Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannana Kanney
Kannana Kanney
Kannana Kanney
Ebook114 pages44 minutes

Kannana Kanney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரோஜா, மாலினி, ரதி இம்மூன்று பெண்களின் போராட்ட வாழ்க்கையும், விடாமுயற்சியும், அவர்களின் தியாகங்களையும் யதார்த்த உண்மையோடு விவரிக்கின்ற கதைதான் "கண்ணான கண்ணே". இக்கதையைப் படிக்கின்ற உள்ளங்களில் லட்சியத்தீ கொழுந்துவிட்டெரியும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய சிறப்பு மிக்க கதை.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580146507296
Kannana Kanney

Read more from Kavimugil Suresh

Related to Kannana Kanney

Related ebooks

Reviews for Kannana Kanney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannana Kanney - Kavimugil Suresh

    https://www.pustaka.co.in

    கண்ணான கண்ணே

    Kannana Kanney

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6.

    அத்தியாயம் 7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9.

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம்-1

    ரோஜா சமையலறையிலிருந்து அவளின் அம்மா சிவகாமி கூப்பிட்டாள்

    ரோஜா பெயரில் மட்டுமல்ல குணத்திலும் நறுமணம் வீசும் அவள் வெள்ளை நிறம் யாவரும் விரும்பும் அழகிய முகம் வயது இருபத்தி இரண்டு

    எந்த கஷ்டமும் இல்லாமல் ஒழுக்கத்துடன் இஷ்டமாய் வளர்ந்தவள்

    அம்மா வந்துட்டேன் வீட்டு வராண்டாவில் கதை புத்தகத்தின் எட்டாம் பக்கத்தின் ஓரத்தில் படித்த பக்கத்தை மறக்காமல் மடித்து வைத்து விட்டு அந்த இடத்தை விட்டு கடந்தாள்

    கூப்பிட்டியா அம்மா என்றாள்

    சிறிது நேரத்திலேயே பொறுமையிழந்த அவளின் அம்மா சிவகாமி ஏன்டி என்ன பண்ற கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்றாள்

    இதோ இப்ப வந்துட்டேன் அவளின் அம்மா ஆசையாய் வாங்கி கொடுத்த கால் கொலுசின் முத்துக்கள் ஜல் ஜல் என்று ஒலிக்க ஓடி அம்மாவிடம் வந்தாள்

    சொல்லுமாஎன்றால் மூச்சிரைக்க

    ஒன்னும் இல்ல உன்னைய பொண்ணு பார்க்க வராங்களாம்

    ரோஜாவின் மனதில் கேள்விக்குறி தொக்கி நின்றது அம்மா யாரை கேட்டு இதெல்லாம் ஏற்பாடு பண்றீங்க

    நான் என்னடி செய்ய போய் உங்க அப்பாவ கேளுஎன்றாள் சிவகாமி அம்மாள்

    அப்பா தன்மீது அக்கறை கொண்டவர் என் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்

    ஆகவே நல்ல இடம்தான் பார்த்திருப்பார் இருந்தாலும் இப்ப எனக்கு இது அவசியமா நான் கேட்டேனா எதையும் அதிர்ந்து பேசாத ரோஜா வீட்டிற்குள் நுழைந்த அப்பாவிடம் அப்பா இதெல்லாம் எதுக்கு அப்பா என்றாள்

    முடியில்லாத தலையை தொட்டு தடவிய கந்தசாமி சிரிப்பு மாறாமல் கால காலத்துக்கு எதை எப்பப்ப செய்யணுமோ அதையதை அப்பப்பவே செய்திடனும்என்றார்

    இப்ப எனக்கு என்ன அவசரம்பா

    இந்த காலத்துல நல்ல மாப்பிள்ளை அமையும்போதே கல்யாணம் முடிச்சிக்கிறது புத்திசாலித்தனம்

    புரியுதுப்பா இருந்தாலும் இன்னும் நான் அதிகம் படிக்கணும்

    அதப்பத்தி கவலைப்படாத கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட படிக்கலாம்

    அது எப்படி முடியும்

    எல்லாம் முடியும்மா மாப்பிள்ளை கிடைக்கலன்னு எத்தனையோ பேர் கஷ்டப்படறாங்க அதனால இத தட்டிக் கழிக்காதம்மா

    எனக்கு பயமா இருக்குப்பா உங்களை அம்மாவா அண்ணனே எல்லாம் விட்டுட்டு என்னால முடியாது

    அப்படி சொல்லாதடா வேற மாவட்டத்துக்கா உன்னைய கட்டிக் கொடுக்கப் போறோம் நம்ம பாலக்கோட்டிலதான் பஸ்ல ஏறுனா முக்கா மணி நேரத்தில் அப்பா உன்னை பார்க்க அங்க வந்திடுவேன் இல்ல நீ தைரியமான பொண்ணு இப்படி பயப்படற

    எப்படி பேசினாலும் அப்பாவின் திட்டத்தை தன்னால் மாற்ற முடியாது என்பதனை உணர்ந்த ரோஜா சரிப்பா எல்லாம் உங்க விருப்பப்படியே செய்யுங்க என்றாள்

    அம்மா சமையல் அறையிலிருந்து வெளியே வந்து வெகு நேரம் ஆயிற்று ரோஜாவை பார்த்து அப்பா வாங்கிட்டு வந்த மல்லிகை இரண்டு முழம் இருக்கு சீக்கிரம் குளிச்சிட்டு பட்டுப்புடவை கட்டி வச்சிக்கோ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம் ஆயிடுச்சு என அவசரபடுத்தினாள்

    அவர் சிவகாமி பலகாரம் இனிப்பு கடையில வாங்கிட்டு வரணுமா என்றார்

    இல்லைங்க வீட்டிலேயே செஞ்சுட்டேன்

    என்ன செஞ்ச

    பால் பாயாசமும் வடையும்

    அது போதும் என தலையசைத்தார்

    ரோஜா குளியல் அறைக்குள் நுழைந்தாள் அந்த அறை முழுவதும் மைசூர் சாண்டல் நறுமணம் வீசியது கொஞ்சநேரத்தில் பனியில் பூத்த ரோஜா மலராய் தலையை துவட்டிய வண்ணம் வெளியே வந்து டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடந்து சென்றாள்

    பளபளப்பாய் பச்சை நிறத்தில் பொன் நிறத்தோடு காணப்பட்ட புத்தம்புது பட்டாடையை உடுத்திக் கொண்டாள் காது கழுத்துக்கு தங்க ஆபரணம் போட்டுக்கொண்டாள் அழகு முகத்துக்கு இன்னும் அழகு சேர்க்க ஃபேர் அண்டு லவ்லி தடவி மிதமாய் பவுடரை பூசினாள் நெத்திச்சுட்டி சூட்டிட இன்னும் அலங்காரம் செய்துவிட பக்கத்து வீட்டு தோழி ஓடோடி வந்தாள்

    சிவகாமி அம்மாள் வரும் மாப்பிள்ளைக்கும் அவர்கள் பெற்றோருக்கும் எப்படி வணக்கம் சொல்லி மரியாதை செலுத்த வேண்டும் என மகளுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள்

    போம்மா நீ சொல்றதெல்லாம் எனக்கு போரடிக்குது என வெட்கத்தோடு சிணுங்கினாள் ரோஜா

    ரோஜாவின் அண்ணன் அவர்களை கூட்டி வர பஸ்டாண்டில் வெகுநேரம் காத்திருந்தான்

    மாப்பிள்ளை வீட்டார் காரில் வரேன் என சொல்லியிருந்தார்கள் என்ன ஆயிற்று

    இன்னும் வரவில்லையே என மனம் யோசிக்க ஆரம்பித்தது நடராஜன் வெயில் கொடுமையின்

    உஷ்ணம் தாங்க முடியாமல் அருகே இருந்த பெட்டிக்கடையில் காளிமார்க் சோடா ஒன்னு கொடுங்கவாங்கிக் குடித்தான் அது சில்லென கழுத்தின் வழியாக உள்ளே இறங்கியது

    ரோஜாவின் அண்ணன் நடராஜன் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளூரிலேயே பணியாற்றி வருபவன்

    அப்பா சொல்லை தட்டாத பிள்ளை எள் என்றால் எண்ணெயாய் நிற்பவன் ஊர்க்காரர்கள் எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு தங்கமான பையன்

    ஆசிரியை வேலையில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தங்களுடைய விவசாய நிலமாக இருக்கும் இருபது ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு பலன் காண தீவிரமாக செயல்பட்டு வருபவன்

    ஒவ்வொரு நாளும் பள்ளி பணியை முடித்துவிட்டு மாலை வேளையில் வீட்டுக்கு வந்ததும் முகம் கால் அலம்பி சூடாக ஒரு டீ பருகிவிட்டு பாட்டா செருப்பை காலில் செருகிக்கொண்டு இன்றைக்கு தோட்டவேலை என்ன செய்து முடித்திருக்கிறார்கள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டதா கிணற்றில் தண்ணீர் ஊறுகிறதா என விவசாய வேலையில் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக்கொண்டவன்

    பசுமை விரும்பி தன் நிலத்தின் குத்தகைக்காரனிடம் அன்றாட விவசாய நிலவரங்கள் செயல்பாடுகளை நிகழ்வுகளை கேட்டு தெரிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1