Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Singam Yean Rajavaga Irukkirathu?
Singam Yean Rajavaga Irukkirathu?
Singam Yean Rajavaga Irukkirathu?
Ebook76 pages29 minutes

Singam Yean Rajavaga Irukkirathu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புச் சுட்டிகளே
அன்பு முத்தங்கள். ‘சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?’ என்ற இந்த சிறுவர் சிறுகதை நூலின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தை இலக்கியப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பான பாபசி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இராஜபாளையம் மணிமேகலை மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் போன்ற பெருமை மிக்க அமைப்புகள் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் அளித்து கௌரவித்துள்ளன. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் எனக்கு “சிறுவர் இலக்கியச் செம்மல்” என்ற பட்டத்தினை சமீபத்தில் வழங்கி கௌரவித்துள்ளது. இவை எல்லாம் குழந்தைகளாகிய உங்களுக்காக எழுதுவதால் எனக்குக் கிடைத்த பெருமைகள்.
தற்போது நான் எழுதியுள்ள இந்த சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் படித்து மகிழ விலங்குகளை கதாபாத்திரங்களாக வைத்து பத்து கதைகளை எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். சிறந்த குடிமக்களாக உங்களை உருவாக்கிக் கொள்ள உங்களுக்கான இத்தகைய இலக்கியங்கள் துணை நிற்கும்.
‘சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?’ என்ற இந்த சிறுவர் இலக்கிய சிறுகதை நூலினை மின் புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
ஆர்.வி.பதி
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138805958
Singam Yean Rajavaga Irukkirathu?

Read more from R.V.Pathy

Related to Singam Yean Rajavaga Irukkirathu?

Related ebooks

Reviews for Singam Yean Rajavaga Irukkirathu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Singam Yean Rajavaga Irukkirathu? - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?

    சிறுவர் கதைகள்

    Singam Yean Rajavaga Irukkirathu?

    Siruvar Kathaigal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நட்டு செய்த சதி

    2. சரியான தீர்ப்பு

    3. நாங்க திருந்திட்டோம்

    4. வானத்தில் மிதக்கும் பந்து

    5. கனவு பலிக்குமா?

    6. மனித காட்சி சாலை

    7. பியரோவின் சாமர்த்தியம்

    8. கரடி செய்த தவம்

    9. காட்டிலே பள்ளிக்கூடம்

    10. சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?

    முன்னுரை

    அன்புச் சுட்டிகளே

    அன்பு முத்தங்கள். ‘சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?’ என்ற இந்த சிறுவர் சிறுகதை நூலின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது குழந்தை இலக்கியப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பான பாபசி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இராஜபாளையம் மணிமேகலை மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம் போன்ற பெருமை மிக்க அமைப்புகள் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் அளித்து கௌரவித்துள்ளன. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் எனக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தினை சமீபத்தில் வழங்கி கௌரவித்துள்ளது. இவை எல்லாம் குழந்தைகளாகிய உங்களுக்காக எழுதுவதால் எனக்குக் கிடைத்த பெருமைகள்.

    தற்போது நான் எழுதியுள்ள இந்த சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் நீங்கள் படித்து மகிழ விலங்குகளை கதாபாத்திரங்களாக வைத்து பத்து கதைகளை எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். சிறந்த குடிமக்களாக உங்களை உருவாக்கிக் கொள்ள உங்களுக்கான இத்தகைய இலக்கியங்கள் துணை நிற்கும்.

    ‘சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?’ என்ற இந்த சிறுவர் இலக்கிய சிறுகதை நூலினை மின் புத்தகமாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    1. நட்டு செய்த சதி

    குதூகலமான அந்த காட்டில் விலங்குகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அந்த காட்டின் ராஜாவாக ஒரு சிங்கம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் விலங்குகள் முன்பு போல இல்லை. தங்கள் ராஜாவை அவர்கள் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய விரும்பினர். மனிதர்கள் தேர்தல் நடத்தி வாக்களித்து தங்களை ஆட்சி செய்பவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற செய்தியை விலங்குகள் அறிந்து கொண்டிருந்தன. அதிலிருந்து காட்டிலும் அதுபோலத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று பல விலங்குகள் பரவலாக விரும்பின. இந்த செய்தி ராஜாவாக இருந்த சிங்கத்தின் காதிற்குச் சென்றது.

    விலங்குகளுக்கு அதுவரை தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவைகளுக்குத் தெரிந்ததெல்லாம் தங்கள் ராஜா ஒரு சிங்கம் என்பதுதான். சிங்கத்தைப் போல வலிமையான யானைகள் புலிகள் சிறுத்தைகள் கூட தங்கள் வலிமையைப் பற்றி அறியாமல் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்தன.

    அந்த காட்டில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அந்த பிரச்சினை சிங்கராஜாவிடம் கொண்டு செல்லப்படும். அது விசாரித்து என்ன சொல்லுகிறதோ அதுதான் தீர்ப்பு. அது சரியாக இருந்தாலும் சரி தவறாக இருந்தாலும் சரி அனைத்து விலங்குகளும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டன.

    ஒருநாள் சிங்கராஜா லாயா அனைவரையும் அழைத்துப் பேசினார்.

    நான் உங்களையெல்லாம் இப்ப எதுக்குக் கூப்பிட்டிருக்கேன் தெரியுமா? நீங்க எல்லாம் தேர்தல் நடத்தி உங்களோட ராஜாவைத் தேர்வு செய்யணும்னு விரும்பறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலே இந்த முறை காட்டிலே தேர்தல் நடத்த முடிவு செய்திருக்கேன். ராஜா பதவிக்கு சிங்கங்களும் மந்திரிகள் பதவிக்கு ஐந்து விலங்குகளும் போட்டியிடலாம். ஐந்து துணை மந்திரிகள் பதவிக்கு பறவைகள் போட்டியிடலாம். என்ன உங்க எல்லாருக்கும் சம்மதமா?

    ராஜாவின் முடிவை

    Enjoying the preview?
    Page 1 of 1