Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pongalo Pongal
Pongalo Pongal
Pongalo Pongal
Ebook51 pages18 minutes

Pongalo Pongal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'பொங்கலோ பொங்கல்' என்ற தலைப்பில் திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி எழுதிய இந்நூல் பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்கும் சிறப்பான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம். இதைப் பற்றிய விபரங்களை சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெரியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580125909147
Pongalo Pongal

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Pongalo Pongal

Related ebooks

Reviews for Pongalo Pongal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pongalo Pongal - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    சிறுவர் நூல்

    பொங்கலோ பொங்கல்

    Pongalo Pongal

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    என்னுரை

    ‘பொங்கலோ பொங்கல்’ என்று என் பிறந்த வீட்டுக்கூட்டம் முழுவதும் இணைந்து புதுதில்லியில் ஒருமித்த குரலில் உரக்கக் கூற, பெரிய வெங்கல பானையில் பொங்கும் பாலில் தேவையானவற்றைப் போட்டு மூத்த மருமகளான என் தாய் சர்க்கரைப் பொங்கலைக் கிளறும் நினைவுதான் இப்புத்தகம் எழுதி முடிக்கும் வரை மனத்திரையில் ஓடிக் கொண்டேயிருந்த காட்சி.

    வாழையிலையில் அழகாக அடுக்கி வைத்த கரும்பு, காய் வகைகளின் ஊடே நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கிராமத்தின் பசுமையான வயலையும், அந்த பசுமைக்கு உழைத்த வேளாண் மக்களைப் பற்றி அறிந்த அனுபவங்கள் ஆகியவை கண்முன் விரிந்தன.

    ‘பாட்டி சொல்லும் கதை வரிசை’யில் எழுதுவது பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல, எழுதும்பொழுது அதனுடன் பயணிப்பது மிகுந்த சுகத்தை அளித்து, மனதை மயிலிறகால் வருடும் விஷயமாகும்.

    முனைவர் அரு. சோலையப்பன் அவர்களை நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

    எழுதும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, புத்தகமாக, அழகான அட்டை படத்துடன் அச்சிட்டு ‘வெள்ளைத் தாள்களில் விளக்கேற்றி வைப்பவர்கள்’ அளிக்கையில் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    பொங்கல் கொண்டாட்டம் என்பது புது சினிமா, ஓயாத தொலைக்காட்சி அலறல்களாக மாறியுள்ள இக்கால கட்டத்தில் காலங்காலமாக, பாரம்பரியத்தோடு இந்தியக் குடும்பங்கள் வழிநடத்தும் பல்வேறு விஷயங்களை ‘பாட்டி சொல்லும் கதை வரிசை’யில் சொல்கிறார்.

    இந்த வேள்வியில் நானும் ஒரு எழுத்தாளராக பங்கு கொள்வது இறைவன் எனக்களித்த கொடை என்று கருதுகிறேன்.

    காத்தலட்சுமி சந்திரமௌலி

    1

    என்னப்பா சேகர், அடுத்து பொங்கல் பண்டிகை வருது. அதற்கு ஏற்பாடுகளை எல்லாம் செய்யணும் என்று தன் மூத்த மகனை அழைத்து பாலா பாட்டி கூறினாள்.

    "அம்மா, இப்பொழுதுதான் மார்கழி முப்பது நாளும், பாவை நோன்பு நோற்று, குழந்தைகளுக்கு ‘குட்டிக் கோதை’ கதையெல்லாம் சொல்லி முடிச்சாச்சு. கொஞ்சம் ஓய்வு

    Enjoying the preview?
    Page 1 of 1