Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Peraatha Pillai
Peraatha Pillai
Peraatha Pillai
Ebook109 pages1 hour

Peraatha Pillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உடல்நிலை சரியில்லாத தன் மனைவியின்மேல் உயிரையே வைத்திருக்கும் கிருஷ்ணன். அவள் சந்தோசத்திற்காக என்ன செய்தான்? கல்யாணியின் பெறாத பிள்ளையாக வந்த கண்ணனின் வாழ்க்கையில் நிகழ்ந்தது என்ன? அடுத்தடுத்து கிருஷ்ணனின் வாழ்வில் நடக்கும் மர்மங்களையும், திகிலையும் காண படிப்போம் பெறாத பிள்ளையின் வாழ்க்கை என்னானது?

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580127507066
Peraatha Pillai

Read more from Lakshmi Subramaniam

Related to Peraatha Pillai

Related ebooks

Reviews for Peraatha Pillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Peraatha Pillai - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    பெறாத பிள்ளை

    Peraatha Pillai

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 1

    காலையில் கல்யாணி கண் விழிக்கும்போதே மணி எட்டு ஆகிவிட்டது. படுக்கையடியிலேயே பீங்கான் தொட்டியில் முகம் கழுவிப் பற்களைச் சுத்தம் செய்துகொண்டு, முதுகுப்புறம் தலையணையை அணைத்த வண்ணம் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.

    ஜன்னல் வழியாக அவள் பார்வை வெளியே விழுந்தது. பங்களாவைச் சுற்றியிருந்த தோட்டத்தில் பூஞ்செடிகள் வண்ணவண்ணமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. காலைநேரத்து இளங்காற்றில் மலர்களின் வாசத்தோடு, குரோட்டன்ஸ் தொட்டிகளுக்குத் தோட்டக்காரன் தண்ணீர்விடும்போது எழுந்த ஈர மண்ணின் வாசனையும் கலந்து வந்தது.

    மாமரத்தில் எங்கேயோ மறைந்துகொண்டு ஒரு குயில் ‘கக்கூ கக்கூ’ என்று கத்திக்கொண்டிருந்தது. மின்சாரக் கம்பியின்மேல் ஜோடியாக உட்கார்ந்திருந்த குருவிகள் அதற்குப் பதில் சொல்வதுபோல ‘கிங்’ ‘ரிகிங்’ என்று சுருதி கூட்டிக்கொண்டிருந்தன.

    கல்யாணியின் பார்வை தற்செயலாகத் தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்ற பசுமாட்டின்மீது விழுந்தது.

    அந்தப் பசு அப்போது தன்னுடைய மடியைக் சுவைத்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வைக்கோல் அடைத்த தோல் கன்றுக்குட்டிகளையே காட்டிப் பால் கறக்கும் சென்னையில், பசுவும் கன்றுமாக அணைத்துக்கொண்டு நின்ற இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் உள்ளத்தில் நிச்சயமாக மகிழ்ச்சித் ததும்பும். கல்யாணிக்கு மட்டும் எக்காரணத்தினாலோ இந்தக் காட்சி துக்கத்தை அளித்ததுபோலத் தோன்றியது. ஒரு நொடிப் பொழுதில் அவள் கண்களை நீர் மறைத்தது. அப்படியே திரும்பித் தலையணையை மார்போடணைத்த வண்ணம் குப்புறப்படுத்தபடி விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

    சட்டென்று அவள் அழுகை நின்றது. சற்று வியப்போடு நிமிர்ந்து வாசற்புறம் நோக்கினாள். அங்கே கேட்டுக்கு அருகே நாய் ஓயாமல் குறைத்தது. ஒரு முக்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்த கூர்க்கா சேவகன் உரத்த குரலில் ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு சிறுவர்களும் வாசலில் நின்றபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    கிட்டு! என்று கல்யாணி கூப்பிட்டாள்.

    தலைமயிரைக் கடைசி முறையாகப் பையிலிருந்த குட்டைச் சீப்பினால் ஒருமுறை வாரிப் படிய வைத்துக்கொண்டு அவன் வேகமாக உள்ளேவந்து, என்னகொண்டு வரட்டுங்க? பாலா, ஓவலா? என்று கேட்டான்.

    ஒன்றும் வேண்டாம். நீ வெளியே போய் அந்தக் குழந்தைகள் என்ன கேட்கிறார்கள் பார்!

    கிட்டு ‘தடதட’ வென்று படிக்கட்டில் இறங்கி ஓடினான். எஜமானியின் பார்வை கண்ணுக்கு மறைந்த பிறகு, மெதுவாக நடந்துபோய், என்னவென்று விசாரித்துக்கொண்டு ஐந்து நிமிஷங்களில் திரும்பி வந்து நின்றான்.

    ஏதோ அனாதை விடுதிக் குழந்தைகளாம்! பணம் வசூல் பண்ண வந்து நிக்குதுங்க. நான் போகச் சொல்லி விட்டேன்.

    கிட்டு உள்ளே போகத் திரும்பினான். ஏய், நில்லு! ஏன் போகச்சொன்னாய்? என்று கல்யாணி கேட்டாள்.

    அப்போ நாயை அவிழ்த்து விரட்டட்டுங்களா?

    சீ...சீ? அவர்களை இங்கே கூப்பிட்டுக்கொண்டு வா!

    அவர்களையா! இங்கேயா...? என்று, கிட்டு ஆச்சரியத்தோடு உருண்டையாக விழித்த வண்ணம் வெளியே பாய்ந்து ஓடினான். குழந்தைகள் இதற்குள் தெருமூலைக்குப் போயிருப்பார்களோ என்னவோ?

    நமஸ்காரம், அம்மா! கையை அழகாகக் குவித்து நின்ற சிறுவனைப் பார்த்ததும் கல்யாணிக்கு மகிழ்ச்சி பொங்கியது. ‘அம்மா’ என்ற சொல் அவள் உள்ளத்தைத் தொட்டது. கட்டிலில் விரித்த படுக்கையையும், மருந்துப் புட்டிகளையும் பார்த்துத் தயங்கியபடி குழந்தைகள் சற்று விலகி நின்றுகொண்டிருந்தார்கள்.

    இங்கே வா! எல்லோரும் கிட்டே வாருங்கள்! என்று, கல்யாணி உருக்கத்தினால் கனிந்த குரலில் கூப்பிட்டாள். அந்தச் சிறுவன் அருகே வந்ததும், சுருள் சுருளான அவன் தலைமயிரைக் கையினால் தடவிக்கொடுத்து, உன் பேர் என்ன? என்று கேட்டாள்.

    கண்ணன்!

    வெட்கம் கலந்த புன்னகையோடு பதில் சொன்ன சிறுவன், அவள் தன்னையே பார்ப்பதைக் கண்டதும் தலையைக் குனிந்துகொண்டான்.

    நாடகத்திலே கூட அவன் கண்ணன்தான் என்று ஒரு குழந்தை சொன்னது.

    நாடகமா?

    ஆமாம். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம். எங்கள் பள்ளிக்கூடத்திலே... என்று கண்ணன் பதில் சொன்னான்.

    நீங்களெல்லாம் எங்கே இருந்து வருகிறீர்கள்?

    நாங்களெல்லாம் மயிலாப்பூர் அனாதை ஆசிரமத்துக் குழந்தைகள்! என்று பெரியவளாக இருந்த குழந்தை பதில் சொன்னாள்.

    நீங்களெல்லாம் அனாதைகளா? என்று கேட்க வாயெடுத்த கல்யாணி, சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டாள். அதன் அர்த்தம் புரியாமல் நின்ற குழந்தை கண்ணனைப் பார்த்தபோது அவள் உள்ளத்தில் துக்கம் பொங்கி வந்தது. பார்வையைத் திருப்பி உணர்ச்சியை மறைத்துக்கொண்டாள்.

    இப்போ நீங்க இங்கே...

    டிக்கெட் விக்க வந்திருக்கோம்!

    எங்கே பார்க்கலாம்? என்று கல்யாணி அந்த டிக்கெட் புஸ்தகத்தை வாங்கிப் பார்த்தாள். தலையணையை ஒதுக்கி அதற்கு அடியில் இருந்த பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய் நோட்டை வெளியில் எடுத்தாள். கண்ணனின் பிஞ்சுக் கரங்களைப் பிரித்து அதில் ரூபாயை வைத்தாள்.

    ஒரு குழந்தை டிக்கெட்டைக் கிழிக்கப் போனாள். வேண்டாம்மா! இதை நன்கொடையா வச்சுக்கோ! நான் நாடகத்துக்கு வரமுடியாது! என்று கல்யாணி சற்று ஏக்கத்தோடு சொன்னாள்.

    ஏம்மா?

    கண்ணன் முகத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டபோது ஏமாற்றம் நிழலிட்டது. அவளுக்கு அதைப் பார்க்க என்னவோ போலிருந்தது!

    "சரி! வெயில்

    Enjoying the preview?
    Page 1 of 1