Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Janakiyin Dairy Kurippugal
Janakiyin Dairy Kurippugal
Janakiyin Dairy Kurippugal
Ebook41 pages38 minutes

Janakiyin Dairy Kurippugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜானகியும் ராகவனையும் பார்ப்பவர்கள் இவர்கள் மாதிரி ஒரு ஆதர்ஸ தம்பதி உண்டா என்று தான் நினைப்பார்கள். ராகவன் மனதிலும் அதே பெருமைதான். தன்னை மாதிரி ஒரு கணவன் கிடைக்க ஜானகி பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்ற பெருமிதத்தில் இருக்கும் அவர், ஜானகியின் மனதிலும் அதே பெருமிதம் தான் இருக்கும் என்றும் தீர்மானமாக நம்புகிறார், அவரின் இந்த நம்பிக்கையை பொடிப்பொடியாக உடைக்கிறது, ஜானகியின் இறப்பிற்கு பிறகு அவர் கையில் கிடைக்கும் ஜானகியின் டைரி குறிப்புக்கள்.

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580164709730
Janakiyin Dairy Kurippugal

Related to Janakiyin Dairy Kurippugal

Related ebooks

Reviews for Janakiyin Dairy Kurippugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Janakiyin Dairy Kurippugal - Sushi Krishnamoorthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜானகியின் டைரி குறிப்புக்கள்

    Janakiyin Dairy Kurippugal

    Author:

    சுசி கிருஷ்ணமூர்த்தி

    Sushi Krishnamoorthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sushi-krishnamoorthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஜானகியின் டைரி குறிப்புக்கள்

    அப்பா! அம்மா வருஷாப்தீகம் அடுத்த மாசம் வருதே. ராமு வாத்தியார் இன்னிக்கு சாயங்காலம் வரேன்னு சொல்லியிருக்கார். அதனாலே நீங்க சீக்கிரம் ‘வாக்’ போயிட்டு வந்துடுங்கோ – சங்கரும் மாலினியையும் கூட சாயங்காலம் சீக்கிரம் வரும்படிச் சொல்லியிருக்கேன். நாம எல்லோரும் சேர்ந்து என்ன பண்ணலாம்னு இப்பவே முடிவு பண்ணினாத்தான் நன்னா நடத்த முடியும்ன்னு சொன்ன வாசுவை வாஞ்சையுடன் பார்த்து தலையாட்டினார் ராகவன் மனதிற்குள்,

    இந்தப் பிள்ளைக்குத்தான் எவ்வளவு பொறுப்பு? அதற்கு தோதாக அவன் பெண்டாட்டி கமலாவும் எவ்வளவு ஒத்துழைக்கிறா, ஆனால் இந்தச் சின்னவன் சங்கரும் மாலினியும் ஏன்தான் இப்படி எலியும் பூனையுமா இருக்காளோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட விசுவநாதனுக்கு.

    ஜானகி போய் அதற்குள் ஒரு வருடமாகி விட்டதா? அவள் இருந்த மட்டும் வெளியில் தெரியாமல் இருந்த சங்கர் மாலினி விரிசல் இந்த ஒரு வருடத்தில் பூதாகரமாக வளர்ந்து எப்போ விவாகரத்தில் முடியுமோ? என்ற நினைப்பும் மனதில் தோன்றி பயமுறுத்தியது.

    ஜானகியைப் பற்றி நினைத்தவுடன் அவர் முகத்தில் அவரையும் அறியாது ஒரு புன்னகை தோன்றியது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை. அதை நினைத்தவுடன் அவர் மனதில் உடனே வந்தது ஒரு நினைப்புத்தான்.

    நம்ம வாழ்க்கையைத்தான் எவ்வளவு அருமையாக வாழ்ந்து விட்டோம். பெரிதாக சண்டை என்று ஒன்றும் கிடையாது. ஜானகி இருந்த மட்டும் தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒன்றும் பெரிதாக கேட்டதில்லையே – காரணம் நாம்தான் அவளை எதுவும் கேட்கும்படியாக வைத்துக் கொள்ளவே இல்லையே? அவளை ராணி மாதிரின்னா வச்சுண்டு இருந்தோம்?

    ராகவனுக்குதான் ஒரு ஆதர்ஸ கணவன் என்ற கர்வம் மனதிற்குள் என்றுமே உண்டு. தனக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வீடு விட்டா ஆபிஸ். ஆபிஸ் விட்டா வீடு என்று இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1