Maya Vilakku
By R.V.Pathy
()
About this ebook
சுட்டிகளே,
அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பனிரெண்டு சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் “மாயவிளக்கு” எனும் தலைப்பில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் எண்ணத்தில் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பதே உண்மை.
“மாயவிளக்கு” என்ற இந்த நூலை நீங்கள் ஒரு நாவல் போலவும் படிக்கலாம். அல்லது தனித்தனி சிறுகதைகளாகவும் படிக்கலாம். இந்த வகையில் இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே நான் கருதுகிறேன்.
எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள நல்ல நல்ல கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் பண்புகள் நிறைந்த நல்ல மனிதர்களாக அனைவரும் போற்றும் விதமாக வாழ வேண்டும். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பெருமைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். தற்காலத்தில் வல்லவனாக இருப்பது அவசியம். மேலும் நல்லவனாக இருப்பது அதைவிட அவசியம்.
Read more from R.V.Pathy
The Magical Lamp Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Ilakkiya Aaraichi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaagamum Naangu Meengalum Rating: 0 out of 5 stars0 ratingsPalli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal Rating: 0 out of 5 stars0 ratingsMuthana Maanavargalukku Mulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanpai Valarkkum 10 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanpai Valarkkum Siruvar Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Siruvar Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSingam Yean Rajavaga Irukkirathu? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maya Vilakku
Related ebooks
Thirisangu Sorgam Rating: 5 out of 5 stars5/5Manthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Vikrama Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsSila Mugangalin Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Thalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsYasothaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Kangalirandum Vaa… Vaa… Endrana Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Neerottam Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsGopuram Rating: 0 out of 5 stars0 ratingsவாழ்க்கை அழகானது! Rating: 0 out of 5 stars0 ratingsVaazhkkai Azhaganathu Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Kanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsManakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Houseful Rating: 5 out of 5 stars5/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsOru 'Century'um Oru 'Duck'um Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Maya Vilakku
0 ratings0 reviews
Book preview
Maya Vilakku - R.V.Pathy
https://www.pustaka.co.in
மாயவிளக்கு
(சிறுவர் கதைகள்)
Maya Vilakku
(Siruvar Kathaigai)
Author:
ஆர். வி. பதி
R. V. Pathy
For more books
https://www.pustaka.co.in/home/author/rv-pathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
உங்களோடு ஒரு நிமிடம்
சுட்டிகளே,
அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பனிரெண்டு சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் மாயவிளக்கு
எனும் தலைப்பில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் எண்ணத்தில் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பதே உண்மை.
மாயவிளக்கு
என்ற இந்த நூலை நீங்கள் ஒரு நாவல் போலவும் படிக்கலாம். அல்லது தனித்தனி சிறுகதைகளாகவும் படிக்கலாம். இந்த வகையில் இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே நான் கருதுகிறேன்.
எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள நல்ல நல்ல கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் பண்புகள் நிறைந்த நல்ல மனிதர்களாக அனைவரும் போற்றும் விதமாக வாழ வேண்டும். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பெருமைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். தற்காலத்தில் வல்லவனாக இருப்பது அவசியம். மேலும் நல்லவனாக இருப்பது அதைவிட அவசியம்.
இந்த நூலுக்கு அற்புதமாக சித்திரங்களைத் தீட்டியுள்ள ஓவியர்.கி.சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. மாயவிளக்கு
எனும் இந்த நூலை மின்னூலாக சிறப்பாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
வாழ்த்துகளுடன்,
ஆர். வி. பதி
rvpathi@yahoo.com
பொருளடக்கம்
1.மகியும் மாயவிளக்கும்
2.போக்கிரி ரங்கன்
3.ராமுவின் சாகசங்கள்
4.விவேக்கின் விளையாட்டு
5.பறக்கும் கம்பளம்
6.எதுக்கு உழைக்கணும்?
7.தொலைந்து போன மாயவிளக்கு
8.வினுவின் கதை
9.வினை விதைத்தவன்
10.களத்தூருக்கு வந்த சிறுத்தை
1.மகியும் மாயவிளக்கும்
மகி களத்தூரைச் சேர்ந்த ஒரு மாணவன். எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். எப்போது பார்த்தாலும் விளையாட்டுத்தான். பள்ளி முடிந்ததும் நண்பர்களை அழைத்துக் கொண்டு விளையாடச் சென்று விடுவான். இருட்டும் வரை விளையாடிக் கொண்டே இருப்பான். வீட்டிற்கு வந்ததும் முகம் கைகால்கள் கழுவி முடித்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கி விடுவான். விளையாட்டு மாணவ மாணவியருக்கு அவசியமான ஒன்றுதான். ஆனால் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கக்கூடாது என்பதை அவன் உணரவில்லை. வீட்டுப்பாடங்களை ஒழுங்காகவே செய்யமாட்டான். படிப்பைக் கூட அவன் விளையாட்டாகவே நினைத்தான். படிப்பின் அவசியத்தையும் உழைப்பின் பெருமையையும அவன் உணரவில்லை.
அந்த கிராமத்தில் ஒரு பதினாறுகால் மண்டபம் இருந்தது. அந்த பகுதிக்கு பொதுவாக யாரும் செல்வதில்லை. மகியும் அவனுடைய நண்பர்கள் சிலரும் அந்த பகுதியில் இருந்த ஒரு திறந்த வெளியில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். விளையாடிவிட்டு சற்று ஓய்வெடுக்க அந்த மண்டபத்தில் உட்காரும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.
ஒருநாள் மகி அந்த மண்டபத்தில் தன் நண்பர்களை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு நேற்றைய வகுப்பில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
கணக்கு வாத்தியார் புதிதாக ஒரு கணக்குப் பாடத்தை நடத்தியிருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியை மகியிடம் கேட்டார். மகியின் கவனம் வேறு எங்கோ இருந்ததால் அவன் பாடத்தை சரியாக கவனிக்கவில்லை. கணக்கு ஆசிரியர் கேட்ட கேள்வியையும் அவன் புரிந்து கொள்ளவில்லை.
டேய். முட்டாள். ஒரு சாதாரண கேள்வி. இதுக்குக்கூட உன்னாலே பதில் சொல்ல முடியலை. முருகனும் உன்கூடத்தானே படிக்கிறான். அவனைப்பாரு எப்பவும் நூத்துக்குநூறு வாங்கறான்
ஆசிரியர் மகியிடம் கேட்ட அந்த கேள்வியை முருகனிடம் கேட்க அவன் அதற்கு பளிச்சென்று பதிலைச் சொன்னான்.
பார்த்தியா. அவன் எப்படி பதில் சொல்றான். உங்க எல்லாருக்கும் நான் ஒரே மாதிரிதான் கணக்கு சொல்லித் தர்றேன். நீயெல்லாம் எங்கே உருப்படப்போறே
இப்போது மகி முருகனைப் பார்க்க அவன் தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
"என்னடா அவனை முறைக்கிறே. நீ ஒரு