Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pakka Kadhaigal Part - 1
Oru Pakka Kadhaigal Part - 1
Oru Pakka Kadhaigal Part - 1
Ebook83 pages28 minutes

Oru Pakka Kadhaigal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதில் இடம் பெறும் ஒரு பக்க கதைகள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துடையது படிக்கின்ற வாசகர்களின் உள்ளங்களில் உணர்வுபூர்வமான அனுபவங்களையும் ஏற்படுத்தும்

ஒவ்வொருவரும் கடந்து வந்த அனுபவங்களையும் இவைகளை படிக்கையில் ஆசைப்போட இயலும் சமூக கண்ணோட்டத்திலும், தனிப்பட்ட மனிதர்களின் உணர்வு சார்ந்த சம்பவங்களும் இக்கதைகளில் இடம்பெற்றிருக்கிறது

ஒவ்வொரு கதையும் எளிதாகவும், இனிதாகவும், இதமாகவும் வாசிக்க ஏற்றதுமாய் இருக்கிறது

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580146507419
Oru Pakka Kadhaigal Part - 1

Read more from Kavimugil Suresh

Related to Oru Pakka Kadhaigal Part - 1

Related ebooks

Reviews for Oru Pakka Kadhaigal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pakka Kadhaigal Part - 1 - Kavimugil Suresh

    http://www.pustaka.co.in

    இறைவன் கொடுத்த வரம்

    சிறுகதைகள்

    Iraivan Kodutha Varam

    Sirukathaigal

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தனிமை

    2. வெளிச்சம்

    3. மனதில் சுமந்தவள்

    4. டீ

    5. நல்லா இருக்கு

    6. யாருக்கு யார்

    7. நானிருக்கேன்

    8. வண்டியில் லிப்ட்

    9. சுரேந்தர்கள் தேவை

    10. புரியாத புதிராய்

    11. ஐந்து ஆயிரம்

    12. தொற்றுக்கு முற்று

    13. மீள மீண்டும்

    14. உயிர்த்தெழுதல்

    15. சும்மா இருக்காதே

    16. இழப்பு

    17. ஒருவருக்கொருவர்

    18. வரன்

    19. இறைவன் கொடுத்த வரம்

    20. பிடித்த வாழ்வு

    21. சொக்கத்தங்கம்

    22. சொந்த வீடு

    23. வீட்டுக்கு வீடு

    24. சமாதி

    1. தனிமை

    அந்த வீட்டில் யாரும் இல்லை, ஒரே ஒரு பெரியவர் மட்டும் இருந்து வந்தார். எப்பொழுதும் கலகலப்பாக பத்துபேர் இருக்கும் வீடு.

    இப்பொழுது அந்த முதியவரை தவிர யாருமில்லை.

    வெளி கதவு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே ஆள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை.

    உள்ளே முதியவர் புத்தகம் படிப்பது, சமைப்பது, உண்பதும், உறங்குவதும் ஆகவே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

    அவருக்கு தேவையான அனைத்து அரிசி, பருப்புகளும் வீட்டுக்குள் கிடந்தது.

    எவ்வளவு நேரம்தான் புத்தகம் படிப்பார். சில நேரங்களில் காதில் ஹெட்போன் போட்டு மொபைலில் பாடல் கேட்பார்.

    அப்புறம் ஒரு சிலரோடு போனில் பேசுவார், இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது.

    ஒருநாள் இரவு 9 மணிக்கு பூட்டப்பட்ட அந்த வீட்டை முகமூடி திருடனைப் போல ஒருவர் வந்து திறந்து, படுத்திருந்த அந்த முதியவரை தொட்டு எழுப்பினான்.

    முதியவர் தூக்கத்தில் இருந்து திடீரென்று எழுந்ததால், திக்கென்று அவருக்கு பயம் உண்டாயிற்று.

    அப்பா நான்தான் பயப்படாதீங்க. என அவரின் மகன் டாக்டராய் இருக்குறபடியினால் முதியவரை பரிசோதித்துப் பார்த்து, இப்ப நீங்க கொரோனா தொற்றிலிருந்து க்யூர் ஆயிட்டீங்க என்றான்.

    2. வெளிச்சம்

    வீட்டிலோ, நாட்டிலோ எங்கு வாழைப்பழத்தோல் இருந்தாலும், அதை எடுத்து குப்பை கூடையில் போட வேண்டியது நல்ல பழக்கம் என மூன்றாம் வகுப்பு ஆசிரியர் முனுசாமி தன் மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    மாணவர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    முனுசாமி என்ன சொல்கிறாரோ அதை அப்படியே வாழ்வில் செய்யக்கூடியவர்.

    ஆகவே, மாணவர்கள் அவர் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். மதிப்புடன் அவரை நடத்தினார்கள்.

    அந்த வகுப்பில் படிக்கும் ராஜாவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி தன் வீட்டில் தன் அப்பாவிடம், முனுசாமி சார் சுத்தம், சுகாதாரம், மற்றவருக்கு உதவி செய்தல் இப்படிப்பட்ட நல்ல காரியங்களை எங்களுக்குச் சொல்லித் தறாரு. அப்பா அதே நேரத்தில் அவரும் நிறைய பேருக்கு உதவி செய்கிறார் அவர் வீட்டை சுத்தமா வச்சிருக்காரு என்றான்.

    ராஜா அநேக நாட்கள் ரோட்டோர கடைகளில் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு, தோலை ரோட்டில் போடும் மனிதர்களை பார்த்து கோபப்படுகிறான்.

    மனதிற்குள் கண்ணு இருந்தும், மக்கள் ஏன் குருட்டுத்தனமாக இப்படி நடந்துகொள்கிறார்கள் என அவன் கவலைப்பட்டது உண்டு.

    தன் ஆசிரியர் முனுசாமியோ பிறவிக் குருடனாய் இருந்தும், பார்வை உள்ளவர்களுக்கு வெளிச்சமாய்தான் திகழ்கிறார்.

    ஆனால், பார்வையுள்ள இவர்களோ குருடர்கள் ஆகவே இருக்கிறார்களே என்று கவலைப்பட்டான்.

    3. மனதில் சுமந்தவள்

    மாலா

    பெயரை உச்சரிக்கும்போதே ரகுவின் மனம் குதூகலித்தது. அப்சரஸ் சிலை போல

    Enjoying the preview?
    Page 1 of 1