Iravu Mudinthu Vidum!
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Athuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Manithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Inikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5vayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Iravu Mudinthu Vidum!
Related ebooks
Thalaattu Maari Ponatho? Rating: 0 out of 5 stars0 ratingsUlkuthu Rating: 0 out of 5 stars0 ratingsIrulil Sila Vilakkugal Rating: 0 out of 5 stars0 ratingsSaraswadhi Nathi Rating: 0 out of 5 stars0 ratingsThalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsஏனழுதாய் என்னுயிரே! Rating: 0 out of 5 stars0 ratingsYathumagi… Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Neril Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsNugara Anicha Malarey Rating: 0 out of 5 stars0 ratingsRaajinama! Rating: 0 out of 5 stars0 ratingsThedal Rating: 0 out of 5 stars0 ratingsThirunthivittal Divya! Rating: 0 out of 5 stars0 ratingsUn Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Alli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Uravu Solli Vilayadu... Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Tharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsதொடுவானைத் தொட்டுவிடு! Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsEnakkena Viriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal Rating: 4 out of 5 stars4/5Engeyum Eppothum Santhosam! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னோடு ஒரு நாள்! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Iravu Mudinthu Vidum!
0 ratings0 reviews
Book preview
Iravu Mudinthu Vidum! - Devibala
http://www.pustaka.co.in
இரவு முடிந்து விடும்!
Iravu Mudinthu Vidum
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
காலை நாலு மணிக்கு எழுந்ததும் தலை சுற்றத் தொடங்கியது சுஜிதாவுக்கு. சமாளித்து வாஷ்பேசினுக்கு வந்தாள். பல் தேய்க்கும் போதே குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. வாந்தி எடுத்து முடிந்ததும் நிற்க முடியாமல் உடம்பு துவண்டது.
அப்படியே உட்கார்ந்து விட்டாள்,
கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் வீட்டில் அத்தனை பேரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
யாரையும் கூப்பிடவும் முடியவில்லை.
எழுந்திருக்க முயன்றாள். முடியாமல் உடம்பு தள்ளாடியது.
சுஜிதாவுக்கு பயம் வந்து விட்டது.
வாஷ்பேசினுக்கு அடியில் சுருண்டு படுத்து விட்டாள்.
அரைமணியில் பாத்ரூம் போக எழுந்து வந்த மாமா மவுலி பார்த்து விட்டார்,
சுஜிதா, என்னம்மா இங்கே படுத்திருக்க?
பதிலே இல்லை,
அவர் பதறி விட்டார். உட்கார்ந்தார்.
சுஜிதா என்னம்மா?
கண்களை திறக்க முடியாமல் அவள் பார்க்க, அவர் பதறி எழுந்து ஓடினார்.
சஞ்சய்! எழுந்து வாடா. சரஸ்வதி, நீயும் வாடி
.
மகன் சஞ்சய், மனைவி சரஸ்வதி இருவரும் எழுந்து வர அவர்களும் பார்த்ததும் பதறி விட்டார்கள்,
முகத்தில் தண்ணீர் தெளித்து, அவளை தாங்கிப் பிடித்து கட்டிலில் கொண்டு வந்து படுக்க வைத்தார்கள்,
பத்தே நிமிடங்களில் சுஜிதா கண் விழித்து விட்டாள்.
என்ன சுஜி? என்னாச்சு?
தலை சுத்தல், வஞ்சிசிங்க
வேறு ஏதாவது விசேஷமாம்மா
, மவுலி கேட்க,
ஆமாம்! நாலு வருஷங்களா ஏங்கிக்கிட்டு இருக்கோம், இனிமே தான் வந்துடப் போகுது
சரஸ்வதி சுருக்கென குத்த,
பேசாம இருடி. சஞ்சய் உடனே காரை எடு. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம்
விடியக் கூட இல்லை. இந்த நேரத்துல எந்த டாக்டர் இருப்பாங்க?
நம்ம தெருக்கோடி நர்சிங் ஹோம் இருக்கு. டியூட்டி டாக்டர் இருப்பாங்க
சஞ்சய் உடனே காரை எடுக்க,
நீயும் வா சரஸ்வதி
அதான் அவன் போறானே. குடும்பமே போகணுமா?
சரி விடு. நான் வர்றேன்
மூன்று பேரும் காருக்குள் நுழைய, கார் புறப்பட்டது. டியூட்டி டாக்டர் இருந்தாள்,
லேடி டாக்டர் இருந்தது வசத்யாக இருந்தது. பரிசோதித்தாள், கேள்விகளை அடுக்கினாள்.
குளிச்சு எத்தனை நாளாச்சு?
நாப்பத்தி நாலு நாள் டாக்டர்
இது தான் முதல் தலை சுத்தல், வாந்தியா!
ஆமாம் டாக்டர்
சரி! யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்"
ஒரு நர்ஸ் வந்து படள்ளே அழைத்துப் போனாள்.
சஞ்சய்- சுஜிதாவுக்கு கல்யாணம் முடிந்து நாலு வருடங்களுக்கு மேலாகி விட்டது. குழந்தை இல்லை.
இரண்டு வருஷங்கள் முடித்து டெஸ்ட் எடுத்து, சுஜிதாவுக்கு டி.என்.சி. செய்தும் பார்த்து விட்டார்கள்.
பிரச்சனை எதுவும் இல்லை, ஆனால் குழந்தை உண்டாகவில்லை, சஞ்சயும் பரிசோதனை செய்து கொண்டான், எந்த பாதகமும் இல்லை, சத்தா ஒரு மாதிரி சலிப்புக்கு வந்து விட்டாள்.
நாத்தனார்கள் இரண்டு பேரும் உள்ளூரில் ஒருத்தி அக்கா அடுத்தவள் தங்கை, இவர்களுக்குப் பிறகு கல்யாணம் ஆன அவளுக்கு குழந்தை பிறந்து ஒரு வயதாகி விட்டது.
மாமியாரின் குத்தல் போட்டுக் கொடுத்து, உசுப்பி விடும் உறவுகள்.
அக்கம் பக்கத்தில் கேள்விகள்.
சுஜிதா முதலில் வேதனை பட்டாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சஞ்சய்க்கு கல்லுாரியில் வேலை, விஞ்ஞான பேராசிரியர். சுஜிதாவுக்கு பேங்க் வேலை.
மவுலி ரிடையர் ஆனவர்.
சுஜிதா காலை நாலு மணிக்கு எழுந்து விட்டால், சகல வேலைகளையும் முடித்து விட்டு, பேங்குக்கு புறப்படுவாள். அங்கு வேலை முடித்து வீடு திரும்பினால், வீட்டு வேலைகள் சரியாக இருக்கும், இரவு படுக்க, பதினோரு மணி ஆகி விடும்.
மாமியார் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டாள்.
நாத்தனார்கள் இருவரும் மாதத்தில் பத்து நாட்கள் ஏதாவதொரு சாக்கை சொல்லிக் கொண்டு இங்கே வந்து விடுவார்கள். தவிர உறவுக் கூட்டம், நண்பர்கள்.
சுஜிதா முகம் சுளிக்காமல் வேலை செய்வாள்.
தேவையில்லாமல் பேச மாட்டாள்,
கை நிறைய சம்பாதித்தாலும், அதிகாரம் மொத்தமும் மாமியார் சரஸ்வதி கையில் தான்.
சஞ்சய் எதையும் கேட்டுக் கொள்ள மாட்டான்,
எந்த நேரமும் நண்பர்கள் வட்டம்.
சென்டிமென்ட், மற்றவர்களின் கஷ்டம் புரியாத ஆசாமி, எந்த ஒரு பொறுப்பையும் ஏற்க மாட்டான்.
சுஜிதாவுக்கு இது புரியும்.
ஆசையாக வெளியே அழைத்து செல்ல மாட்டான்.
விரும்பிய ஒரு பொருள் வாங்கித் தர மாட்டான். நன்றாக சமைத்தால், உணர்வுகளை புரிந்து ஒரு வார்த்தை பாராட்ட மாட்டான். மென்மையான உணர்வுகளை சற்றும் புரிந்து கொள்ளாத ஒரு பிறவி.
சுஜிதாவிடம் மட்டுமில்ல, அம்மாவிடமும் அதே தான்.
அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை,
சரஸ்வதிக்கு எந்த நேரமும் பெண்களின் புராணம் தான்.
பிள்ளை சம்பாதிக்கும் ஒரு எந்திரம்,
சென்டிமென்ட் இல்லாத சஞ்சய் இவர்களுக்கு வசத்யாக அமைந்து விட்டான்.
ஆரம்ப காலத்தில் சுஜிதாவை இது ரொம்பவே பாதித்தது. வாய் விட்டே கேட்டு விட்டாள்.
அதற்காக சஞ்சய் அவளிடம் கோபப்படவும் இல்லை. அவளைப் புரிந்து கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளவும் இல்லை.
அதே ஜடத்தனம்.
கல்யாணமான இந்த நாலு வருஷங்களில் மாமியார் வீட்டுக்கு நாலு தடவை சஞ்சய் போயிருந்தால் அதிகம்.
அவர்கள் வருந்தாத நாளில்லை.
சுஜிதா முதலில் தவித்தாள். அவள் அவனை முழுமையாகப் புரிந்து கொண்டதும், தெளிந்து விட்டாள்.
அந்தக் குடும்பத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை மதிக்கும் ஒரே ஆசாமி மாமனார் மவுலி தான்.
அவருக்கு அங்கே மரியாதை இல்லை,
சம்பாதிக்கும் இன்னொரு மெஷின் அவர்.
அங்கே நடப்பது பெண் அரசாங்கம், அவர் குரல் அவருக்கே கேட்கவில்லை, ஆனால் சுஜிதாவிடம் அவ்வப்போது அவர் புலம்பிக் கொட்டுவார். மருமகளை முழுமையாக புரிந்து கொண்ட பிறகு தான் இந்த புலம்பல்கள்.
"இந்த குடும்பத்துல வந்து மாட்டிக்கிட்ட முதல் ஆள் நான்.
அடுத்தது நீ! ஆனா, பொண்ணாப் பொறந்த காரணமா உனக்கு ரொம்பக் கஷ்டம்மா,
தோழிகள் சிலர், நீயும் கை நிறைய சம்பாதிக்கிறே. உன் வருமானம் இல்லைன்னா, உன் புருஷனால வசத்யா வாழ முடியாது.
சுஜிதா! நீ ரகளை பண்ணு. தனியா அவரைப் பிரிச்சு கூட்டிட்டுப்போ அப்பத்தான் உன் மாமியார் அடங்குவா",
அவர்கள் சொன்னதை சற்று கண்ணியமாக மவுலி சொல்லி விட்டார்.
சுஜிதாவுக்கு அதில்