Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Intha Sathi Pothatha?
Intha Sathi Pothatha?
Intha Sathi Pothatha?
Ebook99 pages38 minutes

Intha Sathi Pothatha?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நகரத்தை நடுங்க வைத்துக் கொண்டிருந்த கொலை வெறியனின் ஆயுசு முடிந்தது! சிறப்புப் புலனாய்வுத்துறை சாகசம்!' அன்றைய மாலைப் பேப்பர்களில் செய்தியைப் படித்துவிட்டு எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சுவிட, மிதுனா மட்டும் நிஜமான வருத்தத்துடன், சாகர் கட்டிய தாலியுடன் துணுக்குற்றிருந்தாள். இனிதான் அவள் சந்தோஷப்பட வேண்டும்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132405773
Intha Sathi Pothatha?

Read more from Nc. Mohandoss

Related to Intha Sathi Pothatha?

Related ebooks

Related categories

Reviews for Intha Sathi Pothatha?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Intha Sathi Pothatha? - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    இந்த சதி போதாதா?

    Intha Sathi Pothatha?

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    வாழ்த்துரை

    எனக்கு ஆவி கதைகளின் மேல் தனி ஈடுபாடு உண்டு. அவ்வகையில் படித்த சில கதைகளை வைத்து என் சி. மோகன்தாஸின் மேல் கவனம் திரும்பிற்று.

    அப்புறம் அவரை உன்னிப்பாகக் கவனிக்கும் போது ஆவி மட்டுமில்லை, கிரைம், சமூகம், காதல், நகைச்சுவை என எல்லாவற்றிலும் முத்திரை பதித்து வருவதை உணர முடிந்தது.

    சிறுகதைகள் மட்டுமில்லை, நாவல்கள், தொடர் கதைகள் என மோகன்தாஸ் முன்னேறி வருகிறார்.

    இவரது வளர்ச்சி குப்பென பற்றிக் கொள்ளும் நெருப்பாய் இல்லாமல் ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைகிற மாதிரி சீராக, அதே சமயம் ஸ்டெடியாகவும் இருக்கிறது.

    எஸ். வி. சேகர்

    *****

    1

    ஐலண்டு எக்ஸ்பிரஸ் இரவு ஒரு மணிக்கு சேலத்தைத் தொட்டபோது முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஈரோடு கலைச்செல்வன் எனப்பட்ட அவர் பதற்றத்துடன் இறங்கி டி.டி.யிடம் ஓடினார். என்னவோ படபடத்தார்.

    டி.டி. உடன் வாட்சைப் பார்த்துக் கொண்டு ஸ்டேஷன் சூப்ரண்டெண்ட்டின் அறையைக் காட்ட, தொந்தி இரைக்க அந்த அறைக்குள் நுழைந்து. சார் ஐ ஹாவ் ய கம்ப்ளெயிண்ட். என்று மூச்சு வாங்கினார்.

    அவர் போனிலிருந்து நிமிர்ந்து எஸ் என்றார். என்னுடைய பெட்டியிலிருந்த பிஸ்டைலைக் காணவில்லை. என்றார்.

    பிஸ்டல் என்றதும் அந்த அதிகாரி அதிர்ந்துபோய் ரயில்வே போலீசை அழைத்தார்.

    கலைச்செல்வன் போலீசிடம், சேலம் வருகிறவரை இருந்தது சார்! அஞ்சு நிமிஷம் முன்பு நான் டாய்லட் போய்த் திரும்பியதும் காணவில்லை. அவற்றில் புல்லட், லோடு பண்ணியிருந்தேன். அதனால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்

    அதற்குள் வண்டி கிளம்புவதற்கு அவசரப்பட்டது. போலீஸ் அவருடைய விலாசத்தை வாங்கிக் கொண்டு, நீங்கள் கவலைப்படாமல் பயணத்தைத் தொடருங்கள். நாங்கள் அங்கே வந்து விசாரிக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அனுப்பி வைத்தது.

    இரண்டு நாள்களுக்குப் பிறகு

    ராத்திரி ஒன்பதரைக்குப் பாண்டிச்சேரியின் கடைகள் கண்ணுறங்கத் தயாராகிக் கொண்டிருந்தன. டெம்போ, ஆட்டோக்கள் தியேட்டர்களில் காவலிருந்தன. குபேர பஜாரில் பேரம்! நேரு பார்க்கில் காதல் கவிதைகள்! நூல் பிடித்தது போன்ற கடற்கரைச் சாலையில் இலவச ஒளியை அனுபவித்து விட்டுத் திரும்பும் அவசரத்தில் இருபதுகள்!

    ஜீவா தியேட்டரைத் தாண்டி இருந்தது ஜாபர் ஜிம்னாசியம்.

    அதுவரை தம்புள்ஸ் எடுத்த, வெயிட் லிஃப்டை இரண்டு கை பார்த்த, புல்வொர்க்கரிலும் பெஞ்ச் பிரஸிலும் பனியன் வியர்த்த, இளைஞர்கள், குட் நைட் மாஸ்டர், என்று ஜாபருக்கு மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பினர்.

    ஜாபருக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம் ஏதோ ஒரு குடும்பப் பிரச்னையால் இன்னமும்கூட அவர் பாச்சலர்தான். நல்ல உயரம் உயரத்திற்கேற்ற உடல்வாகு. ஆண் அழகன் என்று சொல்லுமளவிற்கு அவரது தோள்கள் பரந்து, மார்புகள் விரிந்திருந்தன.

    அவர் தன் அறையை மூடப் போனபோது போன் அழைத்தது.

    எடுத்தவரின் முகம் மலர்ந்தது.

    ரேணு! நானே உன்னைக் கூப்பிடணும்னு இருந்தேன். என்ன விஷயமா... வேறு எதற்கு உன்னை அழைப்பேன்? யெஸ்! அதுக்குத்தான். எப்போ வருகிறாய்...? நானா? நான் கிளம்பிட்டேன். பன்னிரண்டாகுமா...? ஓக்கே கம் வித் ஸ்வீட்.

    வைத்துவிட்டு ஜிம்னாசியத்தைப் பூட்டிவிட்டு விசிலுடன் பைக்கில் ஏறி அமர்ந்தார். ஜாபரின் வீடு தேங்காய்த்திட்டில் இருந்தது. சுற்றிலும் தென்னைகள், கடல் காயல்கள் சூழ்ந்த ரம்யமான இடம் இது.

    அவர் ஷெட்டில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போனார். 'லாலா' பாடிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தார். அப்போது மணி பத்து முப்பது.

    பாத்ரூமிலிருந்து சலசலப்பும், பாடலும் வர அதுவரை தோட்டத்தின் பூச்செடிகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருந்த சித்தார்த்தன் வெளியே வந்தான்.

    அவன் மிதமான உயரத்தில் மிதமான கறுப்பு இருட்டில் அவனுடைய முகம் கறுத்து நிறைய வியர்த்திருந்தது. அவன் கான்வாஸ் ஷூ போட்டிருந்தான். தோளில் சின்னதாய் ஒரு பையைத் தொங்க விட்டிருந்தான்.

    அவன் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தான். ரோடு வெறிச்சோவென்றிருந்தது. இந்தப் பக்கம் கடலின் இரைச்சல், தென்னை மரங்கள் அலைகளின் நாட்டியத்திற்கு தாளம் போட்டன.

    மனித சுவாசமே இல்லை. அவன் சப்தமின்றி அடிமேல் அடி எடுத்து வைத்தான். செடி கொடிகளிலிருந்து பூச்சி ஒன்று உய்ங்கென்றது. தென்னையில் வண்டுகள் ரீங்கரித்து பாளைப் பூக்களை உதிர்த்து விட்டன. அவனுக்கு வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கின மாதிரி இருந்தது. ஆனாலும் கூட முகம் விறைத்திருந்தது.

    கதவிடம் போய் மெல்ல தள்ளிப் பார்த்தான். உள்ளே தாழ் போடப்பட்டிருந்தது. நல்லது, அதுதான் எனக்கு வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    ஸீத்ரூ கண்ணாடி வழி உள்ளே வெளிச்சம் குழப்பமாய்த் தெரிந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1