Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathai Thirakkum Manthira Savi
Manathai Thirakkum Manthira Savi
Manathai Thirakkum Manthira Savi
Ebook117 pages46 minutes

Manathai Thirakkum Manthira Savi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மனதைத் திறக்கும் மந்திரச்சாவி” எனும் தலைப்பில் அமைந்த இந்த நூல் எனது புதிய முயற்சி. நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் மனோபாவங்களையும் இதில் விவரித்துள்ளேன். இடையிடையே சுவாரசியத்திற்காக தலைவர்கள், எழுத்தாளர்கள், மேதைகள், மகான்கள் வாழ்வில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும் தகுந்த இடத்தில் கூறியுள்ளேன். இந்த நூல் வாசகர்களுக்கு சுவாரசியத்தையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580138806688
Manathai Thirakkum Manthira Savi

Read more from R.V.Pathy

Related to Manathai Thirakkum Manthira Savi

Related ebooks

Reviews for Manathai Thirakkum Manthira Savi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathai Thirakkum Manthira Savi - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    மனதைத் திறக்கும் மந்திரச் சாவி

    Manathai Thirakkum Manthira Savi

    Author:

    ஆர். வி. பதி

    R. V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சாவி – ஒன்று

    சாவி - இரண்டு

    சாவி - மூன்று

    சாவி - நான்கு

    சாவி - ஐந்து

    சாவி - ஆறு

    சாவி – ஏழு

    சாவி - எட்டு

    சாவி - ஒன்பது

    சாவி - பத்து

    சாவி - பதினொன்று

    சாவி - பனிரெண்டு

    சாவி - பதிமூன்று

    சாவி - பதினான்கு

    சாவி - பதினைந்து

    சாவி - பதினாறு

    என்னுரை

    வணக்கம். மனதைத் திறக்கும் மந்திரச்சாவி எனும் தலைப்பில் அமைந்த இந்த நூல் எனது புதிய முயற்சி. நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் மனோபாவங்களையும் இதில் விவரித்துள்ளேன். இடையிடையே சுவாரசியத்திற்காக தலைவர்கள், எழுத்தாளர்கள், மேதைகள், மகான்கள் வாழ்வில் நடைபெற்ற சுவையான சம்பவங்களையும் தகுந்த இடத்தில் கூறியுள்ளேன். இந்த நூல் வாசகர்களுக்கு சுவாரசியத்தையும் புதிய வாசிப்பு அனுபவத்தையும் தரும் என்று நம்புகிறேன். இதை மின்னூலாக வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள்.

    சாவி – ஒன்று

    ஒரு சமயம் விமானத்தில் சென்னையிலிருந்து தில்லிக்குப் பயணம் செய்தேன். எனது அருகில் இருந்தவர் பேசிக்கொண்டே வந்தார். நான் எழுத்தாளர் என்பதை அறிந்து ஏதாவது சுவாரசியமான தகவல் ஒன்றை எனக்குச் சொல்லுங்களேன் என்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஏதாவது தெரிகிறதா என்று சோதிக்க நினைத்தாரோ என்னவோ? அப்போது ராக்பெல்லர் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வந்தது. அவருக்கு அதைச் சொன்னேன்.

    ஒரு சமயம் உலகப் புகழ்பெற்ற கோடீசுவரர் ராக்பெல்லர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். பயண நேரத்தை வீணாக்க விரும்பாமல் முக்கியமான கோப்புகளை உடன் எடுத்து வந்து அதைப் படித்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவர் அவரைப் பார்த்து கேட்டார்.

    உங்களுக்குத்தான் இப்போது கோடிக்கணக்கில் பணம் இருக்கிறதே. நீங்கள் எந்த வேலையையும் செய்யாமல் உட்கார்ந்து ஜாலியாக சாப்பிடலாமே. அப்படியிருக்க எதற்கா ஓய்வில்லாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

    இந்த விமானம் எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்

    அதற்கு கேள்வி கேட்டவர் சொன்னார்.

    சுமார் இருபதாயிரம் அடி இருக்கலாம்

    விமானம் இத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறதே என்று விமானி தன் வேலையை நிறுத்தி விட்டால் நமது கதி என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். நம்முடைய இறுதிக்காலம் வரை நாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கீழே விழாமல் இருக்க முடியும்

    அருகில் இருந்தவர் பிரமிப்புடன் என்னைப் பார்த்தார்.

    இதெல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியுது?

    புத்தகங்களைப் படிச்சா நீங்கக் கூட இதைவிட அதிகமா தெரிஞ்சுக்கலாம். புத்தகம் படிச்சே ஒருத்தர் ஜனாதிபதி ஆகியிருக்காரு. தெரியுமா உங்களுக்கு?

    அப்படியா? ஆச்சரியமா இருக்கே

    என் அருகில் பயணம் செய்தவர் வாழ்நாளில் புத்தகத்தையே தொட்டிருக்கமாட்டார் போலிருக்கிறது. அப்படி இருந்தது அவருடைய நடவடிக்கை.

    அமெரிக்காவைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு புத்தகம் படிப்பதென்றால் கொள்ளை பிரியம். அந்த சிறுவயதிலேயே புத்தகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவனோ பரமஏழை. காசு கொடுத்துப் புத்தகம் வாங்க இயலாத நிலைமை. அவனுடைய தந்தையார் தச்சு வேலை செய்து அந்த குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஆனால் அந்த சிறுவனோ புத்தகத்தின் மீது கொண்ட காதலால் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற முதுமொழிக்கேற்ப பலரிடம் சென்று புத்தகங்களை இரவல் வாங்கி வந்து படிக்கும் வழக்கத்தை வைத்திருந்தான்.

    அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியாகி இருந்தது. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவன் மனதில் எழுந்தது. அந்த புத்தகம் ஒருவரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் கேட்டு அதை இரவல் வாங்கிக் கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தான். இரவு நேரமானது. ஆனாலும் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் தூங்குவது என்ற முடிவில் இருந்தான். அந்த சிறுவன். இரவு நேரம் எரிந்து கொண்டிருந்த விளக்கு எண்ணெய் தீர்ந்து போன காரணத்தினால் அணைந்து போனது. எனவே மேற்கொண்டு படிக்க இயலாத காரணத்தினால் அந்த புத்தகத்தை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு தூங்கி விட்டான்.

    அன்று இரவு கடுமையான மழை பெய்தது. காலையில் எழுந்து பார்த்த அந்த சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். காரணம் இரவில் பெய்த மழையில் அந்த புத்தகம் நனைந்து போயிருந்தது.

    புத்தகத்தின் சொந்தக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்து கொண்டிருந்தான். நீரில் நனைந்து போயிருந்த அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் சொந்தக்காரரைச் சந்தித்தான். நேற்றிரவு பெய்த மழையில் புத்தகம் நனைந்து போய் விட்டதாகவும் அதற்காக தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டான். ஆனால் அதன் உரியமையாளர் அவனை மன்னிக்கவில்லை. அந்த புத்தகத்திற்கான விலைக்கு பதிலாக தனது வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றார். அந்த சிறுவனும் புத்தகத்தின் விலைக்காக அவருடைய வயலில் மூன்று நாட்கள் வேலை செய்தான். மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்த புத்தகத்தை அவனிடமே கொடுத்துவிட்டார். அந்த சிறுவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

    அமெரிக்காவின் ஜனாதிபதி வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு அவனுடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது. ஆம். அந்த ஏழைப்பையனும் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியானான். அவன் பெயர் ஆபிரகாம் லிங்கன்.

    இந்த மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லுங்களேன். நான் கூட படிச்சிப் பார்க்கறேன்

    நம்ம முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இருக்காரில்லையா? அவர் எழுதிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தை வாங்கிப் படிங்க

    அதை வாங்கிப் படிச்சா நான்கூட ஜனாதிபதி ஆகமுடியுமா?

    "நீங்க ஜனாதிபதி ஆகறீங்களோ இல்லையோ. ஓண்ணு மட்டும் நிச்சயம். அந்த புத்தகத்தைப் படிச்சா நீங்க நல்ல இந்தியக்குடிமகனா ஆகலாம். அதுதானே

    Enjoying the preview?
    Page 1 of 1