Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayana Kathaigal
Ramayana Kathaigal
Ramayana Kathaigal
Ebook123 pages43 minutes

Ramayana Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம், மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் ககைள் மூலம் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.


இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம்.


“இராமாயணக் கதைகள்” என்ற நூலினை உங்களுக்காக எளிய நடையில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலைப் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். இத்தகைய நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.


“இராமாயணக் கதைகள்” என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580138806609
Ramayana Kathaigal

Read more from R.V.Pathy

Related to Ramayana Kathaigal

Related ebooks

Reviews for Ramayana Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayana Kathaigal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    இராமாயணக் கதைகள்

    Ramayana Kathaigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இராமகாவியம் பிறந்தது

    கருணை உள்ளம்

    இரு பறவைகள்

    திரிகோணமலை

    மாலி வதம்

    கயிலாய மலை

    சாபம்

    அதிசயப் பசு

    ராஜரிஷி விசுவாமித்திரர்

    திரிசங்கு சொர்க்கம்

    பிரம்மரிஷி

    கஜேந்திர மோட்சம்

    விருத்திராசுரன்

    வாதாபி ஜீரணமாவாய்

    இரண்டு வரங்கள்

    பரசுராமன்

    கார்த்தவீரியார்ச்சுனன்

    கர்வம் அழிந்தது

    சாபவிமோசனம்

    விநாயகரின் விளையாட்டு

    மாயாவிகள் அழிந்த கதை

    அனுமன் பெற்ற சாபம்

    பொய்மான்

    சடாயு

    பக்தனைக் காத்த இராமபிரான்

    அழிவு எப்படி வரும்?

    சக்கராயுதம்

    பழி தீர்த்த கூனி

    வனவாசம்

    வீரச்சிறுவர்கள்

    என்னுரை

    இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்களாக போற்றப்படுபவை இராமாயணம், மகாபாரதம் ஆகும். இவை இரண்டுமே வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும். எப்படி வாழக்கூடாது என்ற அடிப்படையான இரண்டு விஷயங்களுக்கும் ககைள் மூலம் விடை தருபவை இந்த இதிகாசங்கள் என்றால் அது மிகையாகாது.

    இராமாணயம், மகாபாரதம் இவை இரண்டுமே நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளத் தேவையான ஏராளமான நீதிகளை நமக்குச் சொல்லுகின்றன. இந்த இரண்டு நூல்களிலும் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படுகின்றன. இராமாயணம் ஒரு பெண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம். மகாபாரதம் மண்ணுக்காக நிகழ்ந்த ஒரு மாபெரும் யுத்தம்.

    இராமாயணக் கதைகள் என்ற நூலினை உங்களுக்காக எளிய நடையில் எழுதியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர் வரை என யார் வேண்டுமானாலும் இந்த நூலைப் படித்து மகிழலாம். பயனுள்ள வகையில் பொழுதைச் செலவிடலாம். இத்தகைய நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.

    இராமாயணக் கதைகள் என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

    ஆர் .வி .பதி

    இராமகாவியம் பிறந்தது

    தன்னுடைய ஆசிரமத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் ஒரு முனிவர். அவர் பெயர் வான்மீகி. அவர் முகத்தில் கவலை படிந்ததிருந்தது. காரணம் மக்களிடையே அன்பு குறைந்து கொண்டே வருகிறது. அதர்மம் தலை தூக்குகிறது. ஆணவக்காரர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனிதர்கள் சிற்றின்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு புலனடக்கம், விரதம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவையே வான்மீகி முனிவரின் கவலைக்குரிய காரணங்களாக அமைந்தன. இதை மாற்றி அமைக்க தம்மால் ஏதும் செய்ய முடியுமா என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார்.

    வான்மீகி முனிவர் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கையில் நாரதர் அங்கே விஜயம் செய்தார். நாரதமுனியைக் கண்ட வான்மீகி அவரை அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார். வான்மீகி முனிவரின் முகத்தில் தெரிந்த சோகத்தை அறிந்து கொண்ட நாரதர் அவரிடம் அதுகுறித்து விசாரித்தார். வான்மீகி முனிவரும் தன்னுடைய மனக்குறையை நாரதமுனியிடம் வெளிப்படுத்தினார்.

    நாரதமுனியே. இந்த பூலோகத்தில் நல்லவை அழியத் தொடங்கி தீயவை தலை தூக்கக் தொடங்கியிருக்கின்றன. இதைப் போக்கி இந்த பூலோக மக்கள் மகிழ்ச்சியோடும் அன்போடும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். மானிடர்களில் மிகச்சிறந்த பண்பும் நீதியும் நேர்மையும் உள்ள எவராவது இருக்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இத்தகைய உயர்ந்த குணங்களைக் கொண்ட மானிடர் எவராவது உள்ளாரா? என்பதைக் கூறுவீர்களாக

    வான்மீகி. என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். தாங்கள் கூறும் அத்தனை குணங்களையும் பெற்ற மானிடன் ஒருவன் உள்ளான். பூலோகம் மட்டுமின்றி மூவுலகத்தாரும் பாராட்டும்படியான அந்த மானிடனைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டதில்லையா?

    நாரதப்பெருமான் சொன்னதைக் கேட்ட வான்மீகி மகிழ்ச்சி அடைந்தார்.

    அப்படியா ரிஷியே. நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே. தாங்கள் மூன்று உலகிலும் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்ற திரிலோக சஞ்சாரியாயிற்றே. இது போன்ற நல்ல விஷயங்கள் தங்களுக்குத்தானே அதிகம் தெரிய வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இதுகுறித்துத் தங்களிடம் விசாரித்தேன்

    நாரதமுனிவர் இராமபிரானின் வாழ்க்கையை வான்மீகிக்கு எடுத்துரைத்தார். இதைக் கேட்ட வான்மீகிக்கு இராமபிரானின் வாழ்க்கையைப் பாடலாக வடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று அவருக்குப் புரியவில்லை. இதுகுறித்து யோசித்தபடியே இருந்தார்.

    எப்போதும் இதுகுறித்து சிந்தித்தபடியே இருந்தார். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் வான்மீகி தமஸா நதிக்கரைக்குச் சென்றார். அந்த சமயத்தில் ஆண் பெண் கிரவுஞ்சப் பறவைகள் இரண்டு அங்கே மகிழ்ச்சியாக கொஞ்சியபடி விளையாடிக் கொண்டிருந்தன. பறவைகள் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை தன்னை மறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் வான்மீகி.

    பறவைகள் இரண்டும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்க எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு ஆண்பறவையின் உடலைக் குத்தியதால் அது இறந்து கீழே விழுந்தது. ஆண் பறவை துடிதுடித்து இறந்ததைக் கண்ட பெண் கிரவுஞ்சப் பறவை வேதனையால் வாடியது. இதைக் கண்டு மனம் பதைபதைத்த வான்மீகி இத்தகைய கொடிய செயலைச் செய்தது யார் என்று நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒரு வேடன் நின்று கொண்டிருந்தான். பறவையைக் கொன்றதுமில்லாமல் மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்த அந்த வேடனைப் பார்த்ததும் வான்மீகிக்கு கோபம் உண்டானது. வான்மீகி அந்த வேடனை கடுமையான சொற்களால் வசைபாடினார். ஆனால் அவர் வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் கடுமையான சொற்களாக இல்லாமல் இனிய அழகிய பாடலாக அவர் காதுகளில் ஒலித்தன. தான் கோபமாக உதிர்த்த சொற்கள் இனிய பாடலாகத தனக்குக் கேட்பதை நினைத்து அவர் வியந்தே போனார். இது எப்படி சாத்தியம் என்று யோசித்தபடியே தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பினார். இதுகுறித்து யோசித்துப் பார்த்தார். ஆனால் அவருக்கு எதுவுமே புரியவில்லை.

    பிரம்மதேவன் இந்த சூழ்நிலையில் அவர் முன் தோன்றினார். பிரம்மதேவனைக் கண்ட வான்மீகி மகிழ்ச்சி அடைந்து

    Enjoying the preview?
    Page 1 of 1