Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatha Kathaighal
Mahabharatha Kathaighal
Mahabharatha Kathaighal
Ebook115 pages40 minutes

Mahabharatha Kathaighal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.


இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தம்.
“மகாபாரதக் கதைகள்” என்ற நூலினை உங்களுக்காக எளிய நடையில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலைப் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். இத்தகைய நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.


மகாபாரதக் கதைகள்” என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580138806610
Mahabharatha Kathaighal

Read more from R.V.Pathy

Related to Mahabharatha Kathaighal

Related ebooks

Reviews for Mahabharatha Kathaighal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatha Kathaighal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    மகாபாரதக் கதைகள்

    Mahabharatha Kathaighal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.

    இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த மாபெரும் யுத்தம்.

    மகாபாரதக் கதைகள் என்ற நூலினை உங்களுக்காக எளிய நடையில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலைப் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். இத்தகைய நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.

    மகாபாரதக் கதைகள் என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

    ஆர்.வி.பதி

    9443520904

    பொருளடக்கம்

    குருவின் சோதனை

    நல்லதும் கெட்டதும்

    குரு தட்சிணை

    காப்பாற்றிய கண்ணன்

    பிரியமானவர் யார் ?

    சிறந்த பக்தன்

    சரியான விலை

    கர்வம் கொள்ளாதே

    பசி அகன்றது

    குறைத்து மதிப்பிடாதே

    கர்மவினை

    ஜடாசுர வதம்

    எது தர்மம்?

    பரந்த மனம்

    எது சிறந்த பலம்?

    தானத்தில் சிறந்தவர் யார்?

    நன்றி மறக்காதே

    இறைவன் எதை ஏற்பார்?

    தர்மம் தவறாதே

    கீதை பிறந்தது

    எல்லாம் அவன் செயல்

    இறந்தான் அசுவத்தாமன்

    ஆணவம் கூடாது

    முனிவரின் கர்வம்

    ஒரு படி சோளமாவு

    எரிந்த காலயவனன் அழிந்த ஜராசந்தன்

    தரையில் உருண்ட தலை

    சியமந்தக மணி

    தர்மம் தவறாத தருமர்

    இரண்டு கேள்விகள்

    கண்ணனின் உபதேசம்

    பரீட்சத்து மகாராஜா

    குருவின் சோதனை

    பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தை கற்பித்தவர் துரோணாச்சாரியார். அவர் ஒரு சமயம் அவர்களுடைய திறமைச் சோதிக்க எண்ணி ஒரு சோதனையை நடத்தினார். ஒரு கிளிப்பொம்மையை மரத்தின் உச்சியில் கட்டச் செய்தார். அதன் கண்களை நோக்கி அம்பை மிகச்சரியாக செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டார். .

    துரோணாச்சாரியார் முதலில் துரியோதனனை அழைத்தார்.

    துரியோதனா. இப்போது நீ என்ன பார்க்கிறாய் ?

    அந்த மரத்தில் கிளைகள் இருக்கின்றன. இலைகள் இருக்கின்றன. அதற்கிடையில் இருக்கும் கிளியைப் பார்க்கிறேன்

    நீ அம்பைச் செலுத்த வேண்டாம். நான் எதிர்பார்த்த விடையை நீ கூறவில்லை. விலகி நில்

    அடுத்ததாக ஒருவரை அழைத்து கேள்விகளைக் கேட்டார்.

    யாருமே துரோணாச்சாரியார் எதிர்பார்த்த சரியான பதிலைச் சொல்லவில்லை.

    அர்ஜீனனின் முறை வந்தது.

    அர்ஜீனா. மரம் தெரிகிறதா ?

    இல்லை குருவே

    ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் அர்ஜீனன்.

    அர்ஜீனா. கிளைகள் தெரிகின்றனவா ?

    இல்லை குருவே

    அர்ஜீனா. கிளி தெரிகிறதா ?

    இல்லை குருவே

    இப்போது தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்டார் துரோணாச்சாரியார்.

    கிளியின் கண்கள் தெரிகிறதா ?

    அதுமட்டும்தான் தெரிகிறது குருவே

    அம்பைச் செலுத்து

    அர்ஜீனன் செலுத்திய அம்பானது கிளியின் கண்களை மிகச்சரியாகத் தாக்கியது. துரோணாச்சாரியார் எதிர்பார்த்தது இதுதான்.

    எதைச் செய்தாலும் மிகத்துல்லியமாக கவனித்துச் செய்ய வேண்டும் என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

    நல்லதும் கெட்டதும்

    ஒரு முறை துரோணாச்சாரியார் பாண்டவர்களையும், கௌரவர்களையும் அழைத்தார். அவர்களில் தருமரையும் துரியோதனனையும் அழைத்துப் பின்வருமாறு கூறினார்.

    உங்கள் இருவருக்கும் ஒரு சோதனை வைக்கப் போகிறேன்

    இருவரும் துரோணாச்சாரியாரிடம் இதுகுறித்து ஆர்வத்துடன் விசாரித்தார்கள்.

    துரியோதனா. நீ பல இடங்களுக்குச் சென்று எங்கெங்கெல்லாம் நல்லவர்கள் உள்ளனர். எங்கெங்கெல்லாம் நல்லவைகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு வா

    துரோணாச்சாரியார் தருமரிடமும் இதே விஷயத்தைக் கூறினார்;.

    நீ பல இடங்களுக்கும் சென்று எங்கெல்லாம் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து வா. எங்கெங்கெல்லாம் கெட்டவைகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டு வா

    தருமரும் துரியோதனனும் துரோணாச்சாரியாரின் ஆணையை ஏற்று தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். சில காலம் பயணித்து இருவரும் பல இடங்களுக்கும் சென்று பின்னர் திரும்பி வந்தார்கள்.

    முதலில் துரியோதனன் தான் கண்டவற்றையும் தனது அனுபவங்களையும் துரோணாச்சாரியாரிடம் தெரிவித்தான்.

    குருவே. உலகில் எங்கு பார்த்தாலும் கெட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். என் கண்களில் தென்பட்ட ஒவ்வொரு விஷயமும் கெட்டதாகவே இருந்தது. இந்த உலகில் நல்லவர்களும் இல்லை நல்ல விஷயங்களும் இல்லை

    தொடர்ந்து தருமர் துரோணாச்சாரியாரிடம் தன் அனுபவங்களைத் தெரிவித்தார்;.

    குருவே. உலகில் எங்கு பார்த்தாலும் நல்லவர்களே நிறைந்திருக்கிறார்கள். என் கண்களில் தென்பட்ட ஒவ்வொரு விஷயமும் நல்ல விஷயமாகவே இருந்தது. இந்த உலகில் கெட்டவர்களும் இல்லை கெட்ட விஷயங்களும் இல்லை

    ஒரு அடிப்படை உண்மையை அனைவருக்கும் உணர்த்தவே துரோணாச்சாரியார் இருவரையும் பல இடங்களுக்கும் சென்று வரச் சொல்லி கருத்து கேட்டார்.

    ஒவ்வொரு விஷயம் நமது எண்ணப்படியே அமைகிறது. கெட்டவர்களுக்கு தம்மைச் சுற்றி உள்ளவர்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1