Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru 'Century'um Oru 'Duck'um
Oru 'Century'um Oru 'Duck'um
Oru 'Century'um Oru 'Duck'um
Ebook159 pages1 hour

Oru 'Century'um Oru 'Duck'um

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை "காவேரி” மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.

கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

"இலக்கியச் சிந்தனை” எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.

பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள். ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி “ஞானமன்றம்” என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.

2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.

சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, "இந்து மதம் பதிலளிக்கிறது”, "மகான்கள் பதிலளிக்கிறார்கள்" என்ற தலைப்புகளிலும், “அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி” என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.

சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.

சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.

பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்த நாற்பது ஆண்டுளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504483
Oru 'Century'um Oru 'Duck'um

Read more from Lakshmi Subramaniam

Related to Oru 'Century'um Oru 'Duck'um

Related ebooks

Reviews for Oru 'Century'um Oru 'Duck'um

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru 'Century'um Oru 'Duck'um - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    ஒரு ‘செஞ்சுரி’யும் ஒரு ‘டக்’கும்

    Oru 'Century'um Oru 'Duck'um

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    எழுத்துலக அனுபவம்:

    1. ஒரு ‘செஞ்சுரி’யும் ஒரு ‘டக்’கும்

    2. காவிரி ஓடிக் கொண்டிருக்கிறது!

    3. சலனம்

    4. மகன்

    5. ஆராதனை

    6. கொடியின் காய்

    7. கிழவிக்கு என்ன கொடுக்கலாம்?

    8. வேதனை

    9. நெருப்பின் ஒளி

    10. பதில் ஏது?

    11. அழியாத மெருகு

    12. வேறென்ன வேண்டும்?

    13. பொய்

    எழுத்துலக அனுபவம்:

    1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை காவேரி மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

    சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.

    கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன்.

    இலக்கியச் சிந்தனை எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.

    பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன்.

    ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள்.

    ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி ஞானமன்றம் என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.

    2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.

    சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, இந்து மதம் பதிலளிக்கிறது, மகான்கள் பதிலளிக்கிறார்கள் என்ற தலைப்புகளிலும், அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.

    சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.

    இப்போதும் ஆன்மிக, மருத்துவ மாத இதழ்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.

    பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்த நாற்பது ஆண்டுளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

    1. ஒரு ‘செஞ்சுரி’யும் ஒரு ‘டக்’கும்

    உம்ம... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே அறையின் ஜன்னலுக்கப்பால் தெரிந்த சீமை வேப்பமரத்தைப் பார்த்தார் நாராயணன். முன் நேரத்திலேயே கவிந்து விடும் இருளைப் போக்கத் தட்டிவிட்ட மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில் அறைக்குள் சந்திரசேகர் வருவது தெரிந்தது.

    பௌதிகப் பாடத்தில் பேராசிரியர் அவர். முதல்வர் நாராயணனுக்கும் அந்தப் பாடத்தில் நிறைய ஆர்வம் உண்டு. இருவருமாக உட்கார்ந்து, நேரம் போவது தெரியாமல், நுட்பமான கருத்துக்களை அலசிப் பேசுவார்கள். ஆனால் இன்று அதற்காக வரவில்லை சந்திரசேகர். அவர் சொல்லப் போவது என்ன என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது. மாணவன் அசோக்கைப்பற்றி... மாணவி ஜயந்தியைப்பற்றி.

    சந்திரசேகர் ஜன்னலுக்கு வெளியே கொத்துப் புகையிலைச் சாற்றை உமிழ்ந்து விட்டு வந்து உட்கார்ந்தார். தலையைக் குனிந்து கண்ணாடித் தகட்டை விரலால் தடவியபடி தயங்கித் தயங்கிச் சொன்னார். அவருடைய ஊகம் சரிதான்.

    நான் கவனிக்கிறேன். அசோக்கை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறேன் இப்போது...

    இதில் நான் தலையிட மாட்டேன். இது வெளியே நடந்தாலும் பரவாயில்லை.. லைப்ரரியில், லாபரேடரியில், விளையாட்டு மைதானத்தில் நடப்பதால்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைக் கவனிக்காவிட்டால் கல்லூரியின் பெயர் கெட்டுப் போகும். நேற்று கிரிக்கெட் மைதானத்தில் பிரீமியர் கல்லூரிக்கு எதிராக, நம் கல்லூரி ஆடிய ஆட்டத்தில் அவன் 'செஞ்சுரி' போட்டான். ஜயந்தி என்ன செய்தாள் தெரியுமா? நேரே 'பிட்சு’க்கு ஓடிப்போய் அவன் கையைப் பிடித்துக் குலுக்கி விட்டாள். நல்ல வேளை. பம்பாய் மைதானத்தில் அப்பாஸ் அலி பெய்க்கை ஒரு பெண் செய்ததைப்போல-

    கூப்பிட்டு விசாரிக்கிறேன்.

    கவனியுங்கள். உங்களுக்குத் தெரியாதது இல்லை. நான் வருகிறேன். பஸ்ஸுக்கு நேரம் ஆயிற்று.

    சந்திரசேகர் எழுந்து போய் விட்டார். அறையை மூடிய பாதிக் கதவின் 'ஸ்பிரிங்கு' கிறீச்சிட்டது. இரண்டு நிமிடங்கள் தாம் ஆகியிருக்கும். கதவை விரற்கணுவால் தட்டும் சப்தம் கேட்டது. கீழே கண் பார்வையில், வெள்ளைச் சராயும் கான்வாஸ் பூட்ஸும் விழுந்தன.

    கம் இன்.

    கதவைத் திறந்து, தலையைப் பணிவாய் அசைத்து விட்டு, எதிரே வந்து நின்றான் அசோக். உட்காருவதற்கு அவருடைய அனுமதியை எதிர்பார்ப்பதுபோல இருந்தது. கையை நீட்டி நாற்காலியைக் காட்டினார்.

    அளவான நறுக்கு மீசை. மார்பையும் தோளையும் அகலமாகக் காட்டுவதுபோன்ற உடம்பு தெரியும் சட்டை. காதுக்குக் கீழே இரண்டு அங்குலம் இறங்கிய 'ஸைட் பர்ன்ஸ்.' தலைமுடி மெத்து மெத்தென்று நிரம்பி வழிந்தது.

    கல்லூரிக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தது என்னுடைய ‘செஞ்சுரி'தான். அதற்காகப் பாராட்டுவதற்குத்தான் கூப்பிட்டீங்களா ஸார்?

    அவன் குரல் மிகவும் நயமாக இருந்தது. சிரிப்பில் வெகு நாட்களாகப் பழகிவிட்ட ஒரு சுவாதீனம். ஒட்டிக் கொண்டு பேசும் லாவகம். அவர் மனம் நெகிழ்ந்தது.

    எப்படி ஆரம்பிப்பது? கல்லூரி முதல்வர் என்ற தோரணையில் ‘கவனி அசோக். இது 'ஸீரிய’ஸான விவகாரம். இது தொடர்ந்து கொண்டு போனால் உன் கல்லூரிப் படிப்பு குட்டிச் சுவராகி விடும்' என்று கண்டிக்கலாம். அல்லது அவனிடம் கொஞ்ச நேரம் நயமாகப் பேசிவிட்டு, 'இது உன் சொந்த விஷயம். ஆனாலும் உன் நன்மைக்காகவும், சொல்ல வேண்டியிருக்கிறது' என்று விஷயத்துக்கு வரலாம். ஒரு கணம் யோசித்ததில் இரண்டும் பிடிக்கவில்லை.

    உன் ஆட்டத்தைப் பாராட்டுகிறேன். ஆனால் நான் உன்னைக் கேட்க விரும்புவது அதைப்பற்றி அல்ல.

    பின்னே? அவன் நெற்றியில் கேள்விக் குறி தொங்கிற்று.

    ஜயந்தி உனக்கு ஏதாவது உறவு முறையா?

    அவன் முகத்தில் தயக்கத்தின் அடையாளம் இல்லை இப்போது. புன்னகை ஒன்று நிழல் காட்டி மறைந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டான்:

    இல்லை ஸார். அவள் என்னுடைய 'ஃப்ரண்ட்'. அவ்வளவுதான்.

    எப்போதும் நீங்கள் சேர்ந்து இருக்கிறீர்கள்; பழகுகிறீர்கள். கல்லூரியிலேயே இதனால் ஒரு சலசலப்பு உண்டாகியிருக்கிறது. அது தப்பு என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஜயந்தியைப்போல எல்லோருடைய கவனத்தையும் சட்டென்று கவரக் கூடிய ஓர் அழகான பெண்...

    நிதானமாக சிகரெட் பெட்டியை எடுத்து, மெதுவாகப் பற்ற வைத்துக் கொண்டார், அவனுக்கு யோசிக்க அவகாசம் தருவதைப்போல. மனத்தில் முதன் முதலாக அந்தப் பெண் ஜயந்தியைப் பார்த்த ஞாபகம். அரையில் பட்டுப் பாவாடை, மேலே தாவணி. யௌவனத்தின் இடைகழி வழியே நடக்கும் பருவம். நீரோட்டம் போன்ற மென்மையும் கவர்ச்சியும். அவள் பார்வையைக் கவனித்ததும் அவருக்கு உள்ளத்தில் அந்த உணர்ச்சி பொங்கிற்று. அந்த வயதில் அவருடைய பெண்ணையே பார்ப்பதுபோல -

    என்னுடன் அப்படிப் பழகுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது ஸார். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். சுற்றி இருப்பவர்கள் அதைப்பற்றி ஒருமாதிரி - தப்பாக எதுவுமே நடக்கவில்லை ஸார். நான் ஓர் உண்மையான 'ஸ்போர்ட்ஸ் மேன்'.

    உண்மைதான். கல்லூரியில் ஆசிரியர்களும் மற்றவர்களும் எதைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்? கல்லூரியின் கெளரவத்தைப்பற்றி - பிரெஸ்டீஜ் - குடும்பக் கெளரவத்தைப் பற்றிப் பெற்றோர்கள் - கண்ணியமான நட்புக்கும்கூட அவற்றுக்கு முன்னால் இடமில்லை.

    நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உலகம் அதை லேசாக ஏற்றுக் கொள்வதில்லை. - மேஜை மீதிருந்த வெள்ளிக் குமிழ்கள் கொண்ட கண்ணாடிக் குண்டு காதித பாரத்தைச் சுழற்றிக் கொண்டே பேசினார். மனத்திலும் சுமை. அந்த நாளில்...

    வகுப்பில் பாடங்களில் அந்த வாலிபன்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1