Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavimugil Sureshin Katturaigal Part - 1
Kavimugil Sureshin Katturaigal Part - 1
Kavimugil Sureshin Katturaigal Part - 1
Ebook61 pages22 minutes

Kavimugil Sureshin Katturaigal Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இப்புத்தகத்தில் வரும் ஒவ்வொரு கட்டுரையும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது

படிக்கின்ற ஒவ்வொரு வரையும் தான் யார்? எதற்காக இந்த பூமியில் வசிக்கிறோம்? எனும் கேள்விகளுக்கு எல்லாம் சரியான தெளிவான பதிலை தருவதோடு மட்டுமல்ல மனதில் எழும் எல்லா குழப்பங்களுக்கும் விடை தருகிறது

அதுமட்டுமல்ல கூடவே நீர்வளம் மேம்பட என்ன செய்யலாம்? எனும் செயல்முறை கட்டுரையும் பாரதியாரின் வாழ்வியலை குறித்தும், பெரியாருடைய கருத்தோட்டத்தை குறித்தும், நமது பாரம்பரியம், கனவு காணுங்கள், கருவிலிருந்து கடிதம், கீ.ராஜநாராயணின் படைப்புகளில் வாழ்வியல் என பன்முகம் கொண்ட படைப்புகள் இதில் இடம்பெற்றிருக்கிறது

படிப்போருக்கு விருந்தாக அமையும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை படியுங்கள் மனதில் பதியுங்கள்

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580146507417
Kavimugil Sureshin Katturaigal Part - 1

Read more from Kavimugil Suresh

Related to Kavimugil Sureshin Katturaigal Part - 1

Related ebooks

Reviews for Kavimugil Sureshin Katturaigal Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavimugil Sureshin Katturaigal Part - 1 - Kavimugil Suresh

    http://www.pustaka.co.in

    கவிமுகில் சுரேஷின் கட்டுரைகள் பாகம் -1

    Kavimugil Sureshin Katturaigal Part – 1

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நீர் வளம்

    2. வாழும் மகாகவி

    3. பெண் ஏன் அடிமையானாள்?

    4. கொரோனா நாட்கள்

    5. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    6. நாமும் நமதும்

    7. கருவிலிருந்து கடிதம்

    8. கி.ராவின் படைப்புகளில் வாழ்வியல்

    9. புருஷனுக்காக

    10. பணமா? மனமா?

    1. நீர் வளம்

    உலகப்பொதுமறை நூலாம் திருக்குறளில் திருவள்ளுவர்,

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு என எழுதியிருக்கிறார்.

    இந்த உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால் நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் கருத்து.

    இந்த உலகத்தின் அனைத்து செயல்பாடுகளும், அனைத்து மனிதர்களும், எல்லா உயிரினங்களும் உயிர் வாழ வேண்டுமென்றால் நீர் என்பது அத்தியாவசியம் என்பதனை திருவள்ளுவர் அன்றைக்கே குறிப்பிட்டிருக்கிறார்.

    நாம் பள்ளிகளில் இதை வாசித்து இருக்கிறோம். ஆனால் நம் வாழ்வின் செயல்முறைகளில் இதை யோசித்திருக்கிறோமா செயல்படுத்தி இருக்கிறோமா சிந்திக்க வேண்டும்.

    நீரைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் பார்க்கிறோம் நீர் உயர நெல் உயரும் என எழுதி வைத்திருக்கிறார்கள்.

    நம் நாடு பசுமைத் தாயகமாய் திகழ வேண்டும் என்றால் நீரின் முக்கியத்துவத்தையும், மரம், செடி, கொடிகளை பாதுகாக்க வேண்டியது குறித்தும் ஒவ்வொரு தனிமனிதனும் அறிந்து உணர்ந்து செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இன்னொருவர் நீரில்லா நாடு நிலவில்லா முற்றம் என எழுதியிருக்கிறார்.

    ஒரு தமிழ் கவிஞர் தண்ணீரை குறித்து இப்படியாக கூறி இருக்கிறார்.

    "தாத்தா தண்ணீரை ஆற்றில் பார்த்தார்

    அப்பா தண்ணீரை கிணற்றில் பார்த்தார்

    மகன் தண்ணீரை பாட்டிலில் பார்த்தான்

    பேரன் தண்ணீரை எங்கு பார்ப்பான் தண்ணீரை சேமியுங்கள்"

    என கவிதையை முடிக்கிறார். இந்தக் கவிதைதான் இன்றைய வாழ்க்கையின் நிலை.

    இவைகள் எல்லாம்நாம் சிந்திப்பதற்காக எழுதப்படவில்லை. செயல்முறை வாழ்க்கைக்காக எழுதப்பட்டிருக்கிறது.

    நீரின் அவசியத்தையும் அதனுடைய மதிப்பையும் அறிந்த அறிஞர்கள் தண்ணீரை திரவத்தங்கம் என்கிறார்கள்.

    உண்மைதான் இன்று தங்கம் சவரன் சுமார் நாற்பது ஆயிரம் என்கிறார்கள். அந்தத் தங்கம் இல்லாமல் கூட எல்லோரும் வாழ்ந்து விடலாம் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்து விட இயலாது.

    தண்ணீர் பருகுவதற்கு, சமைப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு, நல்ல சுகாதார காற்றை சுவாசிப்பதற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

    இன்று போதிய தண்ணீர் பற்றாக்குறையால்தான் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1