Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ragasiyam Illatha Snegithane
Ragasiyam Illatha Snegithane
Ragasiyam Illatha Snegithane
Ebook99 pages35 minutes

Ragasiyam Illatha Snegithane

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580115705648
Ragasiyam Illatha Snegithane

Read more from Lakshmi Rajarathnam

Related to Ragasiyam Illatha Snegithane

Related ebooks

Reviews for Ragasiyam Illatha Snegithane

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ragasiyam Illatha Snegithane - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    ரகசியம் இல்லாத சினேகிதனே

    Ragasiyam Illatha Snegithane

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajaratnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    *****

    அத்தியாயம் 1

    புத்தகங்களை அடுக்கிக் கொண்டாள் ரேவதி. கண்ணாடி முன்பு நின்றாள். நீண்ட கூந்தல். பூ வைக்கவில்லை. இத்தனைக்கும் வீட்டின் பின்பக்கம் உள்ள சின்ன இடத்தில் நித்திய முல்லை பூத்துக் கொட்டுகிறது. கடந்த இருபது தினங்களாகப் பறிக்கவில்லை.

    அவளை உயிருக்கு உயிராக வளர்த்த சித்தப்பா இறந்து இருபது தினங்கள் ஆகின்றன. அப்பாவும் அம்மாவும் அவளது சின்ன வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து போனார்கள். அப்பாவின் தம்பி செல்வ கணபதியும், சித்தி மரகதமும்தான் அவளை வளர்த்து வந்தார்கள்.

    சித்தப்பா ஓரளவு வசதி படைத்தவர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் ரேவதியை நன்றாக வளர்க்க முடிந்தது. அந்த சித்தப்பா தான் திடீரென்று மாரடைப்பில் காலமானார். துக்கத்துக்கு என்று வந்த உறவினர்கள் சித்தியின் பிறந்த வீட்டினர் அனைவரும் சென்று விட்டார்கள்.

    சித்தியின் ஒன்று விட்ட அத்தை மட்டும் அவர்களுடன் தங்கிக் கொண்டாள். அத்தை செல்லம்மாவை பாம்பு என்று அடிக்கவோ, பழுதை என்று தள்ளவோ முடியாது. துக்கத்தில் இடிந்து போயிருந்த சித்தி மரகதத்திற்கு அத்தையின் உறவு தேவையாக இருந்தது.

    துணையை இழந்த அன்றில் பறவையாக அவள் சிறகொடிந்து கிடந்தாள். எழ முடியாத அளவுக்கு சோர்வு அவளை ஆட்டிப் படைத்தது. அழுது அழுது கண்ணீர் ஊற்று இன்னும் குறையவில்லை.

    சித்தப்பாவின் மறைவுக்குப் பின்னர் ரேவதி இன்றுதான் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிறாள்.

    மணமுள்ள நித்திய முல்லைப் பூவைச் சூட மனமில்லை. சித்தியின் பிறந்த வீட்டினர் மரகதத்தைத் தங்களுடன் வந்து விடும்படி அழைக்கத்தான் செய்தார்கள். அண்ணன்களும், தம்பிகளும் வசதி நிறைந்தவர்கள்.

    ஏம்மா, நீ தனியா இருந்து திண்டாடணுமா, அல்வா துப்பிய நெய்யாகக் கசிந்தார்கள்.

    ரேவா இருக்கறப்ப எனக்கென்ன தனிமை?

    சகோதரர்கள் முகவாயைத் தடவினார்கள்.

    சகோதரியின் சொத்து ரேவதிக்குப் போவதா?

    ஆத்திரத்தை அடக்கிக் கொண்டார்கள்.

    அவளை அழைச்சிட்டே வந்துடும்மா

    இது வெறும் கண் துடைப்புப் பேச்சு என்று மரகதத்திற்குத் தெரியும். ரேவதியைத் துளியும் தன் பிறந்த வீட்டினர்க்குப் பிடிக்காது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். இவர்கள் எதற்காக வீண் பேச்சு பேசுகிறார்கள்?

    அவள் ஒற்றை ஆள். ரேவதியை முன்னிட்டு இங்கு இருந்தே ஆக வேண்டும் என்றாலும் பிறந்த வீட்டினரின் துணை ஒரு நாள் என்றாவது தேவைப்படலாம். விரோதம் கொள்ளக் கூடாது.

    ஊருக்குக் கிளம்பும் சமயம் மரகதத்தின் அம்மா உபதேசம் செய்தாள்.

    மரகதா, இத்தினி காலம் மாப்பிள்ளை தூண் போல இருந்து உன்னைத் தாங்கினார்டி. இன்னைக்கு நீ உளுத்துப்போன மரமாகி நிக்கறே. இப்பத்தாண்டி, உன் அண்ணன் தம்பிக துணை வேணும். அம்மாடி, நல்லா யோசனை பண்ணிக்க. உன் மச்சினன் அந்தப் பொண்ணை அனதையா விட்டுட்டு போகல்ல. முப்பது சவரன் நகைகளும். மூணு லட்சம் பணமும் வச்சிட்டுத் தானே போயிருக்காரு. ஏதாவது ஒரு பாதுகாப்பு இல்லத்துல விட்ரும்மா...

    விரிவான உபதேசம்.

    மரகதத்திற்குத் தொண்டை அடைத்தது.

    அண்ணன் தம்பியும் கூட்டுக் குடும்பத்தில் தான் இருந்தார்கள். அண்ணி கைக் குழந்தை ரேவதியுடன் வந்த பொழுது ஆரத்தி சுற்றி உள்றே அழைத்தவள் இந்த மரகதம் தான்.

    இந்தா மரகதம், இந்தப் புள்ளையை நீதான் வளர்க்கணும் புடி என்று அண்ணிக்காரி மரகதத்தின் கையில் ரேவதியை ஒப்படைத்து விட்டாள்.

    பின்னால் ஒரு சமயம் மரகதமே குழந்தையை வளர்க்கப் போகிறாள் என்று எந்த இக்ஷிணி வந்து சொல்லிற்றோ..?

    ரேவதியைத் தங்கத் தட்டில்தான் வைத்து தாங்கினாள் மரகதம் என்று சொல்ல வேண்டும்.

    ரேவதி ஓடினால் அவளும் ஓடுவாள். அழுதால் மனசு தாங்காது. உடம்பு சரியில்லை என்றால் இரவு பூராவும் தூங்க மாட்டாள். கண் விழிப்பாள்.

    அண்ணி குழந்தையா இவள் குழந்தையா என்று ஊரே ஆச்சர்யப்படும். இப்படி பொத்திப் பொத்தி வளர்த்த மகளை பாதுகாப்பு இல்லத்தில் விடுவதா?

    இதே என் வயிற்றில் பிறந்த மகளாக இருந்தால் இப்படிச் சொல்லுவார்களா!

    அம்மா விடவில்லை,

    மரகதம், நனைச்சு சுமக்கறதுனு சொல்லுவாங்க. அதைத்தான் நீ செய்யறே

    மரகதம் கோபத்தை அடக்கினாள். பொறுமை காத்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1