Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bheeshmar Oru Punithanin Kathai
Bheeshmar Oru Punithanin Kathai
Bheeshmar Oru Punithanin Kathai
Ebook183 pages41 minutes

Bheeshmar Oru Punithanin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பீஷ்மர் ஒரு புனிதனின் கதை” என்ற தலைப்பில் பீஷ்மரின் வாழ்க்கையை சுருக்கமாக மிக எளிமையாக எழுதியுள்ளேன். இதை மகாபாரதத்தின் சுருக்கமான வடிவமாகவும் கொள்ளலாம். இந்த புத்தகத்தினை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

ஆர் .வி .பதி

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580138806355
Bheeshmar Oru Punithanin Kathai

Read more from R.V.Pathy

Related to Bheeshmar Oru Punithanin Kathai

Related ebooks

Reviews for Bheeshmar Oru Punithanin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bheeshmar Oru Punithanin Kathai - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    பீஷ்மர் ஒரு புனிதனின் கதை

    Bheeshmar Oru Punithanin Kathai

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    மன்னர் சந்தனு

    பீஷ்மர் பிறந்தார்

    பீஷ்மரின் சபதம்

    பீஷ்மர் பெற்ற வரம்

    பீஷ்மர் நடத்திய திருமணம்

    அம்பையின் சபதம்

    பீஷ்மர் செய்த யுத்தம்

    அம்பை சிகண்டியாதல்

    பீஷ்மரின் கவலை

    வாரிசு உருவாதல்

    பீஷ்மரின் ஆட்சி

    பாண்டவர்கள் பிறப்பு

    கௌரவர்கள் பிறப்பு

    துரியோதனன் செய்த சதி

    துரோணர் மறுப்பு

    மானம் காத்த துரியோதனன்

    தருமன் இளவரசனாதல்

    அரக்கு மாளிகை

    பீமன் திருமணம்

    திரௌபதி சுயம்வரம்

    பீஷ்மர் முதலானோரின் அறிவுரை

    இந்திரப்பிரஸ்தம்

    ராஜசூய யாகம்

    சகுனியின் திட்டம்

    பகடை விளையாட்டு

    துச்சாதனன் துகிலுரிதல்

    வனவாசம்

    அர்ஜீனன் பெற்ற அஸ்திரம்

    அக்ஞாதவாசம்

    துரியோதனன் தொடுத்த போர்

    போர் ஆயத்தம்

    பீஷ்மரின் அறிவுரை

    கிருஷ்ணரின் அறிவுரை

    ரகசியம் வெளிப்பட்டது

    பீஷ்மர் சேனாதிபதியாதல்

    பீஷ்மரிடம் ஆசி பெறுதல்

    பீஷ்மரின் வியூகங்கள்

    பீஷ்மர் மறுத்தல்

    பீஷ்மர் பணிந்தார்

    பாண்டவர்கள் பீஷ்மரைச் சந்தித்தல்

    அம்புப்படுக்கையில் பீஷ்மர்

    பீஷ்மர் சொன்ன கதை

    நன்றி மிக்க கிளி

    பீஷ்மரின் அறிவுரை

    ஏமாற்றம்

    வீர அபிமன்யு

    துரோணரின் முடிவு

    நாராயண அஸ்திரம்

    கர்ணன் தளபதி ஆகுதல்

    கர்ணன் மாண்டான்

    சல்லியன் மாண்டான்

    சகுனியின் முடிவு

    துரியோதனன் மரணம்

    திரௌபதி சபதம்

    ஆறுதல்

    காந்தாரியின் சாபம்

    பீஷ்மர் மறைந்தார்

    முன்னுரை

    வாசகர்களுக்கு வணக்கம். பீஷ்மர் ஒரு புனிதனின் கதை என்ற தலைப்பில் பீஷ்மரின் வாழ்க்கையை சுருக்கமாக மிக எளிமையாக எழுதியுள்ளேன். இதை மகாபாரதத்தின் சுருக்கமான வடிவமாகவும் கொள்ளலாம். இந்த புத்தகத்தினை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

    தங்களன்புள்ள,

    ஆர்.வி.பதி

    *****

    மன்னர் சந்தனு

    இந்து மதத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்பட்டு வரும் இரண்டு காவியங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம். இதில் மகாபாரதத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பாத்திரம் பீஷ்மர். பீஷ்மர் என்றால் சத்தியத்தைக் காப்பவர் என்று பொருள்.

    குரு வம்சத்தைச் சேர்ந்தவர் மன்னர் சந்தனு. சந்தனு மன்னரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்து வந்தார்கள்.

    ஒரு நாள் சந்தனு மன்னர் கங்கை நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு பெண்ணைக் கண்டார். கண்டதும் காதல் என்பது போல அப்பெண்ணின் மீது காதல் வயப்பட்டார். அப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பினார். அப்பெண்ணிடம் சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

    அப்பெண் மன்னரை மணந்து கொள்ள சில நிபந்தனைகளை விதித்தாள். தனது நிபந்தனைகளுக்கு மன்னர் உடன்பட்டால் தான் அவரை மணந்து கொள்ளத் தயாராய் இருப்பதாய்த் தெரிவித்தாள். அப்பெண்ணின் மீது கொண்ட காதலால் மன்னர் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளத் தயாராய் இருந்தார். அந்தப் பெண் நான்கு நிபந்தனைகளை மன்னரிடத்தில் தெரிவித்தாள்.

    மன்னரே. தாங்கள் என்னுடைய தாய் தந்தையரைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது. இது எனது முதல் நிபந்தனை

    மன்னர் முதல் நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாய் தெரிவித்தார்.

    எனது ஒவ்வொரு செயலும் அர்த்தம் நிறைந்தது. எனவே நான் செய்யும் எந்த செயலைப் பற்றியும் ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. இது எனது இரண்டாவது நிபந்தனை

    இரண்டாவது நிபந்தனையை மன்னர் ஏற்றுக் கொள்வதாய் தெரிவித்தார்.

    எக்காரணத்தைக் கொண்டும் என்னை தாங்கள் கோபிக்கக் கூடாது. இது எனது மூன்றாவது நிபந்தனை

    இதையும் ஏற்பதாய் மன்னர் தெரிவிக்க அப்பெண் தனது கடைசி நிபந்தனையைத் தெரிவித்தாள்.

    தாங்கள் எனக்குப் பிடிக்காத செயல் எதையும் செய்யக் கூடாது. இது எனது நான்காவது நிபந்தனை

    மன்னர் இதையும் ஏற்றுக் கொள்ளுவதாய் தெரிவித்தார்.

    மன்னரே. தாங்கள் ஒப்புக் கொண்ட இந்த நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறி நடந்தாலும் நான் அக்கணமே தங்களை விட்டு விலகிச் சென்று விடுவேன்

    அப்பெண்ணின் மீதிருந்த மோகத்தினால் மன்னர் அவள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்தார். எனவே அப்பெண் மன்னரை மணந்து கொண்டாள்.

    சிறிது கால வாழ்க்கைக்குப் பின்னர் அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த உடன் அவள் அக்குழந்தையை நதியில் வீசிவிட்டாள். இதைக் கண்ட மன்னர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவரால் ஏதும் கேட்க இயலாத சூழ்நிலை. அவளது செயல் எதையும் கேட்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இப்படியே தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகள் அனைத்தையும் அவள் நதியில் வீசி விட்டாள். மன்னரால் இதைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஆயினும் ஏதும் கேட்காமல் பேசாது இருந்தார்.

    *****

    பீஷ்மர் பிறந்தார்

    சில காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கு எட்டாவதாய் ஒரு குழந்தை பிறந்தது. வழக்கம் போல அப்பெண் அக்குழந்தையை வீசி எறிய நதிக்கரைக்குச் சென்றாள். இவ்வளவு காலம் பொறுமையாய் இருந்த மன்னரால் இப்போது பொறுமை காக்க இயலவில்லை. சத்தியத்தை மீற முடிவு செய்தார்.

    நமக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை நதியில் வீசிவிட்டாய். இதற்கான காரணம் என்னவென்று சொல்?

    மன்னர் இவ்வாறு கேட்டதும் அப்பெண் மன்னர் செய்து கொடுத்த சத்தியத்தை நினைவூட்டினாள்.

    மன்னரே. தாங்கள் சத்தியத்தை மீறி விட்டீர்கள். நான் தங்களைவிட்டு விலகும் நேரம் வந்து விட்டது. அதற்கு முன் எனது கதையைத் தங்களுக்குக் கூற விரும்புகிறேன்

    இதைக் கேட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1