Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Latchiya Pengal
Latchiya Pengal
Latchiya Pengal
Ebook97 pages33 minutes

Latchiya Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிங்கப்பெண்கள், சாதனைப் பெண்கள் வரிசையில் அடுத்து வரும் நூல் இலட்சியப்பெண்கள். பல்வேறு துறைகளில் பல்கலை வித்தகிகளின் அனுபவங்களை அவர்களே நேரடியாக கூறியுள்ளனர்.

இந்த நூலில் தனி சிறப்பாக ஒரு திருநங்கையையும் (ஜெனிபர்) முன்னிலைப் படுத்தியிருக்கிறார். இந்த நூல் பல பெண்களுக்கு வழிகாட்டும்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580110409784
Latchiya Pengal

Read more from Surya Saravanan

Related to Latchiya Pengal

Related ebooks

Reviews for Latchiya Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Latchiya Pengal - Surya Saravanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இலட்சியப் பெண்கள்

    Latchiya Pengal

    Author:

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/surya-saravanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துக்கள்

    1. எலிசபெத் லிசி கவி - யுனிவர்செல் மேன்பவர் சர்வீஸஸ், சென்னை.

    2. அழகுக்கு மெருகூட்டும் ரம்யா அழகேந்திரன் – ஒப்பனை கலைஞர்

    3. கம்பன் வீட்டு கட்டுத்தறியின் கவிதை - உமா சுப்பிரமணியன்

    5. தமிழ் சினிமாவின் முதல் சிகை அலங்கார திருநங்கை - ஜெனிபர்

    6. புராடெக்ட் பற்றி தெரிந்து கொண்ட பின்னரே விளம்பரத்தில் நடிப்பேன் – மாடலிங் சந்தியா

    7. பிரசவ வார்டில் ஆண்களை அனுமதித்தால் தான் விவாகரத்து வழக்குகள் குறையும் அதிசயா – வழக்கறிஞர் - சமூக ஆர்வலர்

    8. கழுத்தை அறுக்கும் கலை - பெர்சி அலெக்ஸ்

    9. டிஜிட்டல் உலகில் பெண்களுக்கான வாய்ப்புகள் - டிஜிட்டல் டைரக்டர் கார்த்திகா

    10. மலையேறும் பெண் - கெளசல்யாதேவி

    11. பலவீனமான எலும்புகளானாலும் பலமான இதயத்துடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிறார் - ராதிகா

    12. பின்னணியில் முன்னணி - கிருத்திகா

    13. இருளர் குழந்தைகளுக்கு ஃபேஷன் ஷோ!

    வாழ்த்துக்கள்

    பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதை விட அவர்கள் தங்கள் திறனை முதலில் அங்கீகரிக்க வேண்டும் என்றே கருதுகின்றனர். ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்குவிப்பவன் கூட தேக்குவிப்பான் என்பார்கள் ஆனால், பெண்களை ஊக்குவிப்பதில் பல ஆண்களுக்கு தயக்கமே உள்ளது.

    பெண்களின் தனித்திறன்களை தேடித்தேடி பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருவதுடன் அவர்களை சமூகம் அங்கீகரிக்க தூண்டுகோலாக இருக்கிறார் எழுத்தாளர்.

    அவரது சிங்கப்பெண்கள், சாதனைப் பெண்கள் வரிசையில் அடுத்து வரும் நூல் இலட்சியப்பெண்கள். பல்வேறு துறைகளில் பல்கலை வித்தகிகளாக பெண்கள் இருக்கின்றனர் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

    இந்த நூலில் தனி சிறப்பாக ஒரு திருநங்கையையும் (ஜெனிபர்) முன்னிலைப் படுத்தியிருக்கிறார்.

    இந்த படைப்பாளியின் பணி பலருக்கும் பயன்படும் வகையில் தொடரட்டும்.

    1. எலிசபெத் லிசி கவி - யுனிவர்செல் மேன்பவர் சர்வீஸஸ், சென்னை.

    ஆதரவற்ற பெண்களுக்கு ராணியான எலிசபெத் லிசி கவி, நெல்லை அருகில் உள்ள பூத்தக்காலம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். திருமணமான பின், சென்னையில் வேலை தேடி தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றார். தன்னைப்போல் பல பெண்கள் வேலைவாய்ப்பு தேடி போராடும் நிலையில் இருப்பதை பார்த்தார். அப்போதுதான் நாம் ஏன் இதே போன்றதொரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணமும் ஆர்வமும் ஒருசேர அவருள் துளிர்த்தது. இதையடுத்து கடந்த 2002ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

    111

    கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வாழ வழி தெரியாத ஆதரவற்றவர்கள், வாழ்க்கையை தொலைத்துவிட்டு தவிப்பவர்களை இலக்காகக் கொண்டு அவர்களை ஒருங்கிணைத்தார். சமையல், குழந்தை பராமரிப்பு, முதியவர் பராமரிப்பு போன்ற வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை வழி நடத்த மீன்களை மட்டுமே கொடுக்காமல் அவற்றை பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்.

    அடுத்த கட்டமாக, வாழ்க்கையை தொலைத்து இனி வாழவே முடியாது என்று விளிம்பு நிலையில் இருக்கும் பெண்கள் மீது அவரது பார்வை திரும்பியது. அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்று எடுத்து கூறும் மாமங்கை எலிசபெத் லிசி, தனது அனுபவத்தை நம்முடன் இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

    வெளிநாட்டு மோகம்

    சிதம்பரத்தை சேர்ந்த பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் அவளது பெற்றோர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு திருணம் செய்து வைத்தனர். மகள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று தங்களது சக்திக்கு மீறி நகை, பணம், கார் என சீர்வரிசை கொடுத்தனர். அவர்கள் சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடித்தனம் நடத்தினர். அங்கு மூன்று மாதம்தான் வாழ்ந்தனர். மூன்று மாதத்திற்குப் பின் அவள் கர்ப்பிணியானாள்.

    அந்த வெளிநாட்டு கணவன் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதாகவும், அங்கு வீடு பார்த்துவிட்டு வந்து அவளை அழைத்து செல்வதாகவும், தாய் வீட்டில் இருப்பதே

    Enjoying the preview?
    Page 1 of 1