Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum
Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum
Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum
Ebook103 pages31 minutes

Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசகர்களுக்கு வணக்கம். குழந்தை இலக்கியத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறார் எழுத்தாளர்களை ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி அமைப்பு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2010 தொடங்கி 2019 வரை பத்து சிறார் எழுத்தாளர்கள் இந்த உயரிய விருதினைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதினைப் பற்றியும் அதைப் பெற்றுத் தந்த நூல்களைப் பற்றியும் விருதினை வென்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டது இந்த நூல்.

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580138807678
Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum

Read more from R.V.Pathy

Related to Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum

Related ebooks

Reviews for Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்

    Bal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    E:\ALL BOOK WORKS\CURRENT WORKS 2014\BOOKS 2019\New folder\Photos\award from mgr in 1979 dr.poovannan.jpg

    இந்தியாவின் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர் விருதினைப் பெற்றவரும், தமிழ் குழந்தை இலக்கிய வரலாற்றினை எழுதியவரும், குழந்தை இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான டாக்டர். பூவண்ணன் அவர்களுக்கு

    பொருளடக்கம்

    திரு.மா.கமலவேலன் (2010)

    திரு.ம.லெனின் தங்கப்பா (2011)

    திரு.கொ.மா.கோதண்டம் (2012)

    திரு.ரேவதி (2013)

    திரு.ஆயிஷா.இரா.நடராசன் (2014)

    திரு.செல்ல கணபதி (2015)

    திரு.குழ.கதிரேசன் (2016)

    திரு.வேலு சரவணன் (2017)

    திரு.கிருங்கை சேதுபதி (2018)

    திருமதி.தேவி நாச்சியப்பன் (2019)

    ஆர்.வி.பதி எம்.ஏ. (J&MC)., எம்.ஃபில். (J&MC)

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    என்னுரை

    வாசகர்களுக்கு வணக்கம். குழந்தை இலக்கியத்தில் சிறப்பாக இயங்கி வரும் சிறார் எழுத்தாளர்களை ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி அமைப்பு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 2010 தொடங்கி 2019 வரை பத்து சிறார் எழுத்தாளர்கள் இந்த உயரிய விருதினைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதினைப் பற்றியும் அதைப் பெற்றுத் தந்த நூல்களைப் பற்றியும் விருதினை வென்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டது இந்த நூல்.

    இந்த நூலினை மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி.

    அன்புடனும் நன்றியுடனும்

    ஆர்.வி.பதி

    பால சாகித்ய புரஸ்கார்

    இந்திய இலக்கிய வளர்ச்சிக்காக இந்திய அரசால் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமைப்பே சாகித்ய அகாடமி ஆகும். இந்த அமைப்பு ஆண்டு தோறும் இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

    குழந்தை இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் நோக்கத்தில் சாகித்ய அகாதமி அமைப்பானது 2010 ஆம் ஆண்டிலிருந்து பால சாகித்ய புரஸ்கார் விருதினை வழங்கி பெருமைபடுத்தி வருகிறது. அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது என 24 மொழிகளில் குழந்தை இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை ஒவ்வொரு வருடமும் அதற்கென நியமிக்கப்படும் மூன்று எழுத்தாளர்களைக் கொண்ட குழுவானது பரிசுக்குரியவர்களை ஆராய்ந்து தேர்வு செய்கிறது. விருதாளர்களுக்கு செப்புப்பட்டயம், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு போன்றவற்றை வழங்கி கௌரவிக்கிறது.

    குழந்தைகளுக்காக நாவல், சிறுகதை, நாடகம், கவிதை போன்ற படைப்புகளை எழுதும் குழந்தை எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தை இலக்கியத்திற்கு வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றி வரும் எழுத்தாளர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

    பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்கள்

    2010 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் திரு.மா.கமலவேலன் அவர்களுக்கு அவர் எழுதிய அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்ற சிறுவர் நாவலுக்கு வழங்கப்பட்டது. முதல் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர் என்ற பெருமையினை திரு.மா.கமலவேலன் அவர்கள் பெறுகிறார்.

    2011 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் திரு.ம.லெனின் தங்கப்பா அவர்களுக்கு அவர் எழுதிய சோளக்கொல்லை பொம்மை என்ற கவிதை நூலுக்காக வழங்கப்பட்டது.

    2012 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் திரு.கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அவர் எழுதிய காட்டுக்குள்ளே இசைவிழா என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

    2013 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் திரு.ரேவதி அவர்களுக்கு அவர் எழுதிய பவளம் தந்த பரிசு என்ற சிறுவர் சிறுகதை நூலுக்கு வழங்கப்பட்டது.

    2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது திரு.இரா.நடராசன் அவர்களுக்கு அவர் எழுதிய விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் என்ற சிறுவர் அறிவியல் நூலுக்காக வழங்கப்பட்டது.

    2015 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கவிஞர்.செல்லகணபதி அவர்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1