Manam Virumbuthey Malarey
()
About this ebook
குடிகார அப்பாவால், அம்மா கொலை செய்யப்பட்டு அனாதையாய் விடப்பட்ட ராதிகா. ஒரு கிறிஸ்தவ விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இறையன்பை அங்கே அறிந்து உணர்ந்து படித்து வளர்ந்து, ஆளாகி இந்த சமுதாயத்திற்கு பயனுள்ள சேவகியாக எப்படி மாறுகிறாள். அவளின் சமூகப் பணியில் வரும் இடறல்களை எப்படி சமாளிக்கிறாள்? அவள் விரும்பின வாழ்க்கை அவளுக்கு கிடைத்ததா? என்பதை எல்லாம் இக்கதையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Read more from Kavimugil Suresh
Kannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pakka Kadhaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNeelagiriyar Rating: 0 out of 5 stars0 ratingsUdaikkum Uligal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsManathil Thullina Thuli Pakkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Thoppu Kuyilgal Rating: 0 out of 5 stars0 ratingsKannana Kanney Rating: 0 out of 5 stars0 ratingsBharathiyin Kannamma Rating: 0 out of 5 stars0 ratingsNaan Rating: 0 out of 5 stars0 ratingsMann Meethil Vinn Meengal Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Nadhiyin Odangal Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thediya Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Siringa Boss Rating: 0 out of 5 stars0 ratingsKavimugil Sureshin Katturaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyatha Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manam Virumbuthey Malarey
Related ebooks
Ennuyir Nee Thaaney Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsMaarupadum Konangal Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsபனித்திரை Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Vetti Verkal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 5 out of 5 stars5/5Puyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsOru Thoppu Kuyilgal Rating: 0 out of 5 stars0 ratingsManjam Konda Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyirey Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே .. Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsMarikozhundhu Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsNerunji Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manam Virumbuthey Malarey
0 ratings0 reviews
Book preview
Manam Virumbuthey Malarey - Kavimugil Suresh
https://www.pustaka.co.in
மனம் விரும்புதே மலரே
Manam Virumbuthey Malarey
Author:
கவிமுகில் சுரேஷ்
Kavimugil Suresh
For more books
https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 1
ராதிகா நடையில் உடையில் கெத்தானவள், கம்பீரமானவள் யாராலும் அசைக்க முடியாத நெஞ்சுரம் கொண்டவள் மாநிறம் வசீகரிக்கும் முகம்.
எளிதில் யாராலும் அவளை ஏமாற்றிவிட முடியாது. வயது இருபத்தி எட்டு திருமணத்தைப் பற்றி சிந்தனையே கிடையாது. படிப்பு எம்.எஸ் டபிள்யூ முடித்து தனியாக தாய் எனும் பெயரில் ஒரு சமூக நிறுவனத்தை நடத்தி வருகிறாள்.
எளிய குடும்பத்தில் பிறந்தவள். பல பிரச்சனைகளை கடந்து வந்தவள். அதனால்தான் அவளால் பிறரின் வேதனைகள், துக்கங்கள், துயரங்களை உணர முடிகிறது.
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடிகிறது. உதவி செய்ய இயல்கிறது.
அந்தத் தடங்கம் கிராமத்தில் அவளை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இன்னும் சொல்ல போனால் தருமபுரி மாவட்டத்திலே அவள் பெயர் சிறப்பு பெற்றதாய் காணப்படுகிறது.
அவளின் சமூக சேவையை பாராட்டி மாவட்ட கலெக்டர் அனேக விருதுகளை கொடுத்திருக்கிறார். சேவைச் செம்மல், அன்னை தெரசா விருது, காந்தியடிகள் விருது, அறப்பணி விருது, கலாம் சேவை விருது, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
பல நிறுவனங்களும் அவளை அழைத்து கௌரவப்படுத்தி இருக்கிறது.
அவளுடைய இல்லத்தில் நாற்பது முதியோர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வெளிநாடுகளை நோக்கி கையேந்தவில்லை.
உள்நாட்டிலே உள்ளூரிலே இரக்கம் உள்ள பலரின் கரங்கள் அந்த இல்லத்திற்கு நன்கொடை கொடுத்து வந்தது.
பெற்றோர்களை இழந்த ராதிகா அந்த நாற்பது முதியோர்களையும் தன் சொந்த பெற்றோர்களாக நினைத்து அவர்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தாள்.
முப்பது ஆண்கள், பத்து பெண்மணிகள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஐம்பத்தி ஐந்து வயதுக்கு மேல்தான் இருக்கும்.
அதில் சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், சொந்த பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டவர்கள், சொத்துக்களை இழந்து, அனாதையாய் கிடந்த அவர்களை கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு இந்த இடத்திலே அவர்களுக்கு சகலத்தையும் செய்து வந்தால் ராதிகா.
அந்த இல்லத்தில் பணியாற்றுவதற்கு புருஷனை இழந்திருந்த, புருஷனால் கைவிடப்பட்ட மூன்று பெண்மணிகள் கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு வயது மதிக்கத்தக்கவர்களாய் இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தாள்.
அங்கே ராதிகாவுடன் பணி செய்து வந்தார்கள். அவர்கள் சம்பளத்தை எதிர்பார்க்கவில்லை. மன நிறைவை கொண்டவர்களாய் அந்த இடத்திலே இருந்து வந்தார்கள்.
இருந்தாலும் ராதிகா அவர்களுக்குரிய மாத சம்பளத்தை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் ஸ்டேட் பேங்கில் அவரவர்கள் பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து மாதந்தோறும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை அதிலே போட்டு வந்தாள்.
அந்த இல்லம், ஊரைத் தள்ளி முப்பது அடி தூரத்தில் இருந்து வந்தது. நல்ல தண்ணீர் வசதி, பசுமை பொருந்திய இடம்.
உள்ளே நல்ல கார்டன், உட்கார ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள், வாழை மரங்கள், மாதுளை மரங்கள், மாமரம் என இரண்டு ஏக்கர் நிலத்திற்குள் எல்லாம் ஆங்காங்கே செழிப்புடன் இருந்து வந்தது. அந்த இல்லத்திற்குள் வருகிறவர்கள் மீண்டும் வெளியே செல்ல வேண்டும் எனும் எண்ணம் வராதபடிக்கு இயற்கை பொருந்திய இடமாய் காணப்பட்டது.
சந்திரன் எனும் பத்திரிக்கையில் இருந்து இன்று அவளை பேட்டி காண்பதற்காக வர இருக்கிறார்கள் என்பதால் அவள் எங்கும் செல்லாமல் தன் அலுவலகத்தின் முன்னறையில் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
சரியாக சொல்லி வைத்தபடி பத்து மணிக்கு சந்திரன் தினசரி பத்திரிகையின் நிருபரும், போட்டோ கிராஃபரும் சிரித்த முகத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். சிரித்தபடியே இருவரும் மேம் குட் மார்னிங்
என கூறினார்கள்.
வெல்கம் ப்ளீஸ் சிடவுன்
என எதிராக இருந்த சோபாவிலே உட்காரும்படி கையமர்த்தினாள்.
தேங்க்யூ மேம்
என்று சொன்ன வண்ணம் அந்த இருக்கையில் தாராளமாக உட்கார்ந்தார்கள்.
என்ன சாப்பிடுறீங்க கூல் ட்ரிங்க்ஸ், ஆர் காபி டீ
என்றாள்.
நிருபர் நோ தேங்க்ஸ்
என்று மறுத்தான்.
இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க எங்க இடத்துக்கு வந்து வேண்டாம் என்று சொல்லக்கூடாது நோ ஃபார்மாலிட்டிஸ்
என்றாள்.
போட்டோகிராபர் ஓகே மேம் யுவர் வில்
என்றான்.
டீ சாப்பிடுவிங்கதான
என்றாள்.
இருவரும் ஒரு சேர தலையாட்டினார்கள்.
உள்ளே இருந்த ஒரு பெண்மணியை கூப்பிட்டாள் சாந்தாம்மா மூணு டீ கொண்டு வாம்மா கொஞ்சம் இஞ்சி சேர்த்துக்கோம்மா.
சரிம்மா.
டீ வரும் வரை சும்மா இருக்க கூடாது என நினைத்தவள் சரி உங்க வேலையை நீங்க ஆரம்பிக்கலாம்
என சிரித்தாள்.
நிருபர் மேம் உங்கள மாதிரி சேவை மனப்பான்மை எல்லாருக்கும் வராது உங்களுக்கு எப்படி.
எப்படின்னு சொல்ல தெரியல மத்தவங்களுக்கு நல்லது செஞ்சா மனசுக்கு நிறைவா இருக்கு. சின்ன வயசுல இருந்தே என்கிட்ட எது இருந்தாலும் மத்தவங்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுற மனசு எனக்கு இருந்தது. அது அப்படியே தொடர்ந்து வருது.
கிரேட் மாம் இன்னைக்கு அரசியல்வாதிங்க மக்களுக்கு நல்லது செய்றேன்னு அவங்க குடும்பத்துக்காக கொள்ள அடிக்கிறாங்க.
அரசியல் பேச வேண்டாம் நம்மனால என்ன முடியுதோ அது மக்களுக்கு செஞ்சா போதும்.
சரி மேம்
என அவன் சொல்ல, கமகம மனத்தோடு த்ரீ ரோசஸ் டீ ஒரு டிரேவில் மூன்று கப்பில் ஆவி பறக்க மணம் வீச ஒவ்வொருவரின் அருகே வந்தது. அந்த டீயின் கமகம மணத்தில் மெய் மறந்த இருவரும் அதை எடுத்து பருகத் தொடங்கினர்.
இயற்கையான இடத்தில் அமைந்து இருந்த அந்த இல்லத்தில் அருமையான காற்று எந்த தடையும் இன்றி அவர்கள் ஒவ்வொருவரையும் தீண்டியது. சூடான டீயை ருசித்த வண்ணம் பேச்சு தொடர்ந்தது.
மேம் நீங்க ஒருத்தரே எப்படி இதை நிர்வகிக்கிறீங்க.
உதவி செய்ய ஆட்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் பார்ட் டைமா வந்து உதவி பண்ணுவாங்க.