Panpai Valarkkum 10 Kathaigal
By R.V.Pathy
()
About this ebook
உங்களுக்காக “பண்பை வளர்க்கும் 10 கதைகள்” என்ற இந்த சிறுகதை நூலினை எழுதியுள்ளேன். ஒருவரிடம் எவ்வளவுதான் படிப்பும், பணமும் இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைவது நல்ல பண்பு என்ற அடிப்படைக் குணமாகும். இது உலகறிந்த உண்மை. நீதி நூல்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல் அத்தகைய நீதிநூல்கள் சொல்லும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைபிடிக்கப் பழக வேண்டும். இந்தச் செயல் உங்களை வாழ்க்கையில் நிச்சயம் உயர்த்தும்.
மாணவ மாணவியராகிய நீங்கள் இது போன்ற பல நூல்களைப் படித்து உயரிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பண்புகள் உங்களுடைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும்.
Read more from R.V.Pathy
The Magical Lamp Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Ilakkiya Aaraichi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsPalli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal Rating: 0 out of 5 stars0 ratingsRayil Vandi Rating: 0 out of 5 stars0 ratingsKaagamum Naangu Meengalum Rating: 0 out of 5 stars0 ratingsKannan Vazhi Gandhi Vazhi Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Siruvar Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Varushathu Bommai Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Ilakkiya Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsSingam Yean Rajavaga Irukkirathu? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Panpai Valarkkum 10 Kathaigal
Related ebooks
Nenjam Irandum Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Sumaigal Rating: 0 out of 5 stars0 ratingsGopura Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsCycle Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVeebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Maariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsRig Veda Karuthukkal Rating: 0 out of 5 stars0 ratingsVetti Verkal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Pillai Rating: 5 out of 5 stars5/5Vathai Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nayagi Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsKaveri Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thottu Vidum Thooram Thaan Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Oru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsChidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Azhagiya Pizhaigal Rating: 0 out of 5 stars0 ratingsAgnip Pravesam Rating: 5 out of 5 stars5/5Ennavarey Mannavarey Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Mazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsIrakkam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsAnnachima Rating: 0 out of 5 stars0 ratingsThavira Uyirum Vendum Rating: 5 out of 5 stars5/5Nerunji Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthoor Kolai Case Rating: 0 out of 5 stars0 ratingsNaaga Panchami Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Panpai Valarkkum 10 Kathaigal
0 ratings0 reviews
Book preview
Panpai Valarkkum 10 Kathaigal - R.V.Pathy
https://www.pustaka.co.in
பண்பை வளர்க்கும் 10 கதைகள்
Panpai Valarkkum 10 Kathaigal
Author:
ஆர். வி. பதி
R.V.Pathy
For more books
https://www.pustaka.co.in/home/author/rv-pathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தீர்ப்பு
2. அதிசய மோதிரம்
3. மணி மாறிவிட்டான்
4. மனமாற்றம்
5. நல்ல முடிவு
6. அதிசயச் சாமியார்
7. பேருந்தில் ஒரு சாகசம்
8. புதையல்
9. திருந்திய உள்ளம்
10. நன்மைக்கு நன்மை
அன்பான சிறுவர் சிறுமியரே,
உங்களுக்காக பண்பை வளர்க்கும் 10 கதைகள்
என்ற இந்த சிறுகதை நூலினை எழுதியுள்ளேன். ஒருவரிடம் எவ்வளவுதான் படிப்பும், பணமும் இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைவது நல்ல பண்பு என்ற அடிப்படைக் குணமாகும். இது உலகறிந்த உண்மை. நீதி நூல்களைப் படிப்பதோடு மட்டுமில்லாமல் அத்தகைய நீதிநூல்கள் சொல்லும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைபிடிக்கப் பழக வேண்டும். இந்தச் செயல் உங்களை வாழ்க்கையில் நிச்சயம் உயர்த்தும்.
மாணவ மாணவியராகிய நீங்கள் இதுபோன்ற பல நூல்களைப் படித்து உயரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பண்புகள் உங்களுடைய வாழ்க்கையை நிச்சயம் மேம்படுத்தும்.
இந்த மின்னூலை வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
ஆர்.வி. பதி
1. தீர்ப்பு
மாங்குடி ஓர் அழகிய கிராமம். அந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழில் விவசாயம். அந்த கிராமத்து மண் மிகவும் செழிப்பானதாகும். வருடத்திற்கு மூன்று முறை அந்த கிராமத்தில் விவசாயம் நடக்கும். ஒவ்வொரு அறுவடையிலும் நல்ல விளைச்சல் காணும் ஒரு செழிப்பான கிராமம் அது.
ராமன் என்பவன் அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ராமன் நல்ல உழைப்பாளி. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு ஒன்று மட்டும் தான். இதனால் அவன் யார் விஷயத்திலும் தலையிடமாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்பவன் அவன்.
சில வருடங்களுக்கு முன்னால் ராமன் அந்த கிராமத்து நிலங்களில் தினக்கூலியாக வேலை செய்து வந்தான். சம்பளமாகக் கிடைக்கும் பணத்தில் செலவு செய்தது போக மீதமாகும் பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வந்தான். ஒரு தொகை சேர்ந்ததும் நிலத்தை வாங்கி இன்று சொந்தமாக விவசாயம் செய்து வருகிறான். அவன் நேர்மையானவன் என்பதால் அந்த ஊரில் அவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது.
அதே கிராமத்தில் ஆறுமுகசாமி என்பவன் வசித்து வந்தான். எந்த வேலையையும் செய்யாமல் அவ்வப்போது யாரையாவது ஏமாற்றிப் பிழைப்பதே அவனுடைய வேலையாய் போய்விட்டது. எப்போதும் யாருக்காவது தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பான். கையில் பணமில்லை என்றால் யாரை எப்படி ஏமாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கிவிடுவான். திட்டம் போட்டு யாரையாவது ஏமாற்றிச் சம்பாதித்து விடுவான். சுருக்கமாகச் சொன்னால் ஆறுமுகசாமி அனைத்து விஷயங்களிலும் ராமனுக்கு நேர் எதிர் குணமுடையவனாய் திகழ்ந்தான். அவனைப் பற்றி அந்த கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். எனவே அக்கிராமத்து மக்கள் அனைவரும் அவனிடம் மிகவும் ஜாக்கிரதையாகவே பழகுவார்கள்.
ஒருநாள் ஆறுமுகசாமி வயல்வெளி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு வயலில் நெற்கதிர்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருவனை அழைத்தான் ஆறுமுகசாமி.
என்னப்பா இங்கக் கொஞ்சம் வாப்பா.
அந்த ஆள் ஆறுமுகசாமியிடம் வந்தான்.
என்னங்க எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க?
இந்த வயல் யாரோடதுன்னு உனக்குத் தெரியுமா?
சாமி. இது நம்ம ராமனோட வயலுங்க.
அப்படியா. சரி நீ போ.
எதுக்குச் சாமி கேட்டீங்க?
பயிரெல்லாம் நல்லா விளைஞ்சிருக்கே. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. அதான் உன்கிட்டே கேட்டேன். நீ போ.
சரிங்க சாமி.
அந்த ஆள் போய்விட்டான்.
இப்போது ஆறுமுகசாமி யோசிக்க ஆரம்பித்தான்.
ராமனை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால் ராமன் ஆறுமுகசாமியை மதிக்க மாட்டான். ராமன் நல்லவர்களை மட்டுமே மதிப்பான்.
அடுத்தநாள் காலை ஆறுமுகசாமி முதல்வேலையாக ஒரு காரியம் செய்தான்.
ஆறுமுகசாமியிடம் ஒரு பசுமாடு இருந்தது. அவன் தன்னுடைய பசுமாட்டைப் பிடித்துக்கொண்டு வந்து நன்கு செழிப்பாக வளர்ந்திருந்த ராமனின் நிலத்தில் மேயவிட்டான். ராமனின் வயலில் நெற்கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தது ஆறுமுகசாமியின் மனத்தில் பொறாமையை உண்டாக்கிவிட்டது.
பசுமாட்டிற்கு ஆறுமுகசாமி சரியாக உணவைத் தருவதில்லை. எனவே அது ராமனின் வயலில் இறங்கி நன்றாக மேய ஆரம்பித்தது.
பசுமாடு ராமனின் வயலில் மேய ஆரம்பித்ததும் ஆறுமுகசாமி அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் ராமன் அந்த பக்கமாக வந்தான். ஒரு பசுமாடு தனது வயலில் இறங்கி பயிரை மேய்ந்து தின்று கொண்டிருப்பதைக் கண்டு அதை விரட்டி விட்டான்.
அப்போது அந்த பக்கமாக வந்த விவசாய வேலை செய்யும் ஒருவனை அழைத்து விசாரித்தான்.
ஏம்பா. இந்த மாடு யாரோடதுன்னு உனக்குத் தெரியுமா?
"சாமி. இந்த பசுமாடு நம்ம ஆறுமுகசாமிக்குச் சொந்தமான மாடுங்க. அவன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே