Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethiroli
Ethiroli
Ethiroli
Ebook121 pages48 minutes

Ethiroli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றாட வாழ்க்கையில் நிகழும்; சிறு நிகழ்ச்சிகளும், துளிர் விடும் எண்ணங்களும், மனத்தில் எழுப்பும் உணர்ச்சி அலைகள் பல. அவற்றின் உணர்வில் மலரும் நெஞ்சக்கிளர்ச்சி, நினைவோட்டங்கள், பூவின் மணம் போலக் கமழும் சிந்தனைச் சூழல், இவைகளே இக்கதை களின் கரு. அவ்வப்போது நிழலாட்டமாகத் தோன்றி நெருங்குமுன் மறைந்து போனாலும், ஏதோ ஒரு வகையான சிலிர்ப்பை அடையாளம் காட்டி நிறுத்திவிடும், மெல்லிய மன உணர்வுகளே இக்கதைகளின் பின்னணி.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504457
Ethiroli

Read more from Lakshmi Subramaniam

Related to Ethiroli

Related ebooks

Reviews for Ethiroli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethiroli - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    எதிரொலி

    Ethiroli

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எதிரொலி

    நிழல்

    தவிப்பு

    ராஜி

    இணைப்பு

    முதல் நினைவு

    மோர்த் துளி

    கரிப்பு

    கவர்ச்சி

    முகவுரை

    அன்றாட வாழ்க்கையில் நிகழும்; சிறு நிகழ்ச்சிகளும், துளிர் விடும் எண்ணங்களும், மனத்தில் எழுப்பும் உணர்ச்சி அலைகள் பல. அவற்றின் உணர்வில் மலரும் நெஞ்சக்கிளர்ச்சி, நினைவோட்டங்கள், பூவின் மணம் போலக் கமழும் சிந்தனைச் சூழல், இவைகளே இக்கதை களின் கரு. அவ்வப்போது நிழலாட்டமாகத் தோன்றி நெருங்குமுன் மறைந்து போனாலும், ஏதோ ஒரு வகையான சிலிர்ப்பை அடையாளம் காட்டி நிறுத்திவிடும், மெல்லிய மன உணர்வுகளே இக்கதைகளின் பின்னணி.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    *****

    எதிரொலி

    முன்னிரவு நேரம். பார்வதி பாத்திரங்களைக் கழுவி அடுக்க வைக்கும் சப்தம் கேட்கிறது. அடுத்தது அறையைத் தேய்த்து அலம்பியாக வேண்டும். அப்புறம் தான் படுக்கை. விளக்கணைய இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்...

    ...முற்றத்து வெளியில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான் மணி. மேல் மாடி ரேடியோவிலிருந்து குழல்நாதம், சாருகேசி ராகம். இதழ்கள் பிரிவதுபோல ஒலி அலைகள் மடிந்து விழுகின்றன. காற்றில் அசையும் தென்னை ஓலையின் ‘மரமர’ சப்தம். அதனுடன் பிறந்தது போல், மூச்சுக் காற்றாய் விட்டு விட்டு வரும் ஜாதி மல்லிகையின் வாசம்.

    தலைக்கு மேலே இள நீலவானம் பிதுங்கிக் கிடக்கிறது. பஞ்சுப் பொதியாய்த் திரியும் மேகங்கள். நிலவொளியிலிருந்து ஒழுகும் பால் வெள்ளம்.

    அவனிடம் அசைவில்லை. மனத்தைத் தவிர மற்றவை யாவும் மூர்ச்சையில் ஆழ்ந்து விட்டிருக்கின்றன. உணர்விழந்த நிலையும் விழிப்பும் மாறி மாறி வருகின்றன. நெஞ்சு சுழன்று நினைவு வெள்ளத்தில் மிதந்து செல்லுகிறது. மீட்க மனமில்லாத நிலை. அதில் அவற்றின் அழகு மட்டும் அந்தரத்து வளைகோடாய் நெளிகிறது.

    எதிரே துளசிமாடம். முக்கோணப் புரையில் அலையும் அகல் விளக்கின் கொழுந்து படபடவென்று காற்றில் வெடித்தபோது திரியில் புரளும் பொறிகள், அவற்றின் பிம்பமாய்க் கூத்தாடும் வெறிநிழல்கள்.

    வெகு தூரத்தில் அவள் பாடுவது கேட்கிறது. புரையில் விளக்கை விட்டு அவள் தரையில் நெற்றி அழுந்தி வணங்குகிறாள். மாடத்திலிருந்து பொங்கும் அகல் விளக்கொளி அவள் முகத்தில் சுடர் ஏற்றுகிறது. பின் நிழலாய்த் தெரியும் அவள் உருவக்கோட்டில், அவன் பார்வை ஒன்றி விடுகிறது.

    என்னிடம் கூட இவ்வளவு பக்தி உனக்கு இருக்குமா என்று எனக்குச் சந்தேகம்!

    அப்படி ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

    ஏன்? அது ஒரு செடி, நான்...

    அவள் விரல்கள் அவனைப் பேசவொட்டாமல் தடுக்கின்றன.

    உங்களுக்கு அது வெறும் செடியாக எல்லாவற்றையும் போல மண்ணில் வளரும் தாவரமாய்த் தோன்றலாம். ஆனால் எனக்கு அது வணங்கும் தோற்றம். அது மட்டுமல்ல. உயிர்ப் பிழம்பாய் வாழும் தெய்வம்.

    அவள் கண்கள் அசாதாரணமாய் மின்னுகின்றன. நெற்றியின் திலகம் சுடர்ப் பொறியாய்த் தோன்றுகிறது. ஒளியேறிய முகம் அமானுஷ்யமாகத் தெரிகிறது. அவளைப் பிடிக்கக் கைகளை நீட்டுகிறான். உணர்வு, காற்றில் கலந்து நழுவுகிறது. புலனுருவாய் அவள் இல்லை, அவன் பிடியில் அணைப்பில் கரைந்து நிற்க.

    அவனுக்கு வேறே மனிதர்கள் இல்லை. அதனால் கெளரியுடன் அவள் அத்தையும் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தது அவனுக்கு ஒரு ஆதரவாக இருந்தது. புது மணத்தின் தேறல் வடியும் இன்பங் குலவிய நாட்கள் அவை.

    அத்தைக்கு எதிரே வெளிப்படையாய் மனம் விரிக்க இயலாத நிறைவன்பு, சங்கோஜமாய் அவள் பார்வையில், பேச்சில், அசைவில் கலந்து நிற்கும். அவள் பேச்சுக்கு இரட்டை அர்த்தம் தொனிக்கும், குறும்பாகச் சுண்டி இழுக்கும் புன்முறுவல். நெஞ்சைக் கிள்ளும் பார்வை.

    வவழவென்று குழையும் கைகள். எந்த வாக்கிலும் எடுப்பாகத் தோன்றும் அமைப்பு. உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாத குழந்தை முகம். அவள் அவன் பிடியில் நெளிவதுபோல, முதுகில் விளையாடும் பின்னல்.

    எதிரெதிரே நிற்கும்போது ஒன்றையொன்று நெருங்கத் துடிக்கும் உள்ளங்கள். இணைந்து பின்ன விரும்பும் ஆவல் இழைகள். கவ்விக் கலக்க ஏங்கும், ஒன்றாய்க்கூடும் எண்ணங்கள். நடுவே யாரும் இருப்பதைக் கூடக் கவனிக்காமல், அவனுக்கு அவளைத் தொடவேணும் போல ஓர் ஆசை. அவள் வெட்க வேகத்தில் கையை இழுத்துக்கொண்டு மறைந்து போய் விடுவாள்.

    அவன் வந்தபோது அவள் குழாய்த் தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள். கன்னங்களை வருடும் விரல்கள். கழுத்திலிருந்து விலகி ஊஞ்சலாடும் சங்கிலி. அவன் பார்வையும் ஊசலாடியது. கை விரல்கள் மெதுவாய் அசையும் விதத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அந்த அழகு எங்கே மறைந்திருந்தது? தோளின் குலுங்கலிலா? இடையின் அசைவிலா கன்னங்களின் குழிவிலா?

    அவன் கழுத்துச் சங்கிலியைப் பிடித்து இழுத்தான், முகத்தோடு முகம். அவள் விரல்கள் பிரிந்தன. நறுக்கென்று கன்னத்தில் ஒரு கிள்ளு. அவன் கன்னத்தைத் திருப்பிக் காட்டினான், அங்கேயும் ஒரு கிள்ளு, அவன் மெய் முழுவதும், ஒவ்வொரு மயிர்க்காலும் மகிழ்ச்சி செறிந்து மலர்ந்தது. அவள் ஓடி விட்டாள்.

    இரவினுள் மாலையின் எல்லை கலக்கும் நேரம். அத்தை கோவிலுக்குப் போய்விட்டாள். அவன் தட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டான்.

    அதற்குள்ளேயா?

    அவன் தலையசைவில் பசியின் உணர்வைத் தவிர குறும்பின் துடிப்பும் தெரிந்தது. அவள் அவன் தலைக்கு மேல் ‘ஸ்விட்ச்'சைப் போட வந்தாள். அவன் அவளைத் தொட்ட உணர்வில் பாதங்கள் குறுகுறுத்தன.

    தட்டில் ஆவி மிதக்கும் சாதமும், குழம்பும் நெய்யும் பொங்கி வடிந்தன. அவள் பக்கத்தில் உட்கார்ந்து விசிறினாள்.

    போதும்.

    அவள் எழுந்திருக்கப் போனாள்.

    நீயே பிசைந்து போடு.

    நாணமும் கோபமுமாய் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

    வீட்டில் அத்தை இல்லை என்கிற தைரியமா?

    இன்றைக்கு அத்தை இருந்திருந்தாலும் கூட- அவன் மறுபடியும் எட்டினான். கடைசியில் அவனுக்குத் தான் வெற்றி.

    சட்டென்று பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே நிறுத்தி விட்டாள். வெளியில் அத்தை வரும் காலடிச் சப்தம். அவள் எழுந்து உள்ளே போக நின்றாள். அவன் அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டான்.

    அவனைக் கண்டிக்கும் ரகசியக் குரல். ஆனால் அவனுக்கு அவள் முகம் தெரியவில்லை. சமயோசிதமாய் அவள் தாவி எழுந்து ஸ்விட்சைத் தட்டி விளக்கை அணைத்து விட்டாள். மெத்தென்ற இருள், வெட்கமாய் முனகும் சிரிப்பு. குரலில் அவசரமும் பிடிவாதமும் ஒலித்தன. அத்தை ஏன் அங்கே வருகிறாள்.

    அவன் காரியாலயத்துக்குக் கிளம்பும் வேளையில் டிபன் பையைக் கையில் கொடுத்துவிட்டு நேர்ப் பார்வையாய்ப் பார்த்தபடி நிமிர்ந்து நிற்பாள். அவன் தோற்றத்தைக்

    Enjoying the preview?
    Page 1 of 1