Irulil Sila Vilakkugal
()
About this ebook
என்னதான் படிப்பறிவு வளர்ந்தாலும், பத்திரிகை, டி.வி., வீடியோ, என விஞ்ஞானம் பறந்தாலும், சராசரி மனிதர்களும் குடும்பப் பெண்களும் இன்னமும் பத்தாம் பசலிகளாகவே இருப்பதை பல சமயங்களில் உணர முடிகிறது.
படித்த பெண்களாயினும், படிக்காத பெண்களாயினும் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை மௌனமாய் ஏற்றுக்கொண்டு பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியமில்லாமலே காலத்தை ஓட்டிவிடுகின்றனர். தங்களது உரிமைகளுக்காக போராடுவதில்லை. சட்டத்தை நாடுவதில்லை. அடங்கி முடங்கிக் கிடக்கும் அபலைகளை தட்டி எழுப்பி அவர்களின் கண்களை திறப்பதே இந்நூலின் நோக்கம். இந்த சம்பவங்களும் வழக்குகளும் உண்மை.
Read more from Nc. Mohandoss
Kaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Natchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thaamarai Penney! Rating: 0 out of 5 stars0 ratingsKolai Magal Rating: 5 out of 5 stars5/5Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Innoru Mugam Rating: 0 out of 5 stars0 ratingsKanaa Kaanum Ullam Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Vaa... Vasanthame! Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Ennavale... Ennavale... Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Vandhanam...! Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Un Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsYaar Andha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPurattasi, Aippasi, Kaarthiga Rating: 0 out of 5 stars0 ratingsMaraikkathe Marukkathe Rating: 0 out of 5 stars0 ratingsVelai Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsMeen Kothi! Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsIrulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Therintha Maname! Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPayanigal Jakkirathai Rating: 5 out of 5 stars5/5Vanathai Yaar Vella Koodum Rating: 0 out of 5 stars0 ratingsKaakka Kadi Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum Paarkalam! Rating: 0 out of 5 stars0 ratingsAtho Therigirathu Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsIntha Sathi Pothatha? Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Valaitheduthu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irulil Sila Vilakkugal
Related ebooks
Iravu Mudinthu Vidum! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Nee Thaaney Rating: 0 out of 5 stars0 ratingsThalaattu Maari Ponatho? Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsVellaikodi Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsThalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPuzhuthiyum Pattu Kuruviyum Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsபனித்திரை Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Ilavasam Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsThedal Rating: 0 out of 5 stars0 ratingsPuyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsமலர்ந்த விழிகள் Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthey Malarey Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Potta Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsTharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Kalathil Vanthaai Rating: 5 out of 5 stars5/5Vaasalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Jeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Irulil Sila Vilakkugal
0 ratings0 reviews
Book preview
Irulil Sila Vilakkugal - NC. Mohandoss
https://www.pustaka.co.in
இருளில் சில விளக்குகள்
Irulil Sila Vilakkugal
Author:
என்.சி. மோகன் தாஸ்
NC. Mohandoss
For more books
https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
18 குடும்பப் பெண்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள். நீதி மன்றத்தின் தக்க தீர்ப்புகளின் மூலம் சுதந்திரம் பெற்ற இவர்களது வாழ்க்கைக் கதைகள், பெண் விடுதலையின் மகிழ்ச்சி ஒலிகள்!
என்னுரை
என்னதான் படிப்பறிவு வளர்ந்தாலும், பத்திரிகை, டி.வி., வீடியோ, என விஞ்ஞானம் பறந்தாலும், சராசரி மனிதர்களும் குடும்பப் பெண்களும் இன்னமும் பத்தாம் பசலிகளாகவே இருப்பதை பல சமயங்களில் உணர முடிகிறது.
இங்கே இடம் பெற்றிருக்கிற கதைகள் தேவி வார இதழில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றவைகள். தேவியின் பொறுப்பாசிரியர் திரு. ஜேம்ஸ் அவர்கள், கேரளத்தில் நிறைய குடும்ப வழக்குகள் கோர்ட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றனவே - அவற்றை வக்கீல்களின் ஆலோசனையுடன் சுவையாய் எழுதுங்களேன்
என்று ஊக்கம் தந்தார்.
படித்த பெண்களாயினும், படிக்காத பெண்களாயினும் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை மௌனமாய் ஏற்றுக்கொண்டு பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியமில்லாமலே காலத்தை ஓட்டிவிடுகின்றனர்.
தங்களது உரிமைகளுக்காக போராடுவதில்லை. சட்டத்தை நாடுவதில்லை. அடங்கி முடங்கிக் கிடக்கும் அபலைகளை தட்டி எழுப்பி அவர்களின் கண்களை திறப்பதே இந்நூலின் நோக்கம்.
இந்த சம்பவங்களும் வழக்குகளும் உண்மை. ஆனால் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. வழக்குகளை அப்படியே கொடுத்தால் வாசகர்களிடம், குறிப்பாய், பெண்களிடம் போய் சேராது என்பதால் கதை எனும் போர்வை போர்த்தி தந்திருக்கிறேன். வைகளுக்கு கரு கொடுத்த எர்ணாகுளம் வக்கீல்கள் திரு. பரமேஸ்வரன், திரு. நாராயணமூர்த்தி, மற்றும் கொச்சி முத்தமிழ் சங்கத்து திரு. விஷ்ணுதாஸ் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளளேன்.
இவற்றை புதுமையாய் வெளியிட்ட ‘தேவி’ வார இதழுக்கும் அருமையாய் முன்னுரை தந்து பெருமை சேர்த்திருக்கும் தேவி ஆசிரியர் திரு. பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
என்.சி. மோகன் தாஸ்
பொருளடக்கம்
முன்னுரை
சஜி திருமணத்துக்கு ஏற்றவள் இல்லையா?
கல்யாணி
ராகினி
நளினி மாறினாள்...
மாலினிக்கு என்ன வந்தது?
சுபத்ரா
சொந்தம் - பந்தம் - சொத்து!
ராதாவின் சொத்து யாருக்கு
தேவிகா
குழந்தை எப்படி வந்தது?
பணம் காய்ச்சி மரம்...
அவள் மனைவியா இல்லையா?
விதியை வெல்ல வேண்டும்
ஒரு கை ஓசை
துணிந்து நில் வசந்தி...
மண்ணுக்கு பெண் பாரமா?
கமலா
பழி – பாவம் - சுனந்தா!
முன்னுரை
சிறுகதை எழுத்தாளர் - நாவலாசிரியர் திரு. என்.சி. மோகன் தாஸ் அவர்கள் ‘தேவி’ இதழில் எண்ணற்ற சிறு கதைகளையும் தேவியின் ‘கண்மணி’ மாத இதழில் நாவல்களும் எழுதி ‘தேவி’ வாசகர் வட்டத்தின் பாராட்டுக்களைப் பெற்றவர். அவரது எழுத்து வளர்ச்சியை பிற இதழ்களிலும் காணும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.
‘தேவி’ இதழில் 1990-ஆம் ஆண்டில் தொடர்வரிசை சிறுகதைகளாக இருளில் சில விளக்குகள்’ என்னும் தலைப்பில் திரு. மோகன் தாஸ் எழுதிய பெண்களுக்கான சமூக விழிப்பு உண்டாக்கும் உண்மை நிகழ்ச்சிகள், பல வழக்கறிஞர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டவை.
இந்த இருபதாம் நூற்றாண்டிலும் படித்த பட்டதாரி பெண்களிடையேயும் கூட சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள். அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய அறியாமையே நிலவுகிறது. இதன் பொருட்டே ‘தேவி’யில் திரு. நெல்லை கவிநேசன் அவர்களைக் கொண்டு ‘சட்டம் சந்தித்த பெண்கள்’ என்னும் தலைப்பில், பெண்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான மாறுபட்ட பிரச்சனைகளில் அவர்கள் சட்டத்தின் துணை கொண்டு தங்களைக் காத்துக்கொள்ளவும் உரிமைகளைப் பெறவும் வழிகாட்டும் உண்மை நிகழ்ச்சிகள் சிறுகதைகள் வடிவத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
திரு. என்.சி. மோகன் தாஸ் அவர்கள் எழுதிய சிறு கதைகள் இந்த வகையில் மேலும் புதிய சிந்தனைகளையும், விளக்கங்களையும், தெளிவையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன என்றால் மிகையல்ல.
எழுத்தாளர்கள் வாசகர்களின் பொழுதுபோக்குக்காக மட்டும் தங்கள் பேனா வலிமையை பயன்படுத்துவதுடன் நின்றுவிடக் கூடாது. இது போன்ற உண்மை நிகழ்ச்சி தொடர்களின் மூலம் சமுதாயத்துக்கு, குறிப்பாக பெண்கள் சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் கடமை கால குறிப்பேட்டில் ஒரு சிறப்பிடத்தை பெறும். திரு. என்.சி. மோகன் தாஸ் அவர்களின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டு பெருமை மிக்க நூலாக வெளி வருவதால் அவரது முயற்சியும் நோக்கமும் இன்னும் தொடர்ச்சியான பலன்களை அளிக்கப் போகிறது என அறிந்து, மகிழ்ந்து அவரை வாழ்த்துகின்றேன்.
பா. இராமச்சந்திர ஆதித்தன்
ஆசிரியர் - ‘தேவி’ வார இதழ்
சஜி திருமணத்துக்கு ஏற்றவள் இல்லையா?
சஜி இயல்பிலேயே அழகு; குழந்தைப் பருவம் முதலே அவளைக் கண்டால் எல்லோரும் மயங்குவர். நல்ல சிவந்த நிறமும், உருண்டை முகமும், வரிசையான அரிசி பற்களும் காண்போரை கப்பென பிடித்து நிறுத்தும்.
அவள் உடலழகில் மட்டுமில்லை. தன் பார்வை பரிமாற்றத்தின் மூலமும் மற்றவர்களை காந்தமாக கவர்ந்து வந்தாள். கண்களுக்கு அத்தனை சக்தி. முகத்தில் எப்போதுமே ஒரு களை இருக்கும்.
எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துவிட்டால் எப்படி? அவளுக்கும் சில குறைகள் இருந்து வந்தன. அவற்றில் ஒன்று அவளுக்கு தாய் இல்லாதது.
சஜியின் குழந்தைப் பருவத்திலேயே தாய் இறந்துவிட்டாள். அதன் பிறகு அவளைப் போற்றி வளர்த்ததெல்லாம் ஆரோக்கியம்தான். அவருக்கும் வயதாகிவிட்டிருந்தது.
வெளியே சம்பாதித்து வந்து வீட்டு காரியங்களையும் கவனித்ததில் அவர் உடல் தளர்ந்து போயிற்று. அடிக்கடி அவரை நோய் தாக்க ஆரம்பித்தது. அதன் காரணமாய் சம்பாத்தியம் முடங்கிற்று. வீட்டில் வறுமை ஆரம்பித்தது.
படிப்பில் கெட்டிக்காரியாய் இருந்த சஜி, எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அப்பா! இனி மேற்கொண்டு நான் படிக்கலேப்பா!
என்றாள்.
ஏம்மா...?
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நான் உங்களை சிரமப்படுத்திட்டிருக்கிறது. என் மனசு கேட்கலப்பா!
பரவாயில்லைம்மா. நீ மேற்கொண்டு படி. ஏழைகளுக்கு படிப்புதாம்மா முக்கியமான சொத்து. படித்து வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தால்தான் உனக்கும் ஒரு வாழ்வு பிறக்கும். யாரும் பெண் கேட்டு வருவார்கள்.
"என்