Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nanneri Kathaigal Part - 2
Nanneri Kathaigal Part - 2
Nanneri Kathaigal Part - 2
Ebook72 pages27 minutes

Nanneri Kathaigal Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கு கதை கேட்பது முகவும் பிடித்தமான விஷயம். அப்படி தாங்கள் கேட்ட கதைகளை அவர்கள் செயல்முறை படுத்தும் விதமும் அழகோ அழகு. நாம் அவர்களுக்கு கதை கூறும்பொழுதே நல்ல விஷயங்களையும் சேர்த்து கூறினால் இன்னமும் சுவாரஸ்சியம் அதிகமாகிறது, குழந்தைகளும் கதையோடு ஒன்றிவிடுவார்கள். இதுபோலவே இந்நூலின் ஆசிரியரும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களை புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் நன்னெறிகளை விளக்கும் தொகுப்பே இந்நூல்...

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580120808416
Nanneri Kathaigal Part - 2

Related to Nanneri Kathaigal Part - 2

Related ebooks

Reviews for Nanneri Kathaigal Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nanneri Kathaigal Part - 2 - Thenammai Lakshmanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நன்னெறிக் கதைகள் பாகம் – 2

    Nanneri Kathaigal Part – 2

    Author:

    தேனம்மை லெக்ஷ்மணன்

    Thenammai Lakshmanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thenammai-lakshmanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஸ்யமந்தகமணி படுத்திய பாடு

    2. தாய் சொல்லைத் தட்டாதவன்

    3. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

    4. யார் உயர்ந்தவர்?

    5. கல்லும் கனிந்து தாயானது

    6. பண்டிதரை வாதில் வென்ற பராசர பட்டர்

    7. கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன்

    8. எமனையே கேள்வி கேட்ட நசிகேதன்

    9. முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும்

    10. ஏமநாதனை வென்ற சோமசுந்தரன்

    11. கவனமின்மையால் துன்புற்ற சகுந்தலை

    12. உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி

    13. சிறந்ததை அளித்த அதிபத்தர்

    14. பசிப்பிணி போக்கி பவத்திறம் அறுத்த பெண் துறவி

    1

    ஸ்யமந்தகமணி படுத்திய பாடு

    ஆண்டவனைக் கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே!

    துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்து வந்தார். அவருடைய பக்தியைப் பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல. அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும் எட்டு *தோலா தங்கமும் கொடுக்கும்.

    இப்படியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும் உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்,

    ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது...

    அந்த ஸ்யமந்தகமணி லேசுப்பட்டதா என்ன? ரத்னஹாரமாயிற்றே. அது சென்ற திசையெல்லாம் ஒரே ஒளிவெள்ளம். கானகத்தையே வெளிச்சத்தில் மூழ்கடித்தது. அந்த ஒளியைப் பார்த்த ஜாம்பவான் என்ற கரடித் தலைவர் அந்தச் சிங்கத்தை அடித்து அதைப் பறித்துத் தன் மகன் சுகுமாரனுக்கு விளையாடக் கொடுத்தார்.

    ஸ்யமந்தகமணி ஹாரம் அணிந்து வேட்டைக்குச் சென்ற தன் தம்பி ப்ரசேனனைக் காணாமல் வருந்திக் கொண்டிருந்தார் சத்ராஜித். ஒருவேளை ஸ்யமந்தகமணிக்காக கிருஷ்ணர் ப்ரசேனனைக் கொன்றிருப்பாரோ என்று வேறு சந்தேகம். அதனால் அவர்தான் தன் தம்பி ப்ரசேனனை ஏதோ செய்துவிட்டதாக அபவாதம் கிளப்பினார்.

    சின்னக் குழந்தையில் ஆயர்பாடியில் வெண்ணெய் திருடித் தின்றவன் தானே. திருடினாலும் திருடியிருப்பான் என்று ஊராரின் பழிச்சொல்லும் கேட்க நேர்ந்தது. இதையெல்லாம் கேட்டு நொந்த கிருஷ்ணர் அந்த ஸ்யமந்தகமணியைத் தேடிப் புறப்பட்டார்.

    அந்த வனாந்திரத்தில் ஒரு குகைக்கருகில் குட்டிக் கரடி ஒன்றின் கழுத்தில் அந்த ஒளிவீசும் ஸ்யமந்தகமணி அணிவிக்கப்பட்டிருந்தது. மின்னல்போல் பளீரிடும் அதன் ஒளியால் கவரப்பட்டு அதைப் பிடித்து ஆட்டியவாறு வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குழந்தையினருகே கிருஷ்ணர் செல்லும்போது அந்தக்குகையிலிருந்து வெளிப்பட்டு ஜாம்பவான் வந்துகொண்டிருந்தார்.

    ஸ்யமந்தகமணிக்காகத்தான் அவர் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஜாம்பவான் கிருஷ்ணரின் மேல் பாய்ந்து

    Enjoying the preview?
    Page 1 of 1