரது ஆசியைப் பெற்ற