Pathu Maatha Bandam
()
About this ebook
சென்னையில் முதல் பெண் டாக்டரான ஈ.வி.கல்யாணி தனது அனுபவத்தில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பிரசவங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர். அவருடைய மருத்துவ ஆலோசனைகளை நான் மணியன் மாத இதழுக்காகப் பேட்டி கண்டு பெற்று வெளியிட்டேன். சமீபத்தில் டாக்டர் ஈ.வி.கல்யாணியின் மறைவை ஒட்டி, இந்தப் பேட்டி 'மங்கையர் மலர்' மாத இதழில் வெளிவந்தபோது, சில நண்பர்கள், இந்த முக்கியமான துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களை அணுகி, அவர்களிடமிருந்து பெண்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள ஆலோசனைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று கூறினார்கள்.
இன்று விஞ்ஞான ரீதியாகச் செயற்கை முறையில் கருவை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ள டாக்டர் கமலா செல்வராஜின் பேட்டி இந்தத் தொகுப்பில் இடம் பெறுகிறது. குழந்தைப் பிரசவம் - தாய் சேய் - நலம் ஆகியவற்றில், வெளி நாடுகளிலும் பணி புரிந்து அனுபவம் பெற்ற டாக்டர் மஞ்சுளாதேவி நந்த குமாரின் பேட்டியும் உள்ளது. இன்று கல்யாணி நர்ஸிங் ஹோமை நிர்வாகித்து அரிய தொண்டாற்றி வரும் டாக்டர் கீதா அர்ஜுனனின் அனுபவப் பூர்வமான ஆலோசனைகளும் இடம் பெறுகின்றன.
ஹோமியோபதி மூலம் பிள்ளை பேறு பற்றியும், பிரசவம் குறித்தும், பயன்தரக் கூடிய மருந்துகளைப் பற்றி டாக்டர் அ. இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரசவம் நல்ல முறையில் நிறைவேறினாலும், பிறந்த குழந்தைக்குச் சில சமயம் சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்த நிலையில் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை நல்ல முறையில் சிறப்பாகச் செய்து வரும் சைல்ட் - டிரஸ்ட் - மருத்துவமனை (தற்போது காமகோடி பீட சங்கராச்சாரிய சுவாமிகளின் உதவியினாலும் ஆசியினாலும் அருள் தொண்டாற்றிவரும் மருத்துவமனை) எப்படி அளிக்கிறது என்பது பற்றிய அரிய கட்டுரையும் இத்துடன் வெளிவருகிறது.
என்னுடன் சேர்ந்து, பேட்டிகளைக் கண்டு தொகுக்க திருமதி. ஜெயஸ்ரீ விசுவநாத், திருமதி. ராஜ்யஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் உதவியுள்ளார்கள். இத்துறையில் அனுபவம் வாய்ந்த அவர்களுடைய எழுத்துப்பணி இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
Read more from Lakshmi Subramaniam
Naathamenum Kovilile… Rating: 0 out of 5 stars0 ratingsAmaithiyana Vazhkaiku Aanmeega Vazhikatti Rating: 5 out of 5 stars5/5Thathuva Gnaniyarin Kutti Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsSri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhal Kaviyam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Varum Varai…. Rating: 0 out of 5 stars0 ratingsThudippin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsPunniya Nathigalidiye Oru Punitha Yaathirai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsAduthathu Enna? Rating: 0 out of 5 stars0 ratingsVaansudar Rating: 0 out of 5 stars0 ratingsHindu Matha Thathuvangalum Vilakkangalum Rating: 0 out of 5 stars0 ratingsPeraatha Pillai Rating: 0 out of 5 stars0 ratingsJagam Pugazhum Jagathguru Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Aathmavin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsChinmayanandarin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyirukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsEthiroli Rating: 0 out of 5 stars0 ratingsPunitham Arulum Puttabarthi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Karaigal Rating: 0 out of 5 stars0 ratingsUllam Pesum Kaadhal Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Koyilgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pathu Maatha Bandam
Related ebooks
Magaperu Magathuvam Rating: 0 out of 5 stars0 ratingsElumboodu Oru Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsEn Kannottathil... Rating: 0 out of 5 stars0 ratingsஹோலிஸ்டிக் ரெய்கி சுய-சிகிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsParkinson's Treatment Tamil Edition: 10 Secrets to a Happier Life Rating: 0 out of 5 stars0 ratingsPei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5சர்க்கரை நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் Rating: 0 out of 5 stars0 ratingsSelva Kalanjiyame - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAdayaril Innoru Aalamaram Rating: 0 out of 5 stars0 ratingsSelva Kalanjiyame - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Arockkiyam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu... Aarogyam... Ilamai Rating: 0 out of 5 stars0 ratingsRummy and Joker Rating: 0 out of 5 stars0 ratingsநவம்பர், நள்ளிரவு... நர்மதா! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Yakkai - Chithirai 2024 Rating: 0 out of 5 stars0 ratingsNindru Thuditha Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsAllopathiyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsGyanaguru Yakkai - Maasi 2024 Rating: 0 out of 5 stars0 ratings40+ Maatram Rating: 0 out of 5 stars0 ratingsThalaivali Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Happy Rating: 0 out of 5 stars0 ratingsThathuvagnani Vedhathri Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குறள் கூறும் மருத்துவம் Rating: 0 out of 5 stars0 ratingsAbdul Kalamin Ariya Karuthugal Rating: 0 out of 5 stars0 ratingsLatchiya Pengal Rating: 0 out of 5 stars0 ratingsEn Thoorigaiyin Vannangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pathu Maatha Bandam
0 ratings0 reviews
Book preview
Pathu Maatha Bandam - Lakshmi Subramaniam
https://www.pustaka.co.in
பத்துமாத பந்தம்
Pathu Maatha Bandam
Author:
லட்சுமி சுப்பிரமணியம்
Lakshmi Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
சென்னையில் முதல் பெண் டாக்டரான ஈ.வி.கல்யாணி தனது அனுபவத்தில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பிரசவங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர். அவருடைய மருத்துவ ஆலோசனைகளை நான் மணியன் மாத இதழுக்காகப் பேட்டி கண்டு பெற்று வெளியிட்டேன். சமீபத்தில் டாக்டர் ஈ.வி.கல்யாணியின் மறைவை ஒட்டி, இந்தப் பேட்டி 'மங்கையர் மலர்' மாத இதழில் வெளிவந்தபோது, சில நண்பர்கள், இந்த முக்கியமான துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களை அணுகி, அவர்களிடமிருந்து பெண்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள ஆலோசனைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று கூறினார்கள்.
இன்று விஞ்ஞான ரீதியாகச் செயற்கை முறையில் கருவை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ள டாக்டர் கமலா செல்வராஜின் பேட்டி இந்தத் தொகுப்பில் இடம் பெறுகிறது. குழந்தைப் பிரசவம் - தாய் சேய் - நலம் ஆகியவற்றில், வெளி நாடுகளிலும் பணி புரிந்து அனுபவம் பெற்ற டாக்டர் மஞ்சுளாதேவி நந்த குமாரின் பேட்டியும் உள்ளது. இன்று கல்யாணி நர்ஸிங் ஹோமை நிர்வாகித்து அரிய தொண்டாற்றி வரும் டாக்டர் கீதா அர்ஜுனனின் அனுபவப் பூர்வமான ஆலோசனைகளும் இடம் பெறுகின்றன.
ஹோமியோபதி மூலம் பிள்ளை பேறு பற்றியும், பிரசவம் குறித்தும், பயன்தரக் கூடிய மருந்துகளைப் பற்றி டாக்டர் அ. இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரசவம் நல்ல முறையில் நிறைவேறினாலும், பிறந்த குழந்தைக்குச் சில சமயம் சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்த நிலையில் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை நல்ல முறையில் சிறப்பாகச் செய்து வரும் சைல்ட் - டிரஸ்ட் - மருத்துவமனை (தற்போது காமகோடி பீட சங்கராச்சாரிய சுவாமிகளின் உதவியினாலும் ஆசியினாலும் அருள் தொண்டாற்றிவரும் மருத்துவமனை) எப்படி அளிக்கிறது என்பது பற்றிய அரிய கட்டுரையும் இத்துடன் வெளிவருகிறது.
என்னுடன் சேர்ந்து, பேட்டிகளைக் கண்டு தொகுக்க திருமதி. ஜெயஸ்ரீ விசுவநாத், திருமதி. ராஜ்யஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் உதவியுள்ளார்கள். இத்துறையில் அனுபவம் வாய்ந்த அவர்களுடைய எழுத்துப்பணி இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் பயனுள்ள நூலைத் தொகுத்து வெளியிட என்னை ஊக்கி உதவிய மதி நிலையம் பதிப்பாகத்தாருக்கு எனது நன்றி.
பொருளடக்கம்
எங்களுக்கும் பத்துமாத பந்தம்தான்...! - டாக்டர் ஈ.வி.கல்யாணி
விரும்பும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்! - டாக்டர் கமலா செல்வராஜ்
கருவில் உருவாகும் குழந்தை - டாக்டர் மஞ்சுளாதேவி நந்தகுமார்
கருவுற்ற பெண்கள் கவனிக்கவேண்டியவை - கீதா அர்ஜுன் ஈ.வி. கல்யாணி மெடிக்கல் சென்டர்.
கருவுற்ற பெண்களுக்கு ஏற்ற உணவுத் திட்டம் - தொகுப்பு : ஜெயந்தி ரவிசங்கர்
பிரசவம் - டாக்டர் ராமமூர்த்தி,
செயற்கை முறையில் கருத்தரித்தல் - 'டாக்டர் ஷைலஜா கங்கூலி'
பிள்ளைப்பேறு இல்லாமை - டாக்டர் அ. இராமமூர்த்தி
குழந்தைகள் நலனுக்காகப் பாடுபடும் சைல்ட் டிரஸ்ட்
பிரசவத்துக்குத் தயாராகும்போது... - (சில அநுபவக் குறிப்புகள்)
எங்களுக்கும் பத்துமாத பந்தம்தான் ...!
டாக்டர் ஈ.வி.கல்யாணி
சமீபத்தில் மறைந்த மருத்துவ (மகப்பேறு) நிபுணர் டாக்டர் ஈ.வி.கல்யாணி சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், அளித்த பேட்டி இது. அவருடைய அனுபவ அறிவும் ஆழ்ந்த மருத்துவ ஞானமும் இன்றும் இளம் பெண்களுக்கு, இந்தப் பேட்டியின் மூலம் மிகவும் பயன்படும்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக மருத்துவப் படிப்பு படித்துப் புகழுடன் பட்டம் பெற்று வந்த பெண்மணி டாக்டர். ஈ.வி. கல்யாணி. மகப்பேறு துறையில் அனுபவ ஞானம் கொண்ட, எல்லோருக்கும் முதிர்ந்த நிபுணராக தனது 83 வயது வரை பணிபுரிந்து வந்திருக்கிறார். குழந்தையாக இருந்தபோதே கணவரை இழந்த இவர், தந்தை கொடுத்த ஊக்கத்தால் படித்து மருத்துவ நிபுணராகப் பட்டங்களும் பாராட்டும் பெற்றவர்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், அவரை சந்தித்துப் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆயிரம் பிறை கண்டவர் என்று நாம் சிலரைப் போற்றிக் கொண்டாடுவதுண்டு. அதைப் போலப் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் பிரசவத்துக்குத் துணையாக இருந்தவர் என்ற தனிப்பெருமை அவருக்கு உண்டு.
அந்தப் பேட்டியின் போது, தமது அனுபவத்திலிருந்து பல பயனுள்ள கருத்துக்களை டாக்டர் கல்யாணி எடுத்துக் கூறினார். தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கும், இளந்தாய்மார்களுக்கும் இந்தக் கருத்துக்கள் இன்றும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்....
மற்ற துறைகளில் செய்யும் மருத்துவப் பணியிலிருந்து, இந்த மகப்பேறு மருத்துவம் எப்படி மாறுபட்டிருக்கிறது என்று கருதுகிறீர்கள்?
டாக்டர் கல்யாணி: இந்த மகப்பேறு மருத்துவத்துக்குத் தனியான மகத்துவம் உண்டு. மற்ற துறைகளில் இல்லாத 'ஸ்பெஷலா'ன அம்சங்கள் இதில் நிறைய உண்டு. என்னுடைய ஆசிரியராக இருந்த டாக்டர் ஏ.எல். முதலியார் சொல்வார்
"இந்தத் துறையில் பயிற்சி பெறும் உங்களுக்கெல்லாம் ஒரு சிறு அட்வைஸ்! நீங்கள் 'பிராக்டிஸ்' பண்ணப் போவது மிகவும் நுட்பமான மருத்துவத்துறை. மற்ற டாக்டர்கள் வைத்தியம் அல்லது அறுவை சிகிச்சை முடிந்தவுடன் விலகிப் போய்விடுவார்கள். ஆனால் இந்தத் துறையில் மருத்துவம் செய்கிற டாக்டர்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பார்கள்.
நீங்கள் எங்கே போனாலும்,